Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
Happy Birthday my dear Sammandhi! May all your dreams come true and you achieve more success in life. Stay healthy, happy and blessed



Happy Birthday Raghu. May all your dreams come true and you achieve more success in life. Stay healthy, happy and blessed

2
(குழந்தை):
அம்மா! அதோ பாருங்களேன்
அழகிய சிவப்புத் தோட்டம்!
வானம் கூடக் கருப்பா இருக்கு
பூக்கள் மட்டும் ஏன் சிவப்பா இருக்கு?
​எண்ணிப் பார்த்தேன், முடியலைம்மா
ஏகப்பட்ட பூக்கள்!
ஒரே மாதிரித் தலை ஆட்டுது..
ஒரே மாதிரிச் சிரிக்குது!

​(அம்மா):
ஆமாம் கண்ணே..அது ஒரு கூட்டம்!
ஒரே மாதிரி இருப்பது தான் சுலபம்!
யார் என்ன சொன்னாலும்..அதை
தலையாட்டி ஏற்பது தான் வழக்கம்!

​(குழந்தை):
ஆனா அம்மா..அங்கே பாருங்களேன்
அதிசயம் ஒன்று தெரியுது!
சிவப்பு பூக்களுக்கு நடுவிலே
சிறு வெண்ணிறப் பூ ஒன்று மின்னுது!
​அம்மா..அந்தப் பூவுக்கு பயமில்லையா?
யாரும் அது கூட இல்லையே?
தனியா நிற்க வருத்தப்பட்டு
அது அழுதிடாதா அம்மா?

​(அம்மா):
இல்லை பாப்பா..கவனித்துப் பார்
அது அழுதுகொண்டு இருக்கவில்லை!
சிவப்புப் பூக்களுக்கு நடுவிலே
அது சிரித்துக் கொண்டு தான் இருக்கிறது!
​பறக்கும் அந்தப் பறவையை கேள்
அதற்கு அந்த வெண்பூவைத் தான் பிடிக்கும்!
ஏனென்றால்... ஆயிரம் பூக்கள் நடுவே
அது மட்டும் தான் தனித்து தெரியும்!

​(குழந்தை):
ஆமாம்மா... இப்பத்தான் புரியுது!
சிவப்புப் பூக்கள் எல்லாம் நிலத்தைப் பார்க்குது!
ஆனா அந்த வெள்ளைப்பூ மட்டும் தான்
அண்ணாந்து வானத்தை பார்க்குது!
​அம்மா..எனக்கும் ஒரு ஆசை!
எல்லோரும் ஒரு பக்கம் ஓடினாலும்
நான் மட்டும் அந்த வெண்பூவைப் போல
என் பாதையை நானே தேடிடுவேன்!

​(அம்மா):
ஆம் என் செல்லமே!
அடையாளம் தொலைத்த
ஆயிரம் சிவப்பு பூக்களை விட
அடையாளம் காட்டும் அந்த ஒரு வெண்மை
அழகு மட்டுமல்ல..அது தான் வலிமை!
தனித்து நின்றாலும் தலை நிமிர்ந்து நில்!
உன் புன்னகை தான் உனது அழகு!
வெள்ளைப்பூப் போல நீயும் மலர்ந்தால்
உன் வசமாகும் இந்த உலகம்!!!
3
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 10:46:27 AM »
4
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:55:56 AM »
5
Many More Happy returns of the day My Dear Bestie Lonely Warrior Epavume Happy ah eru da i always with you 🎂🎂🎂🎂🎂🎂🎂🌹🌹🌹🌹Mony more happy returns of the day dear friend Raghu29🌹🌹🌹🌹🌹🎂🎂🎂🎂
6
சாயம் பூசிக்கொள்ளும் இடத்திலும்
தன்னிலை மாறா தனித்துவம் அழகு
அழகு மட்டுமா...
அது கம்பீரத்தின் வெளிப்பாடு
பொய்யைப் புறந்தள்ளும் நேர்மை
பிறரால் திரிபு பாடா பேரழகு

சுற்றி உள்ள அனைத்தும்
ஒரே பாதையில் பயணித்தாலும்
தனக்கென தனிப் பாதையை
உருவாக்கிக் கொள்ளும் துணிச்சல்
பிடிக்காத பாதையில் பிறரின்
பிம்பமாய் தோன்றா திமிர்

இந்த தனி பாதை
பார்பதற்கு மலரைப் போன்று
அழகாக காட்சி தந்தாலும்
முட்களும் வலிகளும் திருப்பங்களும்
நிறைந்த தன்னையன்றி பிறரால்
கடக்க முடியா நெடும்பாதை

தனிமை பல நேரங்களில்
உற்ற நண்பனாக இருந்தாலும்
தென்றலாய் கார்மேகமாய் தேனீயாய்
பலபல பாதைசாரிகளும் நண்பர்களும்
இங்கு இல்லாமல் இல்லை
பாடத்தைக் கற்பிக்காமல் கடந்ததுமில்லை

தன்னந்தனியாக காட்சிக்கு தெரிந்தாலும்
கண்ணுக்கு தெரியா பல
நல்ல துணைகளைக் கொண்ட
கலப்படமற்ற தனித்துவமான பாதை
நேர்மறையின் மற்றொரு கரை...
யாருமறியா பிறரை சாரா விடுதலை...
7
ஆழமான இளஞ்சிவப்பு நிற துலிப் மலர்
உன் மீதான என் உணர்வு
உன் இதயத்திற்கான என் திறவுகோல்
நீ செய்யும் அனைத்திற்கும் நன்றி.

அதன் நறுமணம் எனக்கு
இனிமையான வாசனை திரவியத்தை நினைவூட்டுகிறது
உன் அழகைப் போல இந்த துலிப் மலர்கள்
எந்த அறையையும் பிரகாசமாக்குகின்றன.

பார்ப்போரை இழுக்கும் உன் அழகு மகிமை வாய்ந்தது
அதன் இதழ்களோ என் உடலை மென்மையாக தடவி செல்கிறது
என் ஆசைகள் உன் பாவம்

இளஞ்சிவப்பு துலிப் மலர்கள் சொல்லும் நம் காதல் கதை
அது ஒரு  இனிமையான காதல் கதை
என்னை நரகத்திலிருந்து சொர்கத்திற்கு
கொண்டு செல்லும்

அழகான இனிமையான துலிப் மலர்கள்
நம் பயணத்தின் நினைவு சின்னமாய் என்றும் மனதிலிருக்கும்
அதன் ஒவ்வொரு இதழ்களும் நம் பயணத்தின் முதல் படியாய்
நம் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நீங்கா இடம் கொள்ளும்


Note.: Thank you EVIL Samyoo Patti thickering ku🌷🌷🌷
8
Happy happy birthday lonely warrior machi raghu29 machio
9
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (10-Mar-2026) wishes 🎁 to our lovable friends ⭐ Mr. LONELY WARRIOR & Mr. RAGHU29 ⭐ and wishes them Good Luck.


10
சிவப்பு ரத்தத்தின் நடுவே
பூத்த  ஒற்றை வெள்ளை பூ
அமைதியின்
சின்னமாய்
மலர்கிறது

அது தனிமையில் இல்லை
யாரும் கண்ணுக்கு எட்டிய வரை
தன்னை போல துணைக்கு யாரும் இருப்பதாய்
தெரியவில்லை
ஆனால்
அது அங்கு அழகான அமைதியை
விதைக்க முயல்கிறது

இருளின் கோரத்தை மறைக்க முயலும்
வானத்தில் தோன்றும் அழகான "நிலவை" போல
தனது தனித்துவத்தை மறக்காமல்
நீ என்றும் நீயாக இரு என்ற தத்துவத்தை
உணர்த்திகிறதோ  அந்த ஒற்றை பூ
என தோன்றுகிறது

கூட்டத்தில் இவன் மட்டும் ஏன்
விசித்திரமாக என ஏளனமாக
பார்த்த கூட்டம்
காலம் கடந்து சென்றது.
ஒரு நாள்
அதே கூட்டம்
அவனை பார்த்து வியந்தது
அவனின் தனித்துவத்தை ரசித்தது

அவன் நடந்த மெதுவான பாதை
ஒரு புதிய வழியாக
மாறி இருந்தது.

தனியாக நடந்தவன்
தவறானவன் அல்ல,
புதிய பாதையை
முதல் முறையாகத் தேர்ந்தெடுத்தவன்

கூட்டத்திலிருந்து மாறுபட்டு
தன் பாதையை உருவாக்கிய
அந்த ஒருவனை மட்டும்
என்றும் இவ்வுலகம் மறக்காது…

காற்று வருகிறது , பூக்கள் எல்லாம் அசைந்து
ஒன்றோடு ஒன்று மோதுகிறது
அந்த பூ தனிமையில் இல்லை
ஆனால்
என்றும் தனித்துவமாய்
இம்மண்ணில்
வேரூண்டிருக்கிறது 


***Joker****
Pages: [1] 2 3 ... 10