Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
Happy Birthday machio chella kili happy birthday
22
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (14-DEC-2025) wishes 🎁 to our lovable friends ⭐ Mr. RAJKUMAR ⭐ and Ms. CHELLAKILI and  wishes them Good Luck..


23
ஒரு விஷயம் தெரியாது என்றால்,
“எனக்குத் தெரியாது” என்று
கேட்கப்பட்டபோதுதான் சொல்வோர்
ஒரு வகை மனிதர்கள்.

ஆனால்,
கேட்கப்பட்டதாலல்ல.....
ஒரு கேள்வி பொதுவாக எழுந்தாலே,
தனக்குத் தெரிந்த பதிலை
தன்னிச்சையாகப் பகிர்வோர்
வேறொரு வகை.

அவர்களே
தலைமைக்கான தகுதியைப்
புத்தகங்களில் அல்ல,
பண்புகளில் சுமந்தவர்கள்.

நாடு என்ற எல்லையிலோ,
வீடு என்ற வட்டத்திலோ
அவர்களின் தலைமை சுருங்குவதில்லை.
நாம் நிற்கும் எந்த இடமாயினும்,
அங்கேயே
பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்
மனநிலையில்தான்
அவர்கள் தலைவர்களாகிறார்கள்.

பதவி அல்ல அவர்களை உயர்த்துவது,
பொறுப்பே அவர்களை உருவாக்குகிறது.
அதிகாரம் அல்ல,
அறிவைப் பகிரும் தைரியமே
அவர்களின் அடையாளம்.
LUMINOUS 💯✌💗🙋‍♀️
24
சாதாரணம் என்பது சிலருக்கு சாதாரணம், சிலருக்கு நம்பிக்கை என உணர்த்தும் அழகான கவிதை சகோ.
25
கவிதைகள் / Re: நான் பதியும் இடம்
« Last post by Ninja on December 13, 2025, 08:50:49 PM »
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் சகோ! தொடர்ந்து எழுதுங்கள்
26
கவிதைகள் / Re: நான் பதியும் இடம்
« Last post by joker on December 13, 2025, 08:34:25 PM »
வாழ்த்துக்கள்

தொடர்ந்து எழுதுங்கள் சகோ
27
தன்னம்பிக்கை கொண்ட படைப்புகள் யாவும்
உன்னத கலையின் அடையாளமே
உங்கள் கவிப் பயணம் தொடரட்டும்
28
அருமையான கவிதை
பொருள் ஒன்றுதான்
ஆனால் இரு மாறுபட்ட
உணர்வுகள் .

சிந்திக்க வைக்கும் கவிதை
வாழ்த்துக்கள் தங்கச்சி
29
"சாதாரணத்தின் இருவேறுபாடு”
நான் 🙋‍♀️
நீ சொல்லுவாய் என்ற நம்பிக்கையில்
சாதாரணமென விட்டுச் சென்றேன்…🤷‍♀️

நீயோ 🙋‍♂️
சொல்ல வேண்டுமென்ற பொறுப்பை
சாதாரணமென விட்டுவிட்டாய்…🤷‍♂️

இரண்டும் ஒரே சொல்லே தான் — சாதாரணம்🤔
ஆனால்
ஒன்றில் நம்பிக்கை பேசுகிறது,💯💜
மற்றொன்றில் உதாசீனம் மௌனம் காக்கிறது.✌
LUMINOUS 🧘‍♀️
30
கவிதைகள் / நான் பதியும் இடம்
« Last post by Luminous on December 13, 2025, 08:17:03 PM »
கவிதை எழுதத் தெரிந்தது
எனக்கு பெருமையல்ல
அதை
எங்கு பதிய வேண்டும் என்று
தெரியாமல் இருந்ததே
என் மௌனப் போராட்டம்.

இப்போது,
எங்கு பதிய வேண்டும் என்பதை
கற்றுக்கொண்டேன்.
அதனால்
நான் பதியும் இடம்
கவிதையின் தளமாக மாறினால்,
அது ஆணவமல்ல.

அது
தேர்ந்தெடுத்த உயரமல்ல
வீழ்ந்துகொண்டே
அளந்த ஆழம்.

சிலருக்கது
சிறு ஆணவமாகத் தோன்றலாம்
ஆனால்
அடி சருக்கும் என்று
தெரிந்தபடியே
நான் முன்னே வைக்கிறேன் என் பாதங்களை.

ஏனெனில்,
வீழ்வதற்குப் பயந்தவன்
கவிதை எழுதமாட்டான்
வீழ்ந்தபின்பும்
எழுந்து நிற்பவனே
கவிதையாய் மாறுவான்.

இது ஆணவமல்ல,
முயற்சியின்
அடையாளம்.
LUMINOUS 💗✌💯
Pages: 1 2 [3] 4 5 ... 10