1.உருளைகிழங்கை வேகவைக்கும் முன் 15 நிமிடங்களுக்கு உப்பு தண்ணீரில் ஊறவைத்தால் உருளைகிழங்கு சீக்கிரமாக வெந்துவிடும்.
2.குளிர்ந்த தண்ணீரில் சிறுது உப்பு சேர்த்து அதில் பழுத்த தக்காளிப்பழங்களை போட்டுவைத்தால் அடுத்த நாள் உபயோகப்படுத்த உகந்ததாக இருக்கும்.
3.பாலிதீன் பையில் போட்டு ப்ரீசரில் வைத்தால் பச்சை பட்டாணி நீண்ட நாட்களுக்கு புதிதாக இருக்கும்
4.சமைக்கும் பாத்திரத்தில் அடிபிடித்துவிட்டால் அதை சுத்தம் செய்வதற்கு முன்,சிறிதளவு நறுக்கிய வெங்காயத்தை அப்பாத்திரத்தின் மீது போட்டு அதனோடு சூடான தண்ணீரை ஊற்றினால், பத்திரத்தில் இருக்கும் கறைகள் சுலபமாக நீங்கிவிடும்
5.மீதமிருக்கும் சப்பாத்தியை சுத்தமான துணியில் சுற்றி, காற்றுபுகாத பாத்திரத்தில் வைத்து குக்கரில் 2 விசில்கள் வரை வைத்து எடுத்தால் இப்போது செய்த சப்பாத்தி போல் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்
6.வாழைப்பழத்தை காகிதத்தில் சுருட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும்
7.பூண்டினை 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவைத்தால் அதன் தோலினை மிக சுலபமாக உறிக்கமுடியும்
8.பால் காய்ச்சும் போது, பால் பொங்கி வழிவதை தடுக்க, பாத்திரத்தின் உட்புற விளிம்புகளில் வெண்ணையை தடவினால் பால் பொங்கி சிந்திவிடும் என்ற கவலை இல்லை.
9.வெங்காயம் நறுக்கும்போது வரும் கண்ணீரை தவிர்க்க, வெங்காயத்தை நறுக்குவதற்கு முன் அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
10.எலுமிச்சை பழங்களை நிறைய நாட்கள் பாதுகாக்க அதன் மீது தேங்காய் எண்ணெய் தடவி, குளிர்சாதன பெட்டியில் ஒரு திறந்த பத்திரத்தில் வைக்கவும்.