Author Topic: இந்த மணித்துளி  (Read 713 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
இந்த மணித்துளி
« on: December 26, 2012, 02:16:50 PM »
எவ்வளவு விலகியிருந்தும்
மறுபடியும் என்னை
தன் வட்டத்துக்குள் இழுத்துவிட்டது
இந்த மணித்துளி
 
இதன் பின் புலத்தில்
ஒளிந்திருப்பது இன்னதென‌
என்னால் ஊகிக்க இயலவில்லை
 
கைகுலுக்கல்
கை உதறல்
உதட்டு பிதுக்கல்
பெருமௌனத்தின் முடிவிலி
ஒரு திறப்பு
ஒரு சிக‌ர‌ம்
அனுபவம்
இனிய துவக்கம்
நிரந்தர முடிவு
எது எது அதனுள்
எனக்காக காத்திருக்கிறதென்று
முன்னுணர‌ இயலவில்லை
 
இந்த மணித்துளி
சூன்யத்தின் நிலமாய்
என்னை பேதமைக்கும்
அச்சத்துக்கும் இழுத்து செல்கிறது
 
அதனுள் இருந்து
திமிறி எகிறி வெளிகுதித்துவிட இயலாதபடிக்கு
அதன் பிடி இறுக்கமானதாய் உள்ளது
 
தேவ கரங்களா
நரக கரங்களா
எது என்னை பற்றியுள்ளன ?
 
இது நடந்து போகிற ஓடையா
அடித்து போகிற நதியா
உடைந்து போகிற அணையா
அமிழ்க போகிற சமுதிரமா
எது எது எது இதுவென்று யோசித்தவாறு
இதனுடன் இயந்து சுழல துவங்குகிறேன்
தப்பித்து வெளியேற வழியறியாத இயலாமையோடு
« Last Edit: December 26, 2012, 02:45:22 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: இந்த மணித்துளி
« Reply #1 on: January 03, 2013, 06:52:25 PM »
சில விஷயங்கள் இப்படிதான் எப்டி இருக்கும் என்னவாகும்னே தெரியாது .. ஆனால் அது நமக்கு தேவையானதாக இருக்கும் ... எதிர் பார்ப்புகளோடு பயணம் அதை பற்றி தொடரும் .. சாதகமான முடிவுகளை எதிர் பார்த்தாலும் .. பாதகமான முடிவுகள் விளைவுகள் மாற்றங்கள் கூட ஏற்படுவதுண்டு ... உதாரணமாக காதல்

அருமையான கவிதை ஆதி ...  நன்றி
                    

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: இந்த மணித்துளி
« Reply #2 on: January 03, 2013, 09:15:17 PM »
 ;Dwow kavithai kavithai supera irruku  ;D
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline ! SabriNa !

Re: இந்த மணித்துளி
« Reply #3 on: January 05, 2013, 12:43:20 PM »
dheva karangala...naraga karangala........ :P


nice lines ...aadhi!!

d title of d poem ..makes it more attractive...indha manithuli...!!