Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on Today at 12:07:38 PM »


In 1881, Nikola Tesla made the significant decision to move to Budapest, a pivotal moment in his life that would influence his later innovations. This relocation marked the beginning of his journey into the world of electrical engineering, where he would eventually revolutionize the field with his groundbreaking ideas.
22
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on Today at 12:06:43 PM »


In 1901, construction began on Nikola Teslas monumental tower, which was designed to facilitate wireless communication and energy transmission. This ambitious project aimed to revolutionize the way electricity was delivered across vast distances, showcasing Teslas innovative vision for a connected world.
23
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on Today at 12:05:37 PM »


Nikola Tesla, the renowned inventor and electrical engineer, believed that the power of imagination was far more valuable than material possessions. He often expressed that creativity and innovation were essential to advancing society, emphasizing that the ability to dream and envision new possibilities should be cherished above all else.
24
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 09:57:21 AM »
25
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:57:59 AM »
26
படித்ததில் வலித்தது

நம்பியவனே விட்டு போகையில் ....

அறிமுகம் இல்லாதவன் அறுப்பதில் ...

என்ன ஆச்சரியம்....??
27
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on April 22, 2026, 11:42:43 AM »
28



டார்க் மோட் (Dark Mode) என்பது மொபைலில் இருக்கும் சாதாரண நாம் பயன்படுத்தும் வெள்ளைத் திரைக்கு மாற்றாக இருக்கும் வடிவமாகும். தற்போது இது விண்டோஸ் 10, ஐ.ஓ.ஸ் 13 மற்றும் அதற்கு அதிகமாக உள்ள மென்பொருள்களிலும் வரத் தொடங்கிவிட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் யூஸர் இன்டர்ஃபேஸில் கறுப்பு நிறத்தில் மொபைலின் எல்லாப் பயன்பாடும் இடம்பெற்றிருக்கும். இந்த டார்க் மோட் வடிவமானது மொபைல் திரையிலிருந்து வெளியேறும் ஒளியைக் குறைக்கிறது. அதே சமயத்தில் படிப்பதற்கு ஏற்ற வகையில் வண்ண வேறுபாட்டுடன் இருக்கிறது.
டார்க் மோட் என்பது 'மில்லினியல்கள்' காலத்தில் தோன்றியதல்ல; கணினி கண்டுபிடித்த காலத்திலிருந்தே இது உள்ளது. ஆரம்பகாலத்தில் பயன்படுத்தப்பட்ட மோனோக்ரோம் சிஆர்டி கணினியில் கருப்புத் திரையில் பச்சை நிறத்தில் எழுத்துகள் தோன்றும். மேலும் முன்பு வேர்ட் ப்ராஸஸருக்கெனத் தனியாகப் பயன்படுத்தப்பட்ட சாதனத்திலும் கறுப்புத் திரையில் வெள்ளை எழுத்துகள் தோன்றும். இதெல்லாம் 80-ஸ்க்குப் பின் ஜெராக்ஸ் மற்றும் சிபிடி கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களின் வருகையால் மாறிவிட்டது. இப்போது பல வருடங்களுக்குப் பின் ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் டார்க் மோடை மீண்டும் தங்களது சாதனங்கள் மற்றும் செயலிகளில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. இந்த டார்க் மோடின் சாதக பாதகங்களை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
1.பேட்டரி சேமிப்பு:
இந்த டார்க் மோடை பயன்படுத்துவதால் ஓலெட் (OLED) மற்றும் அமோலெட் (AMOLED) போன்ற டிஸ்பிளே வடிவங்களில் அதிக சக்தியைச் சேமிக்க முடியும். ஓலெட் பானல் டிஸ்பிளேக்களில் ஒவ்வொரு பிக்சலும் எரிந்துகொண்டுதானிருக்கும். இதனால் பின்னணி வெள்ளை நிறத்தில் இருந்தால் அதிக சக்தி தேவைப்படும். ஆனால் பின்னணி கறுப்பு அல்லது சாம்பல் நிற வடிவத்தில் இருந்தால் குறைந்த சக்தியே தேவைப்படும். இதனால் மொபைல் பேட்டரியை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்.
2. நீல நிற ஒளியைத் தடுக்கும்:
நமது மொபைல் திரையிலிருந்து அதிக அளவிலான நீல நிற ஒளி வெளியேறுகிறது. அதிகளவில் நீல நிறம் வெளியேறுவதால் மெலடோனின் என்ற ஹார்மோனுக்குப் பாதிப்பு ஏற்படும். இதனால் இரவில் தூக்கம் வருவது சற்று சிரமமாக இருக்கும். டார்க் மோட் பயன்படுத்தும் போது இந்த நீல நிறம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. அதிக மொபைல் பயன்பாட்டினால் தூக்கமில்லாமல் தவிப்பவர்கள் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
3. இரவில் பயன்படுத்த சிறந்தது:
இரவு நேரத்தில் நாம் அதிக நேரம் மொபைலில் காணொலியை பார்த்துக்கொண்டிருந்தாலோ அல்லது படித்துக்கொண்டிருந்தாலோ அதிக ஒளி மொபைலிலிருந்து வெளியேறும். இதையே டார்க் மோடைப் பயன்படுத்தினால் குறைந்த அளவு ஒளியே வெளியேறும். இதனால் கண்களுக்கும் அதிக சோர்வு ஏற்படாது. இதைப் பயன்படுத்தி நீண்ட நேரம் மொபைல் திரையை நம்மால் எளிதாகப் பார்க்க முடியும்.
4. புதிய அனுபவமாக இருக்கும்:
டார்க் மோடைப் பயன்படுத்தி ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது என்பது சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். இதில் எப்போதும் போல் இல்லாமல் நாம் பயன்படுத்தும் செயலிகள் எல்லாம் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இதனால் படங்கள், கிராஃப் போன்றவை பார்ப்பதற்குக் கண்களைக் கவரும் வகையில் இடம்பெற்றிருக்கும். சாதாரண மோடை விட இதில் சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவது ஒரு மாறுதலாக இருக்கும்.
1. டார்க் மோட் பயன்பாட்டால் 'அஸ்டிக்மாடிஸம்' ஏற்படலாம்:
சிலருக்கு டார்க் மோடைப் பயன்படுத்துவதனால் அஸ்டிக்மாடிஸம் என்ற கண் குறைபாடு ஏற்படலாம். இது ஏற்பட்டால் கண்களுக்குப் பொருள்கள் எல்லாம் மங்களாகத் தோன்றும். மேலும் ஒரு கண்ணின் வடிவத்திலிருந்து மற்றொரு கண் மாறுபட்டு காணப்படும். இந்தக் குறைபாடு இருப்பவர்களால் ஒளி குறைந்த எழுத்துகளை டார்க் மோடில் படிப்பது என்பது சிரமமான ஒன்றாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் டார்க் மோட் பயன்பாட்டைத் தவிர்த்து விடுவது நல்லது. இதனால் கண்களுக்கு சிரமம் ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
2.கண் பார்வைக்குச் சிரமமான ஒன்று:
டார்க் மோடைப் பயன்படுத்தி மொபைல் திரையைப் பார்க்கும் போது அதிக சிரமம் ஏற்படலாம். ஏனெனில் கண்களில் உள்ள ஐரிஸ் கறுப்பு பின்னணியில் உள்ள வெள்ளை எழுத்துகளைப் படிக்க அதிக ஒளியை உள்வாங்க வேண்டியதாக இருக்கும். ஆனால் பொதுவாக நமது கண்கள் வெள்ளை நிறப் பின்னணியில் இருக்கும் கறுப்பு எழுத்துகளுக்கே பழக்கப்பட்ட ஒன்று. வெள்ளை எழுத்துகளைக் கறுப்புத் திரையில் படிக்கும் போது அந்த எழுத்துகளின் ஓரம் ஓடுவது போன்று இருக்கும். இதற்குப் பெயர் ஹாலேட்சன் விளைவு. இதனால் படிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
3.அளவாகப் பயன்படுத்துதல் நல்லது:
நீங்கள் பல மாதங்களாகத் தொடர்ந்து டார்க் மோடைப் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கண்கள் அதற்குப் பழகிவிடும். இதனால் எப்போதாவது வெளிச்சம் மிகுந்த வெள்ளைத் திரையைப் பார்க்க நேரிடும் போது கண்கள் கூசத் தொடங்கும். இதற்குக் காரணம் உங்கள் கண்களால் உடனே அதிக ஒளியைக் காண முடியாது. எனவே, இரண்டையும் சம அளவில் பயன்படுத்துதல் நல்லது.
4.வெளிச்சத்தில் பயன்படுத்த ஏற்புடையது அல்ல:
டார்க் மோடை எல்லா நேரத்திலும் இடங்களிலும் எளிதாகப் பயன்படுத்த முடியாது. நீங்கள் வெளிச்சமாக இருக்கும் அறையிலே அல்லது சூரிய ஒளியிலோ டார்க் மோடைப் பயன்படுத்தினால் உங்களால் எழுத்துகளை எளிதாகப் படிக்க முடியாது. இதற்கு சூரிய மறைவிற்குப் பின் டார்க் மோடைப் பயன்படுத்தும்படி உங்கள் மொபைலின் செட்டிங்கை மாற்றியமைத்து விட்டால் சிறப்பானதாக இருக்கும்.
இவ்வாறு எல்லாவற்றையும் போல டார்க் மோடிற்கும் அதற்கென சாதக பாதகங்கள் உள்ளன. தற்போது கூகுள், யூடியூப், வாட்ஸ் அப் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்பாடிஃவை, ஜியோ சாவ்ன், பிரைம் என எல்லா சமூக வலைதளங்களிலும் டார்க் மோட் வசதி வந்து விட்டது. உங்களுக்கும் டார்க் மோட் பயன்பாடு உகந்தது எனில் நிச்சயம் டார்க் மோடைப் பயன்படுத்தலாம்
29


பெண்கள் என்றால் நெற்றியில் திலகமிட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். திருமணம் ஆகாத பெண்கள் நெற்றியிலும், திருமணம் ஆன பெண்கள் நெற்றி மற்றும் நெற்றியின் வகிடிலும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூற கேட்டிருப்போம். ஏன் அவ்வாறு திலகமிடுவது அவசியம் என்று கூறுகிறார்கள் தெரியுமா?

இந்து மத ஆசாரப்படி ஒரு பெண் இரண்டு புருவத்திற்கும் மத்தியில் குங்குமத்தை வட்டமாக வைத்து கொள்ள வேண்டும்.
முந்தைய காலத்தில் பெண்களைச் சிலர் தன் வசியப்படுத்தி அழைத்துச் சென்றுவிடுவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நெற்றியின் மத்தியில் குங்குமம் வைத்தால் அந்த பெண்ணை யாராலும் தன் வசப்படுத்த முடியாது. அந்த அளவிற்கு சக்தி மஞ்சள், குங்குமம் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது அறிவியல் ரீதியாக நம்பப்படுகிறது.
நெற்றியின் மையத்தில் குங்குமம் வைப்பதனால் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களில் அடங்கி உள்ள மருத்துவ சக்திகளை எடுத்து நம் மூளைக்குள் செலுத்திவிடுகிறது. இதனால் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தைச் சீராக இயக்கி, உடல் உபாதைகளிலிருந்து காக்கிறது. முக்கியமாக கண்களை பாதுகாக்கிறது.

நாம் சந்தனத்தை பிரம்ம முகூர்த்தத்திலும், சூரியன் உதித்த பிறகு குங்குமத்தையும், மாலைப் பொழுதினில் திருநீரையும் அணிந்து வந்தால் நரம்பு மண்டலம் உறுதிப்பட்டு நோய் வராமல் தடுக்கப்படும்.
30


தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..

ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால் பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..

காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு..
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு..

அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு..
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு..

அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு.. பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை

ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்

கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது..
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வரவேற்க கூடாது..

கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது..
மனைவி எதையும் இடித்து பேசக்கூடாது..

"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் " என்று மனைவி சொன்னால்.. "எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை.. தன் தவறை ஒத்துக் கொண்டு.. "சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது

"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்.. "எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான்.. நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.. "இன்னிக்கு உடம்பு முடியல.. நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்...

மனைவி புது புடவை உடுத்தினால் .... "இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே" என்று சொல்லணும். கணவன் வெளியிலிருந்து வரும் போது" ஏன் இப்படி வியர்த்திருக்கிறது..எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..

மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும். கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்..

தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி,
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி.

BedRoom இல் Board Room இல் பேசுவது போல் பேசக் கூடாது.. கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக் கூடாது..

பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள் சரி செய்யப் பட்டு சேர்ந்து விட வேண்டும்..

முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்.. வார்த்தைகளில் ஜாக்கிரதை

எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்.. சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது.

முள்ளால குத்தின காயம் ஆறிடும்.. சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்.

இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்.. ஒருவர் கோபம் கொள்ளும்போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..

"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் " என்றும்.. "கணவன் தானே..பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது.. உடல் வலிக்காது.. ஊர் சிரிக்காது..

வாழ்க இல்லறம்..
வளர்க நல்லறம் !
Pages: 1 2 [3] 4 5 ... 10