Recent Posts

Pages: [1] 2 3 ... 10
2
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 09:25:02 AM »
3
போர்க்களம் கண்ட பெண்ணே!

பரதம், உன் உள்ளே ஒரு பிரபஞ்சத்தையே
ஒழித்து வைக்கக்கூடிய அரிய கலை!

ஒரு ஒரு முத்திரையிலும் தாளத்திலும்
ஒரு பெருங்கதையை கூறும் பெண்ணே,
நீ அல்லவா பிரம்மா?

உன் நாட்டியத்தில் உள்ள அசைவுகளிலும் உணர்ச்சியிலும்
எல்லோரும் மெய்மறந்து இருக்க,
எனக்கு மட்டுமே தெரியும் அதற்கு பின்
இருக்கும் உன் உழைப்பும் வலியும்!

இன்று நீ இருக்கும் உயரத்திற்கு பின்
எவ்வளவு அடிகள் உள்ளன என்பது
நான் மட்டுமே அறிந்த உண்மை.
ஒரு யுத்தமே செய்திருக்கிறாயே பெண்ணே!

உன்னது ஒவ்வொரு நடனத்தையும்
ஒரு போர் வியூகமாக்கினாயே பெண்ணே!

எவ்வளவு ஏச்சுக்களும் பேச்சுக்களும் கடந்து,
இன்று நீ இந்த மேடையில் உள்ளாய்.
இந்த கைத்தட்டலும், பாராட்டலுமே,
உனது வலிக்குக் கிடைத்த மருந்து.

உன் அசைவுகளில் தெரிகிறதே,
உனது மனநிறைவும் மகிழ்ச்சியும்.
உனது போரில் நீ வெற்றி பெற்றதை,
உனது அபிநயங்கள் காட்டுகிறதே!

பெருமை கொள் பெண்ணே!
உன் சாதனைகளை நினைத்து!


ரம்யா
4
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 06:11:11 AM »
5
GENERAL / Re: THE VIRAL PENGUIN 🐧
« Last post by Vethanisha on February 25, 2026, 06:16:37 PM »
Nature isn’t cruel.
It’s clear.

So True and perfectly said 💜
Super sharing sis
6
தேநீர் பருகாதவர்களின் அன்பு
சுவையில் குன்றிதான் போகுமோ 🤔😂

Super poem chetta 👏👏 as always
7
கவிதைகள் / Re: நினைவுப் பெட்டகம்!!
« Last post by Vethanisha on February 25, 2026, 03:49:28 PM »
காட்சியாய் கண்முன்னே கவிதை 👌

keep writing ma👏
8
அன்பே அவ்வளவு அழகான வரி

தேடப்படும் ஒவ்வொரு தேடலிலும்
ஏனோ தொலைந்து போகிறோம்.


தொடர்ந்து தொலைவோம் 🌼
9
நடராஜன் அருளினிலே
முகபாவத்தின் சிணுங்கலிலே
இராகத்தின் ரம்யத்திலே
தாளத்தின் தொன்மையிலே

பக்தியின் வெளிப்பாடாய்
ஆன்மாவின் மொழியாய்
உணர்வுகளின் சங்கமமாய்
வாழும் என் கலையே
தமிழர் கண்ட
பரதமே


நங்கை இவள் நடனத்திலே 
பல கதைகளும் உண்டு
உண்மையிலே 

மங்கை இவள்   எழிலினையே 
பரத  முத்திரையில் காண்போம்
சில வரிகளிலே


படாகம்  (வானம்  ,நதி )
வானத்தையும் நதியையும்
அசைவிலே
இணைக்கும் கொடி இடையாள்


திரிபடாகம் ( அம்பு,  தீ )
தீயின் ஜ்வாலையையும்
விரல்களில்  உயிர்ப்பிக்கும்
கலைமதியாள்


கர்த்தரிமுகம் (கத்தரி ,மின்னல் )
மின்வெட்டு காலங்களிலும்
கத்தரிக்கும் பார்வையினால்
ஒளி ஊட்டும்
விழியாள்


மயூரம் (மயில் )
அசைந்தாடும்  சாயலிலே
மயிலும் மையல் கொள்ளும் 
அபிநயத்தாள்


அர்த்தசந்திரம் (பிறை நிலா )
கரங்களில் பிறைநிலா மலர,
சாந்த சொரூபிணியாய் 
உணர்வை தாலாட்டும்
நிலாமுகத்தாள்


அலபத்மம் (தாமரை)
இரு  இதழ் தாங்கும் புன்னகையை
தாமரை இதழும்
 நாணத்தோடு நோக்கும்
பொன்னிறத்தாள்


அடவிலே தொடங்கி
நடவிலே உயர்ந்து
அபிநயத்திலே இலயித்து
வாழ்வாங்கு வாழட்டும்
அவளது கலையும்
அதன் பயணமும் ...



10
Tips

Best time: Nov–April (pleasant weather)
Rent a car for flexibility
Book Keys stays early (sell out fast)


Pages: [1] 2 3 ... 10