அனிச்சம் மலர் அவள்....
ஆம்... அனிச்சம் மலர் தான் அவள்
பெரும் புயலுக்கும் அசையாது நிற்பவள்..
சிறு முகம் சுழிப்பிற்கு வாடிப்போகிறாள்
போராட்டங்கள் பல கடந்தவள்-
ஒரு சிறு கோபப்பார்வையில் திணறுகிறாள்
கரடுமுரடு பாதைகள் பல கடந்தவள் ஆயினும்
அனிச்சம் மலராகிறாள்...
அன்பினால் மீண்டும் மீண்டும்
சிதறடிக்கப்பட்டு கோர்க்கப்படுகிறாள்...
ஒரு சில பிரிவுகள்
தவிர்க்க முடியாதது மட்டுமல்ல
தேவையானதும் 🙃