3
« Last post by Ramyakv on Today at 09:13:08 AM »
போர்க்களம் கண்ட பெண்ணே!
பரதம், உன் உள்ளே ஒரு பிரபஞ்சத்தையே
ஒழித்து வைக்கக்கூடிய அரிய கலை!
ஒரு ஒரு முத்திரையிலும் தாளத்திலும்
ஒரு பெருங்கதையை கூறும் பெண்ணே,
நீ அல்லவா பிரம்மா?
உன் நாட்டியத்தில் உள்ள அசைவுகளிலும் உணர்ச்சியிலும்
எல்லோரும் மெய்மறந்து இருக்க,
எனக்கு மட்டுமே தெரியும் அதற்கு பின்
இருக்கும் உன் உழைப்பும் வலியும்!
இன்று நீ இருக்கும் உயரத்திற்கு பின்
எவ்வளவு அடிகள் உள்ளன என்பது
நான் மட்டுமே அறிந்த உண்மை.
ஒரு யுத்தமே செய்திருக்கிறாயே பெண்ணே!
உன்னது ஒவ்வொரு நடனத்தையும்
ஒரு போர் வியூகமாக்கினாயே பெண்ணே!
எவ்வளவு ஏச்சுக்களும் பேச்சுக்களும் கடந்து,
இன்று நீ இந்த மேடையில் உள்ளாய்.
இந்த கைத்தட்டலும், பாராட்டலுமே,
உனது வலிக்குக் கிடைத்த மருந்து.
உன் அசைவுகளில் தெரிகிறதே,
உனது மனநிறைவும் மகிழ்ச்சியும்.
உனது போரில் நீ வெற்றி பெற்றதை,
உனது அபிநயங்கள் காட்டுகிறதே!
பெருமை கொள் பெண்ணே!
உன் சாதனைகளை நினைத்து!
ரம்யா