Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
ரம்ழானும்  நானும்

   இடைவிடாது 30நாள் நோன்பு வைத்து  காத்திருக்கும் பெருநாள் தான் ரம்ழான். ரம்ழானில்  சிறந்த இரவாக  27th லைலத்துல் கத்ர் இரவு இருக்கும். இரவு மிகச் சிறந்த தொழுகை  இருக்கும்.
       குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை அணிந்து  இரவு தொழுகைக்குப் பள்ளிவாசலுக்குச் செல்வோம் . பள்ளிவாசல் வண்ண ஒளி விளக்கினால் அலங்கரிக்கப்பட்டு அற்புதமாக காட்சி அளிக்கும்.நான் அந்த வண்ண ஒளிகளை பார்த்து ரசிப்பேன் .கூட்டம் அலை மோதி இருந்தாலும்  தொழுகை நேரத்துல் அவரவர் வரிசையில் நின்று அந்த புனித மிகு இரவின்  சிறப்பு தொழுகை நிறைவேற்றுவோம்.
       அந்த இரவு முழுவதும் திருக்குர்ஆன் உடன் பிரார்த்திப்போம் . பண்டிக்கு 2நாள் முன்னாடி உறவினர்கள் மட்டும்  அல்லாமல் ஏழை ,எளியவர்களுக்கு புது துணி  எடுத்து கொடுத்து மகிழ்வது போல சந்தோஷம் நிறைந்த மாதம்  தான் ரம்ழான் மாதம்.
        எங்க ஊரில் உள்ள அனைத்து   (முஸ்லிம்) சமுதாய மக்கள் அனைவரும் ஒன்று கூடி பெருநாள் தொழுகையை  நிறை வேற்றுவோம் . தொழுகை முடிந்ததும் பிற சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம். மற்றும் நண்பர்களுடன்   வெளியே வந்து, அவர்களுக்காக பிடித்த ஆடை வாங்கி கொடுத்து,உணவு உண்டு மகிழ்வோம் .பின்பு வீடு வந்து சேர்ந்து தோப்புள் கொடி உறவான சமூகம் ,நண்பர்கள் ,வீட்டிற்கு உணவு கொடுத்து மகிழ்வோம். சொந்தம் பந்தம் வீடு சென்று பெரியோர்களிடம் ஆசி வாங்க ஆவலாகக் காத்திருப்பேன்.
         குடும்ப நண்பர்கள் உடன் ஒருவரை  ஒருவர் இனிப்பு ஊட்டி மகிழ்வோம். அதன் பிறகு நண்பர்கள் உடன் ஊர் சுற்றிப் பார்க்க  போறது அளவில்லா   மகிழ்ச்சியைத்  தரும்.மீண்டும் அந்த ரம்ழான்  எப்போ வரும் .... இந்த நாட்கள் இனிய நினைவாக என் மனதில்....
        மகிழ்ச்சி மட்டும் அல்லாமல் எனக்கு எங்க அப்பா அம்மா சொல்லி கொடுத்த விடயம் இந்த ரம்ழான் நோன்புக்கு ஏழை, பணக்காரன்னு சொல்ல கூடாது.அனைவரும் சமம் தான். பெரும் நோயாளியைத் தவிர அனைவருக்கும்  நோன்பு கட்டாயம் ஆக்க பட்டது என்று சொல்லிக் கொடுத்தார் அப்பா.நான் சிறு வயதில்  இருந்தே நோன்பு  வைப்பேன் .மற்றும் என் குடும்பமும் என்னற்ற மழைச்சி உடனும், குடும்பத்தில் சந்தோஷம் ஆகவும் நான் வாழ்கிறேன்.
   இருளும் சோகமும் விலகி வளர்பிறையாய் வாழ்க்கை பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். ஐந்து வேளை தொழுகை என்பது நோன்பு முடியும் வரை அல்ல இந்த உலகை விட்டு நம் உயிர் பிரியும் வரை இனிய ரம்ழான் ....
வருகை வருகை என வரவேற்கின்றேன்
22
கவிதைகள் / புரியாத புதிர் !
« Last post by joker on January 22, 2026, 05:23:40 PM »
என் கையில் பட்டு சிதறிய 
மழைத்துளி
இப்போது மறைந்து விட்டது
வானமும், மேகமும்,
இந்த நீண்ட கடலும் அல்லவா
அதன் உண்மையான சொந்தக்காரர்கள்
நான் அல்லவே
போகட்டும்

கணநேரம் மட்டுமே என்றறிந்திருந்தும்,
மீண்டும் அந்த மழைத்துளிக்காக
கைகள்
வெற்றிடத்தை நோக்கி
நீளுவதுதான்
இன்னும் புரியாதது

அப்படித்தான்
சிறுது நேரமே
என்னை கண்ட
அவளின் ஒர பார்வை
மீண்டும் காண
காத்திருக்கிறது
என் மனம்
அவள் நேற்று வந்து நின்ற
வெற்றிடத்தை நோக்கி  :)


****Joker***
23
பக்கத்து ஊர் கோவிலில் இன்று 10 ம் நாள் தெப்பத்திருவிழா போகலாம் என்று அப்பா சொன்னவுடன் நானும் அம்மாவும் சந்தோஷமாக தயாரானோம். நான் பட்டு பாவாடை சட்டை தான் போடுவேன் என்று அடம் பிடித்து எனக்கு பிடித்த மாம்பழ கலர் பட்டு பாவாடை காவி கலர் சட்டையும் போட்டு கிளம்பினேன்.அம்மா தலை வாரி ரெட்டைசடை போட்டு பிச்சிப்பூவும் கனகாம்பரம் பூவும் சேர்த்து கட்டிய பூவை வைத்து விட்டார்கள். கை நிறைய கண்ணாடி வளையலை எடுத்து போட்டேன். நான் வெளியே போகும் போது எல்லாம் வைக்கும் திஷ்டி பொட்டை அம்மா வைத்து விட்டார்கள்.         நாங்கள் தயார் என்று சொன்னதும் அப்பா வீட்டை பூட்டி பஸ் நிலையம் அழைத்து சென்றார்.பஸ் எப்போ வரும் என்று எட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் பஸ் வர அதில் ஏறி பக்கத்து ஊரில் சென்று இறங்கினோம். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அந்த கூட்டத்தில் நாங்களும் கலந்து நடந்தோம். சிறிது தூரத்தில் கோவில் வாசல் தெரிந்தது. உள்ளே சென்று சாமி தரிசனம் பார்த்தோம்.   
     ஒவ்வொரு சாமியாக கும்பிட்டு விட்டு வெளியே வந்தோம். கோவில் வெளியே எங்கு பார்த்தாலும் கடைகள் .அதை சுற்றிலும் மக்கள் பிடித்ததை வாங்கி கொண்டு இருந்தார்கள். நானும் அம்மாவும் முதல் கடையில் நுழைந்தோம். கலர் கலரா கண்ணாடி வளையல்கள், விதவிதமான சடைமாட்டிகள், சின்ன சின்ன விளையாட்டு பொருட்கள் ,nailpolish எல்லாம் பார்த்ததும் ஆசை ஆசையாய் எனக்கு பிடித்ததை எடுத்து அம்மாவிடம் கொடுத்தேன்.
     அடுத்த கடையில் கலர் கலர் பலூன்கள் பறந்து கொண்டு இருந்ததைப் பார்த்து அங்கு ஓடினேன். பிடித்த கலரில் எல்லாம் பலூனை எடுத்து அப்பாவிடம் நீட்டினேன். கடைக்காரரிடம் பணத்தை கொடுத்து விட்டு அடுத்த கடை பக்கம் போனோம். கலர் கலரான குளிர்பானங்கள் விற்பனை நடந்து கொண்டிருந்து. எனக்கு பிடித்த மாம்பழ juice வாங்கி குடித்து கொண்டிருக்கும் போது மக்கள் எல்லாரும்" தெப்பம் எடுக்க போறாங்க ஓடி வாங்க "என்று சத்தமிட்டபடி ஓடினார்கள் .நாங்களும் கூட சேர்ந்து ஓடினோம்.
    அங்கு இருந்த கூட்டத்தில் எனக்கு தெப்பம் தெரியவே இல்லை .அப்பா என்னை தோளில் தூக்கி வைத்து கொண்டார். தடிமனான கயிறை நிறைய பேர் சேர்ந்து இழுக்க தெப்பத் தேர் நகர ஆரம்பித்தது .தண்ணீரில் தேர் போவதை கண்டு நான் சந்தோசத்தில் கைகள் தட்டி ஆர்ப்பரித்தேன். பல சுற்றுகள் சுற்றி முடியவும் மக்கள் கலைந்து சென்றனர். நாங்களும் வீட்டுக்கு கிளம்பலாம் என்று வரும் வழியில் அன்னதானம் வழங்கி கொண்டிருந்தார்கள் .அங்கு சென்று அமர்ந்தோம். வாழை இலையில் சுடசுட கலவை சாதம் பரிமாறினார்கள். சாப்பிட்டு விட்டு பஸ் நிலையம் வந்தோம். பஸ் ஏறி வீடு வந்து சேர நடுசாமம் தாண்டிவிட்டது. அன்றைய நாள் சந்தோசம் நீண்ட நாட்கள் மனதில் நிலைத்து இருந்தது.
24
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 22, 2026, 01:00:30 PM »
25
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on January 22, 2026, 12:41:26 PM »
26


*இந்த மான்*
*உந்தன் சொந்த மான்*
*பக்கம் வந்து தான்*
*சிந்து பாடும்*

இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

*சிந்தைக்குள் ஆடும் ஜீவனே*
*கண்மணியே*

*சந்திக்க வேண்டும் தேவியே*
*என்னுயிரே*

இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த தான் ...

*வேல் விழி போடும் தூண்டிலே*
*நான் விழலானேன் தோளிலே*

நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே

அன்னமே

ஆ ...ஆ ...ஆ ...ஆ ...

*அன்னமே எந்தன் சொர்ணமே*
*உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே*

*கன்னமே மது கிண்ணமே*
*அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே*

*எண்ணமே தொல்லை பண்ணுமே*
*பெண் என்னும் கங்கைக்குள்* *பேரின்பமே*

இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே
என்னுயிரே ...

*பொன்மணி மேகலை ஆடுதே*
*உன் விழிதான் இடம் தேடுதே*

*பெண் உடல் பார்த்ததும் நாணுதே*
*இன்பத்தில் வேதனை ஆனதே*

என்னத்தான்

ஆ ...ஆ ...ஆ ...ஆ ...

*என்னத்தான் உன்னை எண்ணிதான்*
*உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்*

சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்

*மோகம் தான் சிந்தும் தேகம் தான்*
*தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்*

இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

இந்த மான்
எந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே
என்னவனே ...

படம் : *கரகாட்டக்காரன்*
பாடகர் : *இளையராஜா & சித்ரா*
பாடலாசிரியர் : *கங்கை அமரன்*
இசை : *இளையராஜா*

27
General Wallpapers / Re: GOLDEN DAYS
« Last post by MysteRy on January 22, 2026, 12:34:08 PM »
Games began with chalk and imagination.

28
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on January 22, 2026, 05:53:42 AM »
30
Hi Isai Thendral team... Ovoru paadalukkum neega (janda, cute angel, musical voice) thara details romba nalla iruku... neraiya vishayangala therinchukka mudithu... keep rocking...

Intha vaaram naa kekka asai padura paadal....
movie : Sangathamizhan
Song : Azhagu Azhagu....
       
Mervin avargalathu isaiyil Swetha Mohan avargalathu kural il intha paadale thanii Azhagu than...




Pages: 1 2 [3] 4 5 ... 10