Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
ஆயிரம் உறவு இருப்பினும்
ஆற்றா உறவு அண்ணன்...
அன்னையின் படிப்பினையை விட
அதிகம் போதித்தது என் அண்ணனே...
அண்ணனின் கைப்பிடிக்குள்
தந்தையின் பாதுகாப்பு
அம்மாவின் அன்பு
ஒருங்கே உணர்ந்தேன்...

ஆனாலும்.....
குட்டி சாத்தானாக என்னை
எள்ளி நகையாடுபவனும்(மாற்றுபவனும்) அவனே
குப்பைத்தொட்டி குழந்தை என்னை
மீட்டெடுத்து தன் தங்கையாக வளர்பவனும் அவனே
ஆழ்ந்து உறங்கையில் கையிலுள்ள
என் அன்பு பொம்மைக்கு
மொட்டையடித்து காது குத்துபவனும் அவனே...

கறி குழம்பிலுள்ள நள்ளிக்காக
கையை கடித்து சண்டையிடுபவனும் அவனே...
கடையிலுள்ள தின்பண்டத்திற்காக என்னை
அப்பாவிடம் ஏவி விட்டு அடிவாங்க
வைக்கும் ஆக சிறந்தவனும் அவனே

தனியே பேருந்தில் பயணம்
செய்ய கற்று தந்த
என் ஆசான் அவனே
இன்று தன்னந்தனியே
வாழ்க்கையை பயணிக்க
கற்று தருகிறான் மௌனியாக

அண்ணா....
மீண்டும் உன் அன்னைமடி
வேண்டும்
அதே சிறுபிள்ளையாக
உன் குட்டிசத்தானாக
இப்படிக்கு என்றும் ஏங்கும்
உன்னால் மீட்க பட்ட
உன் குப்பைத்தொட்டி தங்கை....
2
கவிதைகள் / பாசமலர்!!
« Last post by Shreya on Today at 10:58:03 PM »
உன் விரல் பிடித்து பள்ளிக்கு சென்ற காலம் அது
இன்றும் நினைவிருக்கிறது..
வீட்டுக்கு வந்ததும் அந்த டெலிவிஷன் ரிமோட்டிற்காக
தினம் ஒரு யுத்தமே நடக்கும் நம்மிடையே!
அடிதடி முட்றிப் போய் கோபத்தில் உன்னை கடித்தேனே
என் பற்களின் தடம் உன் கையில் ஆழமாய் பதியும்...
அதற்காக அம்மாவிடம் நான் வாங்கிய அடிகள்..!

கடைக்கு செல்ல சொன்னால் நீ அசைந்து கொடுக்க மாட்டாய்
உன் வேலையையும் நான் செய்த போது பொங்கியது ஆத்திரம்.
ஆனாலும்... அக்காவை விட என்மேல் ஒரு தனி பாசம்
உன் மௌனமான செயல்களில் நான்
எப்போதுமே உணர்ந்திருக்கிறேன்..!

என் தோழர்களுக்கெல்லாம் உன்னை கண்டாலே சிம்ம சொப்பனம்
யாரும் அறியாமல் உனக்கு “ஹிட்லர்” என பெயர் வைத்தோம்!
என் முதல் காதலை நீ மிரட்டி முடித்து வைத்த போது
உன் மேல் வந்த வெறுப்பை விட நீ என் மேல் வைத்து
இருந்த அக்கறையை ​உணர்ந்தேன்..!

கல்லூரி செல்லும் அவசரத்திலும் என்னை இறக்கி விட நீ வந்ததும்
பிரேக் வயரை கையால் பிடித்து விபத்தில் நம்மை மீட்டாயே...
அன்று உன் சமயோசித புத்தியை கண்டு மிரண்டு போனேன்.
யாரோ ஒருவன் என்னை அசிங்கமாய் கிண்டல் செய்ய
அழுது கொண்டிருந்தேன் அம்மாவிடம்
“இரு வரேன்” என ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டு
அவனை தேடி சென்று நீ கொடுத்த அடியும் பதிலடியும்...
அங்கே தான் அண்ணா, உன் அன்பு என்னை தாக்கியது..!

அம்மா மேல் நீ வைத்திருந்த உயிரான பாசமும்
ஆபீஸ் போகும் போதும் அம்மா உனக்கு ஊட்டி விட்டதும்...
ஓர கண்ணால் பார்த்து நான் பொறாமை பட்டிருக்கிறேன்!
“அவன் மட்டும் தான் உனக்கு புள்ளையா?” என அம்மாவிடம் சண்டை போட்டுக் ஊட்டி விட சொன்னது ஒரு காலம்.
நண்பர்களை வீட்டு வாசலோடு நிறுத்தும் உன் அந்த தெளிவு
இன்றும் என் மனதில் ஒரு பெருமிதமான பாடமாய் இருக்கிறது..!

ஊரில் உன் அந்த முதல் நடனம்...
ஒட்டுமொத்த தெருவும் கைதட்டிய போது உன் தங்கையாய்
ஒரு பெருமிதம் உன் திறமை கண்டு!
“ட்ரெஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என நீ சரி செய்யும் போது
உன் அக்கறையில் ஒரு தகப்பனை நான் கண்டிருக்கிறேன்..!

நீ எனக்காக முதன் முதலாக வாங்கித் தந்த அந்த 1100 மொபைலும்...
எப்போதும் ஆனாலும் நீ செக் செய்த போது கோபம் வந்தாலும்
அதற்கு பின்னால் இருந்த பயம் எனக்கு புரிந்தது..!

நீ பாட ஆரம்பித்ததில் இருந்து
நான் இன்றும் உனது தீவிர ரசிகை தான் அண்ணா!
அக்கா திருமண மேடையில் நீ பாடிய அந்த நொடிகள்
என் வாழ்வின் அழகான பக்கங்கள்.
நீ வாங்கித் தந்த அந்த முதல் புடவை இன்னும் இருக்கிறது
உன் நினைவுகளை தாங்கியபடி என் அலமாரியில்..!

நண்பர்களோடு திருமணத்திற்கு செல்கிறேன் என பொய்
சொல்லி விட்டு விபத்தில் கை ஒடிந்து வந்த போது என்
கோபம் உன்னை பார்த்த மறு நொடி கரைந்தது...
உன்னை வண்டியில் வைத்து நான் அழைத்து சென்ற போது
“தங்கச்சி நல்லா ஓட்டுறியே” என நீ சொன்ன அந்த ஒற்றை பாராட்டு...
காலங்கள் ஓடினாலும் இன்றும் அது என் நினைவில்..!

அன்று வாங்கிய அந்த பழைய பிளாக் காரில் பயணித்த சுகம்
இன்று நீ வைத்திருக்கும் காரிலும் மாறவே இல்லை!
ஒரு சின்ன சண்டையில் “என்னை நீ புரியவில்லையே” என
உனக்காக என் உயிரையே விட துணிந்தேனே...
உன் மேல் இருந்த கோபமல்ல அது... என்னை நீ தவறாய்
நினைத்து விடக் கூடாதென்ற அந்த பெரும் வலி..!

முதல் முறை உன்னை பிரிந்து நான் சென்ற போது
கல் போன்ற உன் கண்களில் வழிந்த அந்த கண்ணீர்...
அன்றே என் உயிர் ஒரு நொடி பிரிந்து போனது அண்ணா!
இன்று நாம் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும்
மனதில் உன் நிழல் அப்படியே தான் இருக்கிறது..!

மீண்டும் ஒரு முறை உன்னை நேரில் பார்த்தால் போதும்..
அப்படியே ஓடி வந்து உன்னை கட்டிக்கொள்ள வேண்டும்!
“ஏண்டா இத்தனை நாள் பேசல?” என உன்னை கோபித்து
உன் மார்பில் சாய்ந்து அழுது தீர்க்க வேண்டும்!
ஆயிரம் கோபங்கள் இருந்தாலும்... உன் தங்கை இன்றும்
உன் அதே சின்ன பெண் தான்...
உன் அன்பிற்காக ஏங்குபவள்!!
3
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 01:47:16 PM »
4
தம்பி பாப்பா வேணுமா
தங்கச்சி பாப்பா வேணுமா என்ற
பெற்றோரின் கேள்விக்கு
விடையாய் நான்

நான் சிரித்தால்
உனக்கு சந்தோஷம்,
நான் அழுதால்
தூக்கம் கூட உனக்கு
தூரம் தான்

உலகத்துக்கு முன்
நாம் சண்டையிட்ட
கணங்கள் ஏராளம்
ஆனால்
உலகமே எதிர்த்து நின்றாலும்
என் கூடவே நிற்கும் உன் அன்பு
தாராளாம்

நான் பேசாமல் இருந்த நாட்களில்
என் அமைதியின்
அர்த்தம் புரிந்தவன் நீ
என் சிரிப்புக்குப் பின்னால
ஒளிச்சு வைத்த வலியையும்
கண்டுபிடித்தவன் நீ.

உன் கனவுகளை
நீ விட்டுக்கொடுத்து
என் கனவுகளை
நீ தூக்கி நிறுத்தினாய்,

நான் பெரியவளா ஆனாலும்
உன் கண்ணுக்கு நான்
எப்பவும் சின்ன தங்கை தான்

இந்த ஜென்மம் போதாதுனா கூட
அடுத்த ஜென்மத்திலும்
பெண்ணாக பிறக்கணும்னா
அண்ணனா நீ தான் வேணும்.

எத்தனை பேரு வந்தாலும்
என் வாழ்க்கை முழுக்க
நான் தனியாக இல்லை என்று
உறுதியாய் சொல்ல
ஓர் உறவு
என் அண்ணா


****Joker***
5
Wallpapers - Own Creations / Re: OP Art - 2026
« Last post by Ninja on Today at 09:42:38 AM »
Thank you Madhu sissy.. Naane beginner thaan, video parthutu thaan panren, I will share you the links sissy 💜😍🙏
6
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 07:56:56 AM »
7
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:54:27 AM »
8
அன்னை முகம் கண்டிலேன்
தந்தை அரவணைப்பு அறிந்திலேன்
கடவுள்  தந்த பொக்கிஷம் அண்ணா
என் மூச்சும் பேச்சும் அவனே

 கைகளால் என் தலைகோதி
 தூங்கவைப்பான்  அண்ண
சொர்க்கபுரி எதுவென்றால்
என் அண்ணா மடி என்பேன் 

விடியலில் தெரிந்த முகம்
பாசத்தை சொரிந்த  முகம்
கை கோர்த்து  விளையாடி
கடந்துவந்த நாட்களவை

ஒரு கொடியில் இரு மலர்கள்
மூத்தவனின் பாசத்தில்
சின்னவள் நான் திளைத்திருந்தேன்
எங்கிருந்தோ வந்த என் காதல்
எங்களை இரு துருவம் ஆக்கியதே

வேண்டாம் அந்த காதல்
விட்டுவிடு என்றான் அண்ணா
கெஞ்சினேன்  .குளறினேன்
அசையாத கல்லானான் அண்ணா

காதல் என்ற வில்லங்கம்  என்
கழுத்தை சுற்றி  நெருக்கியதால்
சொத்து சுகம் வேண்டாமென்று
சற்று விலகி வந்துவிட்டேன்

சொந்தம் ஒரு கண்ணென்றால்  என்
பந்தம்  மறு கண்ணல்லவா?
பாசக் கயிற்றில்  தொங்கியவள் இன்று
நேசப் பிடியில்  சிக்கிவிட்டேன்

தொண்டையில் சிக்கிய
சோற்று கவளம்  போல
விழுங்கவும்  முடியாமல்
துப்பவும் முடியாமல்
இரண்டும் கெட்ட நிலை

ஆயிரம்தான்  இருந்தாலும்
அன்பு வற்றிப்போகுமா? 
ஒரு கூட்டில் வளரும்  இரு குயில்கள்
ஒன்றை ஒன்று   மறக்குமா?

நாளைய  விடியலில்
என் அண்ணன்முகம் காண   
தினம் தினம் வேண்டுகிறேன்
 
9
அஞ்சலி சொல்லப்படாத மறுபக்கம்


அஞ்சலி…

சிறு மழை துளியாய்
என் மனதிற்குள் வந்தாய்
சத்தமில்லாமல்
மனதில் இருக்கும்
ஈரத்தை உணரச் செய்தாய்

மொழி தெரியாத
வயதிலும் உன் சிரிப்பாலே
எல்லோரிடமும் பேசினாய்

அப்பாவின் கைகளில்
ஒரு சின்னஞ்சிறு
கனவாக இருந்தாய்

அம்மாவின் கண்களில்
காணல்நீராகி பிறகு
அவளின் தீராத
ரணங்களாய் மாறினாய்

என் கவலைகளும்
தங்கையின் பயங்களும்
உன்னைச் சுற்றி
வெறுப்பாக நின்றாலும்
நீ மட்டும் என்றும்
அன்பாகவே இருந்தாய்

நீ ஓடினாய்
நீ விழுந்தாய்
மீண்டும்
நீ எழுந்தாய்
எங்கள் நாட்களை
சிரிப்பொலியில் நிரப்பினாய்

ஒரு நாள்
உன் சிரிப்பு
மௌனமானது
உன் கண்கள்
அமைதியாக மூடியது

அஞ்சலி…
ஏந்திரி அஞ்சலி ஏந்திரி
என்று நாங்கள் கதறியது
உன் காதுகளில் விழவில்லையா ?

ஆனால்

நீ எங்களை
விட்டு சென்றாலும்
நம் வீட்டில்
உன் சிரிப்பு இன்னும்
ஒலித்துக்கொண்டு இருக்கிறது

அஞ்சலி
நீ இல்லாத இடத்திலும்
உன் இருப்பை
உணர செய்தவள் நீ

உன் வாழ்க்கை
வேண்டும் என்றால்
ஒரு சிறு கவிதையாக இருக்கலாம்
ஆனால்
உன் நினைவு
என்றென்றும் எங்கள்
மனதில் ஒரு தொடர்கதை

அஞ்சலி
நீ ஒரு சொல் அல்ல
நீ அன்பின் வரி

- இப்படிக்கு அண்ணன் அர்ஜுன்
10
கருப்பு நிலா
ஓடி ஆடி விளையாடி
எவ்வளவு
கலைத்து போய் இருந்தாலும்
காலயர்ந்து உறங்கினாலும்
என் விசும்பல் சத்தம் போதும்

என் அண்ணனை
உற்சாகப்படுத்த
என்னை வாரி அணைத்து
தூக்கத் தெரியாமல் தூக்கி
அம்மாவின்
சிறு கோவத்துக்கும் ஆளாகி

அழாதே என் தங்க கிளியே
என் கருப்பு நிலாவே
என என்னை கொஞ்சி
என் விசும்பல் சிரிப்பாக
மாறும் வரை
விடாமல் முயற்சிப்பவன்
என் அண்ணன்

அப்போது தொடங்கிய இந்த பந்தம்
இரவு பகல் பாராது
சிறு உடல் உபாதை ஏற்பட்டாலும்
அம்மாவின் அருகிலேயே
நான் என்ன செய்கிறேன்
என்று கண்ணின்
இமை போல காத்தவன்
என் அண்ணன்

இதோ நானும் வளர்ந்து
பள்ளியும் செல்ல
ஆரம்பித்து விட்டேன்.
அவளே நடந்து வந்து விடுவாள்
என அம்மா கூறினாலும்

என் பள்ளி முடிவதற்கு முன்பே
மிதிவண்டியில் வந்து நின்று
என்னை ஏத்திக்கொண்டு
வீடு வந்து சேர்த்ததற்கு பின்
தான் மறு வேலையே
என் அண்ணனுக்கு

எனக்கு வேண்டும் என்று
கை நீட்டிய மறுகணமே
என் கையில்
அதை வாங்கி தருபவன்
என் அண்ணன்

இவ்வளவு அன்பா
என்று வியர்ந்து பார்த்த
என்னுள்ளும்
மரியாதை கலந்த
அளவில்லாத அன்பு உள்ளது
என் அண்ணனுக்காக

இன்று அதை எனக்கு
காட்டத் தெரியாவிட்டாலும்
அவனது வாழ்க்கை பயணத்தின்
 ஒவ்வொரு நிகழ்விலும் 
நான் உறுதுணையாக இருந்து
என் அன்பை
வெளிப்படுத்துவேன்
 உன்னையும் பெருமைப்படுத்துவேன்
அண்ணே !!!

Pages: [1] 2 3 ... 10