Author Topic: ~ குட்டிக்கதை: ~  (Read 24182 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #75 on: February 08, 2013, 07:12:14 PM »

மஹாபாரத போர் துவங்கிவிட்டது..

பகவான் கிருஷ்ணர் துரியோதனுக்கும் உறவினர்.
.பஞ்சபாண்டவருக்கும் உறவினர்..

கிருஷ்ணனிடம்உதவிகேட்டு துரியோதனும் வருகிறான்..
அர்ஜூன்னும் வருகிறான்..
.
இருவருக்கும் உதவிசெய்ய வாக்களிக்கிறார்.கண்ணன்...

யார் முதலில் உதவிகேட்பது என்ற நிலையில் துரியோதனுக்கே வழங்கபடுகிறது..

கண்ணனிடம் உள்ள பல்லாயிரகணக்கில் ஆன சேனையை கேட்கிறான்.துரியோதன்னஃ
.தந்துவிடுகிறான்..

அடுத்து அர்ஜூன.ன்..கண்ணன் மட்டும் போதும் எனகிறான்..
சரி..எனகி்கிறான்றான்கண்ணன்..

பல்லாயிரகணக்கான சேனையைவிட கடவுள் இருக்கும் இடமே வெற்றியின்இடம் என புரிந்துகொள்கிறான் துரியோதன்னன்...போர்க்களத்தில்..
...................................................................................................
அப்படியெனில் கோயிலுக்கு போனால் கடவுளையே எனக்கு வேண்டும் எனக்கேட்பதை தவிர என்ன இருக்கிறது..
அன்புடன் அழைத்தால் வரமால இருப்பார்..?

கோயிலுக்கு சென்றால் வேண்டப்படுவது கடவுளையே தவிர வேறு எதுவும் இல்லை..

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #76 on: February 08, 2013, 07:16:07 PM »

சந்தர்ப்பங்கள் சாதகமாக...

ஒரு புகழ் பெற்ற காலணி தயாரிப்பு கம்பெனியின் தலைவர், உலகப் படத்தை வைத்துக் கொண்டு தீவிரமாக யோசித்தார்.
தம் கம்பெனி காலணிகளை அறிமுகம் செய்யப்படாத இரண்டு தீவுகளைத் தேர்ந்தெடுத்து இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை அந்தத் தீவுக்கு அனுப்பினார்.

இருவருமே தீவுகளுக்குப் புறப்பட்டுப் போனார்கள். ஒருவாரம் சென்றது.
முதல் தீவிற்குச் சென்ற விற்பனைப் பிரதிநிதி இவ்வாறு செய்தி அனுப்பினார்; தீவு மக்களிடையே காலணி அணிகிற பழக்கமே கிடையாது. விற்பனைக்கு வாய்ப்பே இல்லை. அடுத்த விமானத்தில் திரும்புகிறேன்.


மற்றொரு தீவிலிருந்து விற்பனைப் பிரதிநிதி அனுப்பிய செய்தி இது:-
இந்தத் தீவில் மக்களிடம் காலணி அணிகிற பழக்கமே கிடையாது. எனவே விற்பனைக்குப் பிரமாதாமான எதிர்காலம் இருக்கிறது. ஆறு மாதங்கள் இங்கேயே தங்கி,ஆடர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

விதி ஒரு கதவை மூடினால் முயற்சி ஒரு ஜன்னலையாவது திறக்கும்"
என்னுடைய எல்லா வழிகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன்
என்ற உணர்வு உங்களுக்கு வரும்போது,ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.
எல்லா வழிகளும் இன்னும் தீர்ந்து விடவில்லை.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #77 on: February 08, 2013, 07:17:58 PM »

பாலுவும் வேலுவும் பள்ளிதோழர்கள்..

அப்புறம் ஒன்றாகவே ஆசிரியப்பயிற்ச்சி முடித்தார்கள்..

எம்ப்ளாயிமெண்ட் சீணியாரிட்டியில்கூட இவர்களது எண் வரிசை ஒன்றின் பின் ஓன்றுதான்...

இருவரும்ஆசிரியர் வேலைக்காக காத்திருந்தார்கள் பல வருடங்களாய்...

தீடிரென ஒர் நாள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உடனடியாக தேர்வு செய்யபோவதாகவும் பட்டியல் ஒட்டியிருப்பதாகவும் கேள்விப்பட்டு பாலு சென்றான்..

அப்போது வேலு எதேச்சேயாக திருப்பதி வரை சென்றுள்ளான் .திரும்ப ஒரு வாரம்.ஆகும்..

பாலுவுக்குஅலுவலகம் போனபோதுதான் தெரிந்தது..மொத்தம் மூன்று பேருக்கு போஸ்டிங்..பத்துபேருக்கு அழைப்பு என்று..

பாலு இன்டர்வீயுல் கலந்தால் கூடதிருப்பதி சென்ற வேலுவுடன் போஸ்டிங் முடிந்துவிடுகிறது...

பாலு'' வேலுவுக்கு தகவல் கொடுத்து அவனை இண்டர்வீயூ கலந்துகொள்ள சொல்லி அவனை வேலையை பெறச்செய்வதா இல்லை..தகவலே கொடுக்கமால் இருந்து வேலையை தான் வாங்கிசெல்வதா,,,,''யோசித்தான்

நட்பு ஜெயித்த்து..

வேலுவுக்கு நாளை இண்டர்வீயூ போட்டுவிட்டார்க்ள கிளம்பி வா...தகவல் அளிக்கிறான்

சாமிகூட கும்பிடாமல் ஆர்வத்துடன் திரும்புகிறான் வேலு..

அலுவலக்த்து போனபிறகுதான் தெரிகிறது..இவனோடு போஸ்டிங் முடிந்தது விடுகிறது..அதற்கு பிறகுபாலு உட்பட கலந்துகொளகிறவர்களுக்கு போஸ்டிங் கிடைக்காது என்று..

''என்ன பாலு இது ..எனக்கு தகவல் கொடுக்காமல் இருந்து போஸ்டிங் வாங்கி போயிருக்காலமே...''எனகிறான்..

''வாங்கியிருக்லாம்..அப்புறம் நணபனுக்கு தெரிந்தெ துரோகம் செய்துவிட்டோம் என்று ஆயுசு முழுதும் மனசு உறுத்தும்..நான் நண்பேண்டா..''என்று சொன்னான்.

இன்டர்வீயூன் போது வேலுவின் வரிசை வந்தபோது இன்டர்வீயூக்கு உள்சென்று வந்தான்...

அடுத்து பாலுவும் இண்டர்வீயூக்கு உள்ளேபோனான்...

உங்களுக்கு முதல் நபர் வேலை வேண்டாம் என எழுதிகொடுத்துவிட்டார் உங்களுக்கு வேலை உறுதி ஆகிறது..என்றார்கள்..

வெளியில் வந்தபோது வேலு நின்றுகொண்டிருந்தான்..நானும் நண்பேண்டா..எதைச்சேயாக தட்டி பறித்த்தாக என்மனசு உறுத்தாதா...சிரித்துகொண்டே சொன்னான்..

சம்பவம் உண்மையே..வசனங்கள் கறபனை..

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #78 on: February 08, 2013, 07:19:17 PM »

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..

அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்..

நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ,

மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.

.அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..

” மாமியாரின் அன்புப் பரிசு..”

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது..

அவரும் ஒரு மாருதி கார் வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.


மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது..

அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்..

“போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.

சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்

பொண்ணா வளர்த்துவச்சிருக்க..?”
மாமியார் செத்துட்டுது

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே

ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..”

மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #79 on: February 08, 2013, 07:20:21 PM »

புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, "இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்" என்றார்.
மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார்.

அதற்கு அந்த மாணவன், "இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன்" என்றான்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #80 on: February 08, 2013, 07:21:29 PM »

வழக்கு புலி....

பெரும் குற்றவாளிகள் 'கோயில்' கட்டவேண்டும் என்று நினைத்தால் நம்முடைய வக்கீல்'வழக்குபுலி'க்கு ஒரு கோயில் அமைந்துவிடும்..

அந்த அளவுக்கு குற்றவாளிகளை வெளியே கொண்டுவருகிற திறமை..
சட்டஞானம்..அவருக்கு உண்டு..

அவரை நம்பி இந்த குற்றத்தை செய்யலாம்..வெளியே வந்துவிடலாம் அவரிடம் பணத்தைகட்டி என்று சிலாகிப்பவரும் உண்டு...

செத்தவனை அவன் பிறக்கவேவில்லை என்றே வாதாடி அசத்துகிற திறமை உண்டு...

அவர் கோர்ட்க்குள் நுழைந்துவிட்டால் என்ன பேசுகிறார் என்று வாயில் ஈ போவது கூட பார்க்கிற வக்கீல் கூட்டம் உண்டு..

அவர் பேசி முடித்துபிறகு ஒன்னாங்கிளாஸ் படிக்காதவன் கூட இப்படித்தான் பேசியிருப்பான் ஆனால் அவர் அடி வருடி கூட்டம் இவரால் முடியும் உச்உச் கொட்டியே மாய்ந்துபோவார்கள்..

உள்ளே போகாமல் வெளியே கொலைகார.ர்களும் திருடர்களும் நடமாடுகிறார்க்ள என்றால் இவருடைய கைங்கிரயம்தான்..

அடுத்து அடுத்து குற்றங்கள் செய்கிறானே..அவருக்கு பிரசினை இல்லை..இவருக்கு காசை வெட்டிகிறானா அது போதும் அவருக்கு.

என்ன இப்படி செய்கிறீர்களே என்றால்என் தொழில் தர்.ம.ம்..என்னிடம் வந்வனை காப்பற்றவேண்டும் .எனபார்..

அவருக்கு ஒரே பெண்..செல்லபெண்..அவரின் அத்தனை பணத்துக்கும்வாரிசு..

பக்கத்து நகரத்தில் படித்துகொண்டிருந்தத்து..

அவர் ஒரு நாள் ஓரு எல்லோரும் முடிவை ஆவலோடு எதிர் பார்க்கிற வழக்கு..அதில் வாத திறமையை காட்டிகொண்டிருந்த நேரம்..

அவருடைய செல்லப்பெண் காலை நேர வாக்கிங் போனபோது நகையைபறிக்க வந்த திருடன்உடன் நடந்த போரட்டத்தின் போது குத்தப்பட்டபோது உயிரை இற..ந்துவிடுகிறார்.செய்தி வருகிறது..

நிலை குலைந்து போகிறார்.

.நாட்டிலே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பில்லையா..கதறுகிறார்.

.போலீஸ் என்ன செய்கிறது ..எனகிறார்..

உடனே கண்டுபிடிக்கவேண்டும் ..எனகறார்..அவனை தூக்கில் போடவேண்டும் எனகிறார்..

முக்கிய நபரல்லவா...குற்றவாளியை கண்டுபிடித்திவிடுவோம் என்று உயர் போலீஸ்அதிகாரியே இவரிடம் பேசுகிறார்..

இவரின் அடி வருடிகளும் அவனை சும்மாவிட்கூடாது எனகிறார்க்ள...

இப்படியெல்லாம் களபேரம் நடந்துகொண்டிருக்கும்போதுஅவருக்கு போன் வருகிறது..

''நம்ம சுல்லான் இருக்கான்லே போன தடவை இரட்டை கொலையிலே காப்பாற்றி விட்டுங்களே..அவன் யாரோ ஒரு பொண்ணை போட்டுதள்ளிட்டானாம்..பெரிய இடத்து பொன்னாம் போலீஸ் தீவரமாக தேடுதாம்..அவனை நீங்கதான் காப்பாற்றியாகனும்..'' என்றது..

சமுதாயத்தை பாதிக்கிற செயலை செய்தால் ஒருநாள் நம்மையும் பாதிக்கும் எனபதை முதல்முதலாகஎனபதை உணர்ந்தார் நமது வழக்கு புலி..

Offline User

  • Jr. Member
  • *
  • Posts: 53
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • ஒரு வரில சொல்ல எதுமே இல்ல
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #81 on: February 08, 2013, 11:09:01 PM »
awesome collections..mixture of various emotions..enjoyed each stories..waiting for your next collections.. :)
:)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #82 on: February 08, 2013, 11:23:04 PM »

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #83 on: February 09, 2013, 07:29:20 PM »


அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அந்த விடுதலைப் போராளி.

திடீரென்று அவர் அறையில் தரையை உடைத்துக் கொண்டு ஒருவர் தலை காட்டினார்.

“நானும் சிலரும் தப்பிக்க முயன்று உன் அறை வரை வந்துவிட்டோம்.

உன் அறையிருந்து ஆறடிதூரம் கடலை நோக்கித் தோண்டினால்

நாம் விடுதலையடைந்து விடுவோம்”

என்றதும் இவரும் ஆர்வமாகத் தோண்டினார்.

ஆறடி தோண்டி தலையை வெளியே நீட்டியதும் அதிர்ந்தார்.

சிறைக்காவலர் அறைக்குள் போனது அது.

கடலை நோக்கித் தோண்ட சொன்னதை மறந்திருந்தார்.

எந்த முயற்சியையும் சரியான திசையில் மேற்கொள்பவர்களே வெல்கிறார்கள்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #84 on: February 09, 2013, 07:31:33 PM »

' நம்ம ராமசாமி' ஓரு ஹோட்டல் அறிவிப்பை பார்த்தார்...

10 நிமிடத்தில் 50 இட்லி சாப்பிட்டால் 1000 ரூ பரிசு எனப்போட்டிருந்தது...

ராமசாமி ''நான் ரெடி..பணம் கட்டாயம் தருவீர்களா.''.கடைகராரை கேட்டார்..

''கட்டாயம் தருவோம் ''என்றார் கடைகார.ர்

'''பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன் 'என்று சென்றுவிட்டு திரும்பினார்..

போட்டியில் கலந்து கொண்டு 10 நிமிடத்தில் 50 இட்லி சாப்பிட்டு முடித்துவிட்டார்.

கடைகரா.ர் ஆச்சிரியம் அடைந்துவிட்டார்..

பரிசுதொகை கொடுத்துவிட்டு ''பத்து நிமிடத்தில் போய்மந்திரம் ஏதும் போட்டுவிட்டுவந்தீர்களா ''கேட்டார்..கடைகார.ர்

ராமசாமி சொன்னார்..''10 நிமிட்த்தில் 50 இட்லி சாப்பிடமுடியுமா என்று சாப்பிட்டுபார்த்து.வந்தேன் ....''என்றார்

கடைக்காரர் : ஹான்ன்ன்ன் !!!!!!

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #85 on: February 09, 2013, 07:32:38 PM »

ஒரு குருவுக்கு பலசீடர்க்ள் இருந்தார்க்ள..

குரு பல தியான முறைகளை கற்றுகொடுத்திருந்தார்..

அதில் ஒரு சீடர் 12 ஆண்டுகள் கடுமையாக தவம் செய்து தண்ணீரில் மேல் நடக்கும் வித்தையை கைவரப்பெற்றார்..

இதனை குருவிடம் சொல்லி ஆசி பெறுவதற்க்காக தண்ணீர் மேல் நடந்து வந்து ஆசி பெற நின்றார்..

குரு சொன்னார்.''.காலணா கொடுத்தால் ஒடக்காரன் அக்கறையில் கொண்டு வந்துவிட்டு போகப்போகிறான்..காலணா பொறதா விஷயத்துக்கா 12 வருடங்கள் வீண்செய்தாய்..''என்றார்..

சாதிப்பது முக்கியம் அல்ல..அந்த சாதனையால் என்ன பலன் எனபதே முக்கியம் என விளக்கும் கதை இது..

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #86 on: February 09, 2013, 07:33:50 PM »

கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.
அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.

அழகிக்கு கோபம் வந்துவிட்டது.

அழகி : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.

அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் - பணிவாகச் சொன்னார் இவர்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #87 on: February 09, 2013, 07:34:52 PM »

பாழடைந்த பங்களா வாசலில் நின்றிருந்த
அவளை,
விசித்திரமான வடிவத்தில் இருந்த மிருகம்
ஒன்று துரத்துவதுபோல கனவு கண்டாள்..

தினந்தோறும்
இந்தக் கனவு
தொடர்ந்து வர, அவள் பயந்து நடுங்கினாள்..
நிம்மதி இன்றித் தவித்தாள்..

அன்றைக்கும் அதே கனவு..

அதே பங்களா..
அதே மிருகம் துரத்த..
மூச்சு இரைக்க
ஓடினாள்...
ஒரு மூலையில்
அவள் ஒடுங்கிக்கொள்ள
அந்த மிருகம் அவளுக்கு அருகில் வந்து உற்றுப் பார்த்தது..

பயத்தில் உறைந்துபோன அவள்,
அந்த மிருகத்திடம்
கேட்டாள்…
யார் நீ..?
உனக்கு என்ன வேண்டும்..?
என்னை எதற்காகத் துரத்துகிறாய்..?
இப்போது என்னை என்ன செய்யப் போகிறாய்..?

அந்த மிருகம் அவளிடம் அமைதியாகச்
சொன்னது…
எனக்கெப்படித் தெரியும்..?
இது உன் கனவு..!


கருத்து:
கண்ணுக்குத்தெரியாத
எதிர்காலத்தை
கவலையுடன்
எதிர்நோக்குவதைவிட
எதுவாக இருந்தாலும்
ஒரு கை பார்த்துவிடவேண்டும்
என்ற துணிச்சலுடன் வாழந்தால்,
வாழ்க்கை பிரகாசிக்கும் .

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #88 on: February 09, 2013, 08:01:25 PM »


ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன்
சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய்
வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
என்று புரியும் என்று அடிக்கடி சவால்
விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து,
ஒருநாள் நீங்க வீட்ல
இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..
காலைல
குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள்
சொல்லிக்கொடுத்து
சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
செஞ்சுதான் பாருங்களேன்..
என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில்
இருக்க..
இவள் ஆபீஸ் போனாள்..
ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..

முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..

வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்
வருபவர்களை கண்டித்தாள்..
கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட
நினைத்தபோது,
ஓர் அலுவலரின் மகள் திருமண
வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண
மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம்
ஒன்றை சொல்லிவிட்டு,
மணமக்களின்
கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..
பந்தியில்
உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த
'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்
என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..
அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும்
கணவனுக்கும் என பைக்குள்
பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,
கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்
இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
அத்தனையும்
குரங்குகள்..
சொல்றதை கேட்க மாட்டேங்குது..
படின்னா படிக்க மாட்டேங்குது..
சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல
படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள
கெடுத்து வச்சிருக்கே
என்று பாய..

அவளோ,
அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...
என்றவாறே
உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்
பிள்ளைகள்..

விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
‘ஏங்க..
இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?
இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
ஓஹோ ,
அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும்
ஒன்று புரிந்தது..

இல்லாள் என்றும் ,
மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
தொடங்கி நம் மூதாதையர்கள்
சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும்
பிள்ளைகளுக்கு வளமான
வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..

அதுபோல,
பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்
அளப்பரியது..

ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
இது ஆணுக்கு,
இது பெண்ணுக்கு என்று
குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில்
ஒரு குடும்பம்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
கணவன்மீது மனைவியோ,
மனைவிமீது கணவனோ ஆதிக்கம்
செலுத்தாமல்
அன்பால் சாதிக்கும்
மனநிலையை கொண்டிருந்தால்தான்
எல்லா வளமும்
பெற்று பல்லாண்டு வாழ
முடியும்...

மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்..

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #89 on: February 09, 2013, 08:03:17 PM »

ஓரு வயதானபெரியவர் .

.பார்வை மயங்கிய நிலையில் அழுக்கடைந்த

பாத்திரத்தை வைத்து சில்லறை காசுகளை குலுக்கியபடி அந்த பெரிய கடைத்த்தெருவில் கடை கடையாய்
பிச்சை எடுத்து வந்தார்..

இவர் நிலையை பார்த்து சில்லரை காசுகளை போட்டனர் பரிதாப ப் பட்டு பலர்..

ஒரு கடைகார ர் இவரையும் அழுக்கடைந்தபாத்திரத்தையும் மாறி மாறி பார்த்து..''முட்டாளே..''என்றார்..

''உங்களால் முடிந்தால் சில்லரை போடுங்கள்..இல்லையென்றால்அநாவசியமாக ஏன் கோப்படுகிறீர்க்ள..''பெரியவர்கேட்டார்..

அவ்வுளவுதான்..

அந்த பெரியவரின் பாத்திரத்தை பிடுங்கி தரையில் அடித்தார்..சில்லரை காசுகள் ரோடில் உருண்டோடியது..

மக்கள் கூடினர்..

''எனய்யா..அறிவிருக்கிறதா..முடிந்தால் போடு இல்லையென்றால் உன்வேலையைபார்த்துகொண்டிருக்க வேண்டியதுதானே..''சண்டை போட்டு சில்லரையை அவர் பாத்திரத்தில் சேர்த்தனர்..

கடைகார ர் சொன்னார்...''நீங்களும் உண்மை தெரியாமல் பேசுகிறீர்க்ள..
இவருடைய இந்த அழுக்கடைந்த பாத்திரம் தங்கத்தினால் ஆனாது..
அதை வைத்து பிச்சை எடுக்கிறார்
.இந்த பாத்திரத்தை விற்றாலே இந்த கடைதெருவில் பாதியை வாங்கிவிடலாம்..''
என்றார்
...........................................................................................
கதையின் நீதி..
நமது உணமையான பலம் தெரியாமல் நாம் இயங்கிகொண்டிருக்கிறோம்...