21
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 395
« Last post by joker on January 20, 2026, 08:17:33 AM »சூரியனின் வெளிச்சம் பட்டு
கண்களின் இமைகைளை மெதுவாகத் திறக்கும் போது,
நேற்றைய சுமைகள் இன்னும்
மனத்தின் மூலையில் ஈரமாகவே கிடக்கின்றன.
கல்லில் இருக்கும் கடவுளை
காண ஒரு சிலருக்கு
அனுமதியில்லை
அனுமதி இருப்பவருக்கோ
கட்டணமாம்
கட்டணமும் செலுத்தி
வரிசையில் உன்னை காண
நின்றால் சில நொடிகளில் பிடித்து
தள்ளும் ஒரு கூட்டம்
கோவில் சுற்றுசுவரில் வீற்றிருக்கும்
உன் சிலையை தெய்வம் என தொழும்
ஒரு தாய் , உனக்கும் அங்கு இருந்து
ஆறுதல் சொல்ல அவ்வளவு
ஆனந்தம்
வாழ்க்கை
எப்போதும் சீராகப் போவதில்லை
சில நாட்கள் கண்ணாடிபோல் தெளிவு,
சில நாட்கள் புயலின் முகம்,
விழுதாய் இருக்கும் மனதின் சஞ்சலங்களுக்கு
நம்பிக்கையின் வீற்றாய்
தெய்வ நம்பிக்கை ஊன்றி
எதிர்கொள்ள தயாராகிறோம்
மனிதன் பிறந்ததற்கான
அர்த்தத்தை தேடுகையில்
பிறப்பது தெய்வ நம்பிக்கை
பக்தி என்பது
பயம் கொண்டு வணங்குவது அல்ல
நம்பிக்கையோடு சரணடைவது.
“நான் தனியாக இல்லை”
என்று மனம் தன்னிடம் சொல்லிக்கொள்ளும்
மெளனமான பிரார்த்தனை.
பக்தி
பூமாலை அல்ல,
புகைப்படமும் அல்ல,
புகை படரும் தூபமும் அல்ல
உனக்குள் உறங்கி கிடக்கும்
நம்பிக்கையின் கதவை திறக்கும்
திறவு கோல் அது
பக்தி நம்மை மென்மையாக்குகிறது,
நம்பிக்கை நம்மை வலிமையாக்குகிறது,
வாழ்க்கை நம்மை மனிதனாக்குகிறது
இம்மூன்றும்
ஒரே நூலில் கோர்க்கப்பட்டால்,
அதுவே ஒரு முழுமையான பயணம்
நான் யார் என்று அறிய முற்படும் பயணத்தில்
துணை நிற்கும்
துணையே
கடவுள்
இன்றும்
என் பாதை தெளிவல்ல,
என் கேள்விகள் முடிவல்ல.
ஆனாலும்
நடக்கிறேன்
உன்னை நினைத்து,
என்னை நம்பி.
அதுவே
என் வாழ்க்கையின்
அமைதியான
ஆழமான
பக்தி
***Joker***
கண்களின் இமைகைளை மெதுவாகத் திறக்கும் போது,
நேற்றைய சுமைகள் இன்னும்
மனத்தின் மூலையில் ஈரமாகவே கிடக்கின்றன.
கல்லில் இருக்கும் கடவுளை
காண ஒரு சிலருக்கு
அனுமதியில்லை
அனுமதி இருப்பவருக்கோ
கட்டணமாம்
கட்டணமும் செலுத்தி
வரிசையில் உன்னை காண
நின்றால் சில நொடிகளில் பிடித்து
தள்ளும் ஒரு கூட்டம்
கோவில் சுற்றுசுவரில் வீற்றிருக்கும்
உன் சிலையை தெய்வம் என தொழும்
ஒரு தாய் , உனக்கும் அங்கு இருந்து
ஆறுதல் சொல்ல அவ்வளவு
ஆனந்தம்
வாழ்க்கை
எப்போதும் சீராகப் போவதில்லை
சில நாட்கள் கண்ணாடிபோல் தெளிவு,
சில நாட்கள் புயலின் முகம்,
விழுதாய் இருக்கும் மனதின் சஞ்சலங்களுக்கு
நம்பிக்கையின் வீற்றாய்
தெய்வ நம்பிக்கை ஊன்றி
எதிர்கொள்ள தயாராகிறோம்
மனிதன் பிறந்ததற்கான
அர்த்தத்தை தேடுகையில்
பிறப்பது தெய்வ நம்பிக்கை
பக்தி என்பது
பயம் கொண்டு வணங்குவது அல்ல
நம்பிக்கையோடு சரணடைவது.
“நான் தனியாக இல்லை”
என்று மனம் தன்னிடம் சொல்லிக்கொள்ளும்
மெளனமான பிரார்த்தனை.
பக்தி
பூமாலை அல்ல,
புகைப்படமும் அல்ல,
புகை படரும் தூபமும் அல்ல
உனக்குள் உறங்கி கிடக்கும்
நம்பிக்கையின் கதவை திறக்கும்
திறவு கோல் அது
பக்தி நம்மை மென்மையாக்குகிறது,
நம்பிக்கை நம்மை வலிமையாக்குகிறது,
வாழ்க்கை நம்மை மனிதனாக்குகிறது
இம்மூன்றும்
ஒரே நூலில் கோர்க்கப்பட்டால்,
அதுவே ஒரு முழுமையான பயணம்
நான் யார் என்று அறிய முற்படும் பயணத்தில்
துணை நிற்கும்
துணையே
கடவுள்
இன்றும்
என் பாதை தெளிவல்ல,
என் கேள்விகள் முடிவல்ல.
ஆனாலும்
நடக்கிறேன்
உன்னை நினைத்து,
என்னை நம்பி.
அதுவே
என் வாழ்க்கையின்
அமைதியான
ஆழமான
பக்தி
***Joker***

Recent Posts





but song Ku mathume apo apo pothukuven 