Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
காளைமாடு ரெண்டு கட்டி
கலப்பை பூட்டி வயல் உழுது
நாட்டு  சம்பா நெல் விதைத்து
ஏற்றமதில் நீர் இறைத்து
கன்னி  பெண்கள் நாற்றுநட்டு
குருவி காகம் கொத்தாம
நடுநடுவே வெருளிநட்டு
இரவு பகல் காத்திருந்து
விளைந்த  பயிர்….  அறுவடைக்கு
நாள் பார்த்து படையல் போட்டு 
கதிர் வெட்டி சூடு போட்டு 
வீடு வந்து சேரும்  நெல்லுமணி
பொன்விளையும் பூமியென
உழவண்வண் கொண்டாட
வந்திடுமே  பொங்கல் தைப்பொங்கல்
 
 நெல்லை  குத்தி அரிசியாக்கி
பச்சரிசி  பால் கலந்து 
பயறுடனே  சக்கரையும் 
நெய்யில் வறுத்த முந்திரியும்
கம கமன்னு மணமெழுப்ப
ஏலக்காய் கொஞ்சம்  தூள்செய்து
தூக்கலாக தூவிவிட்டு  ... ஆஹா   ...ஒஹோ....என
குழந்தைகள்  அனந்த கூச்சலிட
பொங்கலோ  பொங்கல்  என
பெண்களோ  குரவையிட 
வந்திடுமே  பொங்கல் தைப்பொங்கல்

உலகுக்கே உணவூட்டும் உழவன்
உழைப்பால் உயர்ந்தவன் ஆவான்
அறியாத மூடர்கள் அவனை 
குறைவாக  எண்ணி நகைப்பார்
சேற்றிலே  காலூன்றும்   உழவன்
இல்லலாமல்…..  மக்கள் 
சோற்றிலே  கை வைக்கலாமா?

சேற்றிலே   அவன் உழைப்பு 
சுத்த காற்று அவன் மூச்சு
நோய்  நொடி   ஏதுமில்லை 
நிம்மதியான வாழ்க்கை
நாடு விட்டு நாடு
பணம் தேடி  ஓடிடுவார்
கறை படியா  வெள்ளைஉடை
கலையாத  கேசம்
மனம் முழுதும்  சங்கடங்கள்
சொல்லி அழ யாருமில்லை 
சுதந்திர  காற்றும்  இல்லை
என்னடா  வாழ்க்கை இது  என
ஏங்குவார் பலரும் இங்கே 
 
22
Video Songs / Re: Albums songs ( all languages )
« Last post by Yazhini on January 06, 2026, 06:32:50 AM »
தாய் தமிழே!!!

23


1️⃣ Feeling nervous
Slow, mindful breathing can calm your body when your thoughts start racing. We all forget to breathe properly sometimes.

2️⃣ Mild anxiety
Place one hand on your chest and take a few deep breaths. It sounds simple, but it really helps reset your rhythm.

3️⃣ Stuffy nose
Gently cooling the face can bring temporary relief. Just don’t overdo it straight from the freezer.

4️⃣ Trouble falling asleep
Lower the lights, slow your breathing, and let your body know it’s time to rest. Scrolling usually makes it worse… we’ve all been there.

5️⃣ Light dizziness
Pause, sit down, and focus on your breath until things feel steady again.

6️⃣ Hiccups
Take a deep breath and hold it for a few seconds. It’s a classic trick for a reason.

7️⃣ Mild headache
A gentle hand or neck massage can release tension and ease discomfort.

🌱 Important note
These are simple comfort habits for mild, everyday situations. They don’t replace medical advice or treatment.

✨ Little reminder
Listening to your body, slowing down, and breathing calmly are small habits that support daily well-being.
24
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on January 06, 2026, 05:51:30 AM »
25
b]விண்ணிற்கு ஆராய்ச்சி செய்ய எத்தனை விஞ்ஞானிகள் இருந்தாலும்.... மண்ணைப் பண்படுத்தத் தெரிந்த விஞ்ஞானி விவசாயிகளே..." -

விவசாயிகளே உண்மையான விஞ்ஞானிகள் என்ற கருத்தை மறுக்க முடியாது யாரினாலும்!

"உலக வாழ்வின் அடிப்படை ஆதாரம் விவசாயமே.....
தாய் இன்றி சேய் இல்லை என்பது போல விவசாயம் இன்றி அன்னம் இல்லையே..." - விவசாயத்தின் அவசியத்தையும், உணவின்றி வாழ இயலாது என்பதையும் விளக்குகிறது நமக்கு!

"சேற்றில் கை வைத்து பாடுபடுபவன் இணையில்லா விவசாயி...
நெற்பயிரும் தலை நிமிர்ந்து நிற்கும் வரை எத்தனை போராட்டம்..." -
விவசாயியின் போராட்டத்தையும், உழைப்பையும் போற்றுகிறது!

மண் மனிதனின் முதல் தோழன்!
மண் மனிதனின் கடைசி எதிரி !
கருவறை தாண்டிய பாதங்கள் மண்ணின் முதுகு மிதித்து புழுதி பிடித்து உரண்டு புரண்டு உறவாடுகின்றன..."
மண் மீதான மனிதனின் தொடர்பையும், விவசாயியின் உழைப்பையும்  உணர்த்துகின்றன கவிதை வரிகள் !

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் எனும் பெரியோரின் வாக்கு... பெற்ற பிள்ளை போல பேணி வளர்ப்பான் விவசாயி..."
விவசாயியின் மனத்தையும், பயிர்கள் மீதான பாசத்தையும் காட்டுகிறது!
விவசாயத்தைக் காப்போம்!
26
வயலில் நிமிர்ந்து நிற்கும் கதிர் சொல்லும் அவன் உழைப்பை

கூடத்தில் இருக்கும் காளை சொல்லும் அவன் அன்பை

பசி என கையந்து கைக்கு கூரும் அவன் கருணையை

அந்த கலப்பை சொல்லும் அவன் இரத்தத்தில் உள்ள விடாமுயற்சியை

அங்கே சிதறி கிடக்கும் சோற்று பருக்கை சொல்லும் அவன் உழைப்பை

அந்த குப்பை தொட்டியில் அழுகிய நிலையில் இருக்கும் பழம் சொல்லும் அவன் வலியை

அங்கே உயர்ந்து நிற்கும் கட்டிடம் சொல்லும் அவன் வேதனையை

அங்கே வறண்டு இருக்கும் நிலம் சொல்லும் அவன் கண்ணீரை

இறுதியாக அந்த பூச்சி மருந்து சொல்லும் அவன் உயிரின் ருசியை.......

உணவை பார்த்து ரசித்த கண்கள்

தொட்டு உணர்ந்த கைகள்

ருசித்து உண்ட நாக்கு

பசியாரிய வயிறு

 இதில் நாம் கண்டது உணவை மட்டுமே அதன் பின் உள்ள வலியை அல்ல

உணவின் ருசியை பார்க்கும் நாம் அதை நமக்கு தந்தவன் நிலை உணரவில்லை

பசிகும் அனைவரும் உழுது உண்ணும் நிலை வரும்...

 அப்போது நினைவுக்கு வரும் உழவனின் தியாகம்
27
நிதம் நிதம் சோறு தின்றோம்
அது வந்த வழி உணரலையே...
பக்குவமாய் பசி ஆத்தியவனை
நாமும் தான் பாக்கலையே...
கொண்டாட வேண்டியவனை
கொஞ்சம் கூட நினைக்கலையே...

தரணியின் தாயுமானவனை
தந்திரம் தான் சூழ்ந்ததோ...
இயற்கை விஞ்ஞானியை
செயற்கை தான் தின்றதோ...
ஆட்கொல்லி மலட்டு விதை
கையேந்த வைத்ததோ...
செயற்கை உரம் தான்
அன்னை அவளை மலடாக்குதோ...

மண்ணை செழுப்பாக்கியவனை
வறுமை தான் ஆட்கொண்டதோ...
அன்று வானம் பார்த்த பூமியையும்
பசுமைப்போர்வையால் போர்த்தினானே
இன்று காய்ந்த வயிறு பசியாற
ஈர துணி போர்த்தினானே...
அவன் கொண்டாடிய அன்னையை
கூறுப்போட்டு விற்றோமே...

டெல்டா பகுதி கூட
வெடித்து நிற்க
ஓடும் ஆறும் தான்
குடுவைக்குள் அடைப்பட
நெற்றிப்பொட்டுக்குள் கசக்கும்
உண்மையும் உணர்ந்திட
இனியொரு விதிசெய்வோம்
பூமிதாயுடன் உறவாடுவோம்...
உழவின்றி நாமில்லை
உழவனின்றி ஒருவனுமில்லை....
28
      "விவசாயம் இந்த உலகின் முதுகெலும்பு"

மக்களின் பசி பட்டினியைப் போக்கும்   
   விவசாயிகள் கடவுளே!
மண்ணில் விவசாயிகள் கால்கள் படுவதால்,
   சோற்றில் கை வைக்கின்றோம் நாம்!

காளைகளில் ஏர்,கலப்பை பூட்டி !
கழனியை உழுது  ,மண்ணைப் பதப்படுத்தி!
கால போகம் பார்த்து விதை விதைத்து!
கழனியை சுற்றி வரம்புகள் கட்டி!

இயற்கை சேதனப் பசளைகளை 
    பயிர்களுக்கு  உரமாக்கி!
இன்புற்று செழித்துப் பயிர்கள் வளர
   நீர்ப்பாசனம் பாய்ச்சி!
இன்பமாய்  களைப்பை போக்க
   பாடல்கள் பாடும் விவசாயிகள்!

வெயில் ,மழை பாராது வியர்வை சிந்தி
   உழைப்பவர்கள் விவசாயிகள்!
பயிர்கள் செழிப்புற வளர்ந்ததும் 
   அறுவடை செய்து ,சூடு மிதித்து!
தங்கள்  கஷ்டத்துக்கு சிறந்த விலை மதிப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் விவசாயிகள்!

மானியம் வாங்கி ,நகை அடகு வைத்து, விதைத்தவன் பெறுவது சிறிய சன்மானமே!
வர்த்தகர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் 
   பெருந்தொகையை ஈட்டிடுவார் கஷ்டமின்றி!
கடன் இருந்தும் விவசாயிகள் மனதில் 
     எல்லையில்லா சந்தோசம்
 மக்கள் பசியை போக்கிவிட்டோம் என்று!

இயற்கை விவசாயம் இப்போ பெரும்பாலும்
   செயற்கை விவசாயம் ஆகிறதே!
விஞ்ஞான வளர்ச்சி விவசாயத்தில் கூட
   இயந்திரமயமாகிவிட்டதே!
விவசாயத்தில் இயந்திரப் பயன்பாடு 
    சூழலை  மாசுபடுத்துகிறதே!
செயற்கை அசேதன பசளைகள் மனித 
   ஆரோக்கியத்தை கெடுக்கின்றதே!

சீக்கிரமாக விளைச்சலை பெற்று,  சந்தைப்படுத்தும் நோக்கத்தில் ,
இயற்கை விவசாயத்தை
அழிக்கின்றான் மானிடன்!
ஆறறிவு படைத்த மானிடனுக்கு புரியவில்லை அவன் ஆயுட்காலமும்   
 சீக்கிரமாய் முடிகின்றது என்பது!
அன்று உடலை வலுப் பெறச் செய்தது 
    இயற்கை விவசாயம்!
இன்று உடல் வலுப் பெற பணம் செலுத்தி
    உடற்பயிற்சிக் கூடங்கள்!

கழனியில் வேலை செய்பவனை     
    கேவலமாகவும்,
கணனியில் வேலை செய்பவனை   
     கெளரவமாகவும் ,
கண்டுகொள்ளும் மானிடனே!
புரிந்து கொள் வலைத்தளத்தில்
   அரிசியை விளைவிக்க முடியாது
      என்ற உண்மையை!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம்!வளரும் குழந்தைகளுக்கு விவசாய 
   அறிவினையூட்டுவோம்!
விவசாயிகளுக்கு ஏற்ற சன்மானத்தை   
    வழங்குவோம்!
"விவசாயம் இந்த உலகின் முதுகெலும்பு"
     என்பதை உரக்கச் சொல்லுவோம்!

விவசாயிகள் இல்லையேல்
      நாங்கள் இல்லை!
பொங்கலுக்கு மட்டும் தான்
    உழவர் திருநாள் இல்லை !
எல்லா நாளும் உங்கள் திருநாளே!
உலகில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் நான் தலை வணங்குகின்றேன்!
29
தாமரை இலை நீராய் இருக்கும் வாழ்க்கை நதியகும் காலமும் வரும்

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மந்திரமே வாழ்கையை முன்னோக்கி கொண்டு செல்லும்


உணர்வு மிகுந்த வரிகள்
30
*நுனிப் புல் மேயக்கூடாது*
             
   அடுத்த நிலையை அடைய முயற்சி செய் அடுத்தவன் நிலையை அடைய முயற்சி செய்யாதே

எந்த எல்லைக்கும் போகலாம் என்ற நிலை இருந்தும் தன்னையும் ஓர் கண்ணியமான எல்லைக்குள் நிறுத்தி வாழ்பவனே நல்ல மனிதன்

விமானம் க்ளீன் செய்யும்
பணியாளர் ஒருவர் விமானத்தை துடைத்துக் கொண்டு இருந்தார்

அப்பொழுது விமானியின் அறையில் ஒரு புத்தகம் இருந்தது

எளிதாக விமானத்தை ஓட்டுவது எப்படி ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தான்

விமானம் இஞ்சின் ஸ்டார்ட் ஆக முதலில் பச்சை பட்டனை அமுக்கவும்.

அப்படியே செய்தான்
விமான என்ஜின் ஸ்டார்ட் ஆனது

ஓடு தளத்தில் ஓட நீல நிற பட்டனை அழுத்தவும் என்று இருக்க அவன் அதை செய்ய ஓடு தளத்தில் வேகமாக ஓடியது.

அப்புறம் அடுத்து கருப்பு நிற லிவரை கீழே தள்ளினால் விமானம் மேலே பறக்கும் என்று எழுதி இருக்க

அதையே செய்தான்

இப்பொழுது விமானம் உயரமாக பறக்க ஆரம்பித்தது.

அரை மணி நேரம் மகிழ்ச்சியாக பறந்த பின் சரி விமானத்தை தரை இறக்கலாம் என்று புத்தகத்தின் அடுத்த பக்கத்தை திருப்ப.

விமானத்தை எப்படி இறக்குவது என்பதை விளக்கமாக அறிந்து கொள்ள எங்கள் புத்தகத்தின் இரண்டாவது பாகத்தை வாங்குங்கள் என்று இருந்தது.

கதையின் நீதி எதையும் முழுதுமாக தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்க கூடாது அதாவது நுனிப்புல் மேயக்கூடாது

சில உண்மைகள் நமக்கு புரிய  நீண்ட காலம் எடுக்கும் அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு நம்முடைய கோபம், நம்முடைய பதற்றம், நம்முடைய பயம், நம்முடைய மன அழுத்தம், நம்முடைய தைரியம் எதுவும் மற்றவர்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை அவை நம் ஆரோக்கியத்தை கெடுத்து  பிரச்சினைகளை தான் அதிகரிக்கும் நம் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே நம்மால் அவர்களுக்கு கொடுக்க முடியும்

சோகத்திலும்  மகிழ்ச்சியிலும் உங்கள் பலவீனங்களை உளறி வைக்காதீர்கள் அதையே தனக்கு சாதகமாக  பயன்படுத்திக் கொள்ளும் உலகமிது

புயலாய் இருப்பவர்களை தென்றலாக மாற்றுவது சிலரின் வார்த்தைகளே.
Pages: 1 2 [3] 4 5 ... 10