1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 399
« Last post by Sadham on Today at 10:21:22 PM »ரோஜாக்கள்
மொட்டுக்கள் மலர்ந்து
உண்டாகிறது ரோஜாப்பூ
ஆனால் என் காதல் மலர்ந்து
உண்டாகிறது வேதனை🌹
சிறு வயதில் இருந்ததே உன்னை
நான் பார்க்காத நாள் இல்லை!
வயது அறிந்து உன்னை பார்த்த பின்
என் காதலுக்கு மிக சிறந்த
பரிசு நீ தான் என்று
சந்தோஷம் என் மனதில்
உன்னை என் கையில் வைத்து
இரசித்த போதெல்லாம் ஏதோ
மனதுக்குள் இன்பம் நிறைந்த மகிழ்ச்சி காதல் வையப்பட்டேன் நான் ...
என் தேவதைக்கு 🌹 உன்னை கொடுத்து
என் மனத்தில் உள்ளதை சொல்ல
ஆசை பட்டேன் காதலர் தினத்தன்று
சிறு தயக்கம் நம் இருவருக்குள்
பிளவு வந்திடும் என்று ...
அச்சப்பட்டு உன்னை 🌹
என் கரங்களால் மறைத்து வைக்கப்பட்டப்போது தான தெரிந்தது
நீ 🌹 மட்டும் தான் எனக்கு சொந்தம்
என் தேவதை இடம் 🌹
உன்னை கொடுத்தால்,
அவள் போல் யாரும்
இல்லை இனிமேல்....
அவள் என்னிடம் பேசாமல் போய்
விடுவாள் என்று தயக்கம்
எல்லார் வாழ்க்கையிலும்
"காதல்" என்ற சொல் புனிதமானது
எனக்கோ மதம் தடை ஆக நின்றது
என் தேவதை இடம் காதல்
சொல்ல எவ்ளோ ஆசைப்பட்டேனோ
அதற்கு மாறாக கண் முன்
வந்து சென்றது நமக்குள்
தடையாக நிற்கும் மதப்பாகுபாடு தான்!
காதல் செய்ய தெரிந்த எனக்கு
அதை என் தேவதை இடம் சொல்ல
மனசு வரவில்லை..
பல காதலர்களை சேர்த்து
வைத்தாய் 🌹ஆனால்
என் வாழ்க்கையில் என்னவவோ
தூரத்தில் நின்று பார்க்க வைத்தாய்
வாழ்வில் சோகம் தான் நீடிக்குமா ?
🌹 நீ புதிதாக நடக்கும் நிக்காஹ் (என்னும்) திருமண விழாவில் வலம் வருவாய்
பலபேர் திருமண வாழ்க்கையில் 🌹
நீ பந்தம் உருவாக்கினாய்
அது போல என் வாழ்க்கையிலும் என்னவளுக்காக காலமெல்லாம் காத்திருப்பேன்....
🌹 எங்களை ஒன்று சேர்த்து வைப்பாயாக
பிரியமுடன்
Rahmathulla

Recent Posts






