அந்த நதி அமைதியாய்
ஓடிகொண்டிருந்தது
எருமைகளும் ஆடுகளும்
தண்ணீர் அருந்தும் வரை...!!!
சேரி பக்கம் இருந்து சக மனிதன்
தண்ணீர் அருந்தியதற்காக
நதியை சிவப்பாய் மாற்றினார்கள்
தங்களை சிறந்தவர்கள் என்று கூறும் மிருகங்கள்...!!!
ஆட்டுக்கும் மாட்டுக்கும் உள்ள உரிமை கூட
சக மனிதனுக்கில்லை
இதுதான் சுதந்திரம் என்றால்
இந்த சுதந்திரம் தேவை இல்லை எங்களுக்கு...!!!