Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
22
Move_medukudi
Song: Adi Yaaradhu Yaaradhu
Singers: Mano, K. S. Chithra
Lyrics: Palani Bharathi
ஒரு சிப்பியில் முத்தை போல்…
என்னை மூடிக் கொள்வாயா…
உன் அழகில் தொலைந்தவனை…
நீ தேடித் தருவாயா…


 உன் கனவில் நனைக்கின்றேன்…
நீ குடைகள் தருவாயா…
நான் கொஞ்சம் தூங்குகிறேன்…
நீ தலையணை ஆவாயாentha songs sa my ftc friend  kuda serthu kettu vibe panna asai padurrn tq
23
Film: MUDINJA IVANA PUDI
Song Name: POTHAVILLAYE
Singer: SHREYA GHOSHAL, SAKTHI AMARAN
Lyrics: MADHAN KARKY
 Music: D.IMAAN
Entha song la ella lines super
Favourite lines
கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே

கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே
தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய்
ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா
நம் கனவை செதுக்க பேரண்டம் போதாதடா
இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதடா
குட்டிக்குட்டி கோபம் கொண்டும்
கட்டி முட்டி மோதிக் கொண்டும்
திட்டித்திட்டி தீர்த்த பின்னும்....ம்ம்

போதவில்லையே போதவில்லையே
Thank you RJ
Thank you DJ
Thank you gab bro
26
Hi it team !

Movie - Mersal
Song Name - Aalaporan Thamizhan
Music - A R Rahman
Singers - Kailash Kher, Sathya Prakash, Deepak, Pooja AV
Lyrics - Vivek

favourite lines :

"Aalaporan tamizhan Ulagam ellamae Vetrimaga vazhi than Inimae ellamae"

"Thamizhan da ennalum Sonnalae thimirerum…"

"anbakotti Enga mozhi Adithalam pottom"

AR Rahman sir & Thalapathy oda theevira fan nan.this song la Thalapathy dance ARR music la sema vibe a irukkum.Thalapathy movie paakkum pothu vijay president a vantha super a irukkum.people ku nallathu pannuvanga la nu ninaichen. Thalapathy anna all the best.vetri ungalukke.Aalaporinga india vai.waiting....ftc friends kuda this song ku vibe panna poren.

Thanks




27
இசைத்தென்றல் நிகழ்ச்சியை இவ்வளவு வெற்றிகரமாக கொண்டு செல்லும் RJs மற்றும் DJ அவர்களுக்கு வாழ்த்துகள்! நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில்  இணைவதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த வாரம் நான் கேட்க விரும்பும்  பாடல்:

படம்: ரௌத்திரம்
பாடல்: அடியே உன் கண்கள் ரெண்டும் Made in Cuba-வா?
குரல்கள்: உதித் நாராயணன், சாதனா சர்கம்


இந்தப் படத்தின் இசையமைப்பாளர் Prakash Nikki பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். தமிழ் சினிமாவில் இன்னும் அதிகமாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய ஒரு திறமையான இசையமைப்பாளர்
பொதுவாக ரௌத்திரம் திரைப்படம் என்றாலே 'மாலை மங்கும் நேரம்' தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இந்த 'அடியே உன் கண்கள் ரெண்டும்' ஒரு மிகச்சிறந்த Under-rated மெலடி. சாதனா சர்கத்தின் உருகவைக்கும் குரலும், உதித் நாராயணனின் அந்தத் துள்ளலான உச்சரிப்பும், ஜீவா - ஸ்ரேயா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் பாடலுக்கு ஒரு தனி போதையைக் கொடுக்கும். பல வருஷமா என் playlist ல   top ல  இருக்குற இந்த பாட்டுல எனக்குப் பிடிச்ச வரிகள்:

"விலகாமல் உன்னோடு சேர
 இமைக்காமல் உன் தோற்றம் காண
உயிர் கூட உன் கையில் நீங்க
ஆவல் கொண்டேன் நீ என்னைத் தாங்க
"



28


நான் இந்த வாரம் கேட்க விரும்பும் பாடல்

"லேசா பறக்குது" (Lesa Parakkudhu)

திரைப்படம்: வெண்ணிலா கபடி குழு
பாடகர்கள்: கார்த்திக், சின்மயி
இசையமைப்பாளர்: வி. செல்வக்கணேஷ்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
நடிகர்கள்: விஷ்ணு விஷால், சரண்யா மோகன்
29
Sangam na thalaivar irukkanum it na evil irukkanum samyoooo

 Intha varam naan keka virumbum padam majunu

Naan keka virumbum paadal Gulmuhar Malare

Intha song ftc nanbargal anaivarukum kekuren samyioo intha song Enakku pidicha song

Pona varam rj mandakasayam dj Tejasvi taru maru takkali soru pannitinga marakkama intha song pottudunga samyooo
30
  எனக்கு யாழ்ப்பாணத்தில் அன்பான அழகான தாத்தா பாட்டி இருந்தாங்க.நாங்கள் அவர்களுடன் தினமும் போனில் பேசுவோம்.போன் பேசினாலே பாட்டி கேட்கும் கேள்வி "எப்போ ஊருக்கு வாரீங்கன்னு".பாட்டி ஆகஸ்ட் மாதம் லீவு வருவோம் என்று சொல்லுவோம்.உடனே பாட்டி சொல்லுவாங்க நல்லூர்த் திருவிழா வருது வாங்க போகலாம் என்று.எப்போ ஆகஸ்ட் மாதம் வரும் என்று வெயிட் பண்ணிட்டு இருப்பேன்.
   யாழ்ப்பாணத்தின் கலாச்சார அடையாளம் நல்லூர் கந்தசுவாமி கோவில். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 25 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் உச்சக்கட்டமே தேர்த் திருவிழா.யாழ்ப்பாணத்தில் எங்களுக்கு நிறைய உறவுகள் இருக்கிறார்கள்.நான் எங்கள் குடும்பத்துடனும் ,உறவுக்காரர்களுடனும் அந்த தேர் திருவிழாவை பார்க்க போயிருந்தேன்.
    அழகாக பட்டுப்பாவாடை உடுத்தி,தலைக்கு பூ வைத்து ,என்னை கண்ணாடியில் பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது.அனைவரும் கலாச்சார உடையில் தான் வந்தார்கள்.ஏனெனில் கலாச்சார உடையில் செல்லும் பக்தர்களைத்தான் கோயிலின் உள் நுழைய அனுமதிப்பார்கள்.
    செல்லும் வீதி எல்லாம் ஒரே பக்தர் கூட்டம்.தண்ணீர் பந்தல்கள், தெருக்கடைகள் தெரு ஓரங்களில் காட்சியளித்தன.கடைகளை வேடிக்கை பார்த்து வந்தேன்."அப்பா அங்க பாருங்க ஐஸ்கிரீம் கடை"."கோவில் கும்பிட்டு வரும் போது வாங்கி தாரேன்" என்று அப்பா கூற மனதை அடக்கி கொண்டு நடந்து சென்றேன்.
  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லூரின் நான்கு வீதிகளிலும் கூடி இருந்தார்கள்.இலங்கையின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தமிழர்களும் ,வெளிநாட்டவர்களும் அங்கே வந்திருந்தனர்.பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தேன்.அப்பா என்னை தோளில் சுமந்து சென்றார்.இந்தத் தருணம் அப்பா தான் எனக்கு கடவுளாக தெரிந்தார்.
  அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேரில், வள்ளி-தெய்வானை சமேதராய் முருகப்பெருமான் எழுந்தருளி, நான்கு வீதிகளிலும் பவனி வந்தார்.பக்தர்கள் "அரோகரா" முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பல்லாயிரக்கணக்கான தேங்காய்கள் சிதறு தேங்காய்களாக "படார் படார்" என்று உடைக்கப்பட்டன.மேள,தாள, நாதஸ்வரங்கள் இசைக்கப்பட்டதைக் கேட்டு நான் இசையில் மெய் மறந்து விட்டேன்.ஆண்கள் அங்கபிரதட்சணம்,பெண்கள் அடி எடுத்து வைத்தல்,பாற் காவடி ,பறவை காவடி ,தூக்கு காவடி என பக்தர்கள் நேர்த்திக்கடன் தீர்த்தனர்.பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
  இரு பக்கமும் இரு வடங்கள் பிடித்து தேர் இழுக்கப்பட்டு வந்து கொண்டிருந்தது.நேரடி அஞ்சல் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது."இறுக்கமாக கையப் பிடி தொலைந்தால் இந்த ஆட்களுக்குள்ள பிடிக்க இயலாது"அம்மாவின் உரத்த தொனி. என் மனதில் பயம் ஆரம்பித்தது."ஐயோ நான் தொலைந்தால் வீட்டுக்கு போக எனக்கு வழி தெரியாதே" .அம்மாவை கேட்டேன் "தொலைந்தால் எங்கே நிற்க வேண்டும் என்று".அம்மா ஒரு மரத்தினை காண்பித்தார் அப்பாடா  என்று நிம்மதி.
    பக்தர்கள் தேரின் பின்னால் பஜனை பாடியபடி வந்தார்கள்.இந்த காட்சிகளை பார்ப்பது என் மனதுக்கு சந்தோசமாக இருந்தது.கோவில் உள்வீதி, வெளிவீதி என வலம் வந்து வணங்கினோம்.மிகப் பிரமாண்டமான கோவில்.
  இந்தக் கோவிலில் எனக்கு மிகவும் பிடித்தது சரியான குறிப்பிட்ட நேரத்தில் பூஜைகள் ஆரம்பித்து நிறைவேறும்,அர்ச்சனை டிக்கெட் ஒரு ரூபாய்,கோவிலைச் சுற்றியுள்ள மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டமை.இதனால் நிறைய பக்தர்கள் பயனடைந்தார்கள்.தேர் இருப்பிடத்தை வந்ததும் சுற்றி கும்பிட்டோம்.சாமிக்கு பச்சை சாத்துதல் இடம் பெற்று,பூஜைகள் நடைபெற்று, இனிதே தேர் திருவிழா நிறைவு பெற்றது.
     திருவிழா நிறைவுற்றது என் மனசு நிறைவாகனும் அல்லவா?ஸ்பெஷல் ஐஸ் கிரீம் ,காரச் சுண்டல்,கச்சான்,இனிப்பு வகைகள் சாப்பிட்டு இன்புற்றோம்.வந்தவர்கள் "என்ன toys வேணும் "என கேட்க நானும் கையை காட்டினேன்.கை நிறைய toys  அடுக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
   நல்லூர் திருவிழா என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அது ஈழத்தமிழர்களின் பக்தி, கலாசாரம் மற்றும் ஒற்றுமையின் அடையாளம்.இதுவே என்னால் என்றும் மறக்க முடியாத திருவிழா கொண்டாட்டம்.



   

 
Pages: 1 2 [3] 4 5 ... 10