என் இமை பொழுதில் வந்து
ஒளி வீசிய பேரழகே !
என் நொடி பொழுதை
உன் வசம் ஆக்கினாய் !...
நீ இடும் 'மை'யில்
என்ன வசியம் செய்தாயடி !
உன் நிழலை கூட தொடர
என்னை தூண்டுதடி !...
மயக்கத்திற்கு விலை போனேன்
உன் அழகை காண முடியாமல் !
மீண்டு வர முயற்சிக்கிறேன்
உன்னை பிரிய முடியாமல் !...
வெட்கத்திற்கு தாழ்ப்பாள் போட்டு
கொஞ்சம் என்னை பாரடி !
சேதி சொல்ல வந்த என்னை
சேர்த்து கொண்டு செல்லடி !...
சீவி விட்ட கொம்பை போல்
உன் இமைகள் காட்சி தர
சாகாவரம் கேட்டேன்
உன் கண்களில் நிலைத்து வாழ !!...