Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
எங்க பட்டாளம் இணையத்தில் தொடங்கி இதயத்தில் தொடரும் பந்தங்கள் ன்னு சொல்லணும். நாங்க மொத்தம் 7 பேரு. தமிழ், கயல்(நானு), u2brutus (குரங்கு தம்பி), Eren (எரும தும்பி), ஜெய், முஹம்மத்(momo), கோபி...இதுல இன்னைக்கு வர தொடர்ந்து வரது தமிழ், நானு, eren, u2brutus. Eren and u2brutus எங்க பாசமான பாயசம் கொடுக்குற தொல்லையான தங்க தம்பிங்க

தமிழுக்கும் எனக்கும் நெருக்கம் ரொம்ப அதிகம். எதுனாலும் நா அவ கிட்ட பகிர்ந்துக்கலாம்... எதுலையும் என்ன judge பண்ணவே மாட்டா. நா பண்ற திருட்டுத்தனம் நானே அவ கிட்ட சொல்லலனாலும்... நீ சரி இல்ல ன்னு சொன்னதும் எல்லாத்தையும் கொட்டிடுவேன்.😁 பேச்ச வச்சே கண்டுபிடிச்சுடுவா. எங்க 7 பேரையும் கட்டிப்போட்டு இருக்கி வைக்கிற கயிறு போல அவ.... அவ தான் எங்க gang leader 😂... நாங்க பேச ஆரம்பிச்சா கிட்ட தட்ட 2 மணி நேரத்துக்கு மேல தான் போகும். அது வேற voice chat அ கேக்கவே வேணாம்,... எல்லா நேரமும் அரட்டை தான். வேலை ஏதாவது வந்துடுச்சுனா பாட்டுக்கு vibe mode க்கு போய்டுவோம்... சாமி பாட்டுக்கு கூட vibe பண்ணுவோம்...யாரையும் என்ன எதுவுமே சொல்ல விடவும் மாட்டா... சரியான கூட்டு களவாணிங்க நாங்க..ஆனா ஊனா கோபி ஜெய் கிட்ட சண்ட போட்டு id delete பண்ணிடுவேன் 🫣 ஆரம்பத்துல தமிழ் தான் சமாதானம் பண்ணுவா... அப்புறம் ரெண்டு நாள்ல நானே id create பண்ணிடுவேன் ன்னு அவளே என்ன கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடா 🤧 கிட்ட தட்ட 10 id delete பண்ணிருப்பேன் 😁

தமிழும் u2 வும் மாறி மாறி செம்மையா சண்ட போட்டுபாங்க.... அதே மாதிரி நானும் eren னும் அடிச்சிக்கிட்டு இருப்போம்... அக்கா ன்னு தெரியாம மரியாத கொடுத்துட்டா உடனே ச்சா ச்சா உன்ன யாரு கூப்பிட்டா தமிழ் அக்கா வ கூப்பிட்டேன் ன்னு மொக்க பண்ணிடுவான். ஆனா எங்கயாவது அடி வாங்கிடான்னா உடனே 🤙 call வந்துடும் 😂.... எனக்கு ஒரு bgm தான் போகும்... "வா வா வந்து என் பக்கத்துல உட்காரு" ... இப்போ எங்க அடி வாங்குன ன்னு நல்லா கேட்டுட்டு அடுத்த நாள்... Family meeting போட்டுடுவோம் 😁தமிழ் u2 க்கு update பண்ணனுமே... அது நம்ம முதல் கடமை இல்லையா....இந்த situation ship, ghosting, benching, இத பத்தி கேள்வி பட்டது அவன் கிட்ட இருந்துதான் 😂 ஏதாவது techni related சந்தேகம் ன்னா அத தீர்க்குற எனக்கு வாய்த்த அடிமை இவன் தான்... இவன் எனக்கு இணையத்தையும் தாண்டிய அன்பு தம்பி. நல்லது கெட்டதுல எல்லாம் கூடவே இருந்தான்... இனியும் இருப்பான். தினமும் பேசிக்கமாட்டோம் ஆனா ரொம்ப நாள் பேசலனா call 🤙 பண்ணதும் முதல் கேள்வி " இருக்கியா? இல்ல செத்துட்டியா!? 👻 அவ்வளவு பாசம். இந்த எருமைக்கு ராத்திரி 10 மணிக்கு கூட kinderjoy order பண்ணிருக்கேன சந்தேகத்த சொன்னதுக்கு 😂. எனக்கு கூட பொறந்த தம்பி இல்லாத குறைய தீர்த்து வச்சுட்டான் ( தம்பி ன்னா extra வா நம்ம உயிர எடுக்குற இம்சைன்னு)

இணையம் இணைத்த சில பந்தம் அதில் எனக்கு eren துரு பிடிக்காத சொக்க தங்கம் (இது ice தான் பா)🤭
2
ஹாய் நண்பர்களே! இந்த வார தலைப்பை பார்த்ததும் எனக்கு அவ்வளவு சந்தோஷம். இணையம் என்று சொன்னதும் எனக்கு நினைவு வந்தது நம்மளோட ftc தான். நான் ஃப்ரீ டைம்ல போரடிக்குதுன்னு ஜஸ்ட் சாட் பண்ண தான் வந்தேன். Ftc க்கு வந்த பின்னாடி தான் தெரிஞ்சுச்சு FTCல fm  இருக்குன்னு. அப்புறம் ftcல சாங்ஸ் கேட்க ஆரம்பிச்சேன்.  இதனால் நான் தினசரி ftc வர ஆரம்பிச்சேன். ப்ரோக்ராம்ஸ் கேட்டுக் கொண்டு நண்பர்களோடு சாட் செய்ய ஆரம்பித்தேன்.

அப்போதான் என்னுடைய உடன்பிறவா தங்கை தேன்மொழியைச் சந்தித்தேன். தேன்மொழி  தங்கையின் அன்பான பேச்சு ftcல் என்னை ரெஜிஸ்டர் செய்ய தூண்டியது. நானும் ftcல் ஒரு யூசர் ஆக மாறினேன். நான் நைட் ஒர்க் பார்க்கும் போது தேன்மொழி சிஸ் வருவாங்க. அப்ப நாங்க பேசிப்போம். ஒர்க் முடிஞ்சா சாப்பிட்டீங்களா ? என ரெண்டு பேரும் கேட்டு எங்களோட கேரிங்க வெளிப்படுத்திக் கொள்வோம்.

அப்புறம் எனக்கு இன்னொரு தோழி இருக்காங்க. அவங்க என்னோட பெஸ்ட் பிரண்ட் ஊஞ்சல் தான். ஒரு நாள் ftcல சாங் கேட்டுகிட்டே விற்பனை பண்ணிட்டு இருந்தேன். அந்த சாங் பாத்தீங்கன்னா மிருதன் படம் மிருதா மிருதா சாங். அப்பதான் ஃபர்ஸ்ட் டைம் ஊஞ்சல் கூட பேசினேன். அந்த ஃபர்ஸ்ட் டாக்க என்னால மறக்க முடியாது.

ஊஞ்சல் ,தேன்மொழி இரண்டு பேரும் நண்பர்கள் என்று எனக்கு முன்ன தெரியாது. அப்புறம் தான் தெரியும். அவங்களோட நட்பு சாதாரண நட்பு இல்லை. ரொம்ப ஆழமான நட்புன்னு கூட சொல்லலாம். எப்படின்னா ஊஞ்சல் சொல்ல நினைக்கிறத தேன்மொழி சொல்லுவாங்க தேன்மொழி சொல்ல நினைக்கிறது ஊஞ்சல் சொல்லுவாங்க. அந்த அளவுக்கு அவங்க ரெண்டு பேரும் அவங்க அவங்க மனச புரிஞ்சு வச்சிருப்பாங்க. இவங்க ரெண்டு பேர் கூட என்னோட பிரண்ட்ஷிப் இருக்குன்னு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்.

ஒரு டைம் பாத்தீங்கன்னா என்னுடைய மனைவி என்னோட குழந்தை ரெண்டு பேருக்குமே உடம்பு முடியல. இது என்னோட நண்பி ஊஞ்சல் தேனு சிஸ் கிட்ட சொன்னேன். அப்ப அவங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு டிப்ஸ் சொன்னாங்க. என்னைக் காட்டிலும் அவங்க ரொம்ப பதறிப் போனாங்க. என்னோட மனைவியும்  குழந்தையும் சரியாகும் வரை நல்லா இருக்காங்களா என்ன விசாரிச்சுட்டே இருந்தாங்க. அவங்க கேட்டது அவ்வளவு சந்தோஷமாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

இப்படி  நண்பர்களை கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி. சமீபத்துல என்னுடைய மனைவிக்கு பிறந்தநாள் வந்துச்சு. அப்ப எனது தங்கை தேன்மொழி எனது  மனைவிக்காக ஒரு கவிதை எழுதி அண்ணா அண்ணியிடம் இந்த கவிதையை காட்டுங்க எனது பிறந்தநாள் பரிசு அண்ணா என்று சொன்னாங்க. நானும் எனது தங்கை தேன்மொழி எழுதிய கவிதையை என் மனைவியிடம் காண்பித்தேன். என் மனைவி அந்த கவிதையை பார்த்ததும் எல்லையற்ற மகிழ்ச்சியில் உங்களுக்கு இப்படி ஒரு தங்கையா என என்னை பாராட்டினாங்க..

ஊஞ்சல் இவங்க சாட்ல யாராச்சும் என்ன தப்பா பேசினாலும் இல்ல அடிச்சாலும் அவங்கள சும்மா விட மாட்டாங்க. அவரு என்னோட பிரண்டுன்னு முன்ன வந்து நிப்பாங்க. அப்புறம் பாத்தீங்கன்னா போன வார ப்ரோக்ராம்க்கு கதை எழுத சொல்லி ரொம்ப என்கரேஜ் பண்ணாங்க. அவங்க இல்லன்னா நான் ரைட் பண்ணி இருக்க மாட்டேன். அந்த ஸ்டோரிய fmல கேட்கிறப்ப அவ்வளவு சந்தோஷம் எனக்கு. தேன்மொழி சிஸ்டர்  கவிதை எழுத சொல்லி என்கரேஜ் பண்ணாங்க. அப்படி தான் இந்த வாட்டி OU கவிதை எழுதினேன். தேன்மொழி ஊஞ்சல் இவங்க ரெண்டு பேரும் எனக்கு கடவுள் தந்த வரப்பிரசாதமா நான் நினைக்கிறேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ftc-கும் நெஞ்சம் மறப்பதில்லை ப்ரோக்ராம்க்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ❤️
3
இணையம் என்ற உலகம் பல உறவுகளை உருவாக்குகிறது
அதில் சில உறவுகள் இரத்த பந்தத்தை விட ஆழமானதாக மாறிவிடுகின்றது
வாழ்க்கை சில நேரங்களில்ல  நாம் எதிர்பார்க்காத இடங்களில்
அழகான உறவுகளை பரிசளிக்கிறது.

அப்படித்தாங்க ஒரு நாள் அரட்டையடிக்க ஆள் இல்லனு ஒரு சாட் ரூம் போனேன்
பொண்ணு id க்கு ஒரு ஹாய் அனுப்பினேன் .. உடனே ரிப்ளை வந்திச்சி
பேர் ஊர் எல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டோம் . 10 நிமிஷம் தான் .. அவங்க போறேன்னு சொன்னாங்க
சரி அக்கா னு சொன்னேன் ...என்னனு சொன்னனு எதிர் கேள்வி ... அக்கா னு சொன்னேன்னு சொல்ல
அவங்க அவ்ளோ ஹாப்பி ஆயிட்டாங்க

அதுக்கு அப்புறம் தினமும் சாட் தான்...நாட்கள் செல்லச் செல்ல அந்த உரையாடல்கள் நம்பிக்கையாக மாறின
என் மகிழ்ச்சிகளை கேட்டு சிரித்தவளும், என் கவலைகளை கேட்டு ஆறுதல் சொன்னவளும் அவள்தான். இரத்தத்தில் பிறக்காதிருந்தாலும், பாசத்தில் பிறந்த சகோதரியாக என் வாழ்க்கையில் இடம் பிடித்தாள்.

தொலைவில் இருந்தாலும், அவளின் அக்கறை எப்போதும் அருகில் இருப்பதைப் போல உணர வைத்தது. அவங்க இருந்தது வேற ஊரு .. கல்யாணத்துக்கு கூப்பிட்டாங்க போக முடியல . அப்புறம் அவங்க வெளிநாடு போய்ட்டாங்க . குழந்தை பிறந்தது ..போட்டோ ல அனுப்பினாங்க ....

ஒரு நாள் நான் வேலைக்காக அவங்க இருந்த ஊருக்கு போயிருந்தேன் . அவங்க husband அண்ட் குட்டீஸ் வந்திருக்காங்க னு சொன்னாங்க பட் அவங்க வர முடில  . எனக்கு குட்டிஸ் பாக்க ஆசை.  husband அவர் வீட்ல தான் இருக்காரு வீட்டுக்கு போ மீட் பண்ணுனு சொன்னாங்க ... அவங்க இல்லாம எப்படி ,  husband  இந்த உறவை எப்படி எடுத்துப்பாரோ னு ஒரு சந்தேகம் , நீ போகலான பேசமாட்டேனு சண்டை வேற ..

ஒரு வழியா குட்டிஸ்க்கு ஒரு டிரஸ் எடுத்திட்டு போனேன், விக்ரமன் படம் எல்லாம் உண்மைதாங்க . அவ்ளோ அன்பா உபசாரிச்சாங்க ..எனக்கு என்ன புடிக்கும்னு தெரிஞ்சிக்கிட்டு அதை சமைச்சி வெச்சிருந்தாங்க அவங்க husband வீட்டுக்காரங்க ...என்னோட ரத்த பந்தமும் அப்படி பண்ணுவாங்கள்னு எனக்கு டவுட் .

மனசே இல்லாம என்ன வழியா அனுப்பி வெச்சாங்க ...இந்தியா வந்தப்போ என் வீட்டுக்கு வந்தாங்க என் அம்மா கூட சாப்டாங்க, பேசினாங்க , உடன் பிறந்தா தான் சகோதரியானு தோணிச்சு ?

அப்படிப்பட்ட ஒரு உறவுதான் இணையம் வழியாக என் இதயத்தில் நுழைந்த சகோதரி உறவு.

இணையத்தில் தொடங்கிய இந்த உறவு, காலப்போக்கில் குடும்ப பாசமாக வளர்ந்தது. இன்று "சகோதரி" என்று அழைக்கும் அந்த ஒரு வார்த்தைக்குள் அன்பும், அக்கறையும், நம்பிக்கையும், மரியாதையும் நிறைந்திருக்கின்றன.

உறவுகள் இரத்தத்தால் மட்டுமல்ல, உண்மையான மனதாலும் உருவாகின்றன என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தது இந்த இணைய வழி சகோதரி உறவுதான். என் வாழ்வின் அழகான பரிசுகளில் ஒன்றாக அவள் என்றும் இருக்கிறாள்

இப்படி பல பல நட்புக்களையும் , பல பல நல்ல உறவுகளையும் இணையம் தந்திருக்கு ,
சில நேரம் கசப்பான நிகழ்வுகளையும் தந்திருக்குதான் . ஆனா ,
அது தான் இந்த அழகான உறவுகளுடைய மதிப்பை இன்னும் உயர்த்துது

உறவுகள் பிறப்பால் உருவாகலாம்; ஆனால் சில உறவுகள் மட்டும் இதயத்தால் பிறக்கின்றன. அப்படிப் பிறந்த என் அன்புச் சகோதரி, என் வாழ்க்கையின் சில பக்கங்களை அழகாக்கியவள்


இந்த பதிவை எழுத வைத்த  தோழி enigma க்கு நன்றி.


****Joker***

4
நான் இப்போ சொல்லப் போறது என்னோட கதை இல்லை. என்னோட ஒரு தோழி என்கிட்ட பகிர்ந்த உண்மை சம்பவம். அந்த சம்பவம் இணைய நண்பர்கள் பற்றிய என்னோட பார்வையையே மாற்றிடுச்சு.

அரவிந்த், நந்தினி இருவரும் சமூக வலைதளத்தின் மூலம் பழகிய நண்பர்கள். நேரில் பார்த்ததே இல்லை. ஆனா தினமும் பேசிக்கிற அளவுக்கு நல்ல நட்பு இருந்தது.

எப்போதும் ஜாலியா பேசிக்கிட்டு இருக்கும் நந்தினி, கொஞ்ச நாளா சோகமான மெசேஜ்களே அனுப்ப ஆரம்பிச்சா.
"எனக்கு யாருமே இல்ல..."

"எவ்வளவு முயற்சி பண்ணாலும் எதுவும் சரியா நடக்கல..."
"நான் இருந்தாலும் இல்லாட்டியும் யாருக்கும் வித்தியாசம் இல்லை..."
முதல்ல அரவிந்த் சாதாரண மனக்கஷ்டம்னு நினைச்சான். ஆனா நாளுக்கு நாள் அவளோட பேச்சுல இருந்த வலி அதிகமா தெரிய ஆரம்பிச்சது.
அப்புறம் அவகிட்ட மெதுவா பேசி கேட்டப்போ தான் உண்மை தெரிய வந்தது.
வீட்டுல பொருளாதார பிரச்சினை. அப்பா வேலை இழந்திருந்தார். தினமும் சண்டை. கல்லூரில சில பேர் அவளோட குடும்ப சூழ்நிலையை வைத்து கிண்டல் பண்ணியிருந்தாங்க. படிப்புலயும் எதிர்பார்த்த மார்க் வரல.
இதெல்லாம் சேர்ந்து அவளை ரொம்ப மனஅழுத்தத்துக்கு தள்ளியிருந்தது. யாரிடமும் மனசு விட்டு பேச முடியாம தனக்குள்ளேயே புழுங்கிக்கிட்டு இருந்தா.

ஒருநாள் இரவு திடீர்னு அரவிந்த்க்கு ஒரு மெசேஜ் வந்துச்சு.
"இனி என்னால முடியாது... எல்லாத்தையும் முடிச்சிடலாம்னு தோணுது..."
அந்த மெசேஜை பார்த்த அரவிந்த் அதிர்ச்சியாயிட்டான். உடனே அவளை தொடர்பு கொண்டு பேச ஆரம்பிச்சான். அந்த இரவு முழுக்க அவளை தனியா விடாம பேசிக்கிட்டே இருந்தான்.

வாழ்க்கையில எந்த பிரச்சினையும் நிரந்தரம் இல்ல, எல்லாத்துக்கும் ஒரு தீர்வு இருக்கும், நீ தனியா இல்லன்னு நம்பிக்கை கொடுத்தான்.
அடுத்த நாள் அவளோட நெருங்கிய உறவினர்களிடம் விஷயத்தை சொல்லி உதவி கிடைக்க ஏற்பாடு பண்ணினான். குடும்பத்தினரும், மனநல ஆலோசகரும் சேர்ந்து அவளுக்கு ஆதரவா இருந்தாங்க.

கொஞ்சம் கொஞ்சமா நந்தினி பழைய மாதிரி மாற ஆரம்பிச்சா. படிப்புல கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களோட கல்லூரியை முடிச்சா. பிறகு ஒரு நல்ல நிறுவனத்துல வேலைக்கும் சேர்ந்தா.

அவளோட வாழ்க்கையில நடந்த இந்த மாற்றத்தை மறக்காம, பிற இளைஞர்களுக்கும் உதவணும்னு மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்ல தன்னார்வலரா பங்கேற்க ஆரம்பிச்சா.
அப்படியொரு நிகழ்ச்சில பேசும்போது அவ சொன்ன வார்த்தை இன்னைக்கும் நினைவுல இருக்கு

"என்னை நேர்ல பார்த்ததே இல்லாத ஒரு இணைய நண்பன், நான் இழந்த நம்பிக்கையை திரும்ப கொடுத்தான். அந்த ஒரு நட்பு இல்லனா இன்று நான் இங்க நின்னு பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்."
இந்தக் கதையை என் தோழி என்கிட்ட சொன்னப்போ, ஒரு விஷயம் புரிஞ்சது.

இணையத்தில் தொடங்குற எல்லா நட்பும் வெறும் டைம் பாஸ் இல்லை. சில நட்புகள் நம்ம சிரிக்கும்போது கூடவே சிரிக்கும். நம்ம விழும்போது கை கொடுத்து தூக்கி விடும். அப்படிப்பட்ட நட்புகள் தான் இதயத்தில் தொடரும் உண்மையான பந்தங்கள்.
😇💜💙💚💛🧡💯
5


ftc  இணையத்தளத்தில் எனக்கு அன்பான நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள்  கிடைத்திருக்கிறார்கள். எல்லா நண்பர்களும் என்னுடன் அன்பாகவும், அறிவுரை கூறுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

நான் ஏதும்  மனசு கவலைப்பட்டால், "அதை எல்லாம் விட்டுவிடு நாங்கள் இருக்கிறோம்" என்று கூறுவார்கள் ஊஞ்சல்,சேது,ஈவில், கணிதன்.இவர்களிடம் தான் நான் mostly பகிர்ந்து கொள்வேன்.
ஈவில் நண்பனாக பல அறிவுரைகள்,ஆறுதல்கள் கூறியமை இன்னும் இணையத்தில் நான் நிலைத்து இருக்கின்றேன்.ஈவிலிடம் இருந்து கற்றுக் கொண்ட விடயங்களை இப்போ நான் என் நண்பர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.

எனக்கு இந்த உலகத்தில் அம்மா, அப்பாவிற்கு அடுத்து பிடித்த பந்தம் என்று சொன்னால், அது அண்ணா. அண்ணாவின் திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட தனிமைதான் எனக்கு ftc  தளத்துக்கு தமிழ் நண்பர்கள் தேடி வரக்காரணம்.அந்த தனிமை ftc நண்பர்கள்,சகோதரர்கள் எல்லாரும் போக்கினது மிக்க மகிழ்ச்சி. இந்த வாரம் நான் அந்த பந்தத்தில் ஒன்றான அண்ணா பற்றி எழுதப் போகிறேன்.

maara guest idஇல் வந்தாங்க. அப்போ நாங்க normal ஆகத்தான் பேசினோம்.register id சேது என்று வந்தாங்க.வரும்போது அவங்க sisன்னு பேசினாங்க.அப்படியே பேசிகிட்டிருந்தோம்.

ஒருநாள்  familyபற்றி பேசினோம்.நான் என்னுடைய அண்ணா, அம்மா, அப்பா என்று பேசும்போது சேது  "எனக்கு தங்கையும் இல்லை.பெண் குழந்தையும் இல்லை.எனக்கு தங்கச்சி இருக்கனும்னு ஆசை" என்று சொன்னார்.அந்தத் தருணம் நான் ஏதோ என் இதயத்தில் ஒரு பாசத்தை உணர்ந்தேன். "நான் உங்களுக்கு தங்கச்சியா இருக்கிறேன் சேது அண்ணா"என்று சொன்னேன் அந்த நொடி.அன்றிலிருந்து எங்களுடைய பந்தம் ஆரம்பித்தது.

எனக்கு சேது அண்ணாவிடம் பேசும்போது என் அண்ணாவிடமே பேசுவது போல் ஒரு பயம் இருக்காது. ftcல்  நிறைய அண்ணாக்கள் இருந்தாலும் ,நான் எல்லாம் shareபண்ணி பேசுறது சேது அண்ணாவிடம் தான். என்னுடைய பாசம் உண்மையென்று புரிந்துகொண்ட அண்ணா.

சிலசமயம் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டு இருப்போம்.
அந்த உணர்வு எப்படி இருக்குமென்றால் நான் என் அண்ணாவுடன் இருக்கிற மாதிரி எனக்கு இருக்கும். அண்ணிக்கு எங்களுடைய அண்ணா தங்கை  உறவு தெரியும்.

அண்ணாவையும் எழுதப் பண்ணனும்னு ஆசையில்  கேட்டபோது "ஐயையோ சிஸ்மா என்ன விட்டிடுங்க எனக்கு இது சரி வராது"வந்தோமா chatபண்ணோமா,songs vibeபண்ணோமா என்று இருக்கேன்னு சொன்னாங்க."இல்லை முடியாதுன்னு எதுவுமில்லை. நீங்க மதுரைத்தமிழ் தானே பண்ணுங்க நான் support பண்ணுறேன்" என்று சொன்னேன்.இப்போ write பண்றாங்க.மிகவும் அழகான தமிழில் அண்ணா கவிதைகள்,nm post பார்க்கும் போது சந்தோசமாக இரு‌க்கு‌ம்.

அண்ணாவிற்கு வேலையில் promotion கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.சில நேரத்தில் நான் அண்ணிக்குத்தான் support பண்ணுவேன்.

சேது அண்ணா  முருகபக்தன் யாத்திரையெல்லாம் போய் வந்தாங்க.அண்ணா நல்லா cook பண்ணுவாங்க.dish pic போடுவாங்க.அண்ணிக்கு தான் thanks சொல்லனும் chatக்கு அண்ணாவை விட்டதால் தான் எனக்கு சேது அண்ணா கிடைத்தாங்க.

oonjal sis எனக்கும் அண்ணாக்கும் friend. நாங்க 3பேரும் கலாய்த்துப் பேசுவோம்.எங்களோட memories, family பற்றி share பண்ணிக்குவோம்.ftc program,forum post பற்றிப் பேசுவோம்.fight பண்ணதில்லை.நமக்குள்ள ஒரு புரிந்துணர்வு இருக்கு.

sometimes எங்க அண்ணா கூடவும் ,சேது அண்ணா கூடவும் பேசலனா missing feel இருக்கும்.ரெண்டு பேருக்கும் msg பண்ணிடுவேன்.

ftcஇல் நானும் சேது அண்ணாவும் பேசுறத பார்த்து சில‌ friends சொல்லி இருக்காங்க அழகான அண்ணா தங்கச்சி உறவு என்று.சில‌பேரு இது உண்மையான பாசமா என்று கேட்டும்  இருக்கிறாங்க.நானும் சேது அண்ணாவும் உடன் பிறக்கவில்லை எ‌ன்றாலு‌ம் நம்ம மனதால் இணைந்த உறவு.எங்களுக்கு அதன் உ‌ண்மை உணர்வு புரியும்.

இணையதளத்தில் இணைந்த பந்தங்கள் என் இதயத்தில் தொடரும்.இவ்வாறான பாசமான பந்தத்தை தந்த ftcகும் ,இந்த தலைப்பை கொடுத்த nm teamகும் நன்றிகள்.

முக்கிய குறிப்பு: உங்கள் பெயர் குறிப்பிடவில்லை எ‌ன்று அன்பான நண்பர்களே,அண்ணாக்களே குறை நினைக்க வேண்டாம்.நீங்களும் என் இதயத்தில் இருப்பீர்கள்.உங்கள் நினைவுகளை உங்கள் பிறந்தநாள் wish இல் சொல்லுவேன்.
























6
ஓவர்-ப்ரொடெக்ட்டிவ் குடும்பத்தில் பிறந்த எனக்கு, என் பாதுகாப்பான வட்டத்துல இருந்து உலகத்தைப் பார்க்கக் கிடைத்த பெரிய விண்டோ இணையம் தான். இண்ட்ரோவேர்ட்-ஆ இருந்த எனக்கு, extrovert-ஆ இருந்தா எப்படி இருக்கும்னு உணர வைத்ததும் அதுதான்.

ஒரு old generic white-box PC-ல்தான் என் ஆன்லைன் லைப்  ஆரம்பிச்சது. நிஜ வாழ்க்கை-ல ரெண்டு மூணு நண்பர்கள்  தான் இருப்பாங்க; ஆனா  ஆன்லைன்-ல எப்போதுமே ஒரு பெரிய சர்க்கிள் இருக்கும். சில நேரம், "இதுவும் நானா?" என்று என்னை நானே கேட்டுக்கிட்டதுண்டு.

முதல் முறை ஒருத்தர் மேல feelings வந்ததும் கூட இணையத்துல-தான். அப்போது அது காதல்னு தெரியல; ஆனா அது வர்க்கவுட் ஆகாதுன்னு மட்டும் தெரிஞ்சது. அதை யார் கிட்டயும் சொல்ல முடியாம,  என்னை நானே distract பண்ணிக்க வந்து சேர்ந்த இடம்தான் சாட் ரூம்  , அந்த சாட் ரூம் தான் பின்னாடி என் வாழ்க்கையில் இவ்வளவு முக்கியமான இடம் பிடிக்கும்னு அப்போ எனக்குத் தெரியாது.

Friends எல்லாரும் Facebook, Twitter, Instagram என்று நகர்ந்து போய்க்கிட்டு இருந்த காலத்தில், நான் எனிக்மா-வாவே இருக்க விரும்பினதாலோ என்னவோ, எனக்கு இந்த சாட் ரூம்  உலகம் போதும்னு  தோணிச்சு.

தேசாந்திரி மாதிரி ஒரு சாட் ரூம் -லிருந்து இன்னொரு சாட் ரூம் -க்கு சுத்திக்கிட்டு இருந்தபோது எனக்கு  அடைக்கலம் கொடுத்தது நம்ம FTC தான். காலேஜ் டேஸ்-ல assignments, submissions’nu, விழித்துக் கழித்த இரவுகள் எல்லாத்துக்கும் கம்பெனி கொடுத்தது FTC மக்கள் தான். Structural design-லிருந்து Photoshop வரைக்கும், audio editing-லிருந்து video editing வரைக்கும், பல விஷயங்களை என் இணையத்தள நண்பர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தாங்க. ஆன்லைன்-ல எப்படி safe-ஆ இருக்கணும்னு கூட. காத்துக்கிட்டது இங்க தான்னு சொல்லாம்

18 வயசுல சாட் ரூம் -க்கு வந்தேன். இன்னிக்கு 30 வயசு. ஆனா இன்னும் நான் odd time-ல ஆன்லைன் வந்தா, "இந்த நேரத்துல என்ன பண்ற தூங்காம?"  என்று அக்கறையா கேட்க ஒரு சிலர் இருப்பாங்க.

ஒரு ஆன்லைன் friend சொல்றாங்கனு ₹10,000 ருபாய்
ஒரு social cause-க்காக யாராவது கொடுப்பாங்களா? ஆனா என் ஆன்லைன் friend என்னை நம்பி donate பண்ணார். அந்த நம்பிக்கைதான் நான் இணையத்துல  சம்பாதிச்ச மிக பெரிய பொக்கிஷம்.  என் வாழ்க்கைல நான் கடந்த பல milestones-ஐ கொண்டாடி இருக்காங்க.  என்னை சந்தோஷப்படுத்தணும்னு, என் real life friends-கிட்டயும் பர்த்டே விஷ் வாங்குற அளவுக்கு எனக்காக efforts எடுத்திருக்காங்க. என்னோட பல முயற்சிகளுக்கு உறுதுணையா இருந்திருக்காங்க. பல மனக்கசப்புகளை judgement இல்லாமல் கேட்டுட்டு ஆறுதல் சொல்லி இருக்காங்க.  என் baking experiments-ஐ கூட சில பேர் சாப்பிட்டு feedback கொடுத்திருக்காங்கன்னா பாத்துக்கோங்க, நான் அவங்களை எவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்கேன்னு.

என் இணையத்தள நண்பர்கள், நண்பிகள் எல்லோருக்குமே இந்தத் தருணத்தில் ஒரு நன்றிய சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு இணையத்தள நண்பி கிட்ட ஒரு நாள் கேட்டேன்: "உங்களுக்கு என்னைப் பற்றி எல்லாமே தெரியும். ஆனா எனக்கு உங்களைப் பற்றி எதுவுமே தெரியாதே?" னு . அதுக்கு அவங்க சொன்னாங்க "உங்ககிட்ட எனக்கு இப்படியே இருக்கிறதுதான் பிடிச்சிருக்கு."னு
அந்த மறைநிலையில் கூட ஒரு மனநிறைவான நட்பு பல வருடங்களைக் கடந்து இன்னும் தொடர்ந்துகிட்டு வருது. சில உறவுகள் அந்த நிலையையும் தாண்டி, என் real life-ஓட ஒரு அங்கமாக மலர்ந்திருக்காங்க.

எண்ணற்ற அறிமுகங்கள்,
பல்வேறு கருத்துகள்,
சில அழகான உறவுகள்,
பல நெகிழ்வான நினைவுகள்.
எங்கோ இருக்கும் ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில் என் குறுந்தங்கல்கள்
—   எல்லாவற்றையும் ரசிக்கின்றேன்.



PS: indha post ah tamil la eludha help pana joker ku thanks[/font]
7
Ftcல் எனக்குக் கிடைத்த மிகவும் நெருக்கமான நண்பர்கள் தேனுவும் சேதுவும் தான். தேனுவும் நானும் எங்கள் வாழ்க்கையில் நடக்கும் சிறிய விஷயத்தையும் பகிர்ந்து கொள்வோம். எங்களுக்குள் இவ்வளவு ஆழமான நெருக்கம் உருவானதற்கு காரணம் என்னையே நான் தேனுவிடம் பார்த்ததுதான்.

அந்த சமயத்தில்தான் சேது எனக்கு ஒரு யூசராக அறிமுகமானார். முதல் முறையாக IT-க்கு இடம் போடும்போது நான் சர்ப்ரைஸா என் frdku ஒரு பாடலை டெடிகேட் செய்றேன் சொல்லாதீங்க என்று சொன்னேன். யாருக்கு டெடிகேட் பண்ணுறீங்க என்று கேட்டார். நான் தேனுக்கு என்று சொன்னவுடன் நானும் தேனுக்குத்தான் டெடிகேட் பண்ணிருக்கேன் என்று சொன்னார்.

அந்த நொடி எங்கள் இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் சேது தேனுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்ககிட்ட பேசும்போது என் சொந்த தங்கச்சியிடம் பேசுற மாதிரி ஒரு உணர்வு கிடைக்குது என்று சொன்னார். நானும் தேனுவும் நெருக்கமான தோழிகள் என்பது அவருக்குத் அன்றுதான் தெரிந்தது. அந்த தருணத்தில்தான் சேதுவும் எங்களோடு நெருக்கமாக இணைந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

எல்லோரையும் சிஸ் என்று அழைக்கும் சேது என்னை ஒரு நல்ல நண்பியாகவே பார்த்தார். அதுதான் எங்கள் நட்பை இன்னும் அழகாகவும் மாற்றியது. நாங்கள் மூவரும் ஒன்றாகப் பேசும் போது எங்களுக்குள் ஒருபோதும் உரிமை சண்டைகள் வந்ததே இல்லை. சேதுவும் நானும் நண்பர்களாக ஒருவரை ஒருவர் கலாய்க்கும் ரீல்ஸ்களை அனுப்பி சிரித்துக் கொள்வோம். அந்த நேரங்களில் தேனு விழுந்து விழுந்து சிரிப்பாள். அதேபோல் தேனுவுக்கு அண்ணன் தங்கச்சி பாசம் நிறைந்த ரீல்ஸ்களை சேது அனுப்புவார். அவற்றைப் பார்க்கும் போது எனக்கும் இப்படி ஒரு அண்ணன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பொறாமைப்பட்டிருக்கிறேன்.

நான் அதிக நேரம் செலவிடும் நண்பர்கள் தேனுவும் சேதுவும் தான். சேதுவிடம் பேசும்போது சேதுக்கு பதிலாக தேனு என்று சொல்லிவிடுவேன். அதை கேட்டு சேது சிரித்துக்கொண்டே உங்க ரெண்டு பேரோட நட்பைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்போதும் இப்படியே இருங்க என்று சொல்லுவார்.

என்னுடைய reallife தோழிகள் குடும்பம் வேலை என்று பிஸியாக இருக்கவே என் நேரத்தை கழிக்க இணையம் வழியாக FTCகு வந்தேன். ஆனால் இங்கே எனக்கு நேரம் போக ஒரு இடம் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் உறவுகளும் கிடைத்தது. யாராவது என்னை காயப்படுத்தும் விதமாக மெயின் ல பேசினால் நான் சொல்லாமலே என் நண்பன் சேது எனக்காக பேசுவார். அந்த அக்கறையில் ஒரு நண்பனின் அன்பை கண்டேன். FM பாடல்கள் கேட்டு vibe பண்ணிகொண்டிருந்த என்னை கதை கவிதை எழுத ஊக்கப்படுத்திய பெருமை முழுவதும் தேனுவையே சேரும். என் திறமைகளை எனக்கே அறிமுகப்படுத்தியவள் என் தேனு. நட்புனா என்ன என்ற புரிதல் உள்ள இவர்கள் இருவரும் எனக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்களாக தான் நினைக்கிறேன்.

ஒரு நாள் இவர்களுடன் பேசாமல் இருந்தால் கூட ஏதோ ஒன்றை இழந்த உணர்வு மனதில் தோன்றும். அந்த அளவிற்கு என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டார்கள். இந்த அழகான நட்பு காலங்கள் கடந்தாலும் எந்த சூழ்நிலையிலும் விலகாமல் வாழ்நாள் முழுவதும் என்னோடு பயணிக்க வேண்டும் என்பதே என் ஆசை. என் வாழ்க்கையின் மிக அழகான அத்தியாயங்களில் ஒன்று தேனு மற்றும் சேதுவுடன் நான் பகிர்ந்து கொண்ட இந்த நட்புதான்....

இங்கே எனக்கு கிடைத்த மற்றொரு நண்பர் முகிலன். இவர் அதிகம் ஆன்லைன் வரவில்லை என்றாலும் இவருடன் பழகிய நாட்களின் நினைவுகளும் மனதில் பசுமையாக உள்ளது.

இணையத்தில் இணைந்த  தேனு,சேது,முகிலன் உடனான நட்பு இதயத்தில் தொடரும். எங்கள் நட்பை இணைத்த ftc க்கு நன்றிகள்.
8

       நட்பு என்னும் பொக்கிஷம்



Ftc in எனக்கு முதல்  நட்பு  தேன்மொழி தான்.  முடிவில்லா நட்பும் அது தேன்மொழி தான்.. நான் ftc ku வந்து 10மாதங்கள் கடந்து விட்டது..

 என் உயிர் நண்பி என்று தான் நான் தேன்மொழி ய கூப்பிடுவேன். &சிங்க பெண்.. சிங்க பெண் என்று ஏன் சொல்லவேன் என்றால்..

தேன்மொழி ku பொறுமை அதிகமாக இருக்கும்.. Guest id user   எப்படி பேசுறாங்களோ. அதற்க்கு  சிறிதும் கடிந்து கொள்ளாமல்.. அப்படி பேசவேண்டாம்.. சொல்லி பொறுமையா சொல்லி குடுப்பாங்க..

நான் யோசிப்பேன் என்னடா இந்த பொண்ணு அவனிடம் பேசி புரிய வைக்கிறாங்க.
மற்ற யாரும் அந்த இடத்தில் இருந்தா சத்தம் போடுவாங்களே.. என்று யோசிப்பேன்..

தேன்மொழியிடம் அந்த நற்பண்பு எனக்கு பிடித்தது..

அப்பொழுது தான் சிங்க பெண் என்று பெயர் வைத்து கூப்பிட்டேன்..

அந்த பொறுமை குணம் எல்லோரிடமும் இருக்காது..

என்னுடைய பேச்சுக்கும் மதிப்பளித்து
தெளிவா ஒவ்வொன்றாய் புரிய வைக்கும் பண்பு  அது தேன்மொழியிடம் தான் இருக்கு என்பேன்..

என் உயிர் நண்பியின் நட்பு கிடைத்தது நான் மிகவும் பாக்கியசாலி  என்று தான் சொல்லுவேன்..
 
நான்  forum போயிட்டேன்.. But எனக்கு சரிவர எதுவும் அந்த time தெரியாது..
கவிதை க்கு try பண்ணலாம் nu  எனக்கு ஆர்வம்..
 English la 1st கவிதை write பண்ணிட்டேன். But enaku தமிழ் ல எழுத வரலை..
 அப்பொழுது தான் உயிர் காட்கும் என் தெய்வம் போல தேன்மொழியிடம் கேட்டேன் write panni குடுங்க.. சொல்லி..

உடனே அவங்க தமிழ் ல  write panni குடுத்தாங்க...

யாரும் தன் வேலையை  பார்க்க தான் செய்வார்கள். ஆனால் எனக்கு தமிழ் ல Write panna வராதுன்னு தெரிந்த உடனே நான் write பண்ணி தரேன்  சொல்லி  தன்னுடைய வேலையை பொருட்படுத்தாமல்
எனக்காக write பண்ணி குடுத்தாங்க. என் உயிர் நண்பி..

அது போலவே  நெஞ்சம் மறப்பதில்லை kum தேன்மொழி தான் தமிழ் ல write panni குடுப்பாங்க..

எனக்கு forum la colour font style & epdi post பண்ணனும் அனைத்தையும் சொல்லி குடுத்தது..
என் உயிர் நண்பி தேன்மொழி தான்..
 
சொல்லி குடுக்க ஒரு மனசு வேணும். அந்த மனசு தேன்மொழியிடம் அதிகாமகவே இருக்கும்...

என்னைய ஒவ்வொரு விஷயத்துக்கும் encorage பண்ணுனது என் உயிர் நண்பி தேன்மொழி தான்..

அதன் பிறகு தான் நான் தமிழ் ல கவிதை write பண்ண கற்று கொண்டேன்..

நல்ல நட்புவை நான் ஒரு பொழுதும் இழக்க தயார் இல்லை..

என் கோபங்களை சகித்து கொண்டு  சிறப்பாக நட்பு என்னும் வட்டத்தில்  ஓர் நிலையாக நின்றதும்..
என் தாயிற்கு பிறகு எனக்கொரு தோழி இருக்கிறாள் என்று பெருமை கொள்ளும் இடத்தில் நட்பு என்ற  தூய இடத்தில் பிரதிபலிக்கும்  என் உயிர் நண்பி.. தேன்மொழி.

நம் நட்பை ஒரு நாளும் மறக்க  இயலாது..
 
தேன்மொழி என் உயிர் நண்பி என்று சொல்வதில் நான்  மிகவும் பெருமை அடைகிறேன்..

என் உயிர் நண்பி எல்லா செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ  எல்லாம் வல்ல இறைவனிடம் என்றென்றும்  என்னுடைய துஆ (prayer ) உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்.. வாழ்க பல்லாண்டு..

Priyamudan
இவன்
அன்பு தோழா
ரஹ்மத்துல்லா

   TQ
9
Happiest Birthday Butterfly 🦋

10
Happiest Birthday Abinesh & STR 🎂 🎈

Pages: [1] 2 3 ... 10