1
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-003 (பள்ளிவிடுமுறையும் பாட்டி வீடும்)
« Last post by Ninja on Today at 11:24:24 AM »எல்லோரும் மாதிரிதான் நாங்களும், எப்போடா ஸ்கூல் லீவு விடுவாங்கன்னு காத்திருக்க gang, ஆனா ஒரே ஒரு வித்தியாசம் நாங்க வேற ஊருக்கு போய் பாட்டிய பாக்க முடியாது. ஏன்னா நாங்க இருந்த அதே ஊர்ல தான் பாட்டி வீடும், அப்புறம் என்ன ஹாப்பினஸ் தனியான்னு கேட்குறீங்களா, அங்க தான் இருக்கு டிவிஸ்ட்டு. ஊர்ல இருந்து என் ரெண்டு மாமாவோட பசங்க, பொண்ணுங்க எல்லாரும் லீவுக்கு பாட்டி வீட்டுக்கு வந்துடுவாங்க. அப்புறம் என்ன, அட்டகாசம் தான்.
காலைலேயே என்னையும் தங்கச்சியயும் டிவிஸ் 50ல ஏத்திக்கிட்டு போயிட்டு பாட்டி வீட்டுல தள்ளிவிட்டுட்டு அம்மா வேலைக்கு போயிருவாங்க. நம்மளவ விட நம்மளோட லீவ அதிகம் எஞ்சாய் பண்ணது அவங்க தான்னு அப்போ புரியல, இப்போ புரியுது. நாங்க 6 பேரு எங்களுக்கு பயம்னா என்னான்னே தெரியாது. பாட்டி வீடு அல்லோலப்படும். ரெண்டு பேர வச்சிக்கிட்டே இந்த அம்மா அப்பாக்கெல்லாம் சமாளிக்க முடியல எங்க 6 பேர வச்சிக்கிட்டு எப்படி தான் எங்க தாத்தா பாட்டி சமாளிச்சாங்களோ தெரியல.
எங்க பாட்டி வீட்டுல வெளியே திண்ணைல ஆரம்பிச்சு, முற்றம் பின்வாசல்ன்னு பெரிய வீடு எங்களுக்குன்னே அமைஞ்ச மாதிரி இருக்கும். இந்த பக்கத்துக்கும் அந்த பக்கத்துக்கும் எங்க ஓட்டத்துல ஜூராசிக் பார்க் படத்துல டயனோசர்ங்க ஓடி வருமே அந்த மாதிரி வீடே அதிரும். பெரிய டார்ஸான்னு நினைப்பு திண்ணை மேல் கூரைல ஒரு சட்டத்துல கயிற மாட்டி இந்த திண்ணைல இருந்து அடுத்த திண்ணைக்கு 'ஏயேஆஆ ஆஏஏஏ' ன்னு கத்திக்கிட்டே தாவுவோம். என்னைக்கு அந்த சட்டம் முறிஞ்சு விழும்ன்னு வீட்டுல எல்லாரும் காத்துக்கிட்டு இருந்த மாதிரியே தோணும்.
ஒருத்தர்கொருத்தர் சளைச்சவங்க இல்ல நாங்க. தக்கிளியூண்டு வண்டு மாதிரி இருந்துகிட்டு பக்கத்துவிட்டுல இருந்த இளந்தாரி பயல, 'டேய் குரங்கு மூஞ்சா'ன்னு கூப்பிட்டு வம்பிழுத்து, அவன் அம்மாவ கூட்டிட்டு வந்துட்டான் பஞ்சாயத்துக்கு. அவங்ககிட்ட தாத்தா பாட்டி சண்டை போட்டு/சமாதானம் பண்ணி அனுப்பி வச்சாலும் எங்களுக்கு தெரியும் ஆஹா நமக்கு இருக்குடின்னு முருங்ககுச்சிய ஒடச்சிட்டு பாட்டி வரும்போதே ஓட்டம் எடுப்போம்.
எங்க அம்மா ஹாஸ்பிடல்ல இருந்து எடுத்துட்டு வர்ர additional syringeலாம் எங்க போகும்னு நினைக்கிறீங்க? எங்க கசின்ஸ் ஊர்ல இருந்து வாங்கிட்டு வர்ர டெடிபியருக்கு தான். Syringeல தண்ணிய fill பண்ணி அந்த டெடிக்கு ஏத்தி ஏத்தி, சொத சொதன்னு ஆக்கி, அந்த பொம்மைக்கு உயிர் இருந்திருந்தா செத்தே போயிருக்கும். செவனேன்னு இருக்கலாம் ஆனா நாங்க இருக்க மாட்டோம், ஆஸ்திரேலியால இருந்து அம்மாக்கு ஆசையா ப்ரண்ட் வாங்கி கொடுத்த கங்காரு பொம்மை கழுத்தறுத்து ஆபிரேஷன் பண்ணி சாகடிச்சிருக்கோம்.
இப்போ புரியுது அப்போலாம் எங்களோட அம்மா அப்பா இந்த குட்டி குளவாரிங்க தொல்ல தாங்க முடியாம தான் தாத்தா பாட்டி வீட்டுல கொண்டு போயிட்டு தள்ளிவிட்டுருக்காங்கன்னு. ஆனா என்ன சேட்டை பண்ணினாலும் தாங்க கூடிய சக்தி தாத்தா பாட்டிக்கு தான் இருந்திருக்கு. காலைலயும் சரி, ராத்திரியிலயும் சரி வீட்டுக்கு வெளியே பெரிய அரசமரத்தடிக்கு கீழ ரெண்டு கயித்து கட்டில போட்டு சுத்தி உட்கார வச்சி கவள சோறு உருட்டிக்கொடுப்பாங்க பாட்டி. அதுவும் சிலசமயம் காலைல பழைய சோற பிழிஞ்சு உருட்டி அதுல சுண்ட வச்ச பழைய குழம்ப ஊத்தி ஊட்டி விடுவாங்க பாருங்க, தேவாமிர்தமா இருக்கும்.
அரசமர இலைல தாத்தா பீப்பீ செஞ்சு கொடுப்பாங்க, தாத்தவோட கதைகளுக்கு நாங்க எல்லாருமே மகுடிக்கு ஆடுற பாம்பா சுருண்டுடுவோம். அதெல்லாம் ஒரு காலம்னு சொன்னாலும், அந்த காலம் திரும்பி வராதுன்னு தெரிஞ்சாலும் மனசு ஏங்குறதை தவிர்க்க முடியல. கசிஸ்குள்ள இப்பவும் நாங்க நெருக்கமா இருக்க காரணம் எப்பவும் எங்கள பிணைப்போட கட்டி போட்ட எங்க பாட்டி வீடுங்கறதை மறுக்கவே முடியாது.
காலைலேயே என்னையும் தங்கச்சியயும் டிவிஸ் 50ல ஏத்திக்கிட்டு போயிட்டு பாட்டி வீட்டுல தள்ளிவிட்டுட்டு அம்மா வேலைக்கு போயிருவாங்க. நம்மளவ விட நம்மளோட லீவ அதிகம் எஞ்சாய் பண்ணது அவங்க தான்னு அப்போ புரியல, இப்போ புரியுது. நாங்க 6 பேரு எங்களுக்கு பயம்னா என்னான்னே தெரியாது. பாட்டி வீடு அல்லோலப்படும். ரெண்டு பேர வச்சிக்கிட்டே இந்த அம்மா அப்பாக்கெல்லாம் சமாளிக்க முடியல எங்க 6 பேர வச்சிக்கிட்டு எப்படி தான் எங்க தாத்தா பாட்டி சமாளிச்சாங்களோ தெரியல.
எங்க பாட்டி வீட்டுல வெளியே திண்ணைல ஆரம்பிச்சு, முற்றம் பின்வாசல்ன்னு பெரிய வீடு எங்களுக்குன்னே அமைஞ்ச மாதிரி இருக்கும். இந்த பக்கத்துக்கும் அந்த பக்கத்துக்கும் எங்க ஓட்டத்துல ஜூராசிக் பார்க் படத்துல டயனோசர்ங்க ஓடி வருமே அந்த மாதிரி வீடே அதிரும். பெரிய டார்ஸான்னு நினைப்பு திண்ணை மேல் கூரைல ஒரு சட்டத்துல கயிற மாட்டி இந்த திண்ணைல இருந்து அடுத்த திண்ணைக்கு 'ஏயேஆஆ ஆஏஏஏ' ன்னு கத்திக்கிட்டே தாவுவோம். என்னைக்கு அந்த சட்டம் முறிஞ்சு விழும்ன்னு வீட்டுல எல்லாரும் காத்துக்கிட்டு இருந்த மாதிரியே தோணும்.
ஒருத்தர்கொருத்தர் சளைச்சவங்க இல்ல நாங்க. தக்கிளியூண்டு வண்டு மாதிரி இருந்துகிட்டு பக்கத்துவிட்டுல இருந்த இளந்தாரி பயல, 'டேய் குரங்கு மூஞ்சா'ன்னு கூப்பிட்டு வம்பிழுத்து, அவன் அம்மாவ கூட்டிட்டு வந்துட்டான் பஞ்சாயத்துக்கு. அவங்ககிட்ட தாத்தா பாட்டி சண்டை போட்டு/சமாதானம் பண்ணி அனுப்பி வச்சாலும் எங்களுக்கு தெரியும் ஆஹா நமக்கு இருக்குடின்னு முருங்ககுச்சிய ஒடச்சிட்டு பாட்டி வரும்போதே ஓட்டம் எடுப்போம்.
எங்க அம்மா ஹாஸ்பிடல்ல இருந்து எடுத்துட்டு வர்ர additional syringeலாம் எங்க போகும்னு நினைக்கிறீங்க? எங்க கசின்ஸ் ஊர்ல இருந்து வாங்கிட்டு வர்ர டெடிபியருக்கு தான். Syringeல தண்ணிய fill பண்ணி அந்த டெடிக்கு ஏத்தி ஏத்தி, சொத சொதன்னு ஆக்கி, அந்த பொம்மைக்கு உயிர் இருந்திருந்தா செத்தே போயிருக்கும். செவனேன்னு இருக்கலாம் ஆனா நாங்க இருக்க மாட்டோம், ஆஸ்திரேலியால இருந்து அம்மாக்கு ஆசையா ப்ரண்ட் வாங்கி கொடுத்த கங்காரு பொம்மை கழுத்தறுத்து ஆபிரேஷன் பண்ணி சாகடிச்சிருக்கோம்.
இப்போ புரியுது அப்போலாம் எங்களோட அம்மா அப்பா இந்த குட்டி குளவாரிங்க தொல்ல தாங்க முடியாம தான் தாத்தா பாட்டி வீட்டுல கொண்டு போயிட்டு தள்ளிவிட்டுருக்காங்கன்னு. ஆனா என்ன சேட்டை பண்ணினாலும் தாங்க கூடிய சக்தி தாத்தா பாட்டிக்கு தான் இருந்திருக்கு. காலைலயும் சரி, ராத்திரியிலயும் சரி வீட்டுக்கு வெளியே பெரிய அரசமரத்தடிக்கு கீழ ரெண்டு கயித்து கட்டில போட்டு சுத்தி உட்கார வச்சி கவள சோறு உருட்டிக்கொடுப்பாங்க பாட்டி. அதுவும் சிலசமயம் காலைல பழைய சோற பிழிஞ்சு உருட்டி அதுல சுண்ட வச்ச பழைய குழம்ப ஊத்தி ஊட்டி விடுவாங்க பாருங்க, தேவாமிர்தமா இருக்கும்.
அரசமர இலைல தாத்தா பீப்பீ செஞ்சு கொடுப்பாங்க, தாத்தவோட கதைகளுக்கு நாங்க எல்லாருமே மகுடிக்கு ஆடுற பாம்பா சுருண்டுடுவோம். அதெல்லாம் ஒரு காலம்னு சொன்னாலும், அந்த காலம் திரும்பி வராதுன்னு தெரிஞ்சாலும் மனசு ஏங்குறதை தவிர்க்க முடியல. கசிஸ்குள்ள இப்பவும் நாங்க நெருக்கமா இருக்க காரணம் எப்பவும் எங்கள பிணைப்போட கட்டி போட்ட எங்க பாட்டி வீடுங்கறதை மறுக்கவே முடியாது.

Recent Posts





