1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
« Last post by joker on February 24, 2026, 09:37:20 PM »அரங்கின் நிழலில்
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ என
அவள் நிற்கிறாள்
தாளத்தின் ஒளி
அவளின் இதயத் துடிப்பாய் மாற,
கால்கள் அவளின் இதயத்துடிப்பிற்கு
அசைய
அது வெறும் நடனம் அல்ல
அது பரம்பொருள் பேசும் மொழி
என உணர்த்தினார்
ருக்மிணி தேவி அருண்டேல்
அதற்கு பரதநாட்டியம்
என பெயரிட்டு
அழகுபடுத்தினார்
பாரத முனிவரின் புனித எழுத்துக்கள்
அவள் விரல்களின் முனையில் உயிர்த்தெழ,
சமயமும் சமூகம் கட்டிய சுவர்கள்
பெண்களுக்கு சிறகுகள் விரித்து
சுதந்திரத்தை பரிசாக்கி
உலகத்தை வலம் வந்தன
ஆண்டாள் போல
பக்தி அவள் நெஞ்சில் பாய,
கண்ணகி போல
நீதி அவள் நெற்றியில் நிற்க
திரௌபதி போல
அவமானத்தின் நெருப்பை
அவள் கண்கள் அனலாய் காக்க
அனைத்தையும்
ஆற்றலாக மாற்றிக் கொள்கிறாள்.
சலங்கை ஒலிக்கும் சத்தம்
சமூகம் சுமத்திய சங்கிலிகளை
சிதைக்கும் சத்தம்
பாரத நாட்டியம்
அது பெண்ணின் உடம்பில் உறையும் வேதம்.
அது அவளது போராட்ட வரலாறு,
அவளது பாசத்தின் பரவசம்,
அவளது தாய்மைத் தாலாட்டு,
அவளது காதலின் கனிவான கீதம்.
அரங்கம் இருள் கொள்கிறது.
ஆனால் அவள் உள்ளத்தில்
ஒளி அணையாது.
அது
அவள் வாழ்விலே
ஒரு நிரந்தர அரங்கேற்றம்.
முத்திரையில் மலரும்
மௌன கவிதை
பாரத நாட்டியம்
நவரசங்கள் இணைந்த
பெண்ணின் தெய்வீக அசைவு
****JOKER****
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ என
அவள் நிற்கிறாள்
தாளத்தின் ஒளி
அவளின் இதயத் துடிப்பாய் மாற,
கால்கள் அவளின் இதயத்துடிப்பிற்கு
அசைய
அது வெறும் நடனம் அல்ல
அது பரம்பொருள் பேசும் மொழி
என உணர்த்தினார்
ருக்மிணி தேவி அருண்டேல்
அதற்கு பரதநாட்டியம்
என பெயரிட்டு
அழகுபடுத்தினார்
பாரத முனிவரின் புனித எழுத்துக்கள்
அவள் விரல்களின் முனையில் உயிர்த்தெழ,
சமயமும் சமூகம் கட்டிய சுவர்கள்
பெண்களுக்கு சிறகுகள் விரித்து
சுதந்திரத்தை பரிசாக்கி
உலகத்தை வலம் வந்தன
ஆண்டாள் போல
பக்தி அவள் நெஞ்சில் பாய,
கண்ணகி போல
நீதி அவள் நெற்றியில் நிற்க
திரௌபதி போல
அவமானத்தின் நெருப்பை
அவள் கண்கள் அனலாய் காக்க
அனைத்தையும்
ஆற்றலாக மாற்றிக் கொள்கிறாள்.
சலங்கை ஒலிக்கும் சத்தம்
சமூகம் சுமத்திய சங்கிலிகளை
சிதைக்கும் சத்தம்
பாரத நாட்டியம்
அது பெண்ணின் உடம்பில் உறையும் வேதம்.
அது அவளது போராட்ட வரலாறு,
அவளது பாசத்தின் பரவசம்,
அவளது தாய்மைத் தாலாட்டு,
அவளது காதலின் கனிவான கீதம்.
அரங்கம் இருள் கொள்கிறது.
ஆனால் அவள் உள்ளத்தில்
ஒளி அணையாது.
அது
அவள் வாழ்விலே
ஒரு நிரந்தர அரங்கேற்றம்.
முத்திரையில் மலரும்
மௌன கவிதை
பாரத நாட்டியம்
நவரசங்கள் இணைந்த
பெண்ணின் தெய்வீக அசைவு
****JOKER****

Recent Posts




