Author Topic: அறியாமல் செய்யும் தவறு  (Read 476 times)

Offline thamilan

அறியாது செய்வது
தவறாகாது
அறியாமை தான்
குறை

தான் நினைத்த பிரதிமை
உருவாகும் வரையில்
தகிக்கும் உலையின் அருகில்
தவம் போல காத்திருக்கிறான்
கொல்லன்

தானாய் நம்மை
மாற்றத்தான்
வாழ்வெனும் உலையில் நம்மைத் தள்ளி
வாசலில் காத்திருக்கிறான்
இறைவன்

இதை உணர்ந்து
துயர்களை சகித்தால்
நம்மை வாரியணைத்துக் கொள்வான்
இறைவன்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4585
  • Total likes: 5312
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: அறியாமல் செய்யும் தவறு
« Reply #1 on: July 13, 2016, 02:15:19 PM »