Pages: 1 2 [3] 4 5 ... 10
21
« Last post by MysteRy on Today at 09:03:30 AM »
22
« Last post by MysteRy on Today at 08:57:07 AM »

💰 Henry Ford’s highest-paid employee… did nothing.
And that’s exactly why Ford became a millionaire.
A journalist once asked Henry Ford:
“Who’s the highest-paid person in your company?”
Ford took him to his massive factory.
Noise, machines, workers rushing everywhere…
And in the middle of that chaos — a small office.
Inside, a man was napping with his feet on the desk and a hat over his face.
The journalist, puzzled, asked:
– “Who’s that man?”
Ford smiled:
– “He’s my highest-paid employee. He does nothing… except think.”
🧠 “All our improvements, systems, and designs come from his mind.
I just execute his ideas — and make millions.”
Ford understood something most leaders forget:
Ideas are worth more than hours worked.
You can’t innovate with a calendar full of meetings.
You need silence, space, and time to think.
📖 Bill Gates takes ‘think weeks.’
📚 Warren Buffett reads for more than 4 hours a day.
Both spend more time thinking than doing.
Because clear thinking remains the most profitable skill of the 21st century.
✨ The lesson?
You don’t always need to work harder.
Sometimes, you just need to think smarter.
23
« Last post by MysteRy on Today at 08:53:22 AM »
24
« Last post by MysteRy on Today at 08:51:22 AM »

இதன் இலை, கிழங்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இதன் இலைக்கு வண்டு கடி நஞ்சு நீக்குதல், இடுமருந்தை முறித்தல், ஓடுகின்ற வாத நோயை போக்குதல், மந்தம்
அனைத்தும் குணமாக்கும் தன்மைக் கொண்டது.
வண்டு கடித்தால் சிலருக்கு அமாவாசை நாட்களில் உடலில் தடிப்பு ஏற்படும். அரிப்பும் இருக்கும். அவர்களுக்கு சின்னி இலையை கைப்பிடி அளவு எடுத்து, ஒரு பூண்டு, பத்து மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து மூன்று நாட்கள் தொடர்ந்து காலை, மாலை இரு வேளை கொடுத்து வந்தால் குணமாகும். மருந்து
சாப்பிடும் நாட்களில் பத்தியமாக உப்பு, புளி நீக்கவேண்டும்.
இடு மருந்து என்று சொல்கின்ற வசிய மருந்து உண்டவர்கள் தனது சுய சிந்தனையை இழந்துக் காணப்படுவார்கள். இவர்களுக்கு சின்னி இலைச்சாறு அத்துடன் தண்ணீர் கலந்து 50-மி.லி கொடுத்தால் வாந்தி ஏற்படும். அப்போது அதனுடன் வசிய மருந்தும் வந்து விழும். மேலும் அந்த மருந்து செரித்து இரத்தத்தில்
கலந்திருந்தால் மூன்று நாட்களுக்கு காலை வேலையில் மட்டும் கொடுத்து வந்தால் நஞ்சு முறிந்து பழைய நிலைக்கு வருவார்.
சின்னியின் கிழங்குப் பன்றிகறிக்கு நிகரான குளிர்ச்சிமிக்கது. இதை ஆவியில் வேகவைத்து மாலையில் உண்டு வந்தால் மூலம் குணமாகும். ரத்த கசிவு நிற்கும்.
மலச்சிக்கலுக்கு சின்னி இலைப்பொடி 5-கிராம், நிலாவரை 30-கிராம், கடுக்காய் 15-கிராம் எடுத்து அனைத்தையும் இடித்து சூரனம் ஆக்கி சலித்து இரவு
படுக்கப் போகும் முன் 2-கிராம் அளவு இளஞ்சூடான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இதனால் மலம்
எளிதாக வெளியேறும். இது ரோஸ்லோ என்ற பெயரில் சித்த மருந்தாக கடைகளில் கிடைக்கிறது. இதை வாங்கி 3-கிராம் அளவு நாள்தோறும் பயன்படுத்தலாம். இலையை அரைத்து தேள்கடித்த இடத்தில் வைத்து கட்டினால் விஷம் இறங்கும்.
25
« Last post by MysteRy on Today at 08:47:43 AM »

கோவிலில் தேங்காய் உடைக்கும்போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக நாம் கருதுவதுண்டு. அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.
இந்த தேங்காய் பூவை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. ஆனால் இது எப்படி உருவாகிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ.
நாம் பொதுவாக தேங்காய் பூவில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் உண்டு. அது பற்றி மிக விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நன்மைகள்:
தேங்காய் பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதில் உள்ள மூலக்கூறுகள் பல பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது. அப்படி என்னென்ன நோய்களுக்கு இது பயன்படுகிறது ?
இந்த தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களினால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காகக் கூட்டிவிடும். அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்க்ளைத் தவிர்க்க முடியும்.
மன அழுத்தம் குறைப்பு:
அதிக பணிச்சுமை உள்ளவர்கள் மன அளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அப்படி இருக்கும்பாழுது தேங்காய் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதீத எனர்ஜி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.
ஜீரணத்தை அதிகமாக்க:
அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இந்த தேங்காய் பூ இருக்கும். இந்த தேங்காய் பூவில் உள்ள மினரல்களும் வைட்டமின்களும் குடலுக்குப் பாதுகாப்பு அளித்து மலச்சிக்கலைப் போக்குகிறது. அஜீரணத்தை விரட்டியடிக்கிறது.
நீரிழிவு:
இந்த தேங்காய் பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகின்ற அபார சக்தி இருக்கிறது. அதனால் அடிக்கடி இந்த தேங்காய் பூவை சாப்பிடுவதனால் உங்களுடைய ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரையைக் கட்டுப்படுத்தப் பெரிதும் இந்த தேங்காய் பூ பயன்படுகிறது.
இதய நோய்கள்:
இதயக் குழாய்களில் படிகின்ற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்சினையை சரிசெய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய் பூ செயல்படும்.
தைராய்டு:
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் என்னதான் அதை சரிசெய்ய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், தைராய்டு சுரப்பியின் மூலம் வேறு சில பக்க விளைவுகளையும், குறிப்பாக உடல் பருமன் போன்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா எவ்வளவு ஆண்டுகளாக தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இந்த தேங்காய் பூ சாப்பிட்டால் மிக வேகமாக குணமடைய ஆரம்பிக்கும்.
சர்க்கரை வியாதிக்கு:
தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.
புற்றுநோய்:
புற்றுநோய் செல்களைத் தூண்டுகின்ற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றலை இந்த தேங்காய் பூ கொண்டிருக்கிறது. இது நமக்கு புற்றுநோய் உண்டாகாமல் காக்கிறது.
உடல் எடை:
உங்களுடைய உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக இந்த தேங்காய் பூ உதவுகிறது. இதில் உள்ள கலோரியின் அளவும் மிக மிகக் குறைவே. இதனால் எடையும் கூடாது. நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதினால் உடலில் கொழுபு்புகள் தேங்காமல் உடல் எடையையும் வேகமாகக் குறைக்க உதவுகிறது.
சிறுநீரகம்:
தேங்காய் பூ கிட்னி சம்பந்தப்பட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது. தொற்றுநோய்களைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் உருவாகிற நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் இந்த தேங்காய் பூவுக்கு உண்டு.
இளமைப் பொலிவு:
நம்முடைய சருமத்தை மிக இளமையாகவும் பொலிவுடனும் சருமச் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பதில் மிக முக்கியப் பங்கு இந்த தேங்காய் பூவுக்கு உண்டு. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உங்களுடைய இளமையைத் தக்க வைத்திருக்க உதவுகிறது.
26
« Last post by MysteRy on Today at 08:45:03 AM »

பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது.
பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது. 'நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது' என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா?
#நிச்சயம்_சாப்பிடக்கூடாது' என்கிறார்கள்
ஊட்டச்சத்து நிபுணர்கள்...
'இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை எல்லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது. சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர்.
உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச் சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப் படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.
பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (#Hydrogenated_Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (#TransFat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.
பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச்சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.
சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.
சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும். கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.
சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.
`லோ இன் கலோரிஸ்' (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டை லோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.
பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
'கட்டாயம் பிஸ்கட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் சாப்பிடலாம். க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றோ, இரண்டோ போதும். இது சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பொருந்தும்'' என்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் வீட்டிலேயே பிஸ்கட் செய்து சாப்பிடுவது தான் சிறந்த தீர்வு. அதையுமே அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்றும் அறிவுறுத்துகிறார்.
குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது சரியா?
'பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவது தான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது.
பெரும்பாலானவர்கள், குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகை பிஸ்கட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன.
இவையாவும் செயற்கை ஃப்ளேவர்கள். அதேபோல, க்ரீம் பிஸ்கட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். பெரியவர்களே வெள்ளைச் சர்க்கரை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் பட்டு வரும் நேரத்தில், வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதென்பது, பல்வேறு பிரச்னைகளுக்குத் திறவுகோலாக அமையும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, காலை பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்பும் பெற்றோரைப் பார்க்க முடிகிறது.இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும்.
பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும். மாலை நேரத்தில் பிஸ்கட் சாப்பிடுவது, அவர்களை மந்தப்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.'..
27
« Last post by MysteRy on Today at 08:42:00 AM »

பொதுவாக காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
அந்தவகையில் தொண்டைப்புண் ஏன் ஏற்படுகின்றது? அதனை போக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
....
தொண்டை புண் ஏன் ஏற்படுகின்றது?
பெரும்பாலும் தொண்டைப் புண் வைரஸ் கிருமிகளால் உண்டாகிறது. இது சளிக் காய்ச்சல் ஏற்படும்போது காணப்படும். ஆனால் சில வேளைகளில் அது பேக்டீரியா கிருமிகளாலும் உண்டாகும். அவை ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் பேக்டீரியா கிருமிகளால் உண்டாகிறது.
....
அறிகுறிகள் என்ன ?
வலி அல்லது அரிப்பு போன்ற உணர்வு, உணவு விழுங்கும்போதும் பேசும்போதும் வலி, உலர்ந்த தொண்டை, கழுத்துப் பகுதியில் கரலை உருண்டைகள், தொண்டைச் சதை வீக்கம், தொண்டைச் சதையில் சீழ் அல்லது வெள்ளைப் புள்ளிகள்.. குரல் கம்மிப்போதல்...
...
#தீர்வு:
தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் தடவ குறையும். பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் குறையும். தொண்டை வலி ஏற்படும்போது மா இலைகளை தணலில் இட்டு வெளிவரும் புகையை சுவாசித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
வேப்பம் பூவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்து வந்தால் தொண்டையில் ஏற்படும் புண் குறையும்.
4 பூண்டு பல் இடித்து கூழாக்கி 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
இஞ்சியை தோல் நீக்கி கழுவி சிறிதளவு எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
சித்தரத்தையை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
1 தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து 1 டம்ளர் நீர் விட்டு சிறிது சூடேற்றி எடுத்து அதில் சிறிது தேன் கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.
28
« Last post by MysteRy on Today at 08:29:52 AM »

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் தொடர்ந்து பயன்படுத்த தவற மாட்டீர்கள்.
1. புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.
2. அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் செரிமானமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.
3. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
4. புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.
5. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.
6. புதினா கீரையை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு நல்ல மருந்தாக இருந்து வருகிறது.
7. புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.
8. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.
29
« Last post by MysteRy on Today at 08:27:26 AM »

அளவிட முடியாத மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கும் தாவரங்களை இயற்கை நமக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது. மருத்துவ குணமிக்க தாவரத்தை உணவாக உட்கொள்ளும் முன்னோர்களின் உணவுபழக்கத்தை நாமும் கடைப்பிடித்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருக்கலாம்.
தாவரம் முழுவதும் மருத்துவ குணமே என்று சொல்லக்கூடிய வகையான தாவரங்களை விரல்விட்டு எண்ணி விட லாம். அவற்றிலும் முக்கியமானது என்றால் முருங்கை. இவற்றில் 90 க்கும் அதிகமான சத்துகளும், அதிக மருத்துவ குணங்களும் இருப்பதாக ஆய்வுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. முருங்கை மரத்தில் வேர், இலை, முருங்கை காய், முருங்கை காம்புகள், பூ, பட்டை அனைத்துமே அதீத மருத்துவ குணங்களைக் கொண்டது.
ஆயுர்வேத மருத்துவம் முருங்கையைப் பற்றி குறிப்பிடும் போது இது 300 விதமான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 க்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுவதாக கூறுகிறது.
கீரைகளில் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டியது என்று அறிவுறுத்துபவர்கள் முருங்கைக்கீரையைத் தவறாமல் சொல்வார்கள். மற்ற கீரைகளை விட இதில் அதிக அளவு புரதமும் சத்துகளும் அடங்கியிருக்கின்றன.
^
முருங்கையில் இருக்கும் சத்துகள்:
உடலுக்கு தேவையான முக்கிய் அமினோ அமிலங்கள் இவற்றில் அடங்கியிருக்கின்றன. மற்ற உணவுகளைவிட இதில்
25 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. மேலும் வைட்டமின் பி, பி2, சி, புரதம், நார்ச்சத்து, கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்திருக்கின்றன. அதிகம் விலை கொடுத்து வாங்காமல் இயற்கையிலேயே இந்த சத்துகள் முருங்கைக்கீரையில் நிறைந்திருக்கின்றன.
இரத்தம் சீராக இல்லாமல் இருப்பதால் தான் அதிக குறைபாட்டை சந்தித்துவருகிறோம். இதைச் சரிசெய்ய மாத்திரைகளை விட அருமருந்தாக இருக்கிறது முருங்கை.
முருங்கை என்னென்ன நோய்களுக்கு அருமருந்தாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோமா?
#ஹீமோகுளோபின்:
இரத்த சோகை இன்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் போதுமான அளவு இரத் தம் இருப்பதில்லை. இது அளவில் அதிகம் குறையும் போது மட்டுமே பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக் கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது.
குறிப்பாக பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இந்தப் பாதிப்பு உண்டு. இரத்த விருத்தி குறைந்திருப்பவர்கள் மட்டுமல்ல அனைவரும் பொதுவாக வாரத்தில் இரண்டு நாள்கள் இந்தக் கீரையை சாப்பிட்டால் இரத்தசோகை வராமல் தடுக்கலாம். அதிக அளவு இரும்புச்சத்து கொண்ட இந்த முருங்கையால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க தொடங்கும் என்பதை தொடர்ந்து பரிசோதனை செய்வதின் மூலம் நீங்கள் உணரலாம்.
^
#கருப்பை, ஆண்மையைப் பலப்படுத்தும் முருங்கை:
இன்று குழந்தைப் பேறு இயற்கையாக கிடைப்பதில் சிக்கல் என்னும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வரு கிறது. கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தவும் கருப்பையின் வளர்ச்சியைச் சீராக்க செய்வதிலும் முக் கிய பங்கு வகிக்கிறது முருங்கை.
விந்து எண்ணிக்கையில் குறைபாடு இருக்கும் ஆண்களுக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது முருங்கை. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்து எண்ணிக்கை அதிகரிக்கசெய்கிறது. ஆண்களுக்கும் பெண்க ளுக்கும் குழந்தைப்பேறில் இருக்கும் சிக்கலைத் தீர்த்துவைப்பதில் பெரும்பங்கு ஆற்றுகிறது முருங்கை இலை, முருங்கைப்பூ, முருங்கைக்காய்.
^
#தாய்ப்பால் சுரக்க முருங்கை:
பிரசவித்த தாய்மார்களுக்கு போதிய அளவில் தாய்ப்பால் இல்லாமல் இருந்தால் முருங்கைக்கீரையை அடிக் கடி உணவில் சேர்த்துவரலாம். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. மேலும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்க்கும், குழந்தைக்குமான நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்துகிறது.
^
#மலச்சிக்கல் சிறுநீரகப் பிரச்னை குணமாக:
முருங்கைக் காய் வயிற்றுப்புண், கண் சம்பந்தமான நோய், சிறுநீரகப் பிரச்னை போன்றவற்றைக் குணப் படுத்துகிறது. ம்ேலும் வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிப்பதிலும் தொண்டை புண், வயிற்றுப்புண் போன் றவை தீவிரமாகமலும் இருக்க முருங்கைக்காய் உதவுகிறது.
இந்தக்கீரையில் நார்ச்சத்து மிகுந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். மலச்சிக்கல் பிரச்னைகளால் பாதிப்படைந்தவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
^
#கால்சியம் குறைபாட்டை போக்கும்:
எலும்பு வலுவாகவும் பற்கள் உறுதியாகவும் இருக்க கால்சியம் பற்றாக்குறையின்றி இருக்க வேண்டும். முருங்கை இலையில் கால்சியமும் மெக்னீசியம் சத்துகளும் அதிகமாக இருப்பதால் இவை பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலுவூட்டும். குழந்தைகளுக்கு வளரும் பருவத்திலேயே இதைக் கொடுத்துவந்தால் கால்சியம் பற்றாக்குறையின்றி வளர்வார்கள்.
^
#இதய செயல்பாடும், வாயுத்தொல்லையையும் நீக்கும்:
இதயத்துக்கு வலுவூட்டும் என்பதோடு இதயத்தைச் சீராக செயல்படவும் வைக்கும்.இதய சம்பந்தமான நோய் கள் நெருங்க கூடாது என்று நினைப்பவர்கள் வாரம் இருமுறை முருங்கையை சேர்த்துகொள்வது நல்லது.
வாயுக்கோளாறால் அவதிப்படுபவர்கள் இந்தக்கீரையை சாப்பிடலாம்.
வாயுத்தொல்லையை அண்டவிடாமல் செய்வதோடு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, சைனஸ் மற்றும் சளித் தொல்லை பிரச்சனைகளுக்கும் முருங்கை நல்ல மருந்தாக இருக்கும். இவையெல்லாம் தவிர உடல் எடையைக் குறைப்பதிலும், முதுமையைத் தடுப்பதிலும், சருமத்துக்கு அழகூட்டு வதிலும், கண்பார்வை பலமடையவும், மூட்டு வலி குறையவும், கூந்தல் வளர்ச்சிக்கும் என்று பல மருத்துவ குணநலன்களைக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
முருங்கைபூ, காய், இலையை எப்படி எடுத்து கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்பதை பார்க்கலாமா?
^
#கண்களுக்கு குளிர்ச்சி தரும்:
கண்களுக்கு வேலை கொடுக்கும் பணி இன்று அதிகரித்துவிட்டது.இதனால் கண்களில் அதிகப்படியான உஷ்ணம் உண்டாகிறது. சுத்தம் செய்த முருங்கைப்பூ.நீரை கொதிக்க வைத்து சுத்தம் செய்த முருங்கைப் பூவை சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் கண் குளிர்ச்சி அடையும்.
மாதவிடாய் பிரச்னைகளைக் கொண்டிருப்பவர்கள்முருங்கைப்பூவை துளி பசும்பால் விட்டு அரைத்து, நன் றாக காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து இனிப்புக்கு பனங் கருப்பட்டி சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி னால் லேகியப்பதத்துக்கு வரும். இதை ஒரு டப்பாவில் வைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளை சாப் பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்னை நீங்கும். கருப்பையையும் உறுதியாக்கும்.
முருங்கைப்பூவைச் சுத்தம் செய்து கஷாயமாக்கி குடித்து வந்தால் உடலில் வாதம் பித்தம் கபம் மூன்றின் செயல்பாடுகளும் சமமாக இருக்கும். முருங்கைப்பூ பொடி நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் அவற்றை யும் வாங்கி பயன்படுத்தலாம்.
^
#இயற்கை வயாகரா:
இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைந்த இருபாலருக்குமே இயற்கையான மருந்து முருங்கைப்பூ. முருங்கை இலை.
பசும்பாலுடன் முருங்கைப்பூ,பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி ஒரு மண்டலம் தொடர்ந்து அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் மீது நாட்டம் உண்டாகும். ஆண்மை பெருக்கும் வல்லமைக் கொண்டது முருங்கைப்பூ என்பதால் வயாகரா மாத்திரைகளைத் தேடி செல்ல வேண்டியதில்லை.
30
« Last post by MysteRy on Today at 08:24:25 AM »

கிடைக்கும் பயன்கள் ஏராளமாம்..
கரிசலாங்கண்ணி மூலிகை பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிறந்த மூலிகையாகும். இது ஞான மூலிகை என போற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது.
கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு. அந்த வகையில் இது உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. தற்போது கரிசலாங்கண்ணி கீரை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
☘
இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவதற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும். கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.
தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.
Pages: 1 2 [3] 4 5 ... 10