Recent Posts

Pages: [1] 2 3 ... 10
2
Happy happy birthday varsha machiioo
4
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (21-Apr-2026) wishes 🎁 to our lovable friend ⭐ Ms. VARSHA ⭐ and wishes her Good Luck.


5

என் வாழ்க்கையை மாற்றிய தோல்வி

🤔 வாழ்க்கைல தோல்வியா இல்லை நம்ம வாழ்க்கையே தோல்வியான்னு யோசிக்க வைக்குற நொடி...

எதனாலன்னு தெரியாது ஆன விவரம் தெரிஞ்ச நாளுல இருந்து நான் சொன்னது "நான் நல்லா படிச்சு வக்கீல் ஆவேன்"  வக்கீல் அப்படினா என்னனு கூட தெரியாத பருவம்னு கூட சொல்லலாம்... காலேஜ்ல அட்மிஷன் போடற நேரம் அப்பா bcom தான் படிக்கணும் PG வேணும்னா law படிச்சுக்கன்னு சொல்லிட்டாரு.. சில வாழ்க்கை மாற்றத்தினால டிகிரியும் முடிக்க முடில.. ஆன வாழ்க்கையின் அடுத்த கட்டம் தொடங்குச்சு... அப்பாடா நம்ம வாழ்க்கை தொடங்கிருச்சு இனி எல்லாம் நல்லா போகும்ன்னு நெனச்ச நேரம்... தொடங்குன வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு..

நம்ம வாழ்க்கை கடல்ல தத்தலிக்குற படகுன்னு நெனைக்குற நேரம்...அப்புறம் தா தெரிஞ்சது உதவ துடுப்பு கூட இல்லனு...அது என்னமோ தெரிலங்க 'உதவி' அப்படிங்கிற வார்த்தை நம்ம கிட்ட வரப்ப மட்டும் கண்ணுக்கு எட்டின தூரம் வர யாருமே இருக்க மாட்டாங்க.. சரி துடுப்பு இல்லாட்டி என்ன நம்ம கிட்ட தா ரெண்டு கைகள் இருக்குனு நெனச்சு படக நகர்த்த நெனச்சேன் முடில.. என்னடான்னு பாத்தா நான் இழுக்க வேண்டியது என்னை மட்டுமல்ல என்னை நம்பியுள்ள இன்னும் 2 ஜீவன்களைன்னு அப்போ தான் தெரிஞ்சது.. சரி எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்னு வாழ்க்கைல ஒட ஆரம்பிச்சேன்...

படிச்சதோ commerce ஆன வேலை அமஞ்சதோ medical documentation field... Science பிடிக்காதுன்னு இருந்த எனக்கு என் வாழ்க்கையில் ஒரு பிடிப்பாய் அமைந்தது science base ah இருக்குற medical field..

அதுவும் சாதாரணமா அமையல..  ட்ரைனிங் பீரியட்ல "இல்ல இது என்னால முடியாதுன்னு" பல முறை எனக்கு நானே சொல்லிக்கொண்ட தருணம்... கூட இருக்கும் நபர்களுடன் போட்டி போடுவது மிகவும் சிரமமாக இருந்தது.. ஆன ஒரு எண்ணம் மட்டுமே மனதுல ஆழமா பதிச்சுட்டேன்.. இதை விட்டா எனக்கு வாழ்க்கையில் வேறு வழி இல்லனு..

முதலில் திருவனந்தபுரம்.. அப்புறம் சென்னை.. அப்புறம் என் சொந்த ஊர்ன்னு.. போற இடம் எல்லாம் தோல்வி பெருசா செட்டில் ஆக முடியல... ஒரு பக்கம் வேலை மறுபக்கம் குழந்தைகள்.. எப்படியோ அடிச்சு புடிச்சு ஒரு direct client from US கிடைச்சது... அதுவும் work from home.. நான் அழுதது யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ எதோ ஒரு கடவுளுக்கு கேட்ருக்குன்னு நெனச்சு வேலைய தொடங்கினேன்... நைட் ஷிபிட்.. பகல் நேரத்துல குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லவதும் வருவதும்.. சமைப்பது. வீட்டு வேலைகள்.. சிறிது தூக்கம்.. இரவு அலுவலக பணி... இதுவே என் வாழ்க்கையாகிப்போனது..


நெனச்ச படிப்பும் அமையல நெனச்ச வாழ்க்கையும் அமையல... என் வாழ்க்கையில் ஊறுகாயா கூட உதவ யாரும் உடன் இருக்கவில்லை..... பல உதாசினங்கள்.. பல கேலிகள் .. இன்னும் பல பல இன்னல்கள் ... அட போங்கடான்னு மனசுல நெனச்சுட்டு.. கெடச்ச வேலைய மட்டுமே கை விட்ராதன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு இன்று வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்... ஒரே ஒரு மாறுதல் இப்போ பகல் ஷிபிட்... பல வருடங்களுக்கு பிறகு இரவில் சிறிது நிம்மதியான உறக்கம்..

இங்க இருக்குற பெண்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க ஆசை படுறேன்... யார் நம்ம கூட இருக்காங்களோ இல்லையோ நமக்குன்னு ஒரு வேலை இருக்கனும் அது என்ன வேலையா இருந்தாலும் பரவாயில்லை ஆன நம்ம காலுல நாம நிக்கணும்..

யாரும் கூட இல்லாட்டி என்ன யார்கிட்டயும் ஒரு பைசா கூட வாங்காம என் குடும்பத்தை நான் வழி நடத்தினேன்.. ஒரு பெண்ணாக.. தனியாக. அப்படினு சொல்றப்ப வர அந்த கெத்து... அது போதும் இந்த ஜென்மத்துல எனக்கு...


6
கனவுகள், ஆசைகள், ஏக்கங்கள் இதெல்லாம் தான் ஒரு மனுஷனோட வாழ்க்கை குறிக்கோளா இருக்கும். கனவை அடையனும், ஆசைபட்டது கிடைக்கனும், நடக்கனும், இதெல்லாம் தான் நம்ம வாழ்க்கையோட வெற்றியா நினைக்கிறோம். ஆனா அது நம்மளோட ஆசையா, நம்மளோட கனவாங்கிறது ரொம்ப முக்கியமான விஷயம். ஏன் இப்படி சொல்றேன்னா, சின்ன வயசுல அம்மா ஆசைப்பட்டாங்க, ‘நான் டாக்டர் ஆகனும்னு’ நானும் அவங்க ஆசைய என்னோட கனவா மாத்திக்கிட்டேன். அந்த கனவை நோக்கி நான் நடந்தேன், ஓடல.. ஏன்னா அது என்னோட கனவா இருக்கல, அதனால அந்த கனவு மேல எனக்கு அக்கறை இல்லாம இருந்துச்சு.

வயசுக்கே இருக்கிற விளையாட்டுத்தனம், என்னுடைய குறும்புத்தனம்னு வாய்ப்பும், திறமையும் இருந்தும் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சேன். அம்மாவோட ஆசையான என்னோட கனவை என்னால அடைய முடியல, என்னோட தோல்வியற்ற தோல்வி அது. அதை தோல்வின்னே என்னால உணர முடியல. ஆனா காலேஜ் சேர்ந்ததும் எனக்குன்னு ஒரு கனவு உருவாச்சு. ஒரு கனவில்ல பல கனவுகள். அந்த கனவுகளை நோக்கி ஓடினேன். எப்படியும் என்னுடைய ஆசைகளை அடைஞ்சிருவேன்னு உறுதியா நம்பினேன். நான் என்ன மாதிரியான பெண்மணியா வரனும் அந்த கனவுகள் தான் என்னை கொஞ்சம் கொஞ்சமா செதுக்கிட்டு இருந்துச்சுன்னே சொல்லலாம்.

ஆனா உண்மையில நடந்தது என்னனா, என்னால அந்த கனவை அடைய முடியல. எனக்கு ஆசிரியர் ஆகனும்னு ஆசை, சின்ன வயசுல இருந்தே யாருக்காவது ஏதாவது பாடத்துல சொல்லி தரனும்னா என்கிட்ட தான் வருவாங்க. அப்போலாம் எனக்கு புரியல இது தான் நம்மளோட திறமை. இது தான் நம்ம கனவா, ஆசையா மாற போகுதுன்னு. காலேஜ் படிக்கும்போது தான் என் கனவுகளுக்கு சிறகு முளைக்க தொடங்கிச்சு. இல்ல, இல்ல அந்த சிறகுகளை நானே வளர்த்தேன். பார்த்து பார்த்து அவ்வளவு ஆசையா. காலேஜ் முடிச்சதும் நிதர்சனம் வேற மாதிரி இருந்துச்சு.

முதுகலை பட்டம் படிக்க சொன்னாங்க, அதையும் படிச்சேன், ஆனா அப்படி படிக்கும்போது அந்த படிப்புக்கான செலவை நானே ஏத்துக்கிற மாதிரி இருந்ததால வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் ஆகிருச்சு. முதுகலை இரண்டாம் வருஷம் போகும்போதே என்னால வேலைல படிப்புலன்னு முழுமையா கவனம் செலுத்த முடியல. என் கனவுகள் தேய தொடங்குதோன்னு ரொம்ப சந்தேகமாவும், வருத்தமாவும் இருந்துச்சு. முதுகலை முடிச்சதும், பி.எச்.டி முடிச்சிட்டு வர சொன்னாங்க.. அவ்வளவு தான். ஆசையா ஆசையா வளர்த்த சிறகை நானே உடைச்சிக்கிட்டேன். கடமைகளும், பொறுப்புகளும் என் கனவையும் ஆசையையும் தூர வைக்க சொன்னுச்சு. கனவை நோக்கி ஓடிட்டு இருந்த நான், கடமைகளை நோக்கி ஓட ஆரம்பிச்சேன்.

இன்னும் ஓடிக்கிட்டே தான் இருக்கேன், ஆனா இப்படி ஓடின ஓட்டத்துல என் கனவு என்னன்னே பல சமயம் மறந்து போயிடுது. தோல்வி எது தெரியுமா? நாம அடைய முடியாத கனவு தான் தோல்வி. அந்த கனவு கானல் நீரா மாறுறதை நாமளே பார்க்கிறது தான் தோல்வி. இந்த தோல்வி என் வாழ்க்கைய மாத்துச்சா இல்லையான்னு கேட்டா.. எல்லா தோல்வியும் வாழ்க்கைய மாத்துறது இல்ல.. சில தோல்விகள் வாழ்க்கைய கத்துக்கொடுக்கும். என் தோல்வியும் அப்படி தான்.

என் கனவை நான் இப்ப அடையாம இருக்கலாம், ஆனா எப்பவும் அது என் மனசுல அடங்காத குதிரையா ஓடிட்டே தான் இருக்கும். எந்த கனவு நம்மள தூங்கவிடாம செய்யுதோ அந்த கனவு எதிர்காலத்தில நமக்கு சாத்தியமான ஒன்னா ஆகியிருக்கும். உங்களுக்கும் அப்படி தானே?
8
yes on may 20th
9


Vizhigal pesugayil
Mozhigal mownamavadhe
Kadhal.... ❤️

விழிகள் பேசுகையில்
மொழிகள் மௌனமாவதே
காதல்... ❤️
10
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on April 20, 2026, 10:41:09 AM »
Pages: [1] 2 3 ... 10