என்னென்ன தேவை?
மணத்தக்காளி கீரை -அரை கட்டு,
சின்ன வெங்காயம் -5,
பூண்டு - 3 பல்,
தேங்காய்ப்பால் -ஒரு கப்,
உப்பு-சுவைக்கேற்ப,
மிளகுத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் -ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்வது எப்படி ?
கீரையை சுத்தம் செய்து வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்குங்கள்.
குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி, பிறகு கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.
ஒரு நிமிடம் கழித்து, குக்கரை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக்கலந்து பரிமாறுங்கள். வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சூப்.