Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
கவிதைகள் / Re: துன்பகளம்
« Last post by Yazhini on Today at 05:14:15 PM »
@madhu .... Why blood... Same blood 😂😂😂😂
2
காலத்தின் சுவடுகளில் மூத்தவள் நீ
இன்று கணிப்பொறித் திரையிலும் பூத்தவள் நீ!
முடிவிலியிலும் இளமை மாறா என் அன்னை..
எம் அறிவியலை ஆளும் நவீன விந்தை..
என் தமிழ் தாயே!

அடுத்து : தாய்
3
கவிதைகள் / Re: துன்பகளம்
« Last post by Madhurangi on Today at 03:11:04 PM »
சொற்பமே உன்னுடனான இந்த சுகமான வாழ்வென்றாலும்,
நரகமே நாம் செல்லும் பாதையென்றாலும்,
மீண்டும் அந்தப் பள்ளத்தில் விழத் தயார்...
என்னை அழைத்துச் செல்பவள் நீயாக இருந்தால்

(இந்த கோட்டை சாமி யார் என்ன சொன்னாலும் தலை கீழாகத்தான் குதிப்பான் moment :P   )
4


முதல் நண்பனும் அவனே
கடைசி நண்பனும் அவனே
சோகத்திலும் அவனே
சந்தோஷ கண்ணீரும் அவனே
யோசிப்பதும் அவனே
வழிகாட்டியும் அவனே
உறங்கவைப்பதும் அவனே
அவனே என் இனிய தனிமையே



அடுத்த தலைப்பு : தமிழ்

5
கவிதைகள் / துன்பகளம்
« Last post by Yazhini on Today at 02:21:55 PM »
ஏதும் எதிர்பாராமல் இருந்திருந்தால்...
மனதிடத்துடன் மறுத்திருந்தால்...
அன்பை சுகிக்காமல் இருந்திருந்தால்...
தேடப்படும் போது தொலைந்திருந்தால்...
உன் வசப்படாமல் இருந்திருந்தால்
தவிர்த்திருக்கலாம் இந்த துன்பகளத்தை...
6
காதலர் தின  சிறப்புக்கவிதை நிகழ்ச்சி - என்றென்றும் காதல்



எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .

உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு  மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துகளை கவிதைகளாய் வெளிபடுத்த  உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம்.  உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 04.02.2026  வரை உங்கள் கவிதைகளை இங்கே  பதிவு செய்யலாம் ....

FTC பண்பலையில் ‘என்றென்றும் காதல்’ நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று  உங்கள் இதயங்களை வந்தடையும் ....


குறிப்பு:
•   உங்கள் கவிதைகள் 250 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 
•   சொந்தமாக எழுதப்படும் 10  கவிதைகள் மட்டுமே  வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.



•   எதிர்வரும் ஞாயிற்று கிழமை  (01.02.2026 ) இரவு இந்திய நேரம் 10 மணிமுதல்   பதிவிடும் வகையில் இந்த பகுதி திறக்கப்படும் .
7
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 01:39:42 PM »
8


‘‘நம் உடலில் இருந்தும், சுற்றுப்புறச் சூழல்களிலிருந்தும் Oxidants என்ற நச்சுக்குப்பைகள் உருவாகி நம் செல்களைத் தாக்குகின்றன. Free radicals என்ற பெயராலும் குறிப்பிடப்படும் இந்த நச்சுக்கள் முதுமைத் தன்மையை ஏற்படுத்துவதிலும், இதய நோய்களை வரவழைப்பதிலும், புற்றுநோய்களை உண்டாக்குவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.  இந்த Oxidants-க்கு எதிராக செயல்பட்டு நம்மைக் காக்கும் சத்துமிக்க உணவு மூலக்கூறினைத்தான் ஆன்டி ஆக்ஸிடன்ட் என்கிறோம். காய்கறிகளிலும், பழங்களிலும், கீரைகளிலும் அதிகம் நிறைந்துள்ளது இந்த ஆன்டி ஆக்ஸிடன்டுகள்.’’

*ஆன்டி ஆக்ஸிடன்டுகள் எப்படி  செயல்படுகின்றன?*

‘‘ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் உள்ள செல்களைப் பாதுகாக்கும். செல்களில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள நோய்களை கட்டுப்படுத்தவும் எதிர்த்துப் போராடவும் வல்லமை கொண்டது. இது செல்களை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதால் புற்றுநோய் தொடர்பான அனைத்து சிகிச்சைகளுக்கும் உதவுகிறது. செல்கள் தொடர்பான அனைத்து நோய்களை குணப்படுத்துவதிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் முக்கியப்
பங்காற்றுகிறது.’’

*ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் எவற்றில்  மிகுந்து காணப்படுகிறது?*

‘‘வைட்டமின் ஏ, இ, சி போன்றவற்றில் இது அதிகமாக காணப்படுகிறது. வைட்டமின் ஏ, இ, சி நிறைந்துள்ள உணவுகளில், காய்கறிகள், பழங்களை உட்கொள்ளும்போது நமக்கு அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்டுகள் கிடைக்கிறது. கேரட், கீரை, ப்ரக்கோலி, முட்டை, பட்டாணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி போன்றவற்றை நாம் தொடர்ந்து உட்கொள்ளும்போது நமக்கு அது அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்டை தருகிறது.’’

*ஆன்டி ஆக்ஸிடன்டுகளால் ஏற்படும் நன்மைகள்?*

‘‘நுரையீரல் தொடர்பான நோய்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் தேவைப்படுகிறது. எனவே, ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துமிகுந்த உணவுகளை உட்கொள்ளும்போது இந்த நோய்களிலிருந்து தப்பலாம். இதயம் தொடர்பான நோய்களை தடுத்து சேதமடைந்த செல்களுடன் எதிர்த்துப் போராடி அவற்றிலிருந்து நம்மை காக்கவும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உதவுகிறது.

இதுதவிர அழகு சிகிச்சையிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் முக்கிய இடம் வகிக்கிறது.

சருமம் மற்றும் முடி சம்பந்தமான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது. தொடர்ந்து ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகளை உண்ணும்போது சருமத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி முகம் பொலிவு பெறுகிறது.

அழகு சிகிச்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்தும் போதும் விரைவாகவும் நல்ல பலன் கிடைக்கிறது. உடலுக்கு சோர்வு நீக்கி, புத்துணர்வு தரும் வேலையைச் செய்வதும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள்தான்.’’

*எப்போது அதிக ஆன்டி ஆக்ஸிடன்டுகள் தேவை?*

‘‘சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இது அனைவருக்கும் நன்மை அளிப்பதால் அனைத்து வயதினருக்கும் இதன் தேவை உள்ளது. புற்றுநோய், நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னையின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு அதிக ஆன்டி ஆக்ஸிடன்டுகள் தேவைப்படுகிறது. இதன் மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது. குறிப்பாக வயதானவர்களுக்கும், நீரிழிவு உள்ளவர்களுக்கும் இது அதிகம் தேவைப்படுகிறது.

மிக அரிதாக ஒரு சில நேரங்களில் மட்டுமே நுரையீரல் நோயின் தீவிரத்தைப் பொறுத்து, சிலருக்கு உடலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அளவை கட்டுப்படுத்த நேரிடும். ஆனால், இது தவிர்த்து அதன் தேவையே உடலுக்கு எப்போதும் அதிகம் உண்டு.

எனவே, ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை எப்போதும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் .
9
ஒரு
விஷயத்தைபற்றி
நாம் யோசிக்க
வேண்டுமென்றால்
அதற்கு மதிப்பு
இருக்க வேண்டும்...

தகுதி இல்லாத
ஒன்றை பற்றி
யோசித்து
நம் நிம்மதியை
இழந்து விடக்கூடாது...!!!

Pages: [1] 2 3 ... 10