1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
« Last post by AgNi on Today at 05:37:25 PM »நமஸ்காரத்தோடு துவங்குகிறது பரதம்!
தகர்ந்து போய்விட்ட மனமாளிகையும்
நகர்ந்து போய்விட்ட நாழிகையுமாய்
அதிர துவங்குகிறது நிலம்!
புறக்கணித்தலின் வலி ஏதேனும்
ஒன்றை பற்று கொள்ள வைக்கிறது...
ஊழ்வினை பிறழ்வென
ஊடும் நினைவுகளோடு
விரல் முத்திரைகளில் ....
ஓர் சமாதான உடன்படிக்கை!
பேரன்பின் பெருநதியில்...
மாயமிழைத்த உன்னில்
அகழியோ புதைகுழியோ சேர்ந்தே குதித்தாலும்
அகதியாய் இருப்பது அரங்கேற்றம்தான்!
விலையற்ற அனுபவங்கள்
கலையற்ற உள்ளங்களோடு....
துருப்பிடித்த கனவுகளை
சதங்கையின் துணை கொண்டு
சரிப்பார்த்து கொள்கிறது அபிநயம்!
நெஞ்சில் துளையிட்ட துயர அம்புகளை
ஒவ்வொன்றாய் கழற்றி போட துடிக்கின்றது
முகமூடியிட்டு நவரசங்களை பொழியும்
துக்கமெல்லாம் பத்திரமாய் தாளக்கட்டு அசைவில்...
காவியத்தின் இருண்ட பக்கங்களாம்
நம் காதல் ரேகைகள் !
போகட்டும் !
காலங்கள் கடந்தாலும்
தொலைந்து போன காதலை
நினைவு கல்வெட்டுகளாக பறைசாற்றி கொண்டிருக்கிறதே
நாட்டிய கலையின் ஜதிகள்!

Recent Posts






