Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
தனித்துவத்தின் அழகு

அதிகாலைப் பொழுதின் அமைதியில்,
ஆயிரம் வண்ணங்கள் கண்விழிக்கும் வேளையில்,
செந்நிறக் கடலெனப் பூத்துக் கிடக்கும் - இத்
துலிப் மலர்களின் அணிவகுப்பில் ஒரு அதிசயம்!

வானில் சிறகடிக்கும் அந்தத் தனிப்பறவை,
தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்ததல்ல;
தனக்கான பாதையைத் தானே செதுக்கி,
உயரப் பறக்கும் தன்னம்பிக்கை அது!

கீழே, சிவப்புக் கம்பளம் விரித்தாற்போல்,
ஒரே நிறத்தில் ஒரு கோடி மலர்கள்...
அவற்றின் நடுவே அந்த ஒரு வெள்ளை ரோஜா,
அமைதியாகச் சொல்லும் ஒரு ரகசியம்!

"கூட்டத்தோடு கூட்டமாய் மறைந்து போகாதே,
தனித்துத் தெரியத் தயங்கவும் செய்யாதே!
உன் தனித்தன்மையே உனது அடையாளம்,
அதுவே உன் வாழ்வின் உன்னதப் பிரகாசம்!"

சிவப்பின் ஆதிக்கத்தில் வெண்மை தொலைவதில்லை,
அது அங்கே தான் இருப்பதை உரக்கச் சொல்கிறது...
சில நேரங்களில் தனியாக இருப்பது தவறு அல்ல…
தனக்கான இடத்தில் தானாக இருப்பதுதான் உண்மையான அழகு…

வானில் பறக்கும் அந்த பறவையும்
மண்ணில் மலரும் அந்த வெள்ளை ரோஜாவும்
ஒரே உண்மையை நினைவூட்டுகின்றன—
“ஒவ்வொருவருக்கும் ஒரு தனி பாதை உண்டு…

"தனித்திரு... உன் தனித்துவத்துடன் மிளிர்!"

2
♦️🚨 *20 வகையான பாட்டி வைத்தியம்*

♦️ நெஞ்சு சளி
♦️ தலைவலி
♦️ தொண்டை கரகரப்பு
♦️ தொடர் விக்கல்
♦️ வாய் நாற்றம்
♦️ உதட்டு வெடிப்பு
♦️ அஜீரணம்
♦️ குடல்புண்
♦️ வாயு தொல்லை
♦️ வயிற்று வலி
♦️ மலச்சிக்கல்
♦️ சீதபேதி
♦️ பித்த வெடிப்பு
♦️ மூச்சுப்பிடிப்பு
♦️ சரும நோய்
♦️ தேமல்
♦️ மூலம்
♦️ தீப்புண்
♦️ மூக்கடைப்பு
♦️ வரட்டு இருமல்

🚨 *1. நெஞ்சு சளி*

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

🚨 *2. தலைவலி*

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு,
2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

🚨 *3. தொண்டை கரகரப்பு*

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

🚨 *4. தொடர் விக்கல்*

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

🚨 *5. வாய் நாற்றம்*

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

🚨 *6. உதட்டு வெடிப்பு*

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

🚨 *7. அஜீரணம்*

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

🚨 *8. குடல்புண்*

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

🚨 *9. வாயு தொல்லை*

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

🚨 *10. வயிற்று வலி*

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

🚨 *11. மலச்சிக்கல்*

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

🚨 *12. சீதபேதி*

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

🚨 *13. பித்த வெடிப்பு*

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

🚨 *14. மூச்சுப்பிடிப்பு*

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

🚨 *15. சரும நோய்*

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

🚨 *16. தேமல்*

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

🚨 *17. மூலம்*

கரணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

🚨 *18. தீப்புண்*

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

🚨 *19. மூக்கடைப்பு*

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

🚨 *20. வரட்டு இருமல்*

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

3
*சுண்டைக்காயின்  ஆரோக்கிய பயன்கள்:*

இரத்த சுத்திகரிப்பு: இரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கி, கொழுப்பு படிவதைத் தடுத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

வயிற்றுப் புழுக்கள் நீக்கம்: குடலில் உள்ள புழுக்களை அழித்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி: ஆரஞ்சு பழத்தை விட அதிக வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மூட்டு வலி மற்றும் தசை பலவீனம்: கால் வலி, மூட்டு வலி மற்றும் உடல் பலவீனத்தைப் போக்க உதவுகிறது.

நீரிழிவு மேலாண்மை: இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
வயிற்றுப் புண் (Ulcer): வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

4
Happy Birthday LW 🎂
Wish you a wonderful year ahead and may all your dreams come true.
Wishing you all the good things in life : happiness, success, good health and lots of beautiful moments.
Enjoy your special day ! 🎉


file-00000000fae87208b93c67456577baf2" border="0

 Happy Birthday Raghu29 ! 🎂

Wishing you a wonderful birthday filled with joy, laughter, and amazing moments.
May you always be happy, healthy and blessed .


file-0000000006987208b54ca44bc0d17a42" border="0
9
பயண கட்டுரைகள் - NATURE AND TRAVEL / Rome Bucket List
« Last post by MysteRy on March 10, 2026, 02:49:22 PM »
Pages: [1] 2 3 ... 10