« Last post by VenMaThI on February 06, 2026, 04:47:49 AM »
காலையில் எழுந்ததும் " அப்பா உன் மூஞ்சில முழிப்பேன்னு தெரியாதா? இங்க வாப்பா " என அதட்டிய நாட்கள் போய் " அவன்ட்ட இருந்து ஏதும் குறிஞ்செய்தி வந்துருக்கா? " என அலைபேசியை தேடும் காலம் எல்லாம் காதல் செய்யும் வேலை 🤦♀️
அம்மா கொடுத்த காப்பி கொஞ்சம் ஆறி இருந்தாலும் "எனக்கு சூடா வேணும்னு தெரியாதா? வேணாம் போ.. என கோபம் கொண்ட நாட்கள் போய் "வச்சுட்டு போமா அப்புறம் குடிச்சுகிறேன்" ன்னு சொல்லிட்டு பச்ச தண்ணி போல் ஆறுவது தெரியாமல் குறிஞ்செய்தியில் தகவல் பரிமாற்றம்... எல்லாம் காதல் செய்யும் வேலை 🤦♀️
வேலைக்கு செல்லும் அக்காவிடம் "வேலைக்கு தான போற எதுக்கு இவ்வளவு அலங்காரம்? நீ பிறப்பிலேயே அழகு தன் அங்குட்டு போ" என கூறிய காலம் போய் உச்சி முதல் பாதம் வரை "மேட்சிங் ஆ இருக்கா?.. கம்மலும் வளையலும் இந்த உடுப்புக்கு ஒத்துப்போகிறதா? என்ற கேள்வியில் காலனியும் சேர்ந்து கொண்ட காலம் இது.. எல்லாம் காதல் செய்யும் வேலை 🤦♀️
மதிய உணவு வேளையில் "சாப்பிட போறேன் அம்மா நீ சாப்டாச்சா? என்ன பண்ணிட்டு இருக்க? சாப்டுட்டு கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு" என்ற பாசமாய் பேசிய நாட்கள் போய் "அட client call ல இருக்கேன் மா கொஞ்சம் call அ கட் பண்றயா" என கூறி அடுத்த நொடி அவனுக்கு கால் போகும் நாட்கள் எல்லாம் காதல் செய்யும் வேலை 🤦♀️
பெற்றோருக்கு பிடித்த மலிவு விலை பாவாடை தாவணி எடுப்பான தோற்றம் கொடுத்தாலும்... அவனுக்கு பிடிக்கும் என்பதால் - கொஞ்சமும் பொருந்தாத அயல்நாட்டு உடுப்பை அதிக விலை கொடுத்து வாங்கி உடுத்தும் காலம் எல்லாம் காதல் செய்யும் வேலை 🤦♀️...
அவனுக்கு என்னை பிடிக்கும் எனக்கு அவனை பிடிக்கும் என கூறும் நொடியில்... பிறப்பிலிருந்து பிடித்த பெற்றோர் கூட பிடிக்காமல் போகும்.. எல்லாம் காதல் செய்யும் வேலை 🤦♀️ ... காதலர்களே ஒரு சிறிய அறிவுரை... அல்ல அல்ல.. அறிவு உடையவருக்கு தான் இந்த உரை மனதில் பதியும் காதலில் விழுந்த உயிரிங்களுக்கு அறிவு தான் கொஞ்சம் மங்கிப்போகிறதே... ஆக இது அறிவுரை அல்ல..
பட்டு புண்பட்ட நெஞ்சம் கற்றுக்கொண்ட பாடம் என கூறலாம்..
காதலுக்கு நான் எதிரியல்ல..
பார்த்து பார்த்து பொக்கிஷமாய் வளர்த்த பெற்றோரை பின் தள்ளி... காதலில் ஜெயித்து விட்டோம் என்றென்ணி காதலை ஜெயித்துவிட செய்யாதீர்..
கள்வனைக்கூட காதல் செய் அவன் கள்ளத்தனமதை விட்டு கடினமாய் உழைத்து உன்னை காப்பாற்றும் அளவிற்கு அவனை மாற்றும் திறன் உன்னிடம் இருக்குமானால்.....
யாரையும் புண்படுத்தாமல் யார் மனதையும் காயப்படுத்தாமல்... வேண்டாம் எனக்கூறும் பெற்றோர் "எங்களுக்கு முழு சம்மதம்'- என கூறும் அளவிற்கு அவர்தம் கண்களுக்கு குறையாய் தெரிந்த அனைத்தையும் நிறையாய் மாற்றி...
கஷ்டங்களை தீர்க்கவும் நம் கைகள் ஒன்றாய் இருக்கும்.. நம்மை காக்கும் கடவுளை வணங்கவும் நம் கைகள் ஒன்றாய் இருக்கும்... இன்று பிடிக்கும் உன் கரங்களை எந்த நிலையிலும் விடேன் ...என்று நீங்கள் நம்பும் உங்கள் காதல் மேல் சத்தியம் செய்து... இனிதாய் உங்கள் வாழ்க்கையை தொடருங்கள்.. காதலை வென்ற காதலர்களாய்....
« Last post by Titus on February 05, 2026, 08:51:53 PM »
hi all ftc team tdy my choice of song is frm the movie oh Manapennai Song:Nee YENATHU ARUGINIL NEEE...
Composer Vishal Chandrashekhar Lyricist: Niranjan Bharathi Singer : shakthisree Gopalan Fav lines Nee enathu aruginil nee ithai vida oru kavidhai kidaiyaathu... Neee yeathu uyirnil. Nee ithai vida oru punitham erukaathai...... Intha song rmba kutty ah erunthalum athula erukura lines ku naa flat.. Beautifully commposed by chandrakser and song sing by shakthi is realy unbelievable.... Kindly come and vibe with me...