Recent Posts

Pages: [1] 2 3 ... 10
2
Happy Birthday Lydia God Bless You
5
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (29- Mar-2026) wishes 🎁 to our lovable friend ⭐ Ms. LYDIA ⭐ and wishes her Good Luck.


6
*காலில் நரம்பு சுரண்டல் (Varicose veins / Nerve strain) என்பது இன்று பலருக்கும் வரும் ஒரு பொதுவான பிரச்சனை. குறிப்பாக நீண்ட நேரம் நிற்கும் வேலை செய்தால் இது அதிகமாகும்.*

நீண்ட நேரம் நின்று வேலை செய்வது

ரத்த ஓட்டம் சரியாக இல்லாமை

உடல் எடை அதிகம்

உடற்பயிற்சி இல்லாமை

வயது காரணமாக நரம்பு பலவீனம்

 *அறிகுறிகள்*

காலில் நரம்பு வீக்கம் / புடைசுருள் போல் தெரிதல்

வலி, எரிச்சல்

கனத்த உணர்வு

இரவு நேரத்தில் பிடிப்பு
 *இயற்கை வைத்திய முறைகள்*

 *எள்ளெண்ணெய் + பூண்டு மசாஜ்*

எள்ளெண்ணெய் சூடு செய்து அதில் பூண்டு சேர்த்து கொதிக்கவைத்து

குளிர்ந்ததும் தினமும் காலில் மெதுவாக தடவவும்
*ரத்த ஓட்டம் மேம்படும், வலி குறையும்*
 *வெந்தய நீர்*

இரவு ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஊறவைத்து

காலையில் குடிக்கவும்
 *நரம்பு பலம் அதிகரிக்கும்*
*முருங்கை இலை சாறு*

முருங்கை இலை அரைத்து சாறு எடுத்து குடிக்கலாம்
*ரத்த ஓட்டத்தை சீராக்கும்*
 *சூடு-குளிர் தண்ணீர் முறை*

நிமிடம் சூடான தண்ணீர்
 நிமிடம் குளிர்ந்த தண்ணீர்
மாறி மாறி காலில் ஊற்றவும்
 *நரம்பு சுருக்கம் குறையும்*

*கால்களை உயரத்தில் வைத்தல்*

படுக்கும் போது கால்களை தலையணை வைத்து உயர்த்தி வைக்கவும்
 *ரத்தம் கீழே தேங்காமல் இருக்கும்*

 *சிறிய உடற்பயிற்சி*

தினமும் 15–20 நிமிடம் நடை

கால்களை மேலே கீழே அசைக்கும் exercise
 *நரம்பு தளர்ச்சி குறையும்*

 *உணவில் கவனம்*
 :o
*அதிக உப்பு தவிர்க்கவும்*

பச்சை கீரைகள் (பொன்னாங்கண்ணி, முருங்கை)

வெள்ளைப்பூண்டு, இஞ்சி சேர்த்து சாப்பிடவும்

*கவனிக்க வேண்டியது*

நரம்பு மிக அதிகமாக வீங்கி வலி இருந்தால்

தோல் கருமை / காயம் வந்தால்
7
*பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”* என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.

8
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on March 28, 2026, 09:05:41 AM »
9
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on March 28, 2026, 05:39:59 AM »
Pages: [1] 2 3 ... 10