Author Topic: தக்காளி தால்  (Read 676 times)

Offline kanmani

தக்காளி தால்
« on: January 17, 2013, 10:47:07 PM »
தக்காளி உடலுக்கு மிகவும் நல்ல ஆரோக்கியத்தை தரும் ஒரு உணவுப் பொருள். அத்தகைய தக்காளியானது பல வகைகளில் உதவுகிறது. அதுமட்டுமின்றி, இந்த தக்காளியை மூலப்பொருளாக வைத்து, நிறைய ரெசிபிக்கள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான தக்காளி தாலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைசூர் பருப்பு - 1 கப்
தக்காளி - 5 (நறுக்கியது)
 இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
 மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மைசூர் பருப்பை கழுவி போட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை கரண்டி வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

 பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி போட்டு நன்கு வதக்கி, தக்காளியானது நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள் சேர்த்து ஒரு முறை பிரட்டி, பருப்பு மற்றும் உப்பை இத்துடன் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

 இப்போது சுவையான தக்காளி தால் ரெடி!!!

இதன்மேல் கொத்தமல்லியை தூவி, சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.