Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 12:02:17 PM »
2
🎶🎧இசையின் மடியில் 🎶🎧

      🥁🎙️🎧🎻🥁🎙️🎧🎻

 படம் : ஜனநாயகன்

 பாடகர் : தளபதி விஜய்😍

இசை  : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : விவேக்
         
          .........✨✨✨.........

ஆண் : கோடி நிலவுகள் வரும் அழகே
கோடி கவிதைகள் தரும் பொருளே
கோடி வரமெல்லாமே ஒரு பிள்ளையானதே
சிறு சிறு சிரிப்பெல்லாமே
என்னை வாழச் சொல்லுதே

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈராத என் உயிரே
நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே

ஆண் : உன்னை நீங்காது என்னோட கால்கள்
உன்னை கொண்டாட உண்டான தோள்கள்
சிறு விழியால் கத கதையா நீ பேச வேணும்
உலகத்துக்கே கத படைப்போம் நீயும் நானும்
கேட்காமலே உனக்குன்னு தர உயிர் இருக்குது

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈராத என் உயிரே
நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே

முனங்கல் : ஓஹோ ஹோ ஹோ
நனன்னா நனனனா நா
நனன்னா நனனனா நா

ஆண் : நீதானே எனக்கெல்லாமே
என் செல்ல மகளே

ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே
என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும்
நான் ஈராத என் உயிரே

...........✨✨✨✨✨✨.............
3
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:35:38 AM »
4
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on February 03, 2026, 01:14:00 PM »
5
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 03, 2026, 11:35:38 AM »

February 2026
#456   03.02.2026







- Socky

7
என்னவள் திட்டும் போதும்
கோபப்படும்போதும் என்னடா
வாழ்க்கை என்று தோணும்....
ஆனால் கொஞ்ச நேரத்துல வந்து
பேசும்போது வாழ்ந்தால்
இவ கூட தான் வாழனும்னு தோணும்
இதுதானே அன்பு
இது தானே காதல் !

என்னை தவிக்க விடும் அன்பு வேண்டாம் தவறவிடும் அன்பு வேண்டாம்
தவறாக புரிந்து கொள்ளும் அன்பு வேண்டாம் தடுமாற வைக்கும் அன்பு வேண்டாம்
என்னிடம் காலம் காலமாக காட்டும்
அன்பும் காதலும் போதுமடி....

புரியாதவர்களுக்குத்தான் ஆயிரம்
விளக்கம் வேண்டும்
புரிந்த என் காதலுக்கு
உன் சிரிப்பு ஒன்று போதும் ...
உன் எண்ணத்தை நான் அறிவேன்
என்னவளே!

எப்பொழுதும் என்னுடன் இரு என
உனக்காக ஏங்குவது
உன்னிடம் இருக்கும் சொத்து
சுகத்திற்காக அல்ல...
இந்த உலகில் நான் வாழ
மூச்சுக்காற்றை விட அதிகம்
தேவைப்படும்  உனது  அன்பும்
உனது காதலும் அதற்காகத்தான்!

காதலுக்குத் தெரியாது ஜாதி
காதலுக்கு தெரியாது மதம்
காதலுக்குத் தெரியாது இனம்
இவற்றையெல்லாம் கடந்து காதலை
காற்றாக சுவாசிப்போம்
வாழ்க அன்பு
வாழ்க  காதல்!

எத்தனை கஷ்டம் வந்தாலும்
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்
அதில் நீயே வேண்டும் என்
காதலியாக மட்டுமல்ல என் உயிராக...
8
​தொலைதூரக் காதல்....

பிரிவு என்பது வெறும் தூரம் மட்டுமல்ல,
அது நம் காதலைச் சோதிக்கும் ஒரு அக்னிப் பரீட்சை!

நீ இருக்கும் ஊரின் திசை நோக்கி
தினமும் என் கண்கள் மேய்கின்றன...

தூரத்து மேகமாவது உன் முகம் பார்த்து வருமா என்று!

​நூறு முறையாவது பார்த்து விடுகிறேன் - உன்
புகைப்படத்தை அல்ல,
நம் உரையாடல் நிறைந்த அந்தச் சிறு திரையை!

நேரில் சொல்ல நினைத்த ஆயிரம் வார்த்தைகள்
இன்று குறுஞ்செய்திகளாய் முடங்கிக் கிடக்கின்றன...

உன் குரல் கேட்கும் அந்தச் சில நிமிடங்கள் தான்
எனது முழு நாளுக்குமான உயிர்ச்சத்து!

​கண்களை மூடினால் நீ அருகில் இருப்பது போன்ற பிரமை,
கண்களைத் திறந்தால் தனிமையின் வெறுமை!

இருந்தும், இந்தத் தூரம் நம்மைப் பிரிக்கவில்லை,
மாறாக...
ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை
ஒவ்வொரு நொடியும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

அழகிய  கோபக்காரன்...

அதிகாரக் குரலில் நீ என்னை அதட்டும் போது - உன்
அன்பின் ஆழத்தை நான் ரகசியமாய் ரசிக்கிறேன்!

வார்த்தைகளில் நீ காட்டும் அந்தச் சின்னஞ்சிறு கோபம்,
வெறும் மேகமூட்டம் தான் என்று எனக்குத் தெரியும்...

ஏனெனில், அடுத்த நொடியே
மழைத்துளியாய் நீ பொழியும் பாசத்தில் நான் மொத்தமாய் நனைந்து போகிறேன்!

​உலகமே எதிர்த்தாலும் எனக்காக நீயே நிற்பாய்,
ஆனால்... நான் ஒரு சிறு தவறு செய்தால் மட்டும்
உன் கண்கள் சிவக்க என்னைத் திட்டுவாய்!

உன் கோபத்தின் பின்னால் இருப்பது வெறுப்பல்ல,
நான் தொலைந்து போய்விடக் கூடாதென்ற
ஒரு அதித பயம் கலந்த அக்கறை!

​உன் மௌனங்கள் எனக்குப் பிடிக்கும்...
அதில் தான் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்!

நீ முறைத்துப் பார்க்கும் போது வரும் பயத்தை விட,
நீ சமாதானம் செய்யும்போது காட்டும் அந்தக்
குறுஞ்சிரிப்பில் தான் என் உயிர் ஊசலாடுகிறது.

​உன் பிடிவாதங்களும், உன் அதிகாரங்களும்
எனக்குக் கிடைத்த வரங்கள்!

ஏனென்றால்... நீ கோபப்படும் ஒரே உரிமையும்,
நீ கொஞ்சும் ஒரே உயிரும் நான் மட்டுமே!


என் சுவாசமே... என்
​அன்பே...

ஆயிரம் உறவுகள் மண்ணில் இருக்கலாம்,
ஆனால் என் ஆத்மா தேடிய ஒற்றை உயிர் நீ தான்.

கடிகார முட்கள் ஓடுவதை மறந்து,
உன் கண்கள் வழியே என் காலத்தைக் கடத்தத் துடிக்கிறேன்.

​நீ பேசும் போது வார்த்தைகள் கவிதையாகின்றன,
நீ மௌனமாக இருக்கும்போது உன் மௌனம் சங்கீதமாகிறது.
எனது சிறு சிறு கோபங்களையும்,
சிரிப்பால் சிறைபிடிக்கும் வித்தை உனக்கு மட்டுமே தெரியும்.

​வெயில் சுடும் நேரத்தில் எனக்கு குடை பிடிக்கும் மேகம் நீ.

​நான் தடுமாறும் போதெல்லாம், "நான் இருக்கிறேன்" என்று சொல்லாமல் சொல்லும் என் நம்பிக்கை நீ.

​உலக வரைபடத்தில் நான் தொலைந்து போனாலும், உன் இதயத்தின் முகவரியில் நான் என்றும் பத்திரமாக இருப்பேன்.

​ஒரு சிறு வேண்டுதல்
​காலங்கள் மாறலாம், நம் தலைமுடி நரைக்கலாம்,
ஆனால் உன் கைகளை கோர்த்துக்கொண்டு நடக்கும்
அந்த முதல் நாள் சிலிர்ப்பு மட்டும் எனக்கு என்றும் வேண்டும்.

என் கண்ணீருக்கு முதல் துடைப்பவனாகவும்,
என் சிரிப்பிற்கு முதல் காரணமாகவும் நீ மட்டுமே இருக்க வேண்டும்.
​இந்த ஜென்மம் போதாது உன்னை நேசிக்க...

இன்னொரு பிறவி இருந்தால், அங்கேயும் உனக்காகவே
முன்பதிவு செய்து காத்திருப்பேன் என் அன்பே!
​என்றும் உன்னவள்...
9
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 02, 2026, 03:05:05 PM »

February 2026
#455   02.02.2026







- Socky

10
நீளும் கவிதை - காதல்

சிருஷ்டியில் உருவான
ஏதேன் தோட்டத்து
ஆதாம் ஏவாள்
காதலை சிருஷ்டித்தனர்
ஆதாமின் முதல் இதய துடிப்பே காதல்
ஏவாளின் முதல் பார்வையில் மலர்ந்த உணர்வே காதல்

காலங்கள் கடந்தாலும்
காதல் உறைந்தே நின்றிருந்தது

பார்வையற்றவளின் மனதை படித்த
வாலண்டைனின் முதல் கடிதமே
காதல்.
காதலை வாழ வைத்து காதலில் மடிந்து என்றென்றுமாய் காதலை
வாழவைத்த வாலண்டைனின்
தியாகமே காதல்

ரோமியோ ஜூலியட்டின்
மரணத்தை வென்றதும் காதல் தான்
அமராவதியின் மௌனத்தில்
வாழ்ந்ததும் காதல் தான்

விதியும் சதியும் பிரித்தபோதெல்லாம்
வென்றிருந்தது காதல் தான்.
போரில் வீழ்ந்தாலும்
மரணத்தில் இணைந்த
அந்தோனி கிளியோபாட்ராவின்
வீழ்ச்சியும் காதல் தான்
புதைந்தாலும் மாண்டாலும்
சலீமின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டே இருந்ததும்
அனார்கலியின் காதல் தான்.

காலம் காதலை உருவாக்கியது
காதல் மனிதனை உருவாக்கியது
உலகம் கற்றுக்கொண்ட முதல் பாடமே
காதல் தான்.
உயிர்களுக்கு மொழியாய் வந்தது காதல்
பசியில் பகிர்ந்து கொண்டது காதல்
பயத்தில் துணிந்து நிற்க வைத்தது காதல்
மொழி கடந்து மதம் கடந்து
சாதி கடந்து
வாழும் மனிதமே காதல்.
காதல் வெற்றி பெற வேண்டியதில்லை
வாழ்ந்து காட்டுதலே அதன் வெற்றி
மனிதனை மனிதாக்கும்
உண்மையே காதல்
ஆதலால் காதல் செய்வீர்
Pages: [1] 2 3 ... 10