Author Topic: உன்னால் ரசிக்கப்பட்டாலே போதும் ...  (Read 371 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

 
உன்னோடு இணை சேர்ந்து
கண்ணார கடல் கண்டு
காலாற கரையில் நடந்து
கடற்கரை ரசித்திட ஆசைதான் ...

உன் கணுக்கால் தீண்டிய
கடலலைகள்
நின் காலழகில் சிக்கி
கண் சொக்கி திக்குமுக்காடி
திரும்ப கடல் செல்ல மறுத்துவிட்டால் ?

நின்னை இசைபாடிட வேண்டிய
வரலாறு, நின்னை வசை பாடுமே ...

என்னால் ஏன் உனக்கிந்த
நிலையென்றே...
நின் காதலில் சிக்குண்ட பின்
அவ்வாசையையே ஒதுக்கி
புறந்தள்ளிவிட்டேன்..

ஆசைகொண்ட என் மனதிற்கு
கசையடி கொடுத்து
சிந்திடும் கண்ணீர் துளிகளது
வெளிதெரியாதபடி
பசைபோட்டு ஒட்டி ,
இசைந்தேவிட்டேன்

உன்னோடு இணையாய்
கடல்காண கூடாதென்று

உணர்வுகளற்ற கடல் அலைக்கே
கருணைக்காட்டியவன்
என் உணர்வுகளுக்கெலாம்
உரித்தவள் உன்னையா மறந்திடுவேன் ?

உனக்காகவே வரம் வாங்கிவந்து
வடிக்கப்பட்டிருக்கும் வரிகள்
உன்னால் ரசிக்கப்பட்டாலே போதும் .