Author Topic: பாரதிதாசன் கவிதைகள்  (Read 10826 times)

Offline Global Angel

பாரதிதாசன் கவிதைகள்
« on: January 09, 2013, 03:37:33 AM »
தென்றலுக்கு நன்றி

முகொடு நெடிய தென்னை
கமழ்கின்ற சந்தனங்கள்
சமைக்கின்ற பொதிகை அன்னை
உனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள்!
தமிழ் எனக் ககத்தும்இ தக்க
தென்றல் நீ புறத்தும் இன்பம்
அமைவுறச் செய்வதை நான்
கனவிலும் மறவேன் அன்றோ?
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #1 on: January 09, 2013, 03:38:11 AM »

தமிழை என்னுயிர் என்பேன்


னியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #2 on: January 09, 2013, 03:38:43 AM »

அழகின் சிரிப்பிலிருந்து


சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடேஇ செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #3 on: January 09, 2013, 03:39:28 AM »
தமிழ்க் காதல்

மலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலிர் சிலிர்ப்பால் - கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால் - மயில்
அமையும் அன்னங்களின் மென்னடையால் - மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி - அப் பூஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே - நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலை யெலாம் ஒளி வானமெலாம் - நல்ல
தோகையர் கூட்டமெலாம் அளிக்கும்
கோல இன்பத்தை யென் உள்ளத்திலே - வந்து
கொட்டி விட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #4 on: January 09, 2013, 03:40:31 AM »
பாரதி பற்றி பாரதிதாசன்

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீஇ சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்!
திறம்பட வந்த மறவன்இ புதிய
அறம்பாட வந்த அறிஞன்இ நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்!
என்னென்று சொல்வேன்இ என்னென்று சொல்வேன்!
தமிழால்இ பாரதி தகுதி பெற்றதும்
தமிழ்இ பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்.
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #5 on: January 09, 2013, 03:43:54 AM »
பெற்றோர் இன்பம்

கூடத்து நடுவில் ஆடும் ஊஞ்சலில்
சோடித்து வைத்த துணைப்பொற் சிலைகள்போல்
துணைவனும் அன்புகொள் துணைவியும் இருந்தனர்!
உணவு முடிந்ததால், உடையவள் கணவனுக்குக்
களிமயில் கழுத்தின் ஒளிநிகர் துளிரும்,
சுண்ணமும், பாக்குத் தூளும், கமழும்
வண்ணம் மடித்து மலர்க்கை ஏந்தினாள்.
துணைவன் அதனை மணிவிளக் கெதிரில்
மாணிக் கத்தை வைத்ததுபோல் உதடு
சிவக்கச் சிவக்கச் தின்றுகொண் டிருந்தான்.
ஆயினும் அவன்உளம் அல்லலிற் கிடந்தது.

"கேட்டான் நண்பன், சீட்டு நாட்டின்றி
நீட்டினேன் தொகை! நீட்டினான் கம்பி;
எண்ணூற் றைம்பது வெண்பாற் காசுகள்
மண்ணா யினஎன் கண்ணே" என்றான்.
தலைவன் இதனைச் சாற்றி முடிக்குமுன்
ஏகா லிஅவர் எதிரில் வந்து
கூகூ என்று குழறினான்: அழுதான்.
உழைத்துச் சிவந்ததன் உள்ளங் கைகள்
முழுக்க அவனது முகத்தை மறைத்தன.
மலைநிகர் மார்பில் அலைநிகர் கண்ணீர்
அருவிபோல் இழிந்தது. "தெரிவி. அழாதே
தெரிவி" என்று செப்பினான் தலைவன்
"நூற்றிரண் டுருப்படி நூல்சிதை யாமல்
ஆற்றில் வெளுத்துக் காற்றில் உலர்த்திப்
பெட்டி போட்டுக் கட்டி வைத்தேன்.
பட்டா ளத்தார் சட்டையும் குட்டையும்
உடன் இருந்தன. விடிந்தது பார்த்தேன்.
உடல் நடுங்கிற்றே ஒன்றும் இல்லை"
என்று கூறினான் ஏழை ஏகாலி.

அல்லல் மலிந்த அவ்வி டத்தில்,
வீட்டின் உட்புறத்து விளைந்த தான
இனிய யாழிசை கனிச்சாறு போலத்
தலைவன் தலைவியைத் தழுவலாயிற்று.

"நம்அரும் பெண்ணும் நல்லியும் உள்ளே
கும்மா ளமிடும் கொள்ளையோ" என்று
தலைவன் கேட்டான். தலைவி "ஆம்" என்று
விசையாய் எழுந்து வீட்டினுட் சென்றே
இசையில் மூழ்கிய இருபெண் களையும்
வருந்தப் பேசி வண்தமிழ் இசையை
அருந்தா திருக்க ஆணை போட்டாள்.

தலைவன்பால் வந்து தலைவி குந்தினாள்.
மகளொடு வீணை வாசித் திருந்த
நாலாவது வீட்டு நல்லி எழுந்து
கூடத்துத் தலைவர் கொலுவை அடைந்தாள்.
"என்ன சேதி?" என்றான் தலைவன்
நல்லி ஓர்புதுமை நவிலலு ற்றாள்.
"கடலின் அலைகள் தொடர்வது போல
மக்கள், சந்தைக்கு வந்துசேர்ந்தார்கள்,
ஆடவர் பற்பலர் அழகுப்போட்டி
போடுவார் போலப் புகுந்தனர் அங்கே
என்விழி அங்கொரு பொன்மலர் நோக்கி
விரைந்தது. பின்அது மீளவில்லை.
பின்னர் அவன்விழி என்னைக் கொன்றது;
என்னுளம் அவனுளம் இரண்டும் பின்னின,
நானும் அவனும் தேனும் சுவையும்
ஆனோம் - இவைகள் அகத்தில் நேர்ந்தவை

மறுநாள் நிலவு வந்தது கண்டு
நல்லிக் காக நான், தெருக் குறட்டில்
காத்திருந்தேன்; அக் காளை வந்தான்.
தேனாள் வீட்டின்¢ 'எண்' தெரிவி என்றான்.
நான்கு - எனும் மொழியை நான்மு டிக்குமுன்
நீயா என்று நெடுந்தோள் தொட்டுப்
பயிலுவ தானான் பதட்டன்; என்றன்
உயிரில் தன்உயிர் உருக்கிச் சேர்த்து
மறைந்தான்" என்று மங்கை என்னிடம்
அறைந்தாள். உம்மிடம் அவள் இதைக் கூற
நாணினாள். ஆதலால் நான்இதைக் கூறினேன்
என்று நல்லி இயம்பும் போதே
இன்னலிற் கிடந்த இருவர் உள்ளமும்
கன்னலின் சாற்றுக் கடலில் மூழ்கின.

'நல்லியே நல்லியே நம்பெண் உன்னிடம்
சொல்லியது இதுவா? நல்லது நல்லது.
பெண்பெற்ற போது பெருமை பெற்றோம்.
வண்ண மேனி வளர வளர, எம்
வாழ்வுக்கு - உரிய வண்மை பெற்றோம்;
என்மகள் உள்ளத்தில் இருக்கும் தூயனின்
பொன்னடி தனில்எம் பொருளெல்லாம் வைத்தும்,
இரந்தும், பெண்ணை ஏற்றுக் குடித்தனம்
புரிந்திடச் செய்வோம் போ' என் றுரைத்தான்.

தலைவி சாற்றுவாள் தலைவ னிடத்தில்,
'மறைபோற் சுமந்த என் வயிற்றில் பிறந்தபெண்
நல்லி யிடத்திற் சொன்னாள். இதனைச்
சொல்லும் போதில்என் செல்வியின் சொற்கள்
முல்லை வீசினவோ! முத்துப் பற்கள்
நிலா வீசினவோ! நீல வழிகள்
உலவு மீன்போல் ஒளிவீ சினவோ;
நான்மேட் கும்பேறு பெற்றிலேன்' என்று
மகள்தன் மணாள னைக்கு றித்ததில்
இவர்கட்கு இத்தனை இன்பம் வந்ததே!
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #6 on: January 09, 2013, 03:44:50 AM »
எமனை எலி விழுங்கிற்று!

ர்க்காருக்குத் தாசன்நான்! ஓர்நாள்
பக்கத்தூரப் பார்க்க எண்ணி
விடுமுற கேட்டேன். விடுமுற இல்ல!
விடுமுற பலிக்க நோய வேண்டினேன்¢
மார்புநோய் வந் மனதில் நுழந்த!

மலர்ந்தஎன் முகத்தினில் வந்த சுருக்கம்!
குண்டு விழிகள் கொஞ்சம் குழிந்தன.
என்பெண் டாட்டி என்ன அணுகினாள்.
எதிரில் பந் மித்திரர் இருந்தார்.
தூயஓர் பெரியார் என்னுடல் தொட்டுக்
காயம் அநித்தியம் என்று கலங்கினார்.
எதிரில் நிமிர்ந்தேன்; எமன்! எமன் ! எமனுரு!!!

இருகோரப்பல்! எரியும் கண்கள்!!
சுவாசமும் கொஞ்சம் சுண்டுவ அறிந்தேன்.
சூடு மில்ல உடம்பத் தொட்டால்!
கடிகாரத்தின் கருங்கோடு காணேன்;
கண்ட பிழயோ, கருமத்தின் பிழயோ,
ஒன்றும் சரியாய்ப் புரியவில்ல,
என்ற முடிவ ஏற்பாடுசெய்தேன்!
என்கதி என்ன என்று தங்க
சொன்னதாய் நினத்தேன் விழிகள் சுழன்றன!
பேசிட நாக்கப் பெயர்த்தேனில்ல.
பேச்சடங்கிற்றெனப் பெருந்யர் கொண்டேன்.
இருப்புத் தூண்போல் எமன்க இருந்ததே!
எட்டின ககள் என்னுயிர் பிடிக்க!
உலகிட எனக்குள் ஒட்டுற வென்பதே
ஒழிந்த! மனவி ஓயாதழுதாள்!
எமனார் ஏறும் எருமக்கடாவும்
என்ன நோக்கி எடுத்தடி வத்த.
மூக்கிற் சுவாசம் முடியும் தருணம்
நாக்கும் நன்கு நடவாச் சமயம்,
சர்க்கார் வத்தியர் சடுதியில் வந்
பக்குவஞ் சொல்லிப் பத்த் தினங்கள்
விடுமுற எழுதி மேசமேல் வத்
வெளியிற் சென்றார். விஷயம் உணர்ந்தேன்.

"அண்டயூர் செல்ல அவசியம், மாட்டு
வண்டி கொண்டுவா" என்றேன்! மனவி
எமனிழுக்கின்றான் என்றாள். அத்ததி
சுண்டெலி ஒன்று டுக்காய் அம்மி
யண்டயில் மறந்தம் அம்மிய நகர்த்தினேன்!
இங்கு வந்த எமன அந்த
எலிதான் விழுங்கியிருக்கும் என்பத

மனவிககு¢ உரத்தேன். வாஸ்தவம் என்றாள்!
மாட்டு வண்டி ஓட்டம் பிடித்த!
முன்னமே லீவுதந்திருந்தால்,
இந்நேரம் ஊர்போய் இருக்கலாமே!
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #7 on: January 09, 2013, 03:45:40 AM »
சவப்பற்று

ரும்புப் பெட்டியிலே - இருக்கும்
எண்ப லக்ஷத்தயும்,
கரும்புத் தோட்டத்திலே - வருஷம்
காணும் கணக்கினயும்,
அருந்ணயாக - இருக்கும்
யிரம் வேலியயும்
பெருகும் வருமானம் - கொடுக்கும்
பிறசொத்க்களயும்,

ட வககளயும் - பசும்பொன்
பரணங்களயும்
மாடு கறந்தவுடன் - குடங்கள்
வந் நிறவதயும்,
நீடு களஞ்சியம்கள் - விளந்த
நெல்லில் நிறவதயும்,
வாடிக்கக் காரர்தரும் - கொழுத்த
வட்டித் தொகயினயும்,

எண்ணிஎண்ணி மகிழ்ந்தே - ஒருநாள்
எங்கள் மடாதிபதி
வெண்ணிறப் பட்டுடுத்திச் - சந்தனம்
மேனியெலாம் பூசிக்
கண்கவர் பூஷணங்கள் - அணிந்
கட்டில் அறநோக்கிப்
பெண்கள் பலபேர்கள் - குலவிப்
பின்வர முன்நடந்தார்!

பட்டுமெத்ததனிலே - மணமே
பரவும் பூக்களின்மேல்
தட்டினிற் பக்ஷணங்கள் - அருந்திச்
சவத்த ரம்பித்தார்;
கட்டிக் கரும்பினங்கள் - சகிதம்
கண்கள் உறங்கிவிட்டார்;
நட்ட நடுநிசியில் - கனவில்
நடந்த கேளீர்.

நித்திரப் பூமியிலே - சிவனார்
நேரில் எழுந்தருளிப்
புத்தம் புதிதாகச் - சிலசொல்
புகல ரம்பித்தார்.
'இத்தன நாளாகப் - புவியில்
என சவமத
நித்த நித்த முயன்றே - புவியில்
நீளப்பரப்பி விட்டாய்.

மடத்தின் ஸ்தியெல்லாம் - பொவில்
மக்களுக்கு க்கிவிட்டேன்!
திடத்தில் மிக்கவனே - இனிநீ
சிவபுரி வாழ்க்க
நடத்க!' என்றே -சிவனார்
நவின்றுபின் மறந்தார்.
இடிமுழக்க மென்றே - தம்பிரான்
எண்ணம் கலங்கிவிட்டார்!

தீப்பொறி பட்டபோல் - உடலம்
திடுக்கிட எழுந்தார்
'கூப்பிடு காவலர' - எனவே
கூச்சல் கிளப்பிவிட்டார்;
'காப்பளிக்க வேண்டும் - பொருள்கள்
களவுபோகு' மென்றார்
'மாப்பிள என்றனுக்கே - இத்ததி
மரணம் ஏக்' கென்றார்.

சொப்பனத்த நினத்தார் - தம்பிரான்
ள்ளிவிழுந் அழுதார்!
ஒப்பி உழத்ததில்ல - சிறிம்
உடல் அசந்ததில்ல!
எப்படி நான்பிரிவேன் - அடடா!
இன்பப் பொருளயெல்லாம்;
தப்பிப் பிழப்பண்டோ - என
சவம் எனத்டித்தார்!
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #8 on: January 09, 2013, 03:46:37 AM »
மெய்யன்பு!

லடிஎன்றேன், போஎன்றேன், இங்கிருந்தால்
மாய்த்திடுவேன் என்றுரத்தேன். மங்க நல்லாள்
கலகலென நீருகுத்த கண்ணீ ரோடும்.
கணகணெனத் தணல்பொங்கும் நெஞ்சத்தோடும்.

விலகினாள்! விலகினவே சிலம்பின் பாட்டும்!
விண்ணிரங்கும் அழுகுரலோ இருட்ட நீந்தக்
கொலக் கஞ்சாத் திருடரஞ்சும் காடு சொன்றாள்.
கொள்ளாத ன்பத்தால் அங்கோர் பக்கம்.

உட்கார்ந்தாள், இடஒடிந்தாள், சாய்ந்விட்டாள்.
உயிருண்டா? இல்லயா? யாரே கண்டார்!
இட்டலிக்கும் சுவமிளகாய்ப் பொடிக்கும் நல்ல
எண்ணெய்க்கும் நானென்ன செய்வேன் இங்கே?
கட்டவிழ்த்த கொழுந்திலயக் கழுவிச் சேர்த்க்
காம்பகற்றி வடித்திடுசுண்ணாம்பு கூட்டி
வெட்டிவத்த பாக்குத்தூள் இந்தா என்று
வெண்முல்லச் சிரிப்போடு கண்ணாற் கொல்லும்

தௌஙிளமுதம் கடத்தெருவில் விற்பண்டோ?
தேடிச்சென்றேன்வானம் பாடி தன்னச்
‘சொள்ளொழுகிப் போகுதடி என்வாய் - தேனச்
சொட்டுகின்ற இதழாளே, பிழபொறுப்பாய்;
பிள்ளபெற வேண்டாமே, உனநான் பெற்றால்
பேறெல்லாம் பெற்றவனே வேன்" என்றே
அள்ளிவிடத் தாவினேன் அவள! என்ன
அவள் சொன்னாள் "அகல்வாய்நீ அகல்வாய்" என்றே.

மனவிக்கும் கணவனுக்கும் இடயில் ஏதோ
மனக்கசப்பு வரல் இயற்க. தினய நீதான்
பனயாக்கி, நம்உயர்ந்த வாழ்வின் பத்தப்
பாழாக்க எண்ணுவதா? எழுந்தி ரென்றேன்.
எனநோக்கிச் சொல்லலுற்றாள், நமக்கு மக்கள்
இல்லஎனில் உலகமக்கள் நமக்கு மக்கள்
எனநோக்கும் பேரறிவோ உன்பால் இல்ல;
எனக்கும்இனி உயிரில்ல என்றாள் செத்தாள்.

திடுக்கென்று கண்விழித்தேன் என்தோள் மீ
செங்காந்தள் மலர்போலும் அவள்க கண்டேன்
அடுத்தடுத்ப் பத்முற தொட்டுப் பார்த்தேன்
அடிமூக்கில் மூச்சருவி பெருகக் கண்டேன்
படுக்கயிலே பொற்புதயல் கண்ட தப்போல்
பாவயின உயிரோடு கண்ணாற் கண்டேன்.
சடக்கென்று நானென்னத் தொட்டுப் பார்த்தேன்
சாகாத நிலகண்டேன் என்னி டத்தே
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #9 on: January 09, 2013, 03:47:37 AM »
பந்துபட்ட தோள்

ட்டுடலிற் சட்டை மாட்டி - விட்டுக்
கத்திரித்த முடி சீவிப்
பட்டுச் சிறாய்இடை அணிந்தே - கையில்
பந்தடி கோலினை ஏந்திச்
சிட்டுப் பறந்தது போலே - எனை
விட்டுப் பிரிந்தனர் தோழி!
ஒட்டுற வற்றிட வில்லை - எனில்
உயிர்துடித்திட லானேன்.

வடக்குத் தெருவெளி தன்னில் - அவர்
மற்றுள தோழர்க ளோடும்
எடுத்ததன் பந்தடி கோலால் - பந்தை
எதிர்த்தடித் தேவிளை யாடிக்
கடத்திடும் ஒவ்வொரு நொடியும் - சாக்
காட்டின் துறைப்படி அன்றோ
கொடுப்பதைப் பார்மிகத் துன்பம் - இக்
குளிர்நறுந் தென்றலும் என்றாள்.


"வளர்ப்பு மயில்களின் ஆடல் -தோட்ட
மரங்கள், மலர்க்கிளை கூட்டம்.
கிளிக்குப் பழந்தரும் கொடிகள் - தென்னங்
கீற்று நடுக்குலைக் காய்கள்
அளித்த எழில்கண் டிருந்தாய் - உன்
அருகினில் இன்பவெள் ளத்தில்
குளிர்ந்த இரண்டு புறாக்கள் - காதல்
கொணர்ந்தன உன்றன் நினைவில்"

தோழி இவ்வா றுரைக்குங்கால் - அந்தத்
தோகையின் காதலன் வந்தான்.
"நாழிகை ஆவதன் முன்னே - நீவிர்
நண்ணிய தென்ன இங்கே" என்றாள்.
"தாழ்குழலே! அந்தப் பந்து - கைக்குத்
தப்பிஎன் தோளினைத் தாக்கி
வீழ்ந்தது; வந்ததுன் இன்ப
மேனி நினை" வென்று சொன்னான்.
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #10 on: January 09, 2013, 03:48:35 AM »
இருவர் ஒற்றுமை

னக்கும் உன்மேல் - விருப்பம் - இங்
குனக்கும் என்மேல் விருப்பம் - அத்தான்
{எனக்கும் உன்மேல்...}

எனக்கு நீதுணை அன்றோ - இங்
குனக்கு நான்துணை அன்றோ - அத்தான்
{எனக்கும் உன்மேல்...}

இனிக்கும் என்செயல் உனக்கும் - இங்
கெனக்கும் உன் செயல் இனிக்கும்
தனித்தல் உனக்கும் எனக்கும் - நொடி
நினைப்பின் வருத்தம் மனத்தில் - அத்தான்
{எனக்கும் உன்மேல்...}

விழி தனிலுன தழகே - என்
அழ கிலுனது விழியே
தொழுத பிறகுன் தழுவல் - நான்
தழுவிப் பிறகுன் தொழுதல் - அத்தான்
{எனக்கும் உன்மேல்...}

நீ உடல்! உயிர் நானே - நாம்
நிறை மணமலர் தேனே
ஓய்விலை நமதன்பும் - இங்கு
ஒழியவிலை பேரின்பம் - அத்தான்
{எனக்கும் உன்மேல்...}
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #11 on: January 09, 2013, 03:49:22 AM »
சொல்லும் செயலும்

சொல்வதென்றால் வெட்கமடி தோழி - சொல்லச்
சொல்லுகின்றாய் என்துணைவன்
சொன்னதையும் செய்ததையும்
{சொல்வதென்றால்...}

முல்லைவிலை என்ன என்றான்.
இல்லைஎன்று நான்சிரித்தேன்
பல்லைஇதோ என்று காட்டிப்
பத்துமுத்தம் வைத்து நின்றான்.
{சொல்வதென்றால்...}

பின்னலைப்பின்னே கரும்பாம்பென்றான் - உடன்
பேதைதுடித்தேன் அணைத்துநின்றான்
கன்னல்என்றான் கனியிதழைக்
காதல்மருந் தென்றுதின்றான்.
{சொல்வதென்றால்...}

நிறையிருட்டில் ஒருபுதிரைப் போட்டான்;
நிலவெறிப்ப தென்னவென்று கேட்டான்.
குறைமதியும் இல்லைஎன்றேன்.
குளிர்முகத்தில் முகம்அணைத்தான்.
{சொல்வதென்றால்...}
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #12 on: January 09, 2013, 03:52:32 AM »
காதலி

ண்டனன் உலவி னன்பின்
உள்ளறை இட்ட கட்டில்
அண்டையில் நின்ற வண்ணம்
என்வர வறிவா னாகி
மண்டிடும் காதற் கண்ணன்
வாயிலில் நின்றி ருந்தான்!
உண்டேன். என்மாமி என்னை
உறங்கப்போ என்று சொன்னாள்

அறைவாயில் உட்பு குந்தேன்
அத்தான், தன் கையால் அள்ளி
நிறைவாயின் அமுது கேட்டுக்
கனி இதழ் நெடிதுறிஞ்சி
மறைவாக்கிக் கதவை, என்னை
மணிவிளக்கொளியிற் கண்டு
நறுமலர்ப் பஞ்சணைமேல்
நலியாதுட்கார வைத்தான்.

கமழ்தேய்வு பூசி வேண்டிக்
கனிவோடு பாலும் ஊட்டி
அமைவுற என்கால் தொட்டே
அவனுடையால் துடைத்தே
தமிழ், அன்பு சேர்த்துப் பேசித்
தலையணை சாய்த்துச் சாய்ந்தே
இமையாது நோக்கி நோக்கி
எழில்நுதல் வியர்வை போக்கி,

தென்றலும் போதா தென்று
சிவிறி கைக் கொண்டு வீசி
அன்றிராப் பொழுதை இன்பம்
அறாப்பொழு தாக்கி என்னை
நன்றுறத் துயிலிற் சேர்த்தான்
நவிலுவேன் கேட்பாய் தோழி;

கண்மூக்குக் காது வாய்மெய்
இன்பத்திற் கவிழ்ப்பான். மற்றும்
பெண்பெற்ற தாயும் போல்வான்.
பெரும்பணி எனக்கி ழைப்பான்.
வண்மையால் கால்து டைப்பான்
மறுப்பினும் கேட்பா னில்லை.
உண்மையில் நான்அ வன்பால்
உயர்மதிப் புடையேன் தோழி.

மதிப்பிலாள் என்று நெஞ்சம்
அன்புளான் வருந்து வானேல்
மதிகுன்றும் உயிர்போன் றாற்கு
மறம்குன்றும் செங்கோல் ஓச்சும்
அதிராத்தோள் அதிர லாகும்
அன்புறும் குடிகள் வாழ்வின்
நிதிகுன்றும் மன்னன் கையில்
மறைகுன்ற நேரும் அன்றோ?

நிலந்தொழேன் நீர்தொ ழேன்விண்
வளிதொழேன் எரிதொ ழேன்நான்
அலங்கல்சேர் மார்பன் என்றன்
அன்பனைத் தொழுவ தன்றி!
இலங்கிழைத் தோழி கேள்! பின்
இரவுபோ யிற்றே கோழி,
புலர்ந்தது பொழுதென் றோதப்
பூத்ததென் கண்ணரும்பு

உயிர்போன்றான் துயில்க ளைந்தான்
ஒளிமுகம் குறுந கைப்புப்
பயின்றது பரந்த மார்பில்
பன்மலர்த் தாரும் கண்டேன்.
வெயில்மணித் தோடும் காதும்
புதியதோர் வியப்பைச் செய்ய
இயங்கிடும் உயிரன் னோனை
இருகையால் தொழுதெ ழுந்தேன்.
அழைத்தனர் எதிர்கொண் டெம்மை
அணிஇசை பாடி வாழ்த்தி
இழைத்திடு மன்று நோக்கி
ஏகினோம். குடிகள் அங்கே
'அழித்தது வறுமை அன்னாய்
உதவுக' என்று நைந்தார்.
'பிழைத்தது மழைஎன் அத்தான்
பெய்'என்றேன் குடிகட் கெல்லாம்
மழைத்தது மழைக்கை செந்நெல்
வண்டிகள் நடந்த யாண்டும்.
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #13 on: January 09, 2013, 03:53:53 AM »
 தென்றல்

பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்
புதுமணத்தில் தோய்ந்து, பூந்தாது வாரி,
நதிதழுவி அருவியின்தோள் உந்தித், தெற்கு
நன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும்
சதிராடி, மூங்கிலிலே பண்எ ழுப்பித்
தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து,
முதிர்தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து,
முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி.

அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன்
சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச்,
செல்வம்ஒன்று வரும்;அதன்பேர் தென்றற் காற்று!
வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி
விட்டதென என்மனைவி அறைக்குப் போனாள்.
அந்தியிலே கொல்லையில்நான் தனித்தி ருந்தேன்;
அங்கிருந்த விசுப்பலகை தனிற்ப டுத்தேன்.

பக்கத்தில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிப்
பழந்தமிழின் சாற்றாலே காதல் சேர்த்து
மிக்கஅவ சரமாகச் சென்ற பெண்ணாள்
விரைவாக என்னிடத்தில் வருதல் வேண்டும்.
அக்காலம் அறைக்குவந்த பூனையின்மேல்
அடங்காத கோபமுற்றேன் பிறநே ரத்தில்
பக்காப்பூ னைநூறு, பொருளை யெல்லாம்
பாழாக்கினாலும்அதில் கவலை கொள்ளேன்.
                    

Offline Global Angel

Re: பாரதிதாசன் கவிதைகள்
« Reply #14 on: January 09, 2013, 03:54:48 AM »
மாலை

றையக் கண்டேன் கதிர்தான் - போய்
மாயக் கண்டேன் சோர்வே!
நிறையக் கண்டேன் விண்மீன் - என்
நினைவிற் கண்டேன் புதுமை!

குறையக் கண்டேன் வெப்பம் - எனைக்
கூடக் கண்டேன் அமைதி!
உறையக் கண்டேன் குளிர்தான் - மேல்
ஓங்கக் கண்டேன் வாழ்வே!