1
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-007 (என் வாழ்க்கையை மாற்றிய தோல்வி)
« Last post by Shreya on Today at 03:32:38 AM »எப்படி ஆரம்பிக்கிறதுன்னே தெரியல.. என் அப்பா கண்கலங்கி நின்ன அந்த ஒரு தருணம் இப்போ நினைச்சாலும் மனசுக்குள்ள ஏதோ பண்ணும். ஒரு பெண் குழந்தை இருந்தாலே இந்த காலத்துல வளர்க்குறது எவ்வளவு கஷ்டம்னு சொல்லுவாங்க, ஆனா நாங்க மூணு பொம்பள பிள்ளைங்க, ஒரு அண்ணா.
அப்பா முதல்ல காய்கறி வியாபாரம் பண்ணிட்டு இருந்தாங்க, அப்புறம் தான் அரிசி வியாபாரம் ஆரம்பிச்சாங்க. தொழில் ரொம்ப சூப்பரா போயிட்டு இருந்தது, நல்ல லாபமும் கிடைச்சது. அந்த நேரத்துல தான் ஒரு தம்பதி கடைக்கு வந்து அஞ்சு மூட்டை அரிசி கேட்டாங்க. பேசிட்டே இருக்கும்போது, "அண்ணாச்சி எங்ககிட்ட கொஞ்சம் நகை இருக்கு, உங்க பொண்ணுங்களுக்கு தேவைப்படும், கம்மி விலைக்கு தர்றோம்"னு ஆசை காட்டினாங்க.
அம்மா அப்பவே தடுத்து பார்த்தாங்க, "வேணாம்ங்க, இது சரி வராது"ன்னு. ஆனா அப்பா, பிள்ளைகளுக்கு உதவுமேங்கிற ஆசையில அவங்க சொன்னதை நம்பி, ஓடிப்போய் பணத்தைக் கொடுத்துட்டு அந்த நகையை வாங்கிட்டு வந்தாங்க.
அம்மாவுக்கு மனசு கேக்கல. "எதுக்கும் நகைக்கடையில கொடுத்து ஒரு தடவை சரி பார்த்துட்டு வந்துடுங்க"ன்னு சொன்னாங்க. அப்பா, "இல்லமா, அதெல்லாம் நல்ல தங்கம் தான், நான் பார்த்து தான் வாங்கினேன்"னு சொல்லிட்டு தான் கடைக்கு கொண்டு போனாங்க. ஆனா அங்க போய் பார்த்தா, அது எல்லாமே போலி நகை.
அவங்க முதல்ல காமிச்ச நகை வேற, ஆனா கை மாத்திக் கொடுத்த நகை வேற. அப்பாவுக்கு உலகமே இருண்ட மாதிரி ஆகிடுச்சு. வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட "ஏமாந்துட்டேன் மா"ன்னு சொல்லி அவர் கண்கலங்கினப்போ, அம்மாவே மனசால உடைஞ்சு போயிட்டாங்க. இருந்தாலும் அப்பாவைத தேத்தினாங்க. அந்த ஏமாற்றம் வெறும் ஆரம்பம் தான்.
அதுக்கப்புறம் அப்பா ஆரம்பிச்ச எந்த வியாபாரமும் கை கொடுக்கல. அடுத்தடுத்து நஷ்டம்... இன்னொரு பக்கம் அம்மாவுக்கு வரிசையா நோய்கள். கேன்சர், ஹார்ட் ப்ராப்ளம்னு அம்மா உயிருக்கே போராடிட்டு இருந்தாங்க. சொந்தக்காரங்க எல்லாம் "பிள்ளைங்களை படிக்க வைச்சது போதும், வேலைக்கு அனுப்பு"னு சொன்னப்போ, அம்மா மட்டும் உறுதியா, "என்ன ஆனாலும் என் பிள்ளைங்க படிக்கணும்"னு வைராக்கியமா இருந்தாங்க.
இன்னைக்கு நாங்க நாலு பேரும் ஒரு நல்ல நிலையில இருக்கோம்னா, அதுக்கு அப்பாவோட அந்த விடாமுயற்சியும், அம்மாவோட தன்னம்பிக்கையும் தான் காரணம்.
எல்லாவற்றையும் விட முக்கியமா, அன்னைக்கு அப்பா ஏமாந்த அந்த ஒரு நிமிஷம் எனக்கு ஒரு பெரிய பாடத்தை சொல்லி thanthathu "வாழ்க்கையில எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும், நாம யாரையும் ஏமாத்தி மட்டும் வாழ கூடாது!"
அப்பா முதல்ல காய்கறி வியாபாரம் பண்ணிட்டு இருந்தாங்க, அப்புறம் தான் அரிசி வியாபாரம் ஆரம்பிச்சாங்க. தொழில் ரொம்ப சூப்பரா போயிட்டு இருந்தது, நல்ல லாபமும் கிடைச்சது. அந்த நேரத்துல தான் ஒரு தம்பதி கடைக்கு வந்து அஞ்சு மூட்டை அரிசி கேட்டாங்க. பேசிட்டே இருக்கும்போது, "அண்ணாச்சி எங்ககிட்ட கொஞ்சம் நகை இருக்கு, உங்க பொண்ணுங்களுக்கு தேவைப்படும், கம்மி விலைக்கு தர்றோம்"னு ஆசை காட்டினாங்க.
அம்மா அப்பவே தடுத்து பார்த்தாங்க, "வேணாம்ங்க, இது சரி வராது"ன்னு. ஆனா அப்பா, பிள்ளைகளுக்கு உதவுமேங்கிற ஆசையில அவங்க சொன்னதை நம்பி, ஓடிப்போய் பணத்தைக் கொடுத்துட்டு அந்த நகையை வாங்கிட்டு வந்தாங்க.
அம்மாவுக்கு மனசு கேக்கல. "எதுக்கும் நகைக்கடையில கொடுத்து ஒரு தடவை சரி பார்த்துட்டு வந்துடுங்க"ன்னு சொன்னாங்க. அப்பா, "இல்லமா, அதெல்லாம் நல்ல தங்கம் தான், நான் பார்த்து தான் வாங்கினேன்"னு சொல்லிட்டு தான் கடைக்கு கொண்டு போனாங்க. ஆனா அங்க போய் பார்த்தா, அது எல்லாமே போலி நகை.
அவங்க முதல்ல காமிச்ச நகை வேற, ஆனா கை மாத்திக் கொடுத்த நகை வேற. அப்பாவுக்கு உலகமே இருண்ட மாதிரி ஆகிடுச்சு. வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட "ஏமாந்துட்டேன் மா"ன்னு சொல்லி அவர் கண்கலங்கினப்போ, அம்மாவே மனசால உடைஞ்சு போயிட்டாங்க. இருந்தாலும் அப்பாவைத தேத்தினாங்க. அந்த ஏமாற்றம் வெறும் ஆரம்பம் தான்.
அதுக்கப்புறம் அப்பா ஆரம்பிச்ச எந்த வியாபாரமும் கை கொடுக்கல. அடுத்தடுத்து நஷ்டம்... இன்னொரு பக்கம் அம்மாவுக்கு வரிசையா நோய்கள். கேன்சர், ஹார்ட் ப்ராப்ளம்னு அம்மா உயிருக்கே போராடிட்டு இருந்தாங்க. சொந்தக்காரங்க எல்லாம் "பிள்ளைங்களை படிக்க வைச்சது போதும், வேலைக்கு அனுப்பு"னு சொன்னப்போ, அம்மா மட்டும் உறுதியா, "என்ன ஆனாலும் என் பிள்ளைங்க படிக்கணும்"னு வைராக்கியமா இருந்தாங்க.
இன்னைக்கு நாங்க நாலு பேரும் ஒரு நல்ல நிலையில இருக்கோம்னா, அதுக்கு அப்பாவோட அந்த விடாமுயற்சியும், அம்மாவோட தன்னம்பிக்கையும் தான் காரணம்.
எல்லாவற்றையும் விட முக்கியமா, அன்னைக்கு அப்பா ஏமாந்த அந்த ஒரு நிமிஷம் எனக்கு ஒரு பெரிய பாடத்தை சொல்லி thanthathu "வாழ்க்கையில எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும், நாம யாரையும் ஏமாத்தி மட்டும் வாழ கூடாது!"

Recent Posts



