Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
ஓயாமல் அலை போல உரையாடியவனே...
கண்களில் நீர் தேங்கிய வேளையிலும்
இதழோரம் புன்னகை பூக்க செய்தவனே...

தீராத நினைவுகளை அள்ளி தந்தவனே
தனிமையின் வெற்றிடத்தை கவிதையாய் மொழிபெயர்த்தவனே
அலைபேசியின் ஒவ்வொரு ஒளிக்கீற்றிலும் மின்னியவனே

கைகோர்த்து பயணிக்க ஆசையைத் தூண்டியவனே
தோல் சாயும் தோழனாய் உடனிருப்பவனே
தாயின் ஸ்பரிசத்தை நினைவூட்டுபவனே...

நம்பிக்கை என்னும் நாங்கூரத்தால்
காதலை திடமாக பேணுபவனே
ஆயிரம் ஊடல் கொண்டாலும்
சிறு சொல்லில் அதை
மறக்க செய்பவனே

இன்று
ஓடும் உன் கடிகாரத்தில்
எனக்கென்ற நிமிடங்கள்
குறைந்து தான் போனாலும்...
ஓயாமல் அலை போல்
இருந்த உரையாடல்
நடுகடலின் அலையாகி போனாலும்

என் தேடல் அனைத்தும்
உன் ஒற்றை சொல்லில்
ஒளிந்து கிடக்க -  உன்
கைப்பிடிக்குள் நாணமும் காணாமல் போக
முழுமையாக உன்னவள் ஆகிறேன்..
காதல் என்ற குமிழிக்குள்
2
நான்கு கண்கள் சந்தித்த அந்த முதல் நொடி,
நமது உலகம் ஒரு சிறு புன்னகையில் அடங்கி போனது..
நிழல் நிஜமாய் மாறிய அந்த திருநாள்
அக்னி சாட்சியாய் உன்னில் சரிபாதி ஆனேன்!!
முத்தங்களும், செல்ல சண்டைகளும், தீராத உரையாடல்களும்,
காதல் ஒரு மதுரமான கனவாக நம்மை சுற்றி இருந்தது..!!!

​வாழ்க்கை எனும் ஓட்டத்தில் ஏனோ திசை மாறினோம்,
மெல்ல மௌனங்கள் வளர்ந்து இமயம் போல் ஓர் இடைவெளி,
புரிதல்கள் குறைந்து பிரிவுகள் பெரிதாக தெரிந்தன,
வேண்டாம் இந்த பந்தம் என இதயம் கதறிய தருணங்கள்
நாம் தொலைத்த காதல், மீண்டும் கிடைக்காதோ என ஏங்கினோம்..!!!

​ஆனால் காலத்தின் கரங்கள் நம்மை மீண்டும் பிணைத்தன,
தவறுகளை மன்னித்து காயங்களை மறைக்க கற்று கொண்டோம்..
அன்று பார்த்த இளமையை விட இன்று பேரழகனாய்,
மரணம் வரும் அந்த இறுதி நொடி வரை
உன் விரல் கோர்த்து, உன் மார்பில் சாய்ந்தே கிடக்க ஆசை..
மறுபிறவி என்பது உண்மை என்றால்,
நீயே என் கணவன்...நான் உன் மனைவி..!!!

​காதலின் சிறப்பு என்ன தெரியுமா?
இளமையில் கொண்டாட்டமாக, இடையில் பாடமாக,
முதுமையில் ஒரு பெரும் வரமாக இருக்கும்!!
நீ துணை இருந்தால் என் இறுதி பயணம் கூட
திருவிழாவே!
முடிவே இல்லாத ஒரு பயணத்தில்,
முடிவே இல்லாத ஒரு காதலை..!!!

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!

3
      "உண்மைக்  காதல்"

வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாத உணர்வு காதல்!
இரு ஆழமான மனங்கள்
சம்பந்தப்பட்டு இணைவது காதல்!
நம்பிக்கை, மரியாதை தன்னகத்தே   
கொண்டது உண்மையான காதல்!

காதலர்களின் நம்பிக்கையால்
அதிகரிக்கும்  அவர்களது
அன்னியோன்யம்!
எந்த  எதிர்பார்ப்புமின்றி
தூய அன்பைக்  கொண்டது
புனிதமான காதல்!

காதலர்களிடையே ஒளிவு,
மறைவின்றி நேர்மை இருப்பின் 
அது உண்மையான காதல்!
இன்பம், வெற்றிகளை கொண்டாடுவதிலும்,
துன்பங்களில் தோள் கொடுப்பவர் ஆகவும்
அமைவது தான் உண்மையான காதல்!

உடல் ஈர்ப்புக்கு அப்பாற்பட்டு, உணர்வுபூர்வமான நெருக்கமானது உண்மையான காதல்!
காதலர்கள் விழி பார்வையால்
அவர்களின் மனதை அறிந்து கொண்டால் அது தான் உண்மையான காதல்!

தனது நேரத்தை ஒதுக்கி தொடர்பில் 
இருக்க வேண்டும் துணையுடன்....
சின்னச் சின்ன சண்டைகள்
வரவேண்டும் காதலர்களிடையே!
சீக்கிரம் சமாதானம் ஆகிட
வேண்டும் ஒற்றுமையாக....
அது தான் உண்மையான காதல்!
 
சாதி,மத,மொழி பேதமற்றது
உண்மைக் காதல்!
அந்தஸ்து, அதிகாரம் பார்க்காது
உண்மை காதல்!
ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு
இல்லாதது உண்மைக் காதல்!

எந்த சூழ்நிலையிலும் 
விலகிச் செல்லாது
உண்மைக் காதல்!
எதிர்ப்புகளை கூட இருந்து
எதிர்கொள்ளும் உண்மைக் காதல்!

காதல் ஜெயிக்கவில்லை என்று கோழைத்தனமான தற்கொலை
முயற்சிகளை  எடுக்காது
உண்மைக் காதல்!
காதலை ஜெயிக்க வைக்க
போராடும் உண்மைக் காதல்!

"ஒருத்தனுக்கு ஒருத்தி "
என்று இருப்பது உண்மை காதல்!
காதல் என்ற பெயரில் என்னென்னவோ பண்ணுகிறார்கள் இந்த காலம்!
"காதல்"என்ற புனிதமான சொல்லை
உன் சுயநலத்துக்காக களங்கடிக்காதே!

உண்மை காதலை மதிப்போம்!
உண்மை காதலர்களை போற்றுவோம்!
உண்மைக் காதலர்களை ஆதரிப்போம்!
உண்மையான காதலை வாழ வைப்போம்!











4
காதலர் தினம் வந்தாலே
ரோஜா மலருக்கு நாணம்,
சாக்லேட்டுக்கு இனிப்பு அதிகம்..
ஏனெனில்
அவை காதல் பேசப் போகும் நாள்.
சாதாரண நாளில்
ரோஜா வாசனை மட்டும்,
சாக்லேட் சுவை மட்டும்.
ஆனால்,
பிப்ரவரி பதினான்கில்
இரண்டும் இதயமாய் மாறும்.
ரோஜா சொல்கிறது...
என் நிறம் உன் உணர்ச்சி.
சாக்லேட் சிரிக்கிறது....
என் இனிப்பு உன் புன்னகை.
அன்று
ரோஜா சாக்லேட்டை தரவில்லை,
சாக்லேட் ரோஜாவை தரவில்லை,
காதல் தான்
இருவரையும்
பரிமாறிக் கொண்டது.
ஜாதி,மதம்,
பணக்காரன்,ஏழை,
படித்தவன்,படிக்காதவன்
என்ற எந்தப் பாகுபாடும் இன்றி
அன்றொரு நாளில்
ரோஜாவும் சாக்லேட்டும்
இரு மனங்களில் கை கோர்க்கும்.
கையில் போகும் அந்த நொடி
அவர்களுக்கு
அளவில்லா இன்பம்.
காதல்
யாருக்குமானது என்று
மௌனமாய் சொல்லும் சந்தோஷம்.
உயிரற்ற பொருள்கள் தான்
ரோஜாவும் சாக்லேட்டும்,
ஆனால்
உயிருள்ள இரு இதயங்களில்
உணர்வுகளை
பரிமாறிக் கொள்ளும்
உன்னத தூதர்கள்.
அதனால்தான்
காதலர் தினத்தில்
ரோஜாவும் சாக்லேட்டும்
ஒரே கையில்,
ஒரே இதயத்தில்,
இணை பிரியாமல்
காதலாய் மலர்கின்றன.

LUMINOUS 😇💜🙏💐😇
5
நான் உன்னை
முதல்ல பார்த்தது
கண்களால இல்லை,
ஒரு notification-ல்தான்.

உன் “hi”
எந்த poetry-யையும் விட
என்னை அமைதியிழக்கச் செய்தது.
அன்றிலிருந்து
என் கைபேசி
என் இதயத்தோட
ஒரு extension ஆ மாறிடிச்சி

நம் காதல் வளர்ந்தது
“online” என்ற ஒரு பச்சை புள்ளி எரிகிறதா
என பார்த்து பார்த்து அனுப்பும் குறுஞ்செய்தியில்

முதன் முதலில் உன்னை பார்த்தது
உன் DP.
முதல் உரையாடல்
துடிக்கும் இதயம் அல்ல
“typing…” என்று மினுமினுக்கும்
மூன்று புள்ளிகள்

நேரம் கிடைக்காத உலகத்தில்
நாம் ஒருவருக்கொருவர்
“time” கொடுக்க முயன்றோம்.
Metro-வில் நின்றபடி,
Traffic-ல் சிக்கியபடி,
Meeting நடுவே மறைவாக
“miss you” அனுப்பியபடி.

நீ அருகில் இல்லாத இரவுகளில்
உன் குரல்
Voice note-ஆக வந்து
என் தனிமையைத் தழுவியது.

நான் அருகில் இல்லாத நாட்களில்
என் presence
Blue tick-ஆக உன் திரையில் உறங்கியது.

நாம் சண்டை போட்டோம்
கோபமாக இல்லை,
Seen-இல் விடப்பட்ட
நம் மௌனம்

மன்னிப்பு கேட்டோம்
வார்த்தைகளால் இல்லை
ஒரு emoji-யால் 🙂

இந்த காதல்
பூக்கள் கொடுத்து வளர்க்கப்படவில்லை,
Data pack-களாலும்
Late night calls-களாலும்
காத்துக் கொள்ளப்பட்டது

ஆனால்
இந்த வேகமான யுகத்தில்
காதல் மட்டும்
இன்னும் மெதுவாகத்தான் இருந்தது.
Reply வர காத்திருக்கும் அந்த நிமிடங்கள்,
“Call pannalama?” என்று
உள் மனம் நடுங்கும் தருணங்கள்.

நாம் ஒருவருக்கொருவர்
Perfect அல்ல,
ஆனாலும்
“Available” ஆக இருந்தோம்.
Busy வாழ்க்கையிலும்
“I’m here” என்று சொல்லும் அளவுக்கு.

நீ “online” வரும்போது
என் மனசும்
தானா active ஆகும்.
நீ “offline” போகும்போது
என் நாள்
pause ஆகும்.

இந்த உலகம்
Fast forward-ல ஓடினாலும்,
நீ இருக்குற இடத்துல
என் மனசு மட்டும்
Still-ஆ நிக்குது.

இந்த modern life-ல
real  ஆ எனக்கு
கிடைத்த பொக்கிஷம்
நீ தான்
.


****Joker"""
6

காதலர் தினம்
என்ற ஒரு சொல் கேட்டாலே
மனம் தன்னிச்சையாக
மென்மையாய் மாறுகிறது
சொற்களின் சத்தம் குறைந்து
உணர்வுகள் மட்டுமே
பேசத் தொடங்குகிறது
அந்த நொடிதான்
காதலின் தொடக்கம்

பார்க்கும் முன்பே
நம்பச் சொல்லும்
ஒரு உணர்வு

தொட்டுப் பார்க்காமலே
உள்ளுக்குள் பதியும்
ஒரு உலகம்

அதுதான் காதல்

சிரிப்புக்குள் கண்ணீரையும்
கண்ணீருக்குள் சிரிப்பையும்
ஒளித்து வைக்கும்
உணர்வுகளின் மொழி

ஒருதலைக் காதலில்
உரிமை இல்லாத
அக்கறைகள் வாழும்
'சாப்பிட்டியா'
'என்ன பண்ற' என்று
கேட்க முடியாத மனம்
அந்த மௌனத்திலேயே
அன்பை முழுதாய்ச் சொல்லி விடும்
எல்லாமுமாய் இருந்தும்
எதுவுமே ஆக முடியாத
அந்த வலியும்
காதலின் ஒரு தூய வடிவமே

பெண்ணின் காதல்
கூட்டத்தின் நடுவிலும்
ஒரே முகத்தைத் தேடும் தேடல்
ஒரு குரலுக்காக
ஒரு செய்திக்காக
மனம் நாள் முழுதும் காத்திருக்கும்
இல்லாதபோது
அவனின் நினைவுகள்
அவளுக்கு அதிகமாய்
அவள் காதலின் ஆழத்தைச்
சொல்லித் தரும்

ஆணின் காதல்
சொல்லாத அழுகைகளை
உள்ளுக்குள் சேமித்து வைக்கும் அமைதி
கரைந்து போன அகம்பாவம்
உனக்குள் மறைந்திருந்த
குழந்தையை வெளிக்கொண்டு வரும்
அந்த நிமிடம்
நீ சொன்னா சரி என
தன்னை முழுதாய் ஒப்படைத்து
அமைதியிலே நிற்கும்
ஒரு கம்பீரம்

காதல் தோல்வி என்றால்
காதல் பொய்யானது அல்ல
சேர முடியாத நேரங்களின்
மௌனத்தின் தீர்ப்பு
பிரிவும் கூட
ஒரு விதமான காதல்தான்
என்று புரியும் போது
வலி அர்த்தமாகிறது

ஆனால்

எல்லாவற்றுக்கும் மேலாக
ஒரு உண்மை இருக்கின்றது
யாருக்காகவும்
நம்மை முழுதாகத்
தொலைக்காமல்
நம்மை நாமே
அன்புடன் அணைத்துக்
கொள்வதுதான்
உண்மையான காதல்

ஏனென்றால்
 
உலகமே விலகினாலும்
நாம் நம்மோடு இருந்தால்
அந்த self love தான்
எல்லா காதல்களுக்கும்
முடிவும் !
முழுமையும் !

பொழிவதில் அழகு
ஒன்று மழை
மற்றொன்று காதல்

அதனால்
காதல் பொழிவோம்
சக மனிதர்களுக்கு
சக மனிதர்களாக

அனைவருக்கும்
காதலர் தின நல்வாழ்த்துகள் !

7
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 01, 2026, 02:32:58 PM »

February 2026
#454   01.02.2026







- Socky

8
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on February 01, 2026, 10:27:32 AM »
9
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on February 01, 2026, 05:52:13 AM »
Pages: [1] 2 3 ... 10