Author Topic: கோர்த்துக்கொண்டிருக்கிறேன்...  (Read 759 times)

Offline Guest

படித்த கவிதைகளின்
வார்த்தைகளை
கடமெடுத்து நானே
புனைந்துகொண்டேன்
புதியதோர் பதியம்

கவிதை எனச்சொல்லி
வீதியில் வீசி எறிந்தேன்

சிலதை வாசித்தனர் - அதில்
சிலதை நேசித்தனர்

இன்னும் சிலதை
அங்கேயே அநாதையாய்
விட்டுச்சென்றனர்...

நான் பொறுக்கி
எடுத்து கோர்த்துக்கொண்டிருக்கிறேன்...
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ