மாயாதேவி ஒரு அமைதியான, நேர்மையான பெண். சீனு ஒரு நல்ல மனம் கொண்ட இளைஞன். சிறிய புரிதல் பிழைகள், மனக்கசப்புகள், குடும்ப அழுத்தங்கள் இவர்களை பிரிப்பதாயினும், அவர்கள் இடையே உருவாகும் நம்பிக்கையும் உண்மையும் கதையை நெகிழ்வூட்டும் முடிவிற்கு அழைத்து செல்கிறது. எளிய கதை, அழகான உணர்ச்சிகள். அதுவே இந்த படத்தின் சிறப்பு. இசையின் முக்கியத்துவம்:
இந்த படத்தின் உண்மையான உயிர் இளையராஜாவின் இசை. கதையின் உணர்ச்சிக்கு ஆழம் கொடுக்க, காதல் மற்றும் நெகிழ்ச்சியை மேலும் உயர்த்த, பாத்திரங்களின் உள்ளுணர்வை சொல்ல, மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இசை இல்லாமல் இந்த படம் பாதியாகியும் உணர முடியாது, அவ்வளவு அழகாக ராஜா பின்னணி இசையால் கதையை தாங்குகிறார்.
இந்தப்படத்தில் எனது விருப்பப் பாடல்
“கஜுராவோ கனவிலோ” பாடல்
குரல்: ஹரிஹரன் மற்றும் ஷ்ரேயா கோஷல் இசை: இளையராஜா வரிகள்: பழனி பாரதி
இந்த பாடலில் காதலின் கனவுத்தன்மை, longing, மனதின் மென்மை all in one. ராஜாவின் இசை இதை ஒரு மாயாஜால அனுபவமாக மாற்றுகிறது.
இசைத் தென்றல் நிகழ்ச்சியின் RJக்களுக்கும் DJக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். FTCயின் அனைத்து நண்பர்களுக்கும், உணர்ச்சி மற்றும் காதலை மதிக்கும் அனைவருக்கும் இந்தப் பாடலை டெடிக்கேட் செய்கிறேன்.
இந்த இனிமையான பாடல் உங்கள் மனதையும் தொட்டு செல்லட்டும்