Author Topic: கம்பு பருப்பு சாதம்  (Read 656 times)

Offline kanmani

கம்பு பருப்பு சாதம்
« on: April 06, 2013, 11:44:03 AM »
என்னென்ன தேவை?
கம்பரிசி - 1 கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
பாசிப் பயிறு - கால் கப்,
தண்ணீர் - 3 கப்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
நறுக்கிய தக்காளி - அரை கப்,
உப்பு -  தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது.
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்.
பொடித்துக் கொள்ள...
மிளகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 2,
பூண்டு - 4.
எப்படிச் செய்வது?

கம்பரிசியும், பருப்பு வகைகளையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.மிளகு, சீரகம், மிளகாய்  வற்றலை மிக்ஸியில் பொடித்து கடைசியில் பூண்டு சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்க்கவும்.  வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.

தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அரிசி, பருப்பையும், கொத்தமல்லி தழையும் சேர்த்து 5 விசில் வேகவிடவும். தேங்காய்  துவையல், தயிர், ஊறுகாயுடன் பரிமாறவும். 4 கம்பரிசியை  சிறிது குழைய வேக வைப்பது சுவை கூட்டும். பருப்பு வகைகளுடன் தட்டப்பயிறும்  சேர்த்துக் கொள்ளலாம்.4 மிளகாய் தூள், மிளகாய் வற்றல், மிளகு போன்றவை சேர்ப்பதால் காரம் எவ்வளவு தேவையோ அதற்கேற்பபிரித்துக்  கொள்ளவும்.