Author Topic: அவள்  (Read 9084 times)

Offline Global Angel

Re: அவள்
« Reply #15 on: September 03, 2012, 01:32:54 AM »
தன் கனவு தேவதையே கண் முன்னே வருவாள் என்றோ .. சர்வ அலங்காரத்துடன் சாட்சாத் அந்த அழகு தேவதை போல் வருவாள் என்றோ கௌதம் எதிர் பார்க்கவில்லை ... அங்க அசைவுக்கு அதிக அக்கறை கொடுக்காது .. அலுங்காமல் குலுங்காமல் ... மென்மையாய் நடக்க எங்கே கற்று கொண்டாள்.. அன்னத்திடமா .. இல்லை ...மயிலிடமா ...?

பார்த்த இரண்டு தடவையும் குளிர் ஆடைக்குள் பூட்டி இருந்த அவள் பருவம் ... கண் முன்னே பூத்து குலுங்குவது ... அவனுக்கு குளிர்ச்சியை தந்தது .. இறைவன் படைப்பில் இப்படி ஒரு தேவதையா ....

 வந்தவள் .. இவர்கள் இருந்த பக்கமாய் ஒரு பார்வையை வீசி சென்ராள்... கண்ணாடிக்குள் இது வரை மறைந்திருந்த இந்த கண்கள் ... இதற்க்கு இதனை கவர்ச்சியா....? இதை அறிந்துதான் கண்ணாடி அணிந்து கொள்கிறாளோ ...? எதற்கு மறைக்க வேண்டும் அழகு தானே ..

என்னை பார்த்திருப்பளோ...? இல்லை பார்த்ததற்கான எந்த முக மாற்றமும் அறிகுறியும் இல்லை .. ஆக இவள் தமிழ் பென்னகதான் இருக்க வேண்டும் ... இந்திய பெண்ணை இருப்பாள்.. என்ற சிந்தனையை அவள் சென்று கொண்டிருகின்றாள் என்ற விடயம் தடுக்க ... அவளை ரகசியமாய் தொடர்ந்தது அவன் கண்கள் ...

சிலர் அவளை தெரிந்ததற்கு அடையாளமாய் புன்னகை புரிவதையும் அவள் வசீகரமாய் அதையே பதிலாக கொடுப்பதையும் பார்த்து ரசித்தான் ... யாரோ ஒருவருடன் போய் அமர்ந்தாள்.. அது அவள் அம்மாவாக இருக்கலாம் .. இல்லை தெரிந்தவர்கள் சொந்தம் பந்தமாக இருக்கலாம் ..

திடிரென சிறுமியர் கூட்டம் அவளை சுற்றி வளைத்து ஏதே பேசுவதும் இவள் சிரித்து கொண்டே பதில் சொல்லவும் கலைந்து போனது...

அழகு அமைதி .. ஆஹா அவன் கண்கள் அவளை பருகிக்கொண்டு இருந்தது ... அவளோ இதை அறியாமல் .. மேடை மீது நடக்கும் திருமண சடங்குகளில் பார்வையை செலுத்திய வண்ணம் இருந்தாள்...தாலி கட்டி முடியும் தருவாயில் எங்கோ சென்றிருந்த அவன் நண்பன் வந்தான் ...

வா மச்சி சாப்பாடு போட்டு கொடுக்க ஹெல்ப் பண்ணலாம் .. சொர்ரிடா ... லடே ஆச்சு தனியா நின்னியா ... என்று கேட்டவனிடம்

இல்லை மச்சி பார்த்துட்டு இருந்தேண்ட என்றவனை இழுத்து சென்றான் ...

அழகி அவள் கண்ணில் இருந்து மறைந்துகொண்டிருந்தாள்.. 


தொடரும்....


                    

Offline Gotham

Re: அவள்
« Reply #16 on: September 03, 2012, 02:01:27 PM »
Sapaadu parimaarum idaththil santhippa? Nadakkatum.. nadakattum.. :)

Offline Global Angel

Re: அவள்
« Reply #17 on: September 13, 2012, 11:00:49 PM »
கௌதம் எண்ணம் வண்ணம் சிந்தனை உணர்வு என்று அந்த அழகியே பதிந்திருந்தாள்... இந்தியாவில் நான் பார்க்காத அழகியா ... இவளைவிட அழகியை பார்த்து இருந்தும் கூட  இவள்பால் மனம் போகுதே .. இதுதான் காதலா ...? இல்லை கவர்ச்சியா ... எதுவாக இருந்தாலும் அவன் மனதெங்கிலும் அவள் .. அவள் மட்டுமே நிலைதிருந்தாள்...

"ஹேய் வாட" என்ற நண்பனின் குரலில் அவளின் சிந்தனையில் இருந்து கலைந்து... உணவை அருந்தினான் ... ஒவொரு கவளத்துக்கும் அவள் நினைவுகளை பருகினான் .. உப்பு இருந்ததா உறைபிருந்ததா... என்ன கறி இதெல்லாம் கேட்டால் .. அவன் மலங்க விழித்திருப்பான்  ... அந்தளவுக்கு அவள் நினைவு இவனை  ஆட்கொண்டிருந்தது ..

சாபிட்டு முடிந்ததும் அவளை பார்க்கும் ஆவலில் .. அவசரமாய் சென்று கண்களை அவள் இருந்த இடத்திற்கு ஓட விட்டவன் ஏக்கத்தில் அப்படியே நின்றுவிட்டான் .. அவளை காணவில்லை ..... எங்கு தேடினாலும் அவளை காணவில்லை அவசரமாக துலாவிய கண்களில் அனைத்து சிவப்பு சாரிகளும் அலசிப்போயின ... இருந்தும் பயனில்லை ...

நண்பனின் தேடுதலை பார்த்த அவன் நண்பன் ... "என்ன கௌதம்.. அப்டி யாரை தேடுறே .. தெரிஞ்சவங்க வந்தாங்களா ....? "என்று கேட்டான் ..

"இல்லைட மச்சி நா சொல்லுவேனே அந்த பொண்ணு வந்திருன்தாள்டா.. இபோ காணல .. அதுதான் தேடுறேன் ..". என்றான் .

"ஹஹா பார்குற சான்ஸ் போயிடிச்சா .. பரவல மச்சி இந்த பக்கம்னா கண்டு பிடிச்சிடலாம் ... டோன்ட் வொர்ரி"  என்று ஆறுதல் சொன்னான் .

அவன் மனதும் அவள் இங்கேதான் எங்கயோ இருப்பதாய் சொல்லியது .... அவள் கண்கள் அவனை காதலுடன் நோக்கினால் எப்படி இருக்கும் ? கற்பனைகளை தவழவிட்டபடி ... தன வீடு நோக்கி சென்றான் ..புலரும் பொழுதில் நடக்கபோவது அறியாமல் ..
                    

Offline Gotham

Re: அவள்
« Reply #18 on: September 24, 2012, 10:43:18 AM »
பொழுது புலர்ந்ததா?


அப்படியே விட்டுட்டீங்களே? தொடருங்க க்ளோபலேஞ்சல்..

Offline Global Angel

Re: அவள்
« Reply #19 on: September 24, 2012, 01:27:21 PM »
வீட்டிற்கு வந்த மஞ்சரியின் மனது ஏனோ சரியாக இல்லை ... இப்படி ஒரு திருமணம் நடக்காத காரணத்தால் தானோ அவள் வாழ்க்கை இப்படி அலைகுலைந்து போய்விட்டது .... கண்களில் கண்ணீர் துரித்திகொண்டிருன்தது எப்போது வேண்டுமானாலும் அது மடை திறக்கலாம் ... அறியாத வயதில் .... இல்லை அறிந்த வயதேதான் அதில்  அவள் செய்த தவறுக்கு அனைவரும் அனுபவிக்கும் இந்த நிலைமையை கொடுத்த அவனை ... நினைக்கவே கூடாது ... துரோகத்தை செய்தவனை நினைப்பதே பாவம்.

****


இரவெல்லாம் இளமை கனவுகளில் மிதந்த கௌதம்  .. காலையில் எந்திரிக்க பிந்தி விட்டது ... அன்று லீவ் போட்டுவிட்டு நண்பனுடன்  ஊரை சுத்தலாம் என்று நினைத்து நண்பனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தான் ... எதிர் முனையில் பேசிய நண்பன் குரல் அவளவாக சரியில்லை ..

" எனாச்சு மச்சான் உடம்பு சரியில்லையா? " என்ற கேள்விக்கு பதிலாக ...

"மச்சான் வீட்லையா இருக்கே ... நான் அங்க வரேன் பேசலாம் "

என்ற பதிலோடு தொலை பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது .. என்னவாக இருக்கும் என்ற அவன் சிந்தனையில் ஏதும் புலப்படவில்லை .. நண்பன் வரவுக்காய் காத்திருந்தான் ...

அவனை நீண்ட நேரம் காத்திருக்க விடாது அவன் நண்பன் வந்தான் ....

ஹாய் மச்சான் வா  என்ற அழைப்புக்கு மெலிதாய் ஓர் புன்னகையை சிந்தினான் ...

எனாசுடா .. வீட்ல ஏதும் ....

நோ ..அதெல்லாம் ஒண்ணுமில்ல மனசு சரியில்லடா ... உங்கிட்ட பேசலாம்னு வந்தேன் என்று கொதமைபார்த்தான் .. அவன் கண்களில் நிராசை .. கோபம் .. சோகம்  வருத்தம் எல்லாம் கலந்த ஒரு கலவையை காண முடிந்தது ....

மச்சி எதுனாலும் உனக்கு சொல்ல தோன்றியதை சொல்லு ... என்று ஆறுதலாய் பேசினான் கௌதம் ...

மச்சான்  நான்கு வருடங்கள் இருக்கும் ... எனக்கு ஒரு அக்கா இருகின்றாள் ... என்னை விட ஒரு வயதே அதிகம் அவளுக்கு .. எனக்கு நேர் எதிர் அவள் ... ரொம்ப சிகப்பா அழகா இருப்பாள் ... அப்போ அவள் படித்துகொண்டிருந்தாள் ... படித்து படித்து வேலை செய்துகொள்வது இங்கு கட்டாயம் ... அப்போ வேலைக்கு போகும் வழியில் அவளுக்கு ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டு அவள் காதல் கொண்டாள்.. அவன் உங்க ஒரு பையன் பேரு ரமேஷ் கண்ணன் ..."

"என்ன பேரு சொன்னே .. ரமேஷ் கண்ணன் ஆ ..."

அந்த பெயர் நெருட  சரி மேலே சொல்லு என்பதை போல சைகை செய்தான்

இங்க இரண்டு வருடம் வேலைக்காக ஒப்பந்தத்தில் வந்திருந்தான் .-. ஏற்கனவே ஒரு வருடத்திற்கு மேலே கடந்திருந்தது ...  அக்காவின் பழக்கம் வீட்டுக்கு தெரிந்தது .. அப்பா கூபிட்டு திட்டினாரு .. அவ அவனைத்தான் கட்டிப்பதாக சொல்லி அழுதா ... ஒரே ஒரே அக்கா .. அப்பா இளகி அவனை கூபிட்டு பேசினாங்க .. அவன் தனக்கு அம்மா அப்பா இல்லை அக்கா இருக்காங்கனு சொல்லி அவங்க நம்பர் கொடுத்து பேச சொன்னான் .. பேசினாங்க வீட்ல ... அப்புறம் கல்யாணத்துக்கு அவன் பகத்துல ஆளுங்க யாருமே இல்லைன்னு அக்கா கோவில்ல சாதரணமா வைக்க சொலிட்டாள்...  ஆனா பதிவு செய்யேல்ல .. காரணம் பதிவு செய்தால் இங்கயே நிரந்தரமாக இருப்பதில சிக்கல் வரும் அவன் வேலைக்காக வந்தவனாசே ... சோ இன்னும் கொஞ்ச மாதத்துல இந்தியா போய் அங்க இருந்து பதிவு திருமணம் மேற்கொண்டு கூட அழைத்து வருவதாய் இருந்தது ... அக்கா ரொம்ப சந்தோசமாய் இருந்தாள்.. கர்பாமாக கூட இருந்தாள் .. அப்போ இவனோட ஒப்பந்தம் முதிர மாதம் வந்திடிச்சு அக்கா எட்டு மாத கர்ப்பிணி .. அவனோடு கூட போக முடியாத நிலைமை ... அவன் சொன்னான் .. அவன் போய் எல்லா ஏற்பாடும் பார்பதாகவும் உடனே திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் சொன்னான் ... அவன் கிளம்பும் நாளும் வந்தது .. அவன் கண் கலங்கினான் .. அக்காதான் சிரித்துகொண்டே .. போயிடு வாங்க ரமேஷ் ... வந்துடுவிங்கதனே  ஏன் கண்ணு கலக்கம் . சின்ன பையங்க போல அப்டின்னு சிரித்து வழி அனுப்பி வைத்தாள். அதுதான் அவளோட கடைசி சிரிப்பாக இருக்கும்னு அவளும் நினைக்கல்ல நாங்களும் நினைகேல ....

போனவன் போனதுதான் .. அவன் கொடுத்த எந்த தொலை பேசி நம்பரும் வேர்க் பண்ணேல ... அவன் அக்கா நம்பரும் ... அப்பொழுதுதான் அக்கா தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்தாள்... நிறைமாத கர்ப்பிணி ... அம்மா ஒரே திட்டு .. சொன்னத கேட்டியா அப்பவே சொன்னோமே ... உன்னால அவமானம் அது இதுன்னு ஒரே திட்டு ... அக்கா வீட்ல இருந்த மாத்திரைய தூக்கி போடுடிச்சு ... நல்ல காலம் தெய்வா தீனமா தபிசுட்டா .. ஒபரேசன் செஞ்சு குழந்தைய வெளிய எடுத்துட்டாங்க ...

ஆனா அன்னிக்கு போன அவ சந்தோசம் சிரிப்பு போனது போனதுதான் ... இனிக்கு அவ கொளந்தயோட பிறந்த நாள் ... யாரயும் வீட்டுக்கு நாங்க கூப்பிடுறது இல்லை .. தேவை இல்லாமல் கேள்வி கேட்பாங்கள் என்று ... ஆனா உன்ன கூப்பிடனும் எண்டு ஆசைபட்டேன் ... அம்மா சரி எண்டாங்க .. வா இனிக்கு எவனிங் வீட்டுக்கு என்று அழைத்தான் அவன் .

எவளவு பெரிய அநியாயம் .. அன்று அவன் காரில் சொன்ன அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் இன்று புரிந்தது ... மனிசிடு மச்சி எனக்கு என்ன சொல்றதெண்டே தெரியேல .. இப்படியும் சில பேரு இருக்கத்தான் செய்றாங்க .. நான் கட்டாயம் வாறேன்.  என்று நண்பனுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல்  சொல்லி அனுப்பி வைத்தான் ..

அவன் மனதில் எதோ சிறு நெருடல் ...  என்னவாக இருக்கும் ...

தொடரும்....
                    

Offline Gotham

Re: அவள்
« Reply #20 on: September 24, 2012, 01:37:37 PM »
அடடா.. இப்படியும் ஆட்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.


ஒருவேளை அவள் அவன் அக்காவாக இருப்பாளோ?

Offline Global Angel

Re: அவள்
« Reply #21 on: September 24, 2012, 01:52:25 PM »
ஹஹா யாருக்கு தெரியும் அவசரபட்டால் கதையை மாத்திடுவேன் >:( ;D ;D
                    

Offline Gotham

Re: அவள்
« Reply #22 on: September 24, 2012, 01:59:13 PM »
பார்த்தேன்.. அதுசரி கௌதம் ஏன் கொதமானான்?  ???

Offline Global Angel

Re: அவள்
« Reply #23 on: September 24, 2012, 02:14:48 PM »
உங்களை நினச்சேன் ஆகிடிச்சு .. ஹஹஹா அது எழுதிட்டு போனதில எழுத்து அப்டி வந்திடிச்சு
                    

Offline Gotham

Re: அவள்
« Reply #24 on: October 08, 2012, 02:28:27 PM »
அடுத்து??

Offline Gotham

Re: அவள்
« Reply #25 on: October 29, 2012, 09:12:59 AM »
அடுத்த பாகம் எங்கே? >:(

Offline Global Angel

Re: அவள்
« Reply #26 on: December 15, 2012, 03:20:47 PM »
குட்டி பொண்ணு பிர்த்டய்க்கு என்ன வாங்கலாம் .... என்று சிந்தனை செய்தபடியே 4 மணியளவில் வீடில் இருந்து கிளம்பினான் கெளதம் ... அந்த தெரு முனையில் விளையாட்டு பொருள் விக்கும் ஒரு கடை இருப்பது அவன் பார்த்திருந்த ஞாபகம் ... மணிக்கட்டை பார்த்தவாறே விரிந்தவன் எதிரே வந்த ஒரு பொண்ணுடன்  மோதிகொண்டான் ..... அவள் கையில் இருந்த ஒரு பார்சல் தவறி விழுந்திருந்தது ... உள்ள இருந்தது உடைந்திருகுமோ ... பதடதுடன் அதை எடுத்தவாறே ...

" சாரி மேடம் ... கவனிகல .. உள்ள உடையுற திங்க்ஸ் எதாவது இருக்குதா ... சாரி ..."
என்றவாறே அந்த பார்சலை எடுத்தான் ....

" இல்லை டிரஸ் அண்ட் உடையத திங்க்ஸ் தான் உள்ள" .... குயில் கூவியது கொஞ்சம் எரிச்சலோடுதான் .... அந்த குரலில் பட்டென்று நிமிர்ந்து பார்த்தவன் ..ஒஹ்  "நீங்களா ... இங்க எங்க வந்தீங்க ... எப்டி இருக்கீங்க..?" என்று கேட்டான் .... அவன் சந்தோசத்துக்கு அளவே இல்லை ... பூபந்து போல் எவளவு மென்மை அவளது கனவுகன்னி .... குளிரில் சிவந்து விட்ட அவள் கன்னங்கள் சிவந்த ஆப்பிள் போல பளபளண்ணு மின்னியது ... என்ன அழகு .. அவன் மனது ஊமத்தம் கொண்டது ....

"பைன்  .....  நா கிளம்பனும் லேட் ஆச்சு ... தேங்க்ஸ் " அவசரமாய் சொல்லியவாறே  பார்சலை பறிக்காத குறையாய் பறித்துக்கொண்டு மறைந்தாள் ...

அவளது முகத்தில் தெரிந்த சினம் ... மோதியவன் அவன் என்று தெரிந்ததும்  சினம் வடிந்து கண்ணில் ஒரு கவனம் தென்பட்டதை கவனித்த கெளதம் .. தான் அவளை நெருங்கிவிட்டதை உணர்ந்தான் .... கள்ளி பார்க்கலாம் எவ்ளோ நாட்கள் ஓடுவாய் என்று மனதுள் செல்லமாய் திடினான் ...

அவள் பின்னே போய் பார்த்திட துடித்த மனதை அடக்கினான் . எங்கே போய்ட போறாள் பார்த்துக்கலாம் ....மனதில் இன்பமாக நினைத்தவாறே ....கிப்ட் வாங்க கடைக்குள் சென்றான் .....

*****

"அக்கா ... இனிக்கு ஒரு ப்ரிண்ட கூப்ட்ருகேன் ... வர சொல்லி குட்டி பிர்த்டய்க்கு .... வருவான் .. உனக்கு சொல்லன்னு அப்புறம் குதிக்காத ... அவன் ரொம்ப நல்லவன்" ...

  என்று சொன்ன அரவிந்தின் குரலில் இருந்த சந்தோசத்தை உணர்ந்த மஞ்சரி ... "சரிடா ... வரட்டும் ... நா ரெடி ஆகணும் நீ குளிச்சுட்டு வா"  என்று தன ரூம்குள் புகுந்தாள் ...

என்னவோ நினைவுகள் மனதில் முட்டி மோதி கரை புரண்டு கொண்டிருந்தது ....  அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ... அவள் செல்லத்தின் பிறந்தநாளை இனிமையாக கொண்டாட அவள் தயாரானாள் .

மயில் கழுத்து வர்ணத்தில் ஒரு சேலை .... அதை சில நிமிடங்கள் சிந்தனையில் தடவியவள் .. தலையை சிளிப்ப்பி நினைவோட்டத்தை தடை செய்து ஆயத்தமானாள் . மெல்லிய ஒரு நெக்லஸ் கையில் வளையல் அதே வர்ணத்தில் .....அதே வர்ணத்தில் தோடு  பொட்டு எல்லாம் வைத்து கண்ணாடியில் தன்னை பார்தவழுக்கு  ஒரு பெரு  மூச்சு தானாய் வந்தது ...

தாயை தேடி கிச்சன் போனால் அங்கே தாயை காணாமல் .... டேய் அம்மா எங்கடா ... என்று பாத்ரூம் கதவை தட்டி கேட்டாள் ....

அவங்க கீழ பொய் இருக்கினம் வருவினம் ... " அவன் சொல்லி கொண்டிருக்கும்போதே  பெல் அடிக்கும் சத்தம் கேட்டது ... பாரு வந்தாச்சு பொய் கதவ திற .... என்ற தம்பியின் சொல்லுக்கு கட்டுபட்டு "சரி போறேண்டா நீ கெதியா வா ..." என்றவாறு கதவை திறந்தாள் ...

எங்கம்மா போனீங்க குளிர்குள்ள ... அப்புறம் இருமல் சளி எத சொலுங்க .. உங்கள திருத்த முடியாது .. என்று செல்ல கண்டிப்புடன் பேசியவாறே கதவை திறந்து நிமிர்ந்தவள் முகத்தில் மட்டுமல்ல எதிரே நின்றவன் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது ....


கெளதம் மனதில் பல கேள்விகள் அடுக்கடுக்காய் ....

****
                    

Offline Gotham

Re: அவள்
« Reply #27 on: December 18, 2012, 10:42:19 AM »
எப்படி பார்க்காமல் விட்டேன்..??
அடுத்த பாகத்திற்கு நன்றி...


கதை நல்லா சுவாரஸ்யமாய் செல்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள் க்ளோபல்.. 8)

Offline Global Angel

Re: அவள்
« Reply #28 on: December 18, 2012, 02:14:32 PM »
எழுதுறேன் .. எழுதிகிட்டே இருக்கேன்  :D