21
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 394
« Last post by SweeTie on January 06, 2026, 08:33:32 AM » காளைமாடு ரெண்டு கட்டி
கலப்பை பூட்டி வயல் உழுது
நாட்டு சம்பா நெல் விதைத்து
ஏற்றமதில் நீர் இறைத்து
கன்னி பெண்கள் நாற்றுநட்டு
குருவி காகம் கொத்தாம
நடுநடுவே வெருளிநட்டு
இரவு பகல் காத்திருந்து
விளைந்த பயிர்…. அறுவடைக்கு
நாள் பார்த்து படையல் போட்டு
கதிர் வெட்டி சூடு போட்டு
வீடு வந்து சேரும் நெல்லுமணி
பொன்விளையும் பூமியென
உழவண்வண் கொண்டாட
வந்திடுமே பொங்கல் தைப்பொங்கல்
நெல்லை குத்தி அரிசியாக்கி
பச்சரிசி பால் கலந்து
பயறுடனே சக்கரையும்
நெய்யில் வறுத்த முந்திரியும்
கம கமன்னு மணமெழுப்ப
ஏலக்காய் கொஞ்சம் தூள்செய்து
தூக்கலாக தூவிவிட்டு ... ஆஹா ...ஒஹோ....என
குழந்தைகள் அனந்த கூச்சலிட
பொங்கலோ பொங்கல் என
பெண்களோ குரவையிட
வந்திடுமே பொங்கல் தைப்பொங்கல்
உலகுக்கே உணவூட்டும் உழவன்
உழைப்பால் உயர்ந்தவன் ஆவான்
அறியாத மூடர்கள் அவனை
குறைவாக எண்ணி நகைப்பார்
சேற்றிலே காலூன்றும் உழவன்
இல்லலாமல்….. மக்கள்
சோற்றிலே கை வைக்கலாமா?
சேற்றிலே அவன் உழைப்பு
சுத்த காற்று அவன் மூச்சு
நோய் நொடி ஏதுமில்லை
நிம்மதியான வாழ்க்கை
நாடு விட்டு நாடு
பணம் தேடி ஓடிடுவார்
கறை படியா வெள்ளைஉடை
கலையாத கேசம்
மனம் முழுதும் சங்கடங்கள்
சொல்லி அழ யாருமில்லை
சுதந்திர காற்றும் இல்லை
என்னடா வாழ்க்கை இது என
ஏங்குவார் பலரும் இங்கே
கலப்பை பூட்டி வயல் உழுது
நாட்டு சம்பா நெல் விதைத்து
ஏற்றமதில் நீர் இறைத்து
கன்னி பெண்கள் நாற்றுநட்டு
குருவி காகம் கொத்தாம
நடுநடுவே வெருளிநட்டு
இரவு பகல் காத்திருந்து
விளைந்த பயிர்…. அறுவடைக்கு
நாள் பார்த்து படையல் போட்டு
கதிர் வெட்டி சூடு போட்டு
வீடு வந்து சேரும் நெல்லுமணி
பொன்விளையும் பூமியென
உழவண்வண் கொண்டாட
வந்திடுமே பொங்கல் தைப்பொங்கல்
நெல்லை குத்தி அரிசியாக்கி
பச்சரிசி பால் கலந்து
பயறுடனே சக்கரையும்
நெய்யில் வறுத்த முந்திரியும்
கம கமன்னு மணமெழுப்ப
ஏலக்காய் கொஞ்சம் தூள்செய்து
தூக்கலாக தூவிவிட்டு ... ஆஹா ...ஒஹோ....என
குழந்தைகள் அனந்த கூச்சலிட
பொங்கலோ பொங்கல் என
பெண்களோ குரவையிட
வந்திடுமே பொங்கல் தைப்பொங்கல்
உலகுக்கே உணவூட்டும் உழவன்
உழைப்பால் உயர்ந்தவன் ஆவான்
அறியாத மூடர்கள் அவனை
குறைவாக எண்ணி நகைப்பார்
சேற்றிலே காலூன்றும் உழவன்
இல்லலாமல்….. மக்கள்
சோற்றிலே கை வைக்கலாமா?
சேற்றிலே அவன் உழைப்பு
சுத்த காற்று அவன் மூச்சு
நோய் நொடி ஏதுமில்லை
நிம்மதியான வாழ்க்கை
நாடு விட்டு நாடு
பணம் தேடி ஓடிடுவார்
கறை படியா வெள்ளைஉடை
கலையாத கேசம்
மனம் முழுதும் சங்கடங்கள்
சொல்லி அழ யாருமில்லை
சுதந்திர காற்றும் இல்லை
என்னடா வாழ்க்கை இது என
ஏங்குவார் பலரும் இங்கே

Recent Posts
