Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
WISH YOU MANY MORE HAPPY RETUNRS OF THE DAY VIPER BRO

EPPAVUM HAPPYA IRUKA IRAIVANAI PIRARTHIKIREN


GOD BLESS YOU

JOKER
22
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on January 28, 2026, 06:02:44 AM »
23
கவிதைகள் / என் காவல் தூதன்!!
« Last post by Shreya on January 28, 2026, 04:33:51 AM »
                                           என் காவல் தூதன்!!

'நலமா?' என்று அவன் கேட்கும் போது
'ம்' எனும் என் ஒற்றை எழுத்து மௌனத்திற்குள்..
ஆயிரம் அழுகைகளும்..
ஏமாற்றங்களும் இருப்பதை
அவன் ஒருவன் மட்டுமே வாசிக்கிறான்!!!

​அவன் கண்ட மௌனம் தவம்..
நான் வாழும் வாழ்க்கை இயந்திரம்..
சத்தமில்லாமல் சிதைந்து கொண்டிருந்த என்னை,
அரணாய் வந்து தாங்கிக் கொண்டான்!
அவன் கண்ட மௌனம் தவம் என நினைத்தேன்..
ஆனால் எனை மீட்டெடுக்க அவன் தொடுத்த மௌன யுத்தம் அது!!

​என் துயரங்கள் தோற்கும் புகலிடமாய் அவன் மாறினான்,
காவல் தூதனாய் என் முன் நின்று...
என் கண்ணீர்த் துளியைப் புன்னகையாய் மாற்றினான்!!
'உன்னை நீ நேசி' என அவன் உணர்த்திய ஒவ்வொரு தருணமும்
என் இதயத்திற்கு இட்ட இரும்பு கவசம்!!!

​இனிமேல் நான் வீழ்வதற்கு வழி இல்லை,
வீழும் முன்னமே தாங்க அவன் இருக்கிறான்..
காலம் கடந்தாலும், துன்பங்கள் சூழும் நேரத்திலும்,
என் உயிரின் எல்லை வரை அவன் காவல் இருக்கும்..

இயந்திரமாய் சுழன்ற என் வாழ்வு இனி மாறும்,
மௌனத்தின் கண்ணீரை மொழிபெயர்த்தவன்—இன்று
என் மௌனத்திலேயே அமைதியை ஆழமாய் விதைத்தான்
அவன் தந்த துணிவால் என்னை நான் நேசிக்கத் தொடங்கிவிட்டேன்..
புரியாத புதிராய் இருந்த என் வாழ்க்கையில்
நான் கண்ட முழு அர்த்தம், அவன் காட்டிய 'தீரா அன்பு'!!!
24
கவிதைகள் / நினைவுப் பெட்டகம்!!
« Last post by Shreya on January 28, 2026, 03:37:35 AM »
                                       நினைவுப் பெட்டகம்!!

ஜன்னல் ஓரமாய், ஆச்சி தந்த சுக்குமல்லி
காபியின் நறுமணம்..நேற்று பெய்த பனிப்பொழிவில்,
நிலமெல்லாம் வெண் போர்வை!
கவலையறியாது அதில் திளைக்கும் அந்தச் சிறுமி...
எனக்குள் கிளறுகிறாள், நான் ஓடித்திரிந்த
அந்த 'அக்னி' காலத்தை!!

​சுடலைமாடன் கொடைச் சத்தமும், செந்நிறத் தேரி மணலும்..
தாகம் தீர்த்த செக்கச் சிவந்த கொள்ளாமரப் பழங்களும்!
சொர்க்கமாய் விரிந்திட, ஆச்சியின் விரல் பிடித்து நான் நடந்த நாட்கள்!!

​சாணம் மெழுகிய முற்றம், வியர்வை சிந்திய ஆட்டம்,
அரசமரப் பீப்பியின் ஓசையும், அந்த வாழைக்குருத்தின் வாசமும்...
பல்லாங்குழியும், கூட்டாஞ்சோறும்
இன்றும் என் நினைவலைகளில்!!

​"என்ன பிள்ளை இப்படியா சாப்பிடுவாய்?" - ஆச்சியின் அதட்டலில்
வட்டில் நிறைய நெல் சோறு.. பேரன்பின் ருசியோடு!
அவளுக்கு 'சம்பா', எனக்காக 'நெல்' அரிசி,
விக்கிடுமோ எனத் துடித்த அவளின் அந்தப் பாசம்,
இந்தப் பனிக் குளிரை விடவும் இதமான கதகதப்பு!!

​நிழல் தேடும் வெயிலில் நாவூறும் நுங்கும், சுடச்சுடப்
பனங்கிழங்கும்..குச்சி ஐஸும், கிணற்று நீச்சலும்,
பனை ஓலை மாம்பழம் போட்ட பதநீரும்..ஜவ்வு மிட்டாயும்..
கருப்பட்டி கிடங்கில் அவள் கொடுத்த கூப்பணியும்..
அந்தக் கயிற்றுக் கட்டிலில் கிடைக்கும் சுகமான தூக்கம்!!

​சுமைகளற்ற அந்த வசந்த காலம்!
மீண்டும் வாராதா அந்தப் பிள்ளைப்பருவம்??
ஏக்கத்தின் விளிம்பில் நின்று - என்
இதயம் இன்று ஏதிலியாய் அலைகிறது!!
​நாட்கள் நகர்ந்து தொலைந்தாலும் - என்
நினைவுப் பெட்டகத்தில் இன்றும்
பசுமையாய்... உயிர்ப்புடன்!
25
Happy happy birthday viper machioo
26
Friends Tamil Chat Team Conveys🎁 Birthday (28-Jan-2026) wishes🎁 to our lovable friend ⭐ Mr. VIPER ⭐ and wishes him Good Luck


27
ஆயிரம் உறவு இருப்பினும்
ஆற்றா உறவு அண்ணன்...
அன்னையின் படிப்பினையை விட
அதிகம் போதித்தது என் அண்ணனே...
அண்ணனின் கைப்பிடிக்குள்
தந்தையின் பாதுகாப்பு
அம்மாவின் அன்பு
ஒருங்கே உணர்ந்தேன்...

ஆனாலும்.....
குட்டி சாத்தானாக என்னை
எள்ளி நகையாடுபவனும்(மாற்றுபவனும்) அவனே
குப்பைத்தொட்டி குழந்தை என்னை
மீட்டெடுத்து தன் தங்கையாக வளர்பவனும் அவனே
ஆழ்ந்து உறங்கையில் கையிலுள்ள
என் அன்பு பொம்மைக்கு
மொட்டையடித்து காது குத்துபவனும் அவனே...

கறி குழம்பிலுள்ள நள்ளிக்காக
கையை கடித்து சண்டையிடுபவனும் அவனே...
கடையிலுள்ள தின்பண்டத்திற்காக என்னை
அப்பாவிடம் ஏவி விட்டு அடிவாங்க
வைக்கும் ஆக சிறந்தவனும் அவனே

தனியே பேருந்தில் பயணம்
செய்ய கற்று தந்த
என் ஆசான் அவனே
இன்று தன்னந்தனியே
வாழ்க்கையை பயணிக்க மௌனமாக
கற்று தருபவனும் அவனே....

அண்ணா....
மீண்டும் உன் அன்னைமடி
வேண்டும்
அதே சிறுபிள்ளையாக
உன் குட்டிசத்தானாக
இப்படிக்கு என்றும் ஏங்கும்
உன்னால் மீட்க பட்ட
உன் குப்பைத்தொட்டி தங்கை....
28
கவிதைகள் / பாசமலர்!!
« Last post by Shreya on January 27, 2026, 10:58:03 PM »
உன் விரல் பிடித்து பள்ளிக்கு சென்ற காலம் அது
இன்றும் நினைவிருக்கிறது..
வீட்டுக்கு வந்ததும் அந்த டெலிவிஷன் ரிமோட்டிற்காக
தினம் ஒரு யுத்தமே நடக்கும் நம்மிடையே!
அடிதடி முட்றிப் போய் கோபத்தில் உன்னை கடித்தேனே
என் பற்களின் தடம் உன் கையில் ஆழமாய் பதியும்...
அதற்காக அம்மாவிடம் நான் வாங்கிய அடிகள்..!

கடைக்கு செல்ல சொன்னால் நீ அசைந்து கொடுக்க மாட்டாய்
உன் வேலையையும் நான் செய்த போது பொங்கியது ஆத்திரம்.
ஆனாலும்... அக்காவை விட என்மேல் ஒரு தனி பாசம்
உன் மௌனமான செயல்களில் நான்
எப்போதுமே உணர்ந்திருக்கிறேன்..!

என் தோழர்களுக்கெல்லாம் உன்னை கண்டாலே சிம்ம சொப்பனம்
யாரும் அறியாமல் உனக்கு “ஹிட்லர்” என பெயர் வைத்தோம்!
என் முதல் காதலை நீ மிரட்டி முடித்து வைத்த போது
உன் மேல் வந்த வெறுப்பை விட நீ என் மேல் வைத்து
இருந்த அக்கறையை ​உணர்ந்தேன்..!

கல்லூரி செல்லும் அவசரத்திலும் என்னை இறக்கி விட நீ வந்ததும்
பிரேக் வயரை கையால் பிடித்து விபத்தில் நம்மை மீட்டாயே...
அன்று உன் சமயோசித புத்தியை கண்டு மிரண்டு போனேன்.
யாரோ ஒருவன் என்னை அசிங்கமாய் கிண்டல் செய்ய
அழுது கொண்டிருந்தேன் அம்மாவிடம்
“இரு வரேன்” என ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டு
அவனை தேடி சென்று நீ கொடுத்த அடியும் பதிலடியும்...
அங்கே தான் அண்ணா, உன் அன்பு என்னை தாக்கியது..!

அம்மா மேல் நீ வைத்திருந்த உயிரான பாசமும்
ஆபீஸ் போகும் போதும் அம்மா உனக்கு ஊட்டி விட்டதும்...
ஓர கண்ணால் பார்த்து நான் பொறாமை பட்டிருக்கிறேன்!
“அவன் மட்டும் தான் உனக்கு புள்ளையா?” என அம்மாவிடம் சண்டை போட்டுக் ஊட்டி விட சொன்னது ஒரு காலம்.
நண்பர்களை வீட்டு வாசலோடு நிறுத்தும் உன் அந்த தெளிவு
இன்றும் என் மனதில் ஒரு பெருமிதமான பாடமாய் இருக்கிறது..!

ஊரில் உன் அந்த முதல் நடனம்...
ஒட்டுமொத்த தெருவும் கைதட்டிய போது உன் தங்கையாய்
ஒரு பெருமிதம் உன் திறமை கண்டு!
“ட்ரெஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என நீ சரி செய்யும் போது
உன் அக்கறையில் ஒரு தகப்பனை நான் கண்டிருக்கிறேன்..!

நீ எனக்காக முதன் முதலாக வாங்கித் தந்த அந்த 1100 மொபைலும்...
எப்போதும் ஆனாலும் நீ செக் செய்த போது கோபம் வந்தாலும்
அதற்கு பின்னால் இருந்த பயம் எனக்கு புரிந்தது..!

நீ பாட ஆரம்பித்ததில் இருந்து
நான் இன்றும் உனது தீவிர ரசிகை தான் அண்ணா!
அக்கா திருமண மேடையில் நீ பாடிய அந்த நொடிகள்
என் வாழ்வின் அழகான பக்கங்கள்.
நீ வாங்கித் தந்த அந்த முதல் புடவை இன்னும் இருக்கிறது
உன் நினைவுகளை தாங்கியபடி என் அலமாரியில்..!

நண்பர்களோடு திருமணத்திற்கு செல்கிறேன் என பொய்
சொல்லி விட்டு விபத்தில் கை ஒடிந்து வந்த போது என்
கோபம் உன்னை பார்த்த மறு நொடி கரைந்தது...
உன்னை வண்டியில் வைத்து நான் அழைத்து சென்ற போது
“தங்கச்சி நல்லா ஓட்டுறியே” என நீ சொன்ன அந்த ஒற்றை பாராட்டு...
காலங்கள் ஓடினாலும் இன்றும் அது என் நினைவில்..!

அன்று வாங்கிய அந்த பழைய பிளாக் காரில் பயணித்த சுகம்
இன்று நீ வைத்திருக்கும் காரிலும் மாறவே இல்லை!
ஒரு சின்ன சண்டையில் “என்னை நீ புரியவில்லையே” என
உனக்காக என் உயிரையே விட துணிந்தேனே...
உன் மேல் இருந்த கோபமல்ல அது... என்னை நீ தவறாய்
நினைத்து விடக் கூடாதென்ற அந்த பெரும் வலி..!

முதல் முறை உன்னை பிரிந்து நான் சென்ற போது
கல் போன்ற உன் கண்களில் வழிந்த அந்த கண்ணீர்...
அன்றே என் உயிர் ஒரு நொடி பிரிந்து போனது அண்ணா!
இன்று நாம் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும்
மனதில் உன் நிழல் அப்படியே தான் இருக்கிறது..!

மீண்டும் ஒரு முறை உன்னை நேரில் பார்த்தால் போதும்..
அப்படியே ஓடி வந்து உன்னை கட்டிக்கொள்ள வேண்டும்!
“ஏண்டா இத்தனை நாள் பேசல?” என உன்னை கோபித்து
உன் மார்பில் சாய்ந்து அழுது தீர்க்க வேண்டும்!
ஆயிரம் கோபங்கள் இருந்தாலும்... உன் தங்கை இன்றும்
உன் அதே சின்ன பெண் தான்...
உன் அன்பிற்காக ஏங்குபவள்!!
29
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 27, 2026, 01:47:16 PM »
30
தம்பி பாப்பா வேணுமா
தங்கச்சி பாப்பா வேணுமா என்ற
பெற்றோரின் கேள்விக்கு
விடையாய் நான்

நான் சிரித்தால்
உனக்கு சந்தோஷம்,
நான் அழுதால்
தூக்கம் கூட உனக்கு
தூரம் தான்

உலகத்துக்கு முன்
நாம் சண்டையிட்ட
கணங்கள் ஏராளம்
ஆனால்
உலகமே எதிர்த்து நின்றாலும்
என் கூடவே நிற்கும் உன் அன்பு
தாராளாம்

நான் பேசாமல் இருந்த நாட்களில்
என் அமைதியின்
அர்த்தம் புரிந்தவன் நீ
என் சிரிப்புக்குப் பின்னால
ஒளிச்சு வைத்த வலியையும்
கண்டுபிடித்தவன் நீ.

உன் கனவுகளை
நீ விட்டுக்கொடுத்து
என் கனவுகளை
நீ தூக்கி நிறுத்தினாய்,

நான் பெரியவளா ஆனாலும்
உன் கண்ணுக்கு நான்
எப்பவும் சின்ன தங்கை தான்

இந்த ஜென்மம் போதாதுனா கூட
அடுத்த ஜென்மத்திலும்
பெண்ணாக பிறக்கணும்னா
அண்ணனா நீ தான் வேணும்.

எத்தனை பேரு வந்தாலும்
என் வாழ்க்கை முழுக்க
நான் தனியாக இல்லை என்று
உறுதியாய் சொல்ல
ஓர் உறவு
என் அண்ணா


****Joker***
Pages: 1 2 [3] 4 5 ... 10