Recent Posts

Pages: [1] 2 3 ... 10
2
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 03:19:39 PM »
3
வருஷத்துக்கு ஒரு முறை நடக்குற குறிச்சிகுளம் திருவிழா. சுத்துப்பட்டு ஊர்ல இருந்துலாம் வருவாங்க. ஏழூரு மக்க சேர்ந்து நடத்துர திருவிழா, ஜே ஜேன்னு இருக்கும். வெளியூர் என்ன, வெளிநாட்டுக்கே போயிருந்தாலும் ஊர்காரங்க குறிச்சிகுளம் திருவிழாக்கு மட்டும் சரியா வந்துடுவாங்க. எங்க சாமி 'திரௌபதி அம்மன்'. துடியான சாமின்னு சொல்லுவாங்க, ஆனா அம்மன் முகத்தை பார்த்தா அவ்வளவு அழகா கருணை பொங்கி வழியும். சின்ன வயசுல ஸ்கூலுக்கு லீவு போட வச்சு கூட்டிட்டு போயிடுவாங்க. கலர் கலரா கடைங்க, விதவிதமா பலூன் பறக்கும், ஊர் முழுக்க கலர் பேப்பர் தொங்கவிட்டிருப்பாங்க. கோலாகலாமா இருக்கும் ஊரே. சின்ன ஊரு தான் ஆனா ஒவ்வொரு வீட்டுக்கும் அஞ்சு பத்து பேரு வெளியூர்ல இருந்து வந்திருப்பாங்க. வாசல்ல வச்சு பொங்கல் வைக்கிறது, சமைக்கிறதுன்னு கலகலப்பா இருக்கும். ஊரு, ஆள் பேரல்லாம் தெரியாட்டியும் எல்லாரும் ஒன்னுமன்னா சேர்ந்து வேலைய பார்த்துக்கிட்டு இருப்பாங்க.

திருவிழாவும் சும்மா கிடையாது, கொடியேத்ததுல ஆரம்பிக்கும் திருவிழா. கொடியேத்தனவுடனே ஊர்காரங்க காப்பு கட்டுவாங்க, அது முடிஞ்சு முத நாளே மொளபாரி போடுவாங்க, கடைசி நாள் அந்த மொளபாரி எல்லாம் மொளைச்சு, முளைப்பாரிக்கட்டு நடக்கும். எல்லாரு வீட்லயும் முளைப்பாரி போடுவாங்க. தினமும் தெருகூத்து நடக்கும், மகாபாரத சொற்பொழிவெல்லாம் நடக்கும். அம்மன் தினமும் வீதி உலா வருவாங்க தேர்ல, பெரிய தேரு கடைசி நாள் தான் வரும். அம்மன் உலா வரும்போது எல்லார் வீட்டு வாசல்லயும் தண்ணி தெளிச்சி கோலம் போட்ருவாங்க. எல்லா தெருமுக்குலையும் நின்னு தீபாரதனை காட்டி விபூதி பூசிவிடுவாங்க. சில வீடுகள்ல தனியா சாமிக்கு தேங்காய் உடைப்பாங்க.

கடைசி நாள் தேர்திருவிழாக்கு முன்னமா தீமிதி திருவிழா நடக்கும். நான்லாம் சின்ன வயசுல தீமிதினா கொத்திக்கிற நெருப்புல நடந்து வருவாங்கன்னு நினைச்சிப்பேன், ஆனா தீங்கங்கும் சாதாரணமில்ல கொழுந்துவிட்டு எரியிற தீ மாதிரி தான், கங்கு போடும்போதே அனலடிக்கும். அந்த தீமிதியும் மொட்ட வெயில்ல தான் நடக்கும். படத்துல காட்ற மாதிரி மெதுவாலாம் நடந்து வந்துட்டு இருக்கமாட்டாங்க. திபுதிபுதிபுன்னு ஓடிவருவாங்க அந்த பக்கத்துல இருந்து இந்த பக்கத்துக்கு. சின்ன பசங்களை பார்க்க கூடாதுன்னு சில சமயம் வீட்ல இருக்கவங்க இழுத்துட்டு போயிருவாங்க.

அப்புறம் வரும் பாருங்க இந்த திருவிழாவோட ஹைலட்டே கோவில் பக்கத்துல இருக்கிற க்ரவுண்ட்ல பெரிய சிலை மாதிரி செம்மண்ண புடிச்சி வச்சிருப்பாங்க படுத்த வாக்குல, சும்மா சின்ன செலயெல்லாம் இல்ல ரொம்ப பெருசா புடிச்சி வச்சிருப்பாங்க. பார்க்கவே பயங்கரமா இருக்கும்.  இத நாங்க அரவான் களபலின்னு சொல்லுவோம். ஊர் கூடி பொங்கல் வச்சு முடிச்ச அப்புறம், அரவான் பலி கொடுக்கிறது நடக்கும். சின்ன பசங்க பார்க்க கூடாதுன்னு தான் சொல்லுவாங்க ஆனா நாம என்னைக்கு கேட்டிருக்கோம். பெரிய சாமி அரிவாள வச்சு அரவான் மேல இருக்க கோழிய வெட்டி அரவான பலி கொடுத்து அதுல ரத்த சாதத்த பிசைஞ்சு சுத்தி இருக்க எல்லார் மேலயும் வீசுவாங்க.

அந்த களபலிய பார்க்கவே கூட்டமான கூட்டமா இருக்கும். பக்கத்துலயே ஏரிக்கரை வேற, இளந்தாரி பசங்கள்லாம் மரத்துமேல ஏறி உட்கார்ந்துட்டு பார்ப்பாங்க, சின்னபசங்கள்லாம் அம்மா, ஆத்தா புடவைக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு பார்ப்பாங்க. பூசாரி சாமியாடுறத பார்க்கவே பயங்கரமா இருக்கும். அப்புறம் ஊர் பொம்பளைங்கள்லாம் முளைப்பாரி தூக்கிட்டு வந்து கோவில்ல பொங்கல் வச்சு சாமி கும்பிடுவாங்க. தேர் வடம் பிடிக்கவும் அவ்வளவு கூட்டமா இருக்கும். ஆடி அசஞ்சு வர்ர தேர மாதிரி மனசும் இதையல்லாம் அச போடுது.
4




Hi MiCA Here...
Hi FTC,,Thank You For My Forum Registration..!!


நான்  Chat-க்கு reg user இல்லை...எப்பவாவது guest id  chat வருவதுண்டு...ஆனால் FTC Fm  நிகழ்ச்சிகளை நான் வெளியே இருந்தவாறே  கேட்பதுண்டு...

அண்மையில் நான் புதிதாக கே‌ட்ட நிகழ்ச்சி நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் ( ரயில் பயணங்கள்) அதை பற்றிய  கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்..!!



✍ எழுத்தாளர்கள்:

இந்த நிகழ்ச்சியில்  ரயில் பயணங்களை பற்றி  பகிர்ந்து கொண்ட அத்தனை  கதைகளும்  அருமை...உங்களுடைய  ஒவ்வொரு கதை ஒவ்வொருவருடைய  உன்னதமான  உணர்வுகள்...ஒவ்வொரு கதை படிக்கும் போதும் அல்லது FM -இல் கேட்கும் போது கண்களை  மூடி யோசிச்சா
அத்தனையும்  கடந்த கால  நினைவுகளின்  பொக்கிஷமே👏


🎤 தொகுப்பாளினி:

RJ...எழுதிய கதைகளை  அப்படியே  வாசிக்காம...கதைகளை  அத்தனையும்  உள்வாங்கி  தானே அந்த  கதாபாத்திரமாகவே  மாறி  கேக்குற users-க்கு  எளிதாக  புரிய  வைத்த  விதம்  அற்புதம்  தோழி....ரயில் அனுபவங்களை  எழுதியவர்கள்தான்  நம்மிடம் கதை சொல்றாங்க போல,,,அப்படினு எங்களுக்கும்  கதை  எழுதியவர்களுக்கு  அந்த  உணர்வை கொண்டு வந்தது  RJ- வின்  தனிச்சிறப்பு👏



🎧 EDITOR:

ஒரு  movie- க்கு எப்படி  பின்னணி இசை  முக்கிய பங்கு வகிக்கிறதோ  அது போல தான் இந்த  நிகழ்ச்சியின்  பின்னணி  இசையும்...எங்க  என்ன தேவை  என்று  நல்ல  புரிஞ்சிக்கிட்ட,,நிகழ்ச்சி  கேட்ட  அத்தனை பேர்  கையை  பிடித்து  கொண்டு உங்க பின்னணி இசையில்   எங்களை பின் தொட‌ர வைத்தது  இந்த  நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தியது👏


📌 இறுதியாக:

இந்த  நிகழ்ச்சி  கேட்டு  ரசித்த  எங்க  எல்லாருக்கும்  இது போன்ற  அனுபவம் இருக்கலாம்  சிலருக்கு  இல்லாமலும்  இருக்கலாம் ஆனால் இந்த  நிகழ்ச்சி ஒளி பரப்பான அந்த  தருணத்தின்  பயணம்  உண்மையிலேயே  எங்கள் மனதில் என்றென்றும் நெஞ்சம் மறப்பதில்லை...!!!

வாழ்த்துக்கள்...நன்றி🙏
5
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 09:18:20 AM »
6
அவள் கண்களில் அச்சம் இல்லை,
தலை நிமிர்ந்து நடந்தாள்
உலகம் விதித்த எல்லைகள்
அவள் கனவுகளுக்கு
சுவர் ஆகவில்லை❤️
7
  திருவிழா கொண்டாட்டம்:
    அப்பா கடை நடத்திட்டு வந்ததால அதிகமா எங்கும் வெளிய போனது இல்ல.... ஆனா ஆண்டுக்கு ஒருமுறை மாதா கோயில் திருவிழாக்கு கூட்டிட்டு போவாங்க... Bus ல பயணம்.... சந்தோஷமா அம்மா அப்பா அக்கா கூட கிளம்பிடுவேன்... அங்க இருக்குற கடைங்க மற்றும் ராட்டினத்துக்காக.... எப்பவாது கிடைக்கும் வாய்ப்ப தவர விடலாமா??? கண்டிப்பா இல்ல...

கோயில் கிட்ட போனது மனசு முழுக்க இருக்கும் இடம் பொம்ம கடை தான்... ஆனா அப்பா நேரா கோயில் குள்ள கூட்டிட்டு போயிடுவாங்க...நம்ம மனசோ ரங்க ராட்டினதுல சுத்திட்டு இருக்கும். எப்போ டா கோயில விட்டு போவோம் ராட்டினத்துலன்னு ஏறுவோம் ன்னு இருக்கும்.

ஒரு வழியா திருப்பலி ஒண்ணு முடிஞ்சதும் வெளியே இருக்கும் திருவிழா கடைக்கு கூட்டிட்டு வருவாங்க... எத வாங்க எத விடன்னு மனசு அல்லோல் படும்... கண்ணு கடைய முழுசா ஆராஞ்சு வழக்கம் போல ஒரு முடி வச்ச பொம்மை ல போய் நின்னுடும்... கைக்கு வந்த பொம்மைக்கு என்ன என்ன hair style பண்ணலாம் ன்னு யோசிசுட்டே அடுத்து ராட்டினம் தான் 😁...

கூடை மாதிரி இருக்குற இருக்கை... அக்காவும் நானும் ஒண்ணா இருந்தோம். ரெண்டு சுத்து தான் சுத்திருக்கும், அம்மா ராட்டினம் போய்ட்டு வந்து ice cream சாப்டு ன்னு சொன்னத மீறி சாப்ட ice cream தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடுசு... வயத்த பிரட்டிட்டு வர, சரியா மேல போகும் போது கீழ இருந்தவங்க தலையில அபிசேகம் தான்... பாவம் யார் பெத்த பிள்ளையோ... ராட்டினம் சுத்தி முடிச்சதும் அங்க ஏன் நிக்கிறேன்... இறங்குனதும் யார் கிட்டையும் மாட்டாம தப்பிச்சு அம்மா இருந்த இடத்துக்கு போயாச்சு.... அக்காவும் நானும் ஒரே மாதிரியான colour dress ... பாவம் அவ எனக்கு பதிலா மாட்டிகிட்ட... அக்கா இருக்கிறது அப்போ தான் நிம்மதியா இருத்தது... அப்பாட நம்ம தப்பிசோம் 😁

முடி வச்ச பொம்ம, நிறைய பலகாரம், கமல், வளையல் கொஞ்சம் பக்தி வருடா வருடம் இதே கத தான்... ஆனா அதுக்கு அப்புறம் ராட்டினம் போய்ட்டு வந்து தான் ice cream 🍨

நகர கூண்டு வாழ்க்கைக்கு ஜன்னல் வழி காற்று திருவிழா 😊😊
9
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:40:40 AM »
10
நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எங்கள் கிராமத்தில் ஆண்டுதோறும் ஒரு மாத காலம் விரதம் இருந்து பழனிக்கு நடந்து சென்று பழனி முருகனை தரிசிப்பது வழக்கம் .அவ்வாறு செல்லும் போது தினம்தோறும் சில விதிமுறைகள் .விதிமுறைகளை பின்பற்றி  இறை வழிபாடு செய்ய வேண்டும்.
      தினமும் அந்த விதிமுறைகள் என்னவென்றால் காலை நேரத்தில் மிக வேகமாக தூங்கி எழ வேண்டும். பின்  குளித்துவிட்டு இறைவனை வழிபட வேண்டும் .அதேபோல் மாலையிலும் குளித்து இறைவனை வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதினால் உடல் சுறுசுறுப்பாகவும் மனதில் தெளிவான சிந்தனையும் கிடைக்கும்.
      அந்த நாள் முழுவதும் மிக மகிழ்ச்சியாகவும் ,மிகச் சிறப்பாகவும் இருக்கும். இவ்வாறு ஒரு மாத காலம் விரதம்  இருந்து நானும் எனது நண்பர்களும் பழனி பாதயாத்திரை செல்வோம். இதைப் போல  போன ஆண்டு இறுதியிலும் பாதயாத்திரை செல்ல தயாரானோம் .
      நானும் எனது நண்பர்களும் அப்படி தயாராகும் போது, எனது  தாய் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்று செல்ல தயாரானேன். அவ்வாறு பாதயாத்திரை செல்லும் போது என் நண்பர்களுடன் நகைச்சுவை செய்து கொண்டு முருகன் பாடல்கள் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டு மிக மகிழ்ச்சியோடு செல்வோம் .அப்படி காட்டின் வழி செல்லும் போது வழியில் நிற்கும் கல் கூட பூவாக தெரியும் அதிசயம் .அதிசயத்தை நானும் எனது நண்பர்களும் உணர்வோம்.   சாலையோர இருபுறமும் கண்ணுக்கு அழகான பூக்களும் ,பட்டாம்பூச்சிகளும் அங்கும் இங்கும் ஓடுவது  மிக அழகாக இருக்கும் .அதனை கண்டு கொண்டேன்.   
      எங்கள் பாதயாத்திரை நாங்கள் தொடர்வோம் மிக மகிழ்ச்சியாக ....எங்கள் கிராமத்தில் இருந்து பழனிக்கு 120 கிலோமீட்டர் தூரம் ஆகும் .ஒரு நாள் ஒன்றுக்கு 40 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும் காலையில் 20 கிலோமீட்டர் நடந்து சென்ற பின் ஓய்வெடுப்போம் .அதேபோல் மாலையில் 20 கிலோமீட்டர் நடந்து சென்ற பின் ஓய்வு எடுப்போம் .இவ்வாறு எங்கள் பாதயாத்திரை மூன்று தினமாக தொடரும்.   
     இவ்வாறு நடந்து செல்லும் போது நானும் எனது நண்பர்களும் கோயில்களில்  அன்னதானம் இருக்கும். அந்தக் கோயில்களில் அமர்ந்து மிக மகிழ்ச்சியாக உணவுகளை சாப்பிட்டு மகிழ்வோம். இவ்வாறு செல்லும் போது கிடைக்கும் தின்பண்டங்களை நானும் எனது நண்பர்களும் பகிர்ந்து சாப்பிட்டு கொண்டே எங்கள் பாதயாத்திரை தொடர்வோம். இவ்வாறு செல்வதினால் கால் வலி தெரியாது .நண்பர்களுடன் நடந்து செல்லும் மகிழ்ச்சி மட்டுமே மனதில் நிற்கும் . 
    எப்பொழுது இந்த நாள் வரும் என்று காத்துக்  கொண்டிருப்போம் .எங்கள் கிராமத்தில் நாங்கள் இவ்வாறு மூன்றாம் நாள் முடிவில் பழனியை சென்றடைவோம். பிறகு நண்பர்களோடு பழனி மலையில் அமர்ந்திருக்கும் முருகனை தரிசித்து முருகனின் அருளை பெறுவோம். பிறகு அம்மா அப்பா கொண்டு வந்திருக்கும் வாகனத்தில் அமர்ந்து எங்கள் கிராமத்தை சென்றடைவோம். அங்கு எங்கள் வீட்டில் உணவுகளை சமைத்து முருகனுக்கு விரதத்தை முடிப்போம்.இது எனக்கு மறக்க முடியாத திருவிழா கொண்டாட்டம்....
Pages: [1] 2 3 ... 10