Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on December 03, 2025, 12:45:58 PM »

22
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on December 03, 2025, 10:38:08 AM »
23

இதைச் சாப்பிட்டால்
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாறு முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாறை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாற்றை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கணும்.
இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறுசுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம். ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும். மீதிப்பேர் சாப்பிடலாம்.
24
25
ஆன்மீகம் - Spiritual / Re: BIBLE VERSE of THE Day ✝️ 🙏
« Last post by MysteRy on December 03, 2025, 09:12:33 AM »
26
SMS & QUOTES / Re: Life thoughts 🥰
« Last post by Vethanisha on December 03, 2025, 07:19:50 AM »
Start your day with love ♥️


29
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on December 03, 2025, 05:32:03 AM »
30
அப்பா செய்துதந்த காகித கப்பல்களில்
இன்றுவரை மூழ்காமல் பயணிக்கிறது
குழந்தை உள்ளம்...

அடை மழைக்காலம்...
அப்பாவின் அண்மையில் தராசின் மேல்,
மூக்குப்பொடி நறுமணத்துடனே
ஆணியில் ஆடிய காகிதம்
கப்பலாக உருமாறிய அதிசயம்...

அந்த அழகிய காகித கப்பல்
தெருவில் தேங்கிய மழைநீரில்
தன் பிரம்மாண்டமான
முதல் பயணத்தை ஆரம்பித்தது...

தண்ணீரில் அங்குமிங்கும் அசைந்தாடிய
கப்பலைக் கண்டு பிரமித்து
கைத்தட்டி ஆரவாரித்த என் கன்னத்தில்
அப்பாவின் அன்பு முத்தம் - இன்றும்
அதனை முத்தாரமாக்கும்
முத்து மழைத்துளிகள்...

குளிருக்கு இதமாக அன்னைமடி
சுடசுட போண்டா பஜ்ஜி.
இடி இடித்தால் என்ன?
செவியைக் கிழித்தால் என்ன??
பாதுகாத்து கட்டிப்பிடித்து கொள்ளும்
அம்மாவின் கைகள்...

மழைக்கால சோம்பலுக்கு
தீனிப்போடும் அம்மாவின் பழங்கதைகள்.
அதில் பேய்கள் ஆட்டம் போடும்
பூதம் ஆளைத் தின்னும்.
ஆனால் அம்மாவின் பாதுக்காப்பால்
எதுவும் என்னை நெருங்காது...

இன்றும் அன்னைமடி கதகதப்பை
தேட செய்கிறது மழை...

நண்பர்கள் அனைவரும் வந்துவிட வேண்டும்
ஆனால் ஆசிரியர் ஒருவர்கூட வரக்கூடாது
என்ற பிரத்தனையுடன்
முழுமையாக நனைந்து தண்ணீர்
சொட்டசொட்ட வகுப்பறை...

மழையின் காரணமாக நடைபெறாத வகுப்பறை
உச்சக்கட்ட மகிழ்ச்சியின் வரையறை.
இடிசத்தத்திற்கு "ஓ" என்ற
பின்பாட்டு பாடியது இன்றும்
இடியின் முழக்கத்தோடு
இணைந்தே ஒலிக்கும்...

மழலையோடு மழலையாக மாற்றும் மழை...
தன் வெள்ளிக்கம்பிகளால்
பல அழகிய நினைவுகளைக் கோர்த்து
பூமியை மட்டுமல்லாமல்
மனதையும் குளிர செய்கிறது.... ☔ ☔ ☔
Pages: 1 2 [3] 4 5 ... 10