Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
FTC ஓவியம் உயிராகிறது 400 வது நிகழ்ச்சி

இந்த பயணத்தின் பாதை எளிதல்லவே,
ஆனால் நம்மிடம் துணிவு இருந்தது
நம்பிக்கை தீபம் எப்போதும் எரிந்தது
வியர்வைத் துளிகள் எல்லாம் இன்று வைரம் ஆனது,

இணைந்து நடந்தோம் கை கோர்த்து,
இலக்கை அடைந்தோம் மனம் நிறைத்து
400 வாரங்கள் ஒரு சாதனை அல்ல
அது ஒரு அழகான வாழ்வியல்

கவிதை எழுதிட துடித்த உள்ளங்கள் ஏராளம்
இரு கை நீட்டி வரவேற்ற FTC  மனசோ தாராளம்
பிழைகள் இருப்பின் தோள் தட்டி சொல்லி தந்தது 
அழகாய் கவிதை வடிப்பின் கை தட்டி ஆர்ப்பரித்தது

நம்பிக்கை நம் வழிகாட்டி ஆனது,
நேர்மை நம் பலமாக மாறியது.
ஒன்றிணைந்த முயற்சி வெற்றி கண்டது,
ஒவ்வொரு இதயமும் பெருமை கொண்டது.
சிறு முயற்சிகள் சேர்ந்து மலை ஆனது,
அந்த மலைமேல் நம் கொடி பறந்தது.

ஒன்றிணைந்து கொண்டாடும் நாள் இன்று,
உழைப்பின் மணம் வீசும் நினைவுகள் நன்று.
சின்ன தொடக்கம் இன்று பெரிய சாதனை,
எல்லோரின் முயற்சியே அதன் காரணமாய்

இன்னும் பல உச்சிகள் எட்ட வேண்டும்,
இன்னும் பல வெற்றிகள் சேர வேண்டும்.
நம் முயற்சி என்றும் நிற்காது,
நம் சாதனை எப்போதும் தாழாது.

உழைப்பே நம் வாழ்வின் மூச்சு,
வெற்றியே நம் இதயத்தின் ஓசை
இன்றைய கொண்டாட்டம் தொடக்கம் தான்,
காத்திருக்கின்றன வெற்றிகள் பல நமக்காய்
வீறுநடை போட்டு நடப்போம்


***Joker***
5
ஓவியம் உயிராகிறது – என் உள்ளத்தின் ஓர் பயணம்

FTC-யின்
“ஓவியம் உயிராகிறது” என்ற
கவிதை உலகில் நான் நின்ற நாள்,
அது ஒரு ஆரம்பம் மட்டுமல்ல,
ஒரு அடையாளத்தின் பிறப்பு.

முழு ஒரு ஆண்டு கூட ஆகவில்லை,
ஆனால் என் பெயருக்கு முன்
ஒரு சிறிய ஒளி வந்தது
அது இந்த மேடையால்தான்.

இங்கு எழுத்துகள்
வெறும் வார்த்தைகள் அல்ல,
மதிக்கப்படுகின்றன,
பாராட்டப்படுகின்றன,
அன்போடு செதுக்கப்படுகின்றன.
ஒரு வரி தடுமாறினால்
திருத்தம் சொல்லும் நண்பர்கள்,
ஒரு உணர்வு மலர்ந்தால்
அதை உயர்த்தி நிறுத்தும் இதயங்கள்
இவை அனைத்தும் இங்கே கிடைத்த வரங்கள்.

இந்த நிகழ்ச்சி
ஒரு virtual media மேடையல்ல,
மறைந்திருக்கும் திறமைகளை
உலகிற்கு அறிமுகப்படுத்தும்
ஒரு அழகான வாயில்.
பயந்து நின்ற மனங்களை
பாசமாக இணைத்து,
 “உன்னால் முடியும்” என்று சொல்லி
அவர்களின் திறமையை வெளிக்கொணரும்
ஒரு அருமையான பாலம்.

இங்கே கண்ட கவிதைகள்
என் உள்ளத்தில் பதிந்தன…
அதில் ஒரு கவிதையை நான்
என் கல்லூரியில்
மகளிர் தினத்தன்று வாசித்தேன்
அந்த நொடி…
மெய் சிலிர்த்த பார்வைகள்,
கைத்தட்டல்களின் ஓசை,
இதயமார்ந்த பாராட்டுகள்
அவை எல்லாம் அந்த கவிஞருக்கே சென்றது.
அந்த ஒரு நிமிடம்
இந்த மேடையின் மதிப்பை
இன்னும் உயர்த்தியது.

நான் அதிகம் பேசவில்லை இங்கே,
ஆனால்…
கவிதைகளோடு நான்
நிறைய பேசிக் கொண்டிருக்கிறேன்.
பதிவேற்றும் முன்
“இது இன்னும் அழகாகலாம்” என்று
உரிமையோடு சொல்லும் நண்பர்கள்
அவர்கள் என் எழுத்தின் வழிகாட்டிகள்.

400 வாரங்கள் கவிதைகளை கடந்த இந்த பயணம்
இது ஒரு எண்ணிக்கை அல்ல,
400 இதயங்களின் துடிப்பு.
இன்னும் பல வாரங்கள், நூறுகள் ஆக
இந்த மேடை மலரட்டும்…
மேலும் பல திறமைகள்
அடையாளம் காணப்படட்டும்…
இந்த சமுதாயத்திற்கும்,
அந்த திறமையாளர்களுக்கும்
ஒளி தரும் இந்த நிகழ்ச்சி
என்றும் தொடரட்டும்.

சமூகத்தை நாடிய
என் உள்ளத் தாகத்திற்கு
அடையாளம் கொடுத்தது
இந்த நிகழ்ச்சி.
என்னை நான் கண்டெடுத்த அந்த நிமிடங்களுக்கு…
என் நன்றிகள் அல்ல
என் மரியாதை.

இவ்வளவு அருமையான
ஒரு உலகத்தை உருவாக்கிய
FTC-க்கு
என் காதல்,
என் மரியாதை,
என் மனமார்ந்த நன்றிகள்.

LUMINOUS 😇🧡💛💚💙💜🌹🧚‍♀️
7
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 09:39:34 AM »
8
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 06:19:51 AM »
9


வெற்றி விழாவும் கேப்ரியலும்

FTC பல நண்பர்களை சேர்த்த
மிக பெரிய ஆசான்...
வெற்றி விழா என்பது
சாதாரணமாக கிடைத்து விடாது...

ஒரு கையின் ஓசையினால்
சத்தம் வராதது போல
பல கைகள் சேர்ந்து தான் ஓசை வரும்...

அது போல தான் FTC நாயகனே...
தன் சிந்தனையில் நண்பர்களை உருவாக்க
FTC நாயகனே நிறைய
கஷ்டப்பட்டார் என்பது நமக்கு தெரியாத ஒன்று...

ஓவியம் உயிராகிறது 1 முதல் 400 வரை
உயிர் கவிஞர்களை உருவாக்கிய
பெருமை FTC நாயகனையே சேரும்...

தினமும் ஒரு நிகழ்ச்சியை
ஒலிபரப்ப செய்யும் நாயகனே
உன்னை எந்நாளும் மறக்க இயலாது...

FTC நாயகனே உங்களை பாராட்ட
எனக்கொரு வாய்ப்பு என்றால்
ஓவியம் உயிராகிறது 400 ஐ தான் சொல்வேன்...

நெஞ்சம் மறப்பதில்லை என்ற நிகழ்ச்சி
எல்லா நண்பர்களும் கடந்த கால நினைவுகளை
வெளிப்படுத்த நிம்மதியான தருணம்...
பல சுவாரசியங்கள்...
பல பேரின் மனதில் உள்ள ஆசைகளை
எழுத்து வடிவில் நம் எல்லோர் மனதையும்
ஈர்க்க செய்த சொற்கள்...
எப்போதும் மறக்க இயலாது...

ஓவியம் உயிராகிறது வெற்றிக்கு
உறுதுணையாயிருந்த RJ&,DJ மற்றும் நண்பர்கள்
அனைவருக்குமே என் பாராட்டுக்கள்

உங்கள் சாய்ஸ்...
எல்லா நண்பர்களை ஒன்றாக்கி
ஆடலுடன் பாடல்களை நடத்தி கொடுதல்
FTC நாயகனே
என்றும்  எல்லா நண்பர்கள் மனதிலும்
நீங்கா  இடம் பிடித்த
அன்பு தோழன் கேப்ரியல்..

உங்களை மனதார வாழ்த்த
எனக்கு கிடைத்த வாய்ப்பு
ஓவியம் உயிராகிறது 400
வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்....
நன்றி
10
அகர முதலாய் தொடங்கும் தமிழ்,
சிகரம் தொடவே வழிவகுக்கும்!

தன்னம்பிக்கை என்னும் உளியைக் கொண்டு
தடைகள் யாவும் தகர்க்கப்பட்டதே!!

​ஒற்றைப் பேனா முனையல்ல..இது
உழைப்பால் செதுக்கி, குரலால் கொடுத்த உயிர்!!

எழுதியவர் சிந்தனை ஒன்றென்றால்,
வாசித்தவர் உணர்வோ அதற்கும் மேலாக..
​குரலில் ததும்பிய அந்தத் தமிழ் அழகு,
கேட்டவர் யாவரும் மெய்மறக்க..
கவிதைகள் ஒவ்வொன்றும் ஓவியமானது!!

எத்தனை கவிஞர்கள்..எத்தனை வரிகள்..
அத்தனை பேரின் உழைப்பல்லவா?
மொட்டாக இருந்த கவிதைகள் எல்லாம்
முழுமலராய் மணம் வீசுதல்லவா?

உழைப்பு என்பது எழுதிய விரல்களில் மட்டும் அல்ல,
உயிர் கொடுத்து வாசித்த உங்கள் குரலிலும் உண்டு!!

கல்லில் செதுக்கிய சிலையாக
நம் கவிதை வரிகள் நிலைக்கட்டும்..
குரலால் உயிரூட்டிய கலைஞர்களே
உங்கள் புகழும் என்றும் ஓங்கட்டும்!!


நானூறு வார சாதனைப் பயணமிது!
எழுத்துக்கு உயிர் தந்து தமிழை உயர்த்துவோம்!
குரலால் உணர்வு தந்து வெற்றியைச் சூடுவோம்!
தொடரட்டும் இந்த அழியாத கவிதைச் சரித்திரம்!!!
Pages: [1] 2 3 ... 10