Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:27:59 AM »
2
கவிதைகள் / வரம்!!
« Last post by Shreya on Today at 01:00:26 AM »
விழியோரம் நதிபெருக, விதியோரம்
வழி தொலைய.. அவள் நிழலோடும்
பேசத் துணையின்றி நின்றிருந்தாள்..!!

​அவள் முன் தோன்றிய இறைவன், என்ன வரம்
வேண்டும் கேள் என.. பேதையோ
கண்ணீரைத் துடைக்காமல்
கைகூப்பி வேண்டினாள்..

​அழுது தீர்க்கவே இந்த பிறவியோ??
ஆயிரம் சொந்தம் இருந்தாலும்,
யாரும் எனக்கில்லை என்ற இந்த
வெறுமை..

​மனமெல்லாம் ரணமாகி போனபின்
வரம் ஏனோ???
வாழ மனமில்லை இவ்வுலகில்,
"என் ரணங்கள் ஆற.. ஒரு நீண்ட துயில் போதும்"🙏
3
‘கொல்லக் காட்டை வித்துட்டோம்ப்பா’
அம்மாவின் குறுஞ்செய்தி
மனதை அறுத்துக்கொண்டே இருந்தது.

சித்தப்பா சீர் செதுக்கி,
தூக்கி விட்ட
கழனிக் காடு

“எவ்வளவு கஷ்டம்னாலும் விவசாயத்த விட்டுராதய்யா”
பாட்டனின் சொல்லில்
வேர் பிடித்த சித்தப்பனின் வீராப்பு
நினைவுகளில் மின்னிச் சென்றது.

“சவுக்கு போடலாம் ம்மா,
அது பாட்டுக்கு கெடக்கும்… "
"ஆர்.எஸ். பதிய போட்டு விடுவோம் ம்மா,
அது பாட்டுக்கு கிடக்கும்”
“வேணாம்மா, வித்துறாத,
 நான் வேலையை விட்டுட்டு
கொய்யா தோட்டம் போடுவேன்…”

என் ஒவ்வொரு
வாய் சவடாலுக்கும்
கழனி மாடு மேயும் களை காடாகி கொண்டிருந்தது.

அவ்வளவுதான்.
முடிந்தது.

ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும்
சித்தப்பாவின் தலையிலும் தோளிலும்
சுமந்த வரப்பட்ட
உளுந்து மூட்டைகள், வாழைத் தார்கள்,
எள் ஆடி எடுத்த எண்ணெய்கள்,
கடலை சாக்குகள்
மண மணக்க நிறைந்திருந்த வீடது.

இனி உலுக்கிய புளிகள் எங்கே போகும்?

ராய முனீஸ்வரனுக்கு
உளுந்து அறுத்து ஆடி பட்ட சாகுபடிய
படையல் இட
ஆளுமில்லை.
ஊருமில்லை.
பேருமில்லை.

நட்ட மரமெல்லாம் இனி பட்டுப் போகும்.

“களையும் கருவேலமும் முளைச்சுக் கிடக்குற காட்டுக்கு
யாரோ பாசனம் பண்ணி பயிர் வைப்பாங்களா?”
அம்மாவின் நியாயங்கள்,
நியாயங்கள்தான்.

சித்தப்பாவின் மெலிந்த கால்கள்
நினைவுக்கு வந்தது
உழைத்தே உழைத்தே தேய்ந்து போன கால்கள்,
சேற்றுப் புண்ணின் காய்ந்த தழும்புகள் நிறைந்த கால்கள்.
பாட்டனின் கால்களும்
முப்பாட்டனின் கால்களும்
நினைவுக்கு வந்தது.
எந்த நிலத்து சேற்றையும் அறியாத
என் கால்களை மெதுவாக தடவிக் கொண்டேன்.
மனக்குடையான் ராய முனீஸ்வரா
நெலத்த மட்டும்
எப்பவும் தழைக்க வச்சிருய்யா.
4


கடவுள் எனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
என என்றோ ஒருவன் பாடினான் அன்று.. அனால்
கடவுளுக்கு மட்டுமே நீ தொழிலாளி
இப்பாரில் வாழும் மனிதருக்கெல்லாம்
என்றுமே நீ முதலாளி என
நான் பாட நினைக்கிறேன் இன்று....

இப்புவியில் வாழும் உயிர்களை
அன்னையின் கருவில் விதைப்பவன் இறைவன். எனில்
அந்த கரு வளர உணவை வழங்கும்
விவசாயியும் நமக்கு கடவுள் தானே??

பசியில் அழும் குழந்தைக்கு
புசிக்க உணவு தருபவள் தாயென்றால்..
உலகமே பசியாற்ற உணவளிக்கும் நீ
அந்த தாய்க்கும் மேலேன்றால் மிகையாகுமோ??

குழந்தைக்கு தன் குருதியை பாலாக ஊட்டும் அன்னை போல் - விளையும் பயிர்களுக்கு
தன் வியர்வையை பாலாக ஊட்டுபவன் நம் விவசாயி..
அடுத்தவர் பசியை போக்க - என்றுமே
தன் பசியை மறந்து உழைப்பவன் இந்த விவசாயி..

நெற்ககதிர்கள் தலையசைத்த பூமியில்
இன்று காற்றாலைகளின் அரசாங்கம்...
அரிசி விளைந்த பூமியில் இன்று
அடுக்குமாடி கட்டிடங்களின் ஆரவாரம்...

பத்து மாதம் கருவில் வளர்ந்தால் தான்
குழந்தை ஆரோக்கியமாய் இருக்குமாம்..அதுபோல்
பக்குவப்பட்ட காலத்தில் பொறுமையாய் அறுவடை செய்தால் தானே உணவும் ஆரோக்கியமானதாய் இருக்கும்??

குறுகிய காலத்தில் விளைச்சல் தரும்
விஞ்ஞான விளைச்சல் வேண்டாம்
நம் விளைநிலங்களை விலை பேசும்
அந்த விஞ்ஞான வளர்ச்சியே வேண்டாம் என்போம்..

உலகையே நம் உள்ளங்கையில்  அடக்க
அந்த விஞ்ஞானத்தால் முடியும்
ஆனால் நம் உள்ளங்கையில் உணவை அளிக்க
நம் விவசாயத்தால் மட்டுமே முடியும்

வாடிய பயிரை கண்டு வாடும்
விவசாயின் நிலை மாறவேண்டும்
விவசாயி படிக்க முடியுமா தெரியவில்லை - ஆனால்
பட்டதாரிகள் விவசாயிகளாய் மாறவேண்டும்..

படித்தால் தான் சோறு என்ற நிலை மாறவேண்டும்
சேற்றில் கால் பதித்தால் தான் சோறு
என்ற நிஜம் புரியவேண்டும்..

நெற்களமும் ஒரு போர்க்களமே
இயற்கையுடன் போரிட்டு
வருணனின் வரம் பெற்று
ஆரோக்கியமான விளைச்சல் கண்டு
அகமகிழ்வோடு அறுவடை செய்யும்
 ஒவ்வொரு விவசாயியும்  வீரனே

இந்த உலகின் பசி போக்க
இந்தா புசி என்று உணவளிக்கும்
விவசாயியை அரவணைப்போம்
விவசாயத்தை காப்போம்....




அனைவருக்கும் இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் தின நல்வாழ்த்துகள்..🌾🌾



5
GENERAL / Re: Joker's Short Messeges
« Last post by joker on January 06, 2026, 08:29:54 PM »
If you are a person who has an addiction;
you are not the addiction itself.
This is a behaviour you can change.
Do not let it become your identity.
6
மஞ்சள் வெயில்
மண்ணில் சாயும் வேளையில்,
நிஜத்தின்
நிழல்களாய்  மனிதனும் மாடும்

ஏர் பிடித்த கைகள்
அரசரின் அரியணை காணாதவை,
ஆனால்
உலகின் பசியைத் தணிக்கும்
முதல் விரல்கள்

மண் கீறப்படுகிறது
வலியால் அல்ல,
நம்பிக்கையால்.
விதை விழுகிறது
இன்று அல்ல,
நாளை என்ற கனவோடு.

ஆனால்
உழுத பின்
அவனுக்கான
அங்கீகாரமோ ,
அவனின் வேர்வைக்கான
கூலியோ
கிடைக்கிறதா என்றால்
விடையாய்
கேள்விக்குறி?

சேற்றில்
கால்நடைகளின்
காலடி தடத்தில்
கடந்து போகிறது
பல தலைமுறைகள்

ஏர் ஓடும் பாதை போலத்தான்
மனித வாழ்க்கையும்,
நேராக இல்லை,
ஆனால்
வெற்றிக்கான அறுவடையில்
நிறுத்தமுமில்லை.

சுட்டு எரிக்கும் வெயில்
மழையோ வரமால்  சோதிக்கிறது,
பயிர் காத்திருக்கச் சொல்கிறது

இங்கு
வெற்றி ஆரவாரம் இல்லை
தோல்வி அறிவிப்பும் இல்லை
உழைப்பு மட்டும்
தினசரி வழிபாடு.

சூரியன் மறைகிறான்
ஆனால்
மீண்டும் உதிப்பான்
அதுபோல தான்
மனிதனின்
தன்னம்பிக்கையும்

ஏர் உழுதலும்
மனிதனின் வாழ்க்கையும்
ஒரு நாளின் கதையல்ல
அது
மண்ணில் எழுதப்படும்
முடிவில்லா நெடுங்கவிதை.

பொங்கல் நல் வாழ்த்துக்கள்


****JOKER****
7
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on January 06, 2026, 03:38:19 PM »
8
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒரு கதை உண்டு
ஆனால்
ஒரு உழவரின் கதை
மண்ணில் எழுதப்பட்ட வாழ்க்கை.
சில வரிகள்
சேற்றில் புதையும்
சில வரிகள்
நினைவுகளாய் மனதில் பதியும்.
அவர்கள்
இந்த உலகிற்கு தரும்
உணவே காலம்
எழுதும் ஓர் கவிதை.

உழவரின் கதைகள்
படிப்பதற்கு மட்டும் அல்ல
உணர்வுகளை உணர்ந்து
வாழ வேண்டியவை
சில வரிகள்
சோகமாய் கண்ணீராய் சிந்தும்
சில வரிகள்
நெருடலாய் நெருப்பாய் வழியும்
ஆனால்
சில வரிகள்
சிந்தனையின் விதையாக
நம்முள் வளர செய்யும்
வாழ்க்கையின் ஓட்டத்தை மாற்றும்.

எத்தனை கதைகள்
நம் வாழ்வில்
கடந்து வந்திருந்தாலும்
வேறு எந்தக் கதையோடும்
ஒப்பீடு செய்ய முடியாமல்
சிறந்த கதையாக
வெகு சில கதைகள் உண்டு
அதில் என்றும் நிலைத்து நிற்பது
உழவரின் கதை.

தொழில்நுட்பம்
விண்ணைத் தொட்டாலும்
ஒரு துளி உணவையும்
உருவாக்க முடியாது.
உழவன் சேற்றில்
கால் வைக்காமல்
நாம் சோற்றில்
கை வைக்க முடியாது.

மண்ணோடு பேசும்
உழவரின் விரல்களில்
எத்தனை கனவுகள்
எத்தனை ஆசைகள்
மழையில் நனைய
தவறிய விதைகளும்
உழவரின் வேர்வையில்
உயிர் பெறும்.

உணவுக்கு “உ” என்ற
முதல் எழுத்து வந்ததே
உழவனின் உழைப்பிலிருந்துதான்
உழைப்பின் முதல் எழுத்து
உழவனின் முதல் அடையாளம்
அதுவே அந்த “உ”

தை முதல் நாள் வந்தால்
பானையில் கொதிப்பது
வெறும் நெல் விதை அல்ல
அது உழவரின் நம்பிக்கை
அது உழவரின் மகிழ்ச்சி
அது மாடுகளின் மணியோசை
அது மண்ணின் வாசனை
எல்லாம் ஒன்றாக
பொங்கி வருவதால்தான்
அது பொங்கல்.

நாற்று நடும்
கைகளில்தான்
நம் வாழ்வின்
எதிர்காலம் இருக்கிறது
என்பதை மறக்காமல்
உழவரின் உழைப்புக்கு
நன்றியும் வணக்கமும்
செலுத்துவோம்.

உழவர் வாழ்க
மண் வளம் பெறுக
மனிதக் கதைகளில்
மிக அழுத்தமான கதை
உழவரின் கதையாக
என்றும் பொங்கி நிற்கட்டும்.

இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்
இனிய உழவர் தின நல்வாழ்த்துகள்
9
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 06, 2026, 01:18:40 PM »
10
GENERAL / 🍊 Choose round, evenly shaped oranges
« Last post by MysteRy on January 06, 2026, 11:47:33 AM »



A balanced shape usually indicates that the fruit has developed well and is packed with juice inside. Irregular shapes can sometimes mean less flavor or uneven ripening.

⚖️ Pick the heavier ones
When two oranges are the same size, always go for the heavier one. Extra weight is a sign that it’s loaded with juice and will taste fresher and sweeter.

🌟 Check the skin
The peel should be firm, smooth, and have a vibrant color. This shows that the orange is ripe and full of flavor. Avoid fruit with wrinkled or dull skin, as it may be old or dry.

🚫 Avoid light or spongy fruit
If the orange feels too light for its size or slightly spongy when pressed, it’s likely lacking juice inside and won’t taste as good.
Pages: [1] 2 3 ... 10