Author Topic: இன்று(25/09/12) என்னிடம் கவிதை இல்லை  (Read 847 times)

Offline Dong லீ

எனக்கு அவள் கொஞ்சமும் பரிட்சயம் இல்லாதவள்
அவளை நான் பார்த்தது இல்லை
முயன்றால் அவளை உன் வசமாக்கி
விடலாம் என்று சிலர் கூற
நானும் முயற்சிகளை முடிக்கி விட்டேன்

முதல் முயற்சி
அவள் கொஞ்சம் என் வசம் வந்துவிட்ட
உணர்வு எனக்குள் ..
அடேங்கப்பா ..
இனி வெற்றி தான் என்ற பெருமிதம்
மனதில் ..

தொடர்ந்து பல முயற்சிகள்
சில நாட்கள் என் வசம் இருக்கிறாள் 
பல நாட்கள் காணாமல் போகிறாள்

நேற்று என்னை கட்டிஅனைத்து
கொண்டவள்
இன்று என்னை தனியாக
தவிக்க வைத்து விட்டாள்..

மீண்டும் அவளை என் வசமாக்க
முயற்சியுடன் காத்திருக்கிறேன் ..
இன்னும் எழுதி முடிக்காத இந்த கவிதையுடன்
« Last Edit: September 27, 2012, 01:23:42 AM by Dong லீ »

Offline Gotham

Re: இன்று என்னிடம் கவிதை இல்லை
« Reply #1 on: September 25, 2012, 10:46:29 PM »
கவிதைக்கு பொய் அழகு.

கவிதையில்லை என்னும் பொய்யே இங்கும் அழகு.

வசப்படுவாள் விரைவிலேயே
வானவில்லின் வண்ணங்களாய்
மழைத்துளியில் சாரலாய்
மனதுள் வாசமாய்
என்றென்றும் வசப்படுவாள்
கவிதையாய்.

சின்ன சின்ன பிழைகள் பார்த்துக்கோங்கண்ணே..! :)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: இன்று என்னிடம் கவிதை இல்லை
« Reply #2 on: September 26, 2012, 01:27:35 PM »
http://www.friendstamilchat.com/forum/index.php?topic=8178.15

இங்க வாங்க, உங்க கவிதையை வைத்துதான் பேச ஆரம்பிச்சிருக்கேன்

கவிதை குறித்த பின்னூட்டமல்ல இது, அது தனியா எழுதுறேன்

அன்புடன் ஆதி

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்று என்னிடம் கவிதை இல்லை
« Reply #3 on: September 26, 2012, 10:33:05 PM »
நல்ல சிந்தனை
இனி கவிதை எழுதுன்னு சொல்ல வேண்டியதே இல்லை
பெரிய கவிஞர்களே வாழ்த்துவதை பார்ப்பதே பெரும் பாக்கியம்...
சந்தோஷமா இருக்கு  :)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Anu

Re: இன்று என்னிடம் கவிதை இல்லை
« Reply #4 on: September 27, 2012, 07:04:04 AM »

வசப்படுவாள் விரைவிலேயே
வானவில்லின் வண்ணங்களாய்
மழைத்துளியில் சாரலாய்
மனதுள் வாசமாய்
என்றென்றும் வசப்படுவாள்
கவிதையாய்.

kavithai illaiyena miga azhagaana kavithaiya solli irukinga sri :)
gotham sonnatha naan vazhi mozhiyaren.