Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
என்னுயிர் தோழி.... இந்த வார்த்தையைப் பார்த்ததும் என் நினைவுக்கு வருபவள் 3 ஆம் வகுப்பு முதல் இன்று வரை நட்பைத் தொடரும் என் இனிய தோழி லில்லி. எங்க கதை ரொம்ப பெருசு.. குட்டி குழந்தையாய் குறும்புல ஆரம்பிச்சு பருவமடைதல்ல பல திருட்டுத்தனம் சேர்ந்து செஞ்சு, ஒண்ணாவே படிச்சு ஒன்னாவே வேலையில் சேர்ந்து ஒன்னாவே இன்று வரை பயணிக்கும் நட்பு.

எங்க நட்பு ஆரம்பிச்சது இன்னைக்கும் நல்லவே நியாபகம் இருக்கு. Church க்கு போனா jungle book பாக்க முடியாதுன்னு அம்மா சர்ச் க்கு கிளம்புற வர கண்ண முடிட்டே படுத்துடுவேன்.. 2 ஆம் வகுப்பு வர தான் ஏமாத்த முடிஞ்சுது என் அம்மாவ.. 3 ஆம் வகுப்புல எப்படியோ இழுத்துட்டு போய் சேர்த்துடாங்க ஞாயிறு மறைக்கல்வி வகுப்புல.. 😭 முதல் நாள் நல்லா முகத்த தூக்கி வச்சுட்டு கடுக்கடு ன்னு 3ஆம் வகுப்பு பசங்க வரிசையில நின்னேன். எனக்கு முன்னாடி என் லில்லி. "நீயும் 3rd தானா" இதுல ஆரம்பிச்சது எங்க நட்பு... நிறைய பேர் சொல்லுவாங்க ஒரே மாதிரியானவங்க தான் நண்பர்கள் ஆவாங்க ன்னு. எங்க விஷயத்துள்ள "எதிர் எதிர் துருவம் ஒன்றை ஒன்று ஈர்க்கும்" கோட்பாடு தான். அவ ரொம்ப பொறுமை நா ரொம்ப அராக்கு. அவ எளிமையா அடுத்தவங்க கூட நல்லா பழகுவா... நா நல்லா பழக ரொம்ப நாள் ஆகும். அவ ரொம்ப இனிமையா பாடுவா... நா பாடுறதா நல்லா கேட்பேன்.. சிறந்த பக்திமான் அவ... அவளுக்குக்காக மட்டும் சர்ச் போக ஆரம்பிச்சவ நா... கொஞ்சம் பயந்த சுபாவம் அவ... பசங்கள வம்பு பண்ணி ஓட வைக்கிறது என் வேல.. இப்படி எந்த கோணத்துல பாத்தாலும் எதிர் எதிர் தான்... Possesiveness ல மட்டும் ரெண்டு பேரும் ஒண்ணு.

அப்படி தான் ஒரு நாள் கல்லூரி ல படிக்கும் போது வேற ஒரு பொண்ணுகிட்ட இவ க்ளோஸ் அ பேசிட்டான்னு நானும்.. நா வேற ஒரு சீனியர் கிட்ட ஜாலி யா பேசிட்டேன்னு அவளும் ஒருத்தர் ஒருத்தர் கிட்ட பேசாமலையே கொஞ்ச தூரம் bus ல வந்தாச்சு. இன்னொரு bus க்கு wait பண்ணும் போது ரெண்டு பேருமே மாறி மாறி சண்ட. அவ பொசுக்குன்னு அழுதுட்டா. அச்சோன்னு கண்ண துடைக்க போனா கைய தட்டி விட்டுடா... அவ kerchief எடுத்து lighta touch-up பண்ணிட்டு "eye linear அழிஞ்சுடுச்சா" ன்னு கேட்டதும் ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சுட்டோம். Possessiveness ல நாங்க queenu

அவ எப்பவும் first rank than. படிப்புல எல்லாத்தையும் உடனே உடனே முடிப்பா... நா அவ முடிச்சதும் project work அ அவ தலையிலேயே கட்டிடுவேன்... எழுதுறது கொஞ்சம் அலர்ஜி 😁.. என் சுமைதாங்கி அவ 🤗

"நண்பி டா" ன்னு எங்கு போனாலும் தப்பே பண்ணாலும் என்ன விட்டுக்கொடுக்காத கூட்டு களவாணி... அவளுக்கு ஒழுங்கா பொய் சொல்ல வராது... அவ தப்பு பண்ணிட்டா வீட்டுல மாட்டாம தப்பிக்க என்ன தான் ஐடியா 💡 கேப்பா😇...  நம்ம களவாணி தனம் அப்படி 😁

தேர்வுல எனக்கு முன்னாடி அவ... ஒரு தடவ exam நா சிக்கிரம் எழுதிட்டேன். அவ கொஞ்சம் மறந்துட்டா... சரி என் பேப்பர் பாத்து எழுதுன்னு காமிச்சேன்... அவ கை நடுங்குனது இன்னும் நியாபகம் இருக்கு 😂 செம்மையா பயந்துட்டா.... ரொம்ப நல்லவ... நாமன்னா ரெண்டு பெஞ்ச் தள்ளி இருந்தாலும் அசராம பாத்து எழுதுற கேடிஸ்

இப்படி பயந்தவ தான் இப்போ செம்ம தைரியமா பல பல விஷயங்களை செய்றா. சாதிச்சுட்டு இருக்கா... போர் குணம் கொண்ட போராளியா இருக்கா... என்னோட தோழி எப்பவுமே கெத்து தான் 💪💪💪
22
20 . 02 . 2023 .  முதல் அறிமுகம் ......!

Software  Development Course,  online Learning,    முதல் நாள் .

என்கூட சேர்ந்து இன்னொரு பொண்ணு படிக்க போறாங்கன்னு சொன்னார்  institution admin.   
ஒரு பக்கம் புது பொண்ணு intro கிடைக்க போகுதுனு  சந்தோஷப்படுவனா  ?
இல்ல  ………after Degree  முடிச்சும் இன்னும் கத்துக்க இருக்கேனு பயப்பிடுறதா
ஒண்ணுமே புரியல என்னோட வெள்ளந்தி  மனசுக்கு......

இப்பிடிலாம் என் மனசு online class ல join ஆனதுல இருந்து யோசிக்க ஆரம்பிச்சுடுச்சு...
அவரு பேரு யாரோ மாறனாம், today class எடுக்க போறாராம்..  Java  basics  கத்துக்கொடுக்க போறார் சொன்னாரு .  எந்த ஜாடைல பார்த்தாலும் இவரு நமக்கு  Java காத்துக்கொடுக்குற மூஞ்சி மாரி தெரிலயே….
 
பார்க்க  Vasanth&CO owner  மாரி இருக்காரே… இவரா ? Java  டீச்சர் னு ஒரே confusion  மனசுக்குள்ள.

 சரி ! நாம தனியா தானே இருக்கோம்….  அவரு நம்மள stricta  deal  பண்ணாலும்
யாருக்கும் அது தெரிய போறது இல்ல .... அப்டினு கொஞ்சம் online class ல ok  ஆனேன்.   
அப்போ sudden a  எங்கிருந்து வந்தாளோ தெரியல .......

கீர்த்தனா இந்த name ல ஒரு பொண்ணு entry .......

(yess atheeey malar teacher song background la Malare ninne kaanathirunnal )

நான்வேற என்னோட webcam a  check  பண்ணிகிட்டே பார்க்க  மாதவன் மாறி இல்லனாலும், ஏதோ  சூர்யா மாறி இருக்கேனு மனசுக்குள்ள ஒரு திருப்தி..... 

Class ஆரம்பிக்குது ......... Java  basics  கத்துக்கிட்டோம்……….

 இதுக்கு நடுவுல 4 months ஓடிடுச்சு ... கீர்த்தனா செம்ம strong Coding ல அவ கிட்ட doubts , homework  help  கேட்டுப்பேன் கத்துப்பேன்....

 அப்புறம் நாளாக நாளாக ........அவளும் நானும் personal அ பேச ஆரம்பிச்சோம்…
அந்த நேரம் நானும் சில life சவால்களை சந்திச்ச நாட்கள்.......

நான் எப்போ call எடுத்தாலும் நம்பிக்கை கொடுக்குற மாதிரி அவ பேசுவா......

சாதாரண உடை , முகத்தில் இருக்கும் புன்னகை , தங்கம், மோதிரம்னு எதுக்கும் அவ கிட்ட இருக்காது , ஆனா அவளுடைய மனசும் அறிவும் அவளை பார்த்து என்ன பிரமிக்க வச்சுது .

தனி பொண்ணா தன்னோட Familya  பாத்துக்கிறா ..... வெயில் , தனிமை னு அவ வாழ்க்கைல என்ன கஷ்டம் இருந்தாலும் அவளோட coding  ஆர்வமும் கடுமையான உழைப்பும் அவ மேல எனக்கு தனி மரியாதைய உருவாக்கிச்சு...........

சில வருடங்களா தொடருற இந்த நட்புல ....... அவ மூலம் நிறைய coding கத்துக்கிட்டேன் ......
ரெண்டு பேரும் சேர்ந்து academic  projects  பண்ணோம்..

சில மாதம் அவள் கஷ்டங்களை புரிஞ்சுகிட்டு அவளுக்கே தெரியாம நான் உன்கிட்ட  Coding கத்துக்கணும்
நீ எனக்கு class  எடுப்பியான்னு கேட்டு அவ knowledge  ல நானும் கொஞ்சம் கத்துக்கிட்டேன்........

Today ஒரு Software Developer னு எனக்கு ஒரு அடையாளம் இருக்குன்னா
 என்னோட அம்மா அப்பா கஷ்டப்பட்டு படிக்க வச்ச தியாகங்களுக்கு equally  கீர்த்தனா
எனும் தோழியுடைய அன்பும் , நட்பும் , இருக்கு .

கீர்த்தி நீ இப்போ என்னோட requestல, இந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியை   கேட்டுட்டு இருப்ப ........ உன்ன கஷ்டப்பட்டு program  கேளுன்னு வற்புறுத்தினத்துக்கு என்ன மன்னிச்சுடு .....

ஒரு நண்பியா , ஆசிரியையா,  ஒரு well wishera
நீ எனக்கு கொடுத்த நேரங்களும் நட்பும் விலை மதிப்பில்லாதது.....

பல வாட்டி உங்கிட்ட கத்திருக்கேன், சண்டை போட்டிருப்பேன், உன்னோட work pressure 
தாண்டியும் என்னோட தேவைக்காக உன்னோட நேரங்களை நான் எடுத்திருக்கேன்,
உன்னோட பொறுமையும் நட்பும் என் வாழ்க்கைல முக்கியமான பொக்கிஷம் ....
Life ல உன்னைப்போல தோழி எல்லா ஆண்கள் வாழ்க்கைலயும் கிடைக்கணும் ..........


இன்று இருவரும் சம துறையில் பயணிக்கிறோம் என்பது நம் நட்புக்கும் மரியாதைக்கும் கிடைத்த வெற்றி   

Anovira Software  solution
எனும் என்னுடைய கனவுக்கு அடிப்படை வேராக அன்பையும் அறிவையும் கொடுத்த என்னுயிர் தோழி நீ ……………

23
"Ftc எனக்கு அளித்த அரும்பெரும் சொத்து என் உயிர் தோழி ஊஞ்சல்"
 
என் அண்ணாவின் பிரிவினை ஈடு செய்வதற்காக தமிழ் பேசுகின்ற நட்பை தேடி ftc  வந்தேன்.இப்போது நான் நினைத்தது நிறைவேறி விட்டது.எனக்கு  நிறைய நண்பர்கள் கிடைத்து விட்டார்கள்.உயிர்நண்பி ஊஞ்சல் பற்றி என் நினைவுகளை பகிர ஆசைப்படுகிறேன்.

நாங்கள் எங்கோ பிறந்து வளர்ந்தோம்.நாங்கள் நண்பர்கள் ஆவதற்கான எந்த சாத்தியமும்  இல்லை.நான் guest idல் இருக்கும்போது ஊஞ்சல் songs  vibe பண்றது பார்த்து இருக்கேன்.அவங்க பேச மாட்டாங்க.எனக்கும் songs vibe பிடிக்கும்.அவங்க கூட பேச பிடிக்கும்.but நான் guest id என்று அவங்க பேசினது இல்லை. மனதில் ஒரு எண்ணம் "இவங்க எல்லாம் பெரியவங்க போல பேச மாட்டாங்க"...

என் நண்பன் ஊஞ்சலை அறிமுகம் செய்தார்.நான் நண்பனுக்கு கூறிய வார்த்தை "அவங்க என்கிட்ட பேச மாட்டாங்க" என்று.அந்த நண்பன் தான் என்னிடம் பேசி ஊஞ்சல் கிட்ட பேச வைத்தார்.நாங்கள் நன்றாக பேசினோம் நாட்கள் மாதங்களாக....

பேசும்போது நமக்குள்ளே புரிந்துணர்வு,விட்டுக் கொடுப்பு, அன்பு,அக்கறை எல்லாம் நிறைந்து நாங்கள் உயிர் நண்பிகள் ஆகிவிட்டோம்.முகம் தெரியாத நட்பு இது.இருமனங்கள் பேசி இணைந்த நட்பு.இதுதான் உண்மையான உயிர் நட்பு என்று எனக்கு தோணுது.

நாங்கள் இன்ப ,துன்பங்கள் இரண்டையும் பகிர்ந்துப்போம்.cooking,gardening,places பற்றி நிறைய பேசுவோம்.இரண்டு பேருக்கும் roses பிடிக்கும்.ஊஞ்சல் அவங்க தோட்டத்து pictures போடுவாங்க.இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாக இருப்போம்.

songs vibe பண்ணுவோம்.ஊஞ்சலுக்கு  forum இல் interest இல்லாம இருந்தது.நான் எப்போதும் forum, program பற்றிப் பேசி அவங்களுக்கு அதுல ஒரு interest வந்து இருக்குது.இசைத்தென்றல்& uc இல் எனக்காக song dedicate பண்ணி இருந்தாங்க.அதைக் கேட்கும் போது இப்படி ஒரு நண்பி எனக்கு  இருக்கிறாங்களா?என்று ஆச்சரியமும் ,பெருமையுமாக இருந்தது.friendship story போடுவாங்க அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.

ஊஞ்சலுக்குfm program கேட்கப் பிடிக்கும்.ஆனால் அவங்க night chat  வர முடியாது .நான் சொன்னேன் repeat time  கேளுங்கனு.இப்போது அவங்க கேட்டு இரசிப்பது  எனக்கு மகிழ்ச்சி.ஊஞ்சல forum இல் write  பண்ண வைக்கணும்னு எனக்கு ஒரு ஆசை.கவிதை வராதுன்னு சொன்னாங்க.அப்போதான் ftc இல் " நெஞ்சம் மறப்பதில்லை" என்று new program வந்தது.ஊஞ்சலைக் கேட்கும்போது முதலில் மறுத்தார்.உங்க பேச்சு மொழி நடையிலேயே எழுதலாம் எழுதுங்கன்னு சொன்னபோது எழுத start பண்ணாங்க.இப்போ சூப்பரா எழுதி அசத்துறாங்க.இதைப் பார்க்கும்போது என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.

ou கவிதை ஊஞ்சலுக்கு first அனுப்புவேன்.அவங்க அதில் உள்ள குறை நிறைகளை சொல்லுவார்.அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஊஞ்சலுக்கு birthday program கேட்கப்பிடிக்கும் என்று நான் பண்ணுற birthday wishes அவங்க கேட்க அனுப்புவேன்.என் birthdayக்கு அவங்க fm இல் audio wish கொடுத்திருந்தாங்க. அவங்க fmஇல் voice போட்டது இல்லை.இப்படி எனக்காக பண்ணது எனக்கு சர்ப்ரைஸ் ஆகவும்,ஆனந்தக் கண்ணீரும்  வர வைத்தது.

இப்படி ஒரு உயிர் நண்பி கிடைத்ததற்கு நான் ஏதோ ஒரு புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும்.ftcஇல்  நிறைய friends சொல்லி இருக்காங்க "எப்படி fight  இல்லாமல் இரண்டு girls  இவ்வளவு காலம் இருக்குறீங்க?உங்களைப் பிரிக்கிறோம்" என்று.அவர்கள் சொல்வதைக் கேட்டு நாங்க சிரிப்போம்.எங்கள் நட்பு தொடரும்...

ftc இனை எல்லோரும் சொல்லுவாங்க chat roomஆ பார்க்கச் சொல்லி.ஆனால் நான் இதை ஒரு உயிருள்ள இடமாக family ஆகத்தான் பார்ப்பேன்.உயிர் நண்பி ஊஞ்சல் மற்றும் அன்பான நண்பர்கள், உறவுகளைக்  கொடுத்த ftcக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

24
என்னோட 13 வயசு வரைக்கும் நட்புனு சொன்னா அது தனிமையை போக்க ஒரு காரணமா மட்டுமே இருந்துச்சு. உனக்கு பிடிக்கும்னா எனக்கும் பிடிக்கும்னு சிலர் .நீ அவ கிட்ட பேசினாதான் நான் உன் கிட்ட பேசுவேனு விசித்திரமா சிலர். நேரம் போக்க பிரேக்ல மட்டும் பேச சிலர், இது தான் நட்பு போலன்னு அவள பாக்குற வர நினைச்சிட்டு இருந்தேன்.

7ம் வகுப்பு படிக்கிறப்போ தான் நானும் MK-ம்
 சந்திச்சோம். என்ன Judge பனிடுவாளோனு பயம் இல்லாம, எந்த ஒளிவு மறைவுமில்லாம அவள்கிட்ட தோணுறத பகிந்துக முடிஞ்சது. celebrity crush சினிமா , கிசுகிசு, ரகசியம்னு எல்லாமே பகிர்ந்துகொண்டோம்.   முதல் முதலா ஒருத்தரோட comfortable’ah கை கோர்த்து நடக்க முடிஞ்சுது. தோள் மேல கை போட்டு ஸ்கூல் ground’ah சுத்தி சுத்தி வந்த நாட்கள் இப்போ நெனச்சு பாக்குறப்போ கூட நேற்று நடந்த மாதிரி இருக்கு.  நட்பும் ஒரு உணர்வுன்னு அப்போ தன் உணர்ந்தேன்.

யார் கண்ணு பட்டுச்சோ தெர்ல அடுத்த வருஷம் அவ வேற நான் வேற class ரூம்னு பிரிக்க பட்டோம்.  தரை தளம் அக்னி மூலையில் நானும், மூணாவது மாடி வாயு மூளையில் அவளும். இதுக்கு நடுவில ஒரு ground. இதுல எங்க நாங்க அடிக்கடி சந்திக்கிறது. உணவு இடைவெளியில சந்திப்பு தொடர்ந்தது. பள்ளி முடிந்ததும் கொஞ்ச நேரம் நின்னு அரட்டை அடிச்சிட்டு  தான் வீட்டுக்கு போவோம். அடுத்த வருஷம் இரண்டு section’dhan ஒரே class வர வாய்ப்புகள் அதிகம்னு பேசிப்போம்.

கோடை பள்ளிவிடுமுறை பறந்தோடியது. மறுபடியும் ஸ்கூலா! என்று கடுப்புல இருந்த எனக்கு MK-வின் நினைவுகள் ஆறுதலா இருந்துச்சு. முதல் நாள் அவள் வரல .சரி  ஊரிலிருந்து வந்திருக்க மாட்டாள்னு நினைச்சேன்  ஆனா Attendance la அவ பெயர டீச்சர் கூப்பிடல. அப்போ ஒருத்தி கேட்டா என்ன உன் friend TC வாங்கிட்டு போய்ட்டா என்ன விஷயம்னு? அப்ப தான் புரிந்தது அவ இனி வர மாட்டாள்னு.

என் வாழ்க்கையின் முதல் ஏமாற்றம் அது. “சொல்லிட்டு போயிருக்கலாமே?!”.  “ஒரு வேல நான் அவ்ளோ முக்கியமில்லையோ அவளுக்கு?”. “நான் மட்டும் தான் அவளை bestie’ah நினைச்சேனோ?”. பல கேள்விகள் எனக்குள்ள ஓடிச்சி. கடைசி பக்கம் காணாம போன கதை மாதிரி இருந்துச்சு. ஒரு நாள் நானே போன் போட்டு கேட்டேன். “இல்ல அவசரமா அப்பாக்கு வேலை Transfer அதான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலைனு இழுத்தா... குரல் தழுதழுத்தது. எனக்கு அப்போ அவ பிரிவு மட்டும் தான் என் வாழ்க்கைல ஒரு மாற்றமா இருந்துச்சு ஆனா அவளுக்கு வாழ்க்கையே மாறியிருக்கலாம்னு  புரிஞ்சிகிட்டேன். அக்னி மூலை to வாயு மூலை தூரம்னு  நினைச்சிட்டு இருந்த எனக்கு அவள சந்திக்கவே முடியாத தூரத்துக்கு கூட்டிட்டு போயிடுச்சு விதி.

என்னை விட்டு சென்ற என்னுயிர் தோழி எனக்கு விட்டு சென்ற வாழ்கை பாடம் "பற்றற்றிரு". 

PS: tamil konjam kolaar so spelling mistake irundhal manikkavum. Special thanks to our Mr.Joker enaku tamil la eludha help panadhuku!
25
"Indha Anovira Software Solutions future la oru
periya software platform aa grow aagum nu namburen…
Adhuvum not only team ku mattum illa, namma
community la irukura talented friends ku income share,
opportunities create panna oru platform aa develop
aaganum nu aasai." 

congrats thambiii 🥳🥳🥳 kandipa Great success reach pannuviga... Namma vetri nokki pora paathaiyila pala thadaikal varalam ellame nammala oru padi munnadi kondu serkkum padikarkkal nu vetri nokki poite irupom.. All the very best... Hearty congratulations 🎉 🎉 🎉 for your endeavour success. Always stay blessed... Definitely your dreams will come true.... 💐💐💐
26
நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சி - பள்ளி விடுமுறையும் பாட்டி வீடும்...

பலரது குழந்தை பருவத்தின் அழகிய நினைவுகள்... மகிழ்ச்சி, குறும்பு, விளையாட்டு, நட்பு, பாசம், உறவு, பிரிவு, ஏக்கம் என எல்லா உணர்வுகளையும் கலந்த அழகிய பகிர்வுகள் 👏 👏 👏

Magical voice Thooriga.... Semma presentation.... சில்லுன்னு தென்றல் மாதிரி இருந்துது.... உணர்வுகளை அவ்வளவு அழகா குரல் வழி கேட்பவர் இதயத்துக்கு கடத்திய விதம் மிக மிக அருமை 🥳🥳🥳

உணர்வுகளை கடத்த மூலகாரணமா இருந்த இசைக் கோர்ப்பு அட்டகாசம்... அந்த காற்றின் இசை குரலோடு கேட்டும் போது அந்த மலை பாதைப் பயணத்தை நினைவூட்டியது💐💐💐

மேலும் அந்த உணர்வுகளை சரியா பிரதிபலிச்சு உணர்வுகளுக்கு முழுமை சேர்த்தது பாடல்கள்... ❤️ ❤️ ❤️ 

### பாட்டி பாசத்துக்கு மீண்டும் ஏங்க வச்சுடீங்க 🐾🐾🐾
27
Dear FTC Friends ,


I am very happy and proud to share my own brand








Anovira Software Solutions

Turn Ideas Into Impact

Why this brand?

Namma FTC community la evlo talent iruku nu naan daily paathutu iruken.
Kanmani akka – own cooking and gardening business 🌱
Socky anna – own shop business 🏪
Mirage sista – own architect company 🏗️
Ninja – nutrician 🥗
Teaching professionals – Yazhini, Wisdom and many more 📚

Accountants, managers, software developers…
ippadi namma community la irukura ovvorutharum
life la etho oru vishayam achieve pannanum nu sincere ah hard work panraanga.

Appo naan yosichen…

“Ennala mudinjatha software create panni kudutha, avanga business ku nalla reach varuma?”

Website irundha reach adhigam…
Mobile app irundha visibility adhigam…
Digital presence irundha growth fast ah varum.


Adhanala dhan Anovira Software Solutions start panna inspiration vandhadhu.

Idhu just oru brand illa…
Idhu namma community oda growth story. ❤️

Personally sollanum na, ipo naan Fintech la software developer aa work panren.
Aana andha confidence, learning mindset, continuous improvement…
ivlo periya change en life la vandhadhu FTC Jingili journey nala than.

Indha journey la naan kathukita skills en career ku mattum illa…
en life ku overall growth kudukudhu, confidence create panudhu, and
“ennaala mudiyum” nu nambikkai kudukudhu.

So indha brand launch panna moment la,
unga ellarukum heartful thanks sollanum nu thonuchu 🙏
Ungaloda support, motivation, encouragement illama idhu possible a irukadhu.

Ippo naan weekends la start panniruken –
FTC friends and community businesses ku software help panna.

Ungaloda business ku :

E-commerce websites
Business portfolio websites
Mobile apps
Custom software development

Ennala mudinja help naan kandipa panren.

Indha Anovira Software Solutions future la oru
periya software platform aa grow aagum nu namburen…
Adhuvum not only team ku mattum illa, namma
community la irukura talented friends ku income share,
opportunities create panna oru platform aa develop
aaganum nu aasai.


Because success single ah varradhu vida, together ah varumbothu adhoda value adhigam.

So let’s Make & Grow Together
Let’s Turn Ideas Into Impact
And let’s build something that benefits everyone.

With gratitude ❤️
28
*மருந்துகள் என்றால் என்ன?*

1. சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்திருப்பது மருந்து.
2. காலையில் கடவுளை நினைப்பது மருந்து.
3. யோகா, பிராணயாமம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை மருந்துகள்.
4. காலை மற்றும் மாலை நடைப்பயிற்சிகளும் மருந்துகளாகும்.
5. உண்ணாவிரதம் அனைத்து நோய்களுக்கும் மருந்து.
6. சூரிய ஒளியும் மருந்து.
7. மண் பானை நீரைக் குடிப்பதும் மருந்து.
8. கைதட்டுவதும் மருந்து.
9. நன்றாக மெல்லுவதும் மருந்து.
10. தண்ணீர் குடிப்பதும் மனநிறைவுடன் சாப்பிடுவதும் மருந்துகள்.
11. சாப்பிட்ட பிறகு வஜ்ராசனத்தில் அமர்ந்திருப்பது மருந்து.
12. மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்வது மருந்து.
13. சில நேரங்களில், மௌனம் மருந்து.
14. சிரிப்பும் நகைச்சுவையும் மருந்துகள்.
15. மனநிறைவு மருந்து.
16. மன அமைதியும் உடல் அமைதியும் மருந்து.
17. நேர்மையும் நேர்மறையும் மருந்துகள்.
 18. தன்னலமற்ற அன்பும்
        உணர்ச்சிகளும்
        மருந்துகளே.
19. மற்றவர்களுக்கு நன்மை செய்வது மருந்து.
20. நல்லொழுக்கத்தைத் தரும் ஒன்றைச் செய்வது மருந்து.
21. மற்றவர்களுடன் இணக்கமாக வாழ்வது மருந்து.
22. சாப்பிடுவது, குடிப்பது மற்றும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது மருந்து.
23. ஒவ்வொரு உண்மையான மற்றும் நல்ல நண்பரும் பணம் இல்லாத முழுமையான மருந்தகம்.
24. குளிர்ச்சியாகவும், பிஸியாகவும், ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருப்பது மருந்து.
25. ஒவ்வொரு புதிய நாளையும் முழுமையாக அனுபவிப்பது மருந்து...

29
*கறிவேப்பிலை*

உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் மூலிகை கறிவேப்பிலை.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல...

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

கறிவேப்பிலை உட்கொண்டு வர, கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு....உடலில் நடைபெறும் மாற்றங்களை கண்டு களியுங்கள்.
30
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on March 05, 2026, 10:32:27 AM »
Pages: 1 2 [3] 4 5 ... 10