Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
                  மானிடனே!

மண்டை ஓட்டினுள் மானிட மூளையினை இறைவன் படைத்தது ஏன் தெரியுமா?
மதியால் தான் உன்னையும், உலகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று!
மானிடனே அதை மறந்த நீ உன்னையும்,உலகத்தையும் சிறு துண்டுகளாய் உடைக்கின்றாயே!

ஒருவன் பாட்டு பாடினால் ,இவனுக்கு பாடத்தான் தெரியும் படிக்க தெரியாதென்பாய்!
ஒருவன் நன்றாக படித்தால்,இவன் படித்து என்ன கிழிக்கப் போறான் என்பாய்!
ஒருவன் நன்றாக விளையாடினால்,இவன் உருப்பட மாட்டான் என்பாய்!

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை உலக வளர்ச்சிக்காக வித்திடு!
வக்கிர எண்ணத்திற்குள் புதைத்து விடாதே!
வளமாக வீதி விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் ,எத்தனை இழப்புக்கள் மூளைச் சாவுகள்?

உண்ண உணவின்றி,உடுக்க உடையின்றி ,தங்குமிடமின்றி தவிக்கும் மானிடர் ஒருபுறமிருக்க!
உயிரைக்கொடுத்து பால் அபிக்ஷேகம் நடிகர்களுக்கு இன்னொருபுறம்!
உனக்கு கடவுள் பாதுகாப்பாக தந்த  மூளையை செவ்வனவே பயன்படுத்தாமல் ,
சிதறடித்துவிட்டாய்!
உண்ணும் உணவில் போசனை இன்றி நோய்களும்,இளம் சாவுகளும்!
உடற்பயிற்சி இன்றி உடல்,உளச் சோர்வுகளுடன் நடமாடும் மானிடரே!

உழைக்கும் கரங்களை உயர்த்தி விடு!
உலக உயிர்களை உளமார நேசி!
உதவி செய்வதில் உத்தமனாய் இரு!
உலக வளர்ச்சிக்கு உன் அறிவை காணிக்கையிடு!
உளமார வாழ்த்திடு மற்றவர்கள் திறமைகளை!

உன் மதியினை சிறப்பாக பயன்படுத்திடு மானிடனே!
உன்னையும் பாதுகாத்து உலகத்தையும் சிதறிடாமல் பாதுகாத்திடு மானிடனே!





22
Wish You Many More Happy Returns Of The Day Canim Sis❤️🎂💐

23
Belated Happy Birthday Caesar Dude 🎂💐[/co :blank:lor]
24
Wish You Happy Birthday Canim Sis..!

26
Happy Birthday Caesar Raja Maha இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என்றென்றும்  புன்னகையுடன் மகிழ்ச்சியுடன் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
27
..
''அன்பான, ஆதரவான வார்த்தைகள்...!"*
.......................................
பல நேரங்களில் நல்லதாக, ஆதரவாக சொல்லப்படும் அன்பான வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும் ஏற்படுத்த முடிவதில்லை...

அதுவும் துன்ப காலங்களில் ஒருவர் சிக்கித் தவிக்கும் போது அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும் செயலாகவும் சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவே இல்லை...

தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கும் நீந்தத் தெரியாத மனிதனுக்குக் கிடைக்கும் மரக்கட்டை பிடிகொடுத்து மிதக்க உதவுவதைப்போல, அந்த அன்பான நல்ல வார்த்தைகள் துன்ப காலங்களில் தாக்குப் பிடிக்க ஒருவருக்கு உதவுகின்றன...

மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள், திறமையாளர்கள் கூட சில நேரங்களில் தங்கள் தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் இழந்துவிடுவதை நாம் பார்த்திருக்கின்றோம்...

அவர்களே தங்களுக்குள் அவற்றை இழந்து நிற்கும் அந்தக் குறுகிய காலத்தில் அடுத்தவரிடமிருந்து வரும் நம்பிக்கை வார்த்தைகள் எப்படிப்பட்ட ஊக்க மருந்தாக வேலை செய்கிறது என்பதைக் கண் கூடாகக் கண்டு இருக்கின்றோம்...

இன்றைய நாட்களில் ஆதரவான நான்கு வார்த்தைகள் கேட்பது உண்மையிலேயே அரிதாக இருக்கிறது...

எத்தனையோ வசதி, வாய்ப்புகள் பெருகி இருந்தாலும் மனப் பற்றாக்குறையாலும்,நேரப் பற்றாக்குறையாலும் நல்ல நம்பிக்கை, ஆறுதலூட்டும் வார்த்தைகள் கேட்பது அபூர்வமாகவே இருக்கிறது...

இந்த சிறிய குறைபாட்டின் விளைவுகள் வார்த்தைகளில் அடங்காதவை. பூதாகாரமானவை...


🟡 *சொற்கள் சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவை. அவைகளை ஆக்கத்திற்கே பயன்படுத்துங்கள். சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டு பிடித்துப் பாராட்டுங்கள்...!*

🟡 *அப்படி நல்லதைப் பாராட்டும்போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்துகிறீர்கள். மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கியிருக்கையில் மனமுவந்து ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள்...!*

🔴 *வருத்தங்களையும், தோல்விகளையும் கடக்காமல் எவரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவூட்டுங்கள். உங்களுக்குத் தெரிந்து அதே போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு மேலே வந்தவர்கள் பற்றி எடுத்துச்சொல்லி தைரியப்படுத்துங்கள்...!!*

🔴 *அதன் மூலம் அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள். காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள்...!!*

⚫ *பிறையாகத் தோன்றும் எல்லாமே முழு நிலவாகிப் ஒளிர்வதில்லை. எத்தனையோ பிறைகள் அலட்சியத்தாலும், கடுமையான விமரிசனங்களாலும் அமாவாசை இருட்டாய் தொலைந்து போய் இருக்கின்றன...!!!*

⚫ *ஒரு திறமை வெளிப்படுகையில் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்படும் போது அந்தத் திறமை வேரூன்ற உதவுகிறீர்கள். தங்கள் திறமைகள் மீது உண்மையிலேயே நம்பிக்கை ஏற்படும் வரை எல்லாத் திறமையாளர்களுக்கும் ஆரம்பத்தில் இது போன்ற நல்ல வார்த்தைகள் தேவைப் படுகின்றன...!!!*

🔘 _*அந்த நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயக்கம் கொள்ளாதீர்கள்.  தன்னலமில்லாத சேவைகளை செய்ய நமக்கு முடியாமலிருக்கலாம். ஆனால் ,அன்பாய் நான்கு வார்த்தைகள் சொல்லலாம் இல்லையா...?*_

🟢 _*அதற்கு என்ன செலவு இருக்கிறது...? அதில் என்ன சிரமம் இருக்கிறது...? இந்தக் கணத்திலிருந்து சிரமமில்லாத, செலவில்லாத அந்த நல்ல செயலை நாம் செய்ய ஆரம்பிப்போமா.
28
Yes  இது என் இடம் 😁
29
சுயபரிசோதனை

மற்றவரின் சிந்தனையோ
மற்றவரின் பார்வையோ
நம் கையில் பிடிக்க முடியாத சமுத்திரம்

அவர்களின் அனுபவம்
அவர்களுக்கென ஓடும் நீரோடை
அவர்களின் உணர்ச்சி
அவர்களுக்கென உயரும் அலை
அவர்களின் நினைவுகள்
அவர்களுக்கென அமைந்த கரை

நாம் எவ்வளவு அருகில் நின்றாலும்
எவ்வளவு தூரம் நின்றாலும்
அந்த கடலின் அமைப்பு
மாறாது, மாற்றவும் முடியாது.

ஆனால்

நம்முள் எழும் நுரை அலைகளை
நாம் அமைதியாக கேட்கலாம்
நம் மனத்தில் சேரும் இருள் மேகங்களை
நாம் மெதுவாக சிதறடிக்கலாம்

அதற்கு
ஒரு சிறிய சுயபரிசோதனை
நமக்கு அவசியம்

நம்முள் மறைந்திருக்கும்
ஒளி எது?

நம் குரலை அமைதியாக தாங்கும்
துணிவு எது?

எந்த நேரத்தில்
மனம் தளருகிறது?

எந்த பழைய காயம்
இன்றைய முடிவை தடுக்கிறது?

எந்த ஒரு நல்ல படி எடுத்தால்
நாளை வெளிச்சமாகும்?

எந்த ஒரு தெளிவான முடிவு எடுத்தால்
அறிவின் கதவு திறக்கும்?

எந்த பிழை நிழலாக
நம்மை தொடர்கிறது?

எந்த தவறு
நம் பாதையை குலைக்கிறது?


இப்படியான கேள்விகளை
நமக்குள் நாமே கேட்டுக் கொண்டு
அதற்கு நேர்மையாக பதில் சொன்னால்
அது நம்மை சரியான பாதையில் நடத்தும்

இன்று நம்முள் பார்க்கும் உண்மை
அதுவே நம் நாளைய திசையை
வலிமையாக்கும்

நம் மனதின் காற்றை சுத்தமாக்கும்
அதீத சிந்தனையை ஓரமாக்கும்
அவசரத்தின் ஓட்டத்தை அடக்கும்
உள்ளே மறைந்துள்ள பயத்தை
மெதுவாக இறக்கி விடும்

நாம் உலகத்தை மாற்ற முடியாது
ஆனால்
நம்மை நாமே
எப்படி செதுக்கிக் கொள்கிறோம்
என்பது நம் கையில் மட்டுமே

தெளிவாக நடப்பது
வெற்றியின் முதல் படி
அமைதியாக பேசுவது
ஞானத்தின் முதல் எழுத்து
நம்மை நாமே அறிதல்
வாழ்வின் மிக பெரிய வெற்றி

எத்தனை பார்வைகள்
மோதும் இந்த உலகத்தில்
முதலில் நம்மையே
படிக்கக் கற்றுக்கொண்டால்
எந்த சூழலிலும்
நாம் தளராமல் நிற்க முடியும்.
30
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on November 25, 2025, 11:11:05 AM »
Pages: 1 2 [3] 4 5 ... 10