Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
26
விடை: மெழுகுவர்த்தி

அடுத்த புதிர்:
ஒற்றை கண் உடையவன் ஆனால் ஓடும் இடமெல்லாம் அடைத்துக் கொண்டே செல்கிறான். அவன் யார் 🤔 🤔
:
27
குறள் -     240

அதிகாரம்    புகழ்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

பொருள்
பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.
28
பொதுப்பகுதி / குறுந்தகவல் Raj
« Last post by RajKumar on December 25, 2025, 03:49:48 PM »
நீங்கள்
கடந்து
வந்த படிகளை
உடைக்காதீர்கள்...

ஒரு வேளை
இறங்குவதற்கு
அதே படிகள்
தேவைப்படலாம்...

விதி வலியது
காலம் மிகக் கொடியது..

29
கவிதைகள் / கிறிஸ்துமஸ் சாண்டா !
« Last post by joker on December 25, 2025, 01:15:31 PM »


குளிர் நுழைந்த இரவு,
விண்மீன்கள் மெல்ல மின்ன,
கிறிஸ்துமஸ் மணி
நகரத்தின் இதயத்தைத் தட்டியது.

அங்கே
ஒரு சாலையோர குடிசையில்
கிழிந்த போர்வைக்குள்
ஒரு சிறு இதயம் துடித்தது.

அவன் கண்களில் தூக்கம் இல்லை
ஆனால் கனவுகள் இருந்தன
பசித்த வயிற்றை விட
பெரிய கனவுகள்.

“சாண்டா வருவாரா?”
என்று அவன் தன் மனதை
மெல்லக் கேட்டுக்கொண்டான்,
பட்டியலில்லை அவனிடம்,
பொம்மைகளின் பெயர்களில்லை,
விலைச்சீட்டுகளும் இல்லை.

அவன் கேட்டது
ஒரு ஜோடி செருப்பு,
மழையில் நனைந்து
வெடித்து போன
தந்தையின்
பாதங்களை காப்பதற்கு.

ஒரு முழு உணவு,
அம்மாவின் கண்களில்
புன்னகை மலர.

ஒரு புத்தகம்,
வாசிக்க, கற்றுக்கொள்ள
வாழ்க்கையை புரிந்து கொள்ள.

அவன் வீட்டில்
ஜன்னல் இல்லை
ஆனால் வானமே
அவன் கூரை.

அந்த இரவில்
நகரம் தூங்கிக் கொண்டிருக்க,
பணக்கார வீடுகளில்
பொம்மைகள் சிரிக்க,
அந்த குடிசை முன்
ஒரு நிழல் நின்றது.

சிவப்பு உடை இல்லை,
தங்கத் தாடி இல்லை,
ஆனால் கண்களில்
கருணையின் ஒளி.

“நான் சாண்டா,”
என்று சொன்னார் அவர்,
“நீ நினைப்பது போல அல்ல,
நான் மனிதர்களின்
இதயங்களில் இருந்து வருகிறேன்.”

சிறுவன் நடுங்கினான்,
குளிரால் அல்ல,
நம்பிக்கையால்.

அந்த சாண்டா
பொம்மை தரவில்லை,
ஆனால் புத்தகம் தந்தார்.

பொன் தரவில்லை,
ஆனால் கல்வி தந்தார்.

அரண்மனை தரவில்லை,
ஆனால் கனவுகளை
வளர்க்க ஒரு பாதை தந்தார்.

“நாளை நீ
என் இடத்திற்கு வருவாய்,”
என்றார் அவர்,
“அங்கே
நீயும் ஒருநாள்
சாண்டாவாக மாறுவாய்.”

காலை வந்தது.
சூரியன் சிரித்தது.
சிறுவன் எழுந்தான்.

குடிசை அதேதான்,
போர்வை அதேதான்,
ஆனால்
அவன் உள்ளம் மாறியது.

பல ஆண்டுகள் கழித்து,
ஒரு பள்ளி திறந்தது,
அதன் வாசலில்
அவன்  நின்றான்
கற்பிப்பவனாக

கிறிஸ்துமஸ் வந்தால்,
அவன் குழந்தைகளிடம் சொல்வான்:
“சாண்டா
பரிசுகள் தருபவர் மட்டும் அல்ல,
நம்பிக்கை கொடுப்பவர்தான்.”

விண்மீன்கள் இன்னும் மின்னுகின்றன,
குடிசைகள் இன்னும் இருக்கின்றன,
ஆனால்
ஒரு கனவு நனவானால்,
ஒரு உலகம்
மாறத் தொடங்குகிறது.




***Joker***
30
எல்லா முடிவுகளும்
பிரச்சனையின்
அழுத்தத்தில் தானாய் வெளிவரும்.
பிரச்சனைகள்
மேலோட்டமாய் இருக்கும்போது
எடுக்கப்படும் முடிவுகள்
சிலசமயம்
இன்னொரு பிரச்சனையாகிவிடும்.
Pages: 1 2 [3] 4 5 ... 10