எனக்கு அவள் கொஞ்சமும் பரிட்சயம் இல்லாதவள்
அவளை நான் பார்த்தது இல்லை
முயன்றால் அவளை உன் வசமாக்கி
விடலாம் என்று சிலர் கூற
நானும் முயற்சிகளை முடிக்கி விட்டேன்
முதல் முயற்சி
அவள் கொஞ்சம் என் வசம் வந்துவிட்ட
உணர்வு எனக்குள் ..
அடேங்கப்பா ..
இனி வெற்றி தான் என்ற பெருமிதம்
மனதில் ..
தொடர்ந்து பல முயற்சிகள்
சில நாட்கள் என் வசம் இருக்கிறாள்
பல நாட்கள் காணாமல் போகிறாள்
நேற்று என்னை கட்டிஅனைத்து
கொண்டவள்
இன்று என்னை தனியாக
தவிக்க வைத்து விட்டாள்..
மீண்டும் அவளை என் வசமாக்க
முயற்சியுடன் காத்திருக்கிறேன் ..
இன்னும் எழுதி முடிக்காத இந்த கவிதையுடன்