மாலை நேரங்களில் பக்கோடா சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் சற்று காரமாக, மைதா மாவுடன், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து செய்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை. மேலும் இந்த பக்கோடாவை டீ, காப்பி குடிக்கும் போது, செய்து வீட்டில் உள்ளோருக்கு கொடுத்தால், அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
இப்போது அந்த மைதா பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மைதா மாவைப் போட்டு, ஆவியில் சிறிது நேரம் வேக வைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக பக்கோடா போன்று பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது மொறுமொறுவென சூடான மைதா பக்கோடா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்