Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 04:38:00 AM »
2


நிழல்களை வெல்வோம்
================

நம் வாழ்வினை சூறையாடும்...
ஒரு சில கருப்பு நிழல்களை..
நம்முள் அடக்கி வைப்பது முறையல்ல..
அவ்விருளை வெளியேற்றுவோம்..

தனக்கு கிடைக்கா.. நல்ல நிகழ்வுகள்..
பிறருக்கு கிட்டும்போது - நம்முள்
எழும்.. நிழல் எண்ணங்கள்(பொறாமை)...
அதை வெல்லும் ஆயுதமோ - தனிநிறைவு 

தன்..  எண்ணங்களுக்கு ஒத்துப்போகாத
பிறரின் செயல்களுக்கு - நம்முள் 
எழும் நிழல் எண்ணங்கள் (சினம்)
அதை வெல்லும் ஆயுதமோ - பொறுமை   

தான் செய்ய நினைக்கும் செயலை ..
தானே குழம்பி,தடுமாறும் நிலைக்கு - நம்முள் 
எழும்.. நிழல் எண்ணங்கள் (பயம்,சந்தேகம்)
அதை வெல்லும் ஆயுதமோ - நம்பிக்கை

தான்.. பிறரை விட தாழ்ந்தவரோ.. என
தன்னை குறைத்து கொள்ளும் - நம்முள் 
எழும்.. நிழல் எண்ணங்கள் (தாழ்வு மனப்பான்மை)
அதை வெல்லும் ஆயுதமோ -  தன்னுணர்வு

தனக்கான உடமைகளை
போதாது என.. தீராத தாகம்  - நம்முள்
எழும்.. நிழல் எண்ணங்கள் (பேராசை)
அதை வெல்லும் ஆயுதமோ -  மனநிறைவு
 
தனக்கு துரோகம்,கொடுமை இழைத்தவரை..
அடியோடு அழிக்க துடிக்கும் - நம்முள்
எழும்.. நிழல் எண்ணங்கள் (பழிதீர்த்தல்)
அதை வெல்லும் ஆயுதமோ -  மன்னிப்பு

தன் சிந்தனைகளை  ஒருமுக படுத்தாது... 
தோல்விகள் நோக்கி தள்ளும் - நம்முள்
எழும் நிழல் எண்ணங்கள் (எதிர்மறை சிந்தனை)
அதை வெல்லும் ஆயுதமோ. -  விடாமுயற்சி/துணிவு 

நாம் அறியாமலே... நம்முள்  அடங்கி இருக்கும்..
உள்ளிருள் தீயை.. கட்டியிருக்கும் சங்கலிகளை..   
நேர்மறை எண்ணங்கள் எனும் உளியால்
உடைத்து.. நல்வாழ்வு வாழ்வோம்..

3
SMS & QUOTES / Re: Words that HIT ! ✨
« Last post by சாக்ரடீஸ் on March 03, 2026, 11:52:14 PM »
In the end, we all return to dust !

4
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-004

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

“என்னுயிர் தோழி ”

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.
5
கவிதைகள் / Re: அனிச்சம் மலரவள் 🥀
« Last post by joker on March 03, 2026, 08:45:14 PM »
நினைவுகளில் கலந்துவிட்ட பின்
பிரிவென்பது
மெய்யான பொய்


யாழினி Sis

அனிச்சம் மலர் நல்ல உவமை
அருமையான கவிதை
6
பெண்
முதல் சுவாசத்தை நமக்குள்
கடத்தியவள்,
வாழ்வின் முதற்பக்கத்தில்
எழுதப்பட்ட உயிர்மொழி
அவள்

ஆனால்,
மூச்சு முட்டும் கட்டுப்பாடுகள்
என்ற பெயரில்
சங்கிலிகளால்
அவளுக்கு முன்
காலத்தால்
ஓர் சுவர் எழுப்பப்பட்டது

அவள் சிரிப்பு
குடும்பத்தின் எல்லைக்குள் மட்டுமே,
அவள் கனவு
சமையலறை புகையோடு கலந்து
விண்ணைத் தொட்டதேயில்லை.

அவள் குரல்
காற்றின் நடுக்கமாகவே ஒலித்தது,
ஆனால் கேட்க யாருமில்லை.
“பெண்” என்ற சொல்லுக்குள்
சுருட்டி வைக்கப்பட்டன
அவள் ஆசைகள்,
அவள் விருப்பங்கள்,
அவள் உரிமைகள்.

ஆனால் இன்று
அடக்குமுறை
ஒரு இருள் என்றால்,
அவள்
அந்த இருளைத் தின்று
விடியலை உமிழும் சூரியன்.

அவளை
“அடக்கி ஆளலாம்” என்ற
காலம் முடிந்தது.
இப்போது
தன் பாதையைத் தானே
செதுக்கி செல்கிறாள்
வீறுநடை போட்டு .

பெண்மை
மென்மை மட்டும் அல்ல,
மீளாத உறுதி.
அன்பு மட்டும் அல்ல,
அழியாத ஆற்றல்
என பறைசாற்றிக்கொண்டிருக்கிறாள்
உலகுக்கு

அடக்குமுறையின் கல்லறையில்
எழுதுங்கள்

இனி
பெண் மௌனம் அல்ல
வரலாறு என 


***Joker***
7
நெஞ்சம் மறப்பதில்லை EP 3

தோழி தூரிகா தொகுத்து வழங்கிய நெஞ்சம் மறப்பதில்லை
எல்லாருடைய குழந்தை பருவத்து அனுபவங்களையும்
தன் குரலால் கேட்பவர்களின் நினைவிலுருந்து
கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது போல இருந்தது
அதற்கான இசைக்கோர்ப்பும் ,பாடல்களும்  அருமை 👍
THANKS TO FTC TEAM 👏👏👏

தொடரட்டும் உங்கள் பணி

8


Dear Thangachi Thooriga,

Yesterday 02-03-2026 Nenjam Marapathillai episode 3 program kekura opportunity kidachuthu.
First of all thankyou for your personal Invitation.

Isai Thenral a RJ a kalakina Neenga "Nenjam Marapathillai" program la After Ninja Twin sis relay baton eduthu
Program oda success a konjamum kurayama Narration panirunthinga...

your voice is your biggest strength.
Then ungaloda Reactions enga enga expressive a narration pananumo ellame perfect a
koduthinga.....

Laugh, Surprises , Nostalgic Feel nu ungaloda presentation so engaging.

Also Writers Eluthina oru oru story um Namma childhood memories and nama thatha paati a remind panichuthu
. Ninja Sis Song selection oru oru story mudiyurapo kekurathuku avalavu connect aachuthu

Overall a  Great Program..

9
Wish You HappY birthday Wisdom sis..!

10
ஒரு காலத்தில அவ  வாழ்க்கை, அவ கையில இல்ல....
“கடமை”ன்னு சொல்லி
அவளோட சுவாசத்துக்கும் எல்லை போட்டாங்க.
அவளோட கனவுகளுக்கு,
காத்திருக்க சொல்லி மூலையில் நிக்க வைச்சாங்க.
அவள் ஆசைகளுக்கு ...
“இது நேரமல்ல…”ன்னு ஒதுக்கி வைச்சாங்க.
அவள் காத்திருந்தாள்...
பொறுமையா....
அமைதியா....
அவளோட கண்ணீரையும் சத்தமில்லாம விழுங்கிக்கிட்டு....

ஆனா யாருக்கும் தெரியல...
அந்த அமைதிக்குள்ள
ஒரு சிங்கம் வளர்ந்துட்டு இருந்துச்சுன்னு...
ஒவ்வொரு தியாகமும்
அவள இன்னும் உறுதியா மாத்துச்சு.. ..
ஒவ்வொரு அவமானமும்
அவளோட முதுகெலும்பா மாறிச்சு...

இணைக்கு ....

அவள் யாரோட நிழலுளையும் இல்ல...
அவ மட்டும் அவளுக்குனு இருக்கா ....
இணைக்கு அவளோட எல்லா கட்டுப்பாடுகளிலும் இருந்து ...
கடமை என்னும் சங்கிலி உடைச்சு.....
தன் பெயர்ல தன் பாதையை உருவாக்கிட்டா ...

இது கோபம் இல்ல....
இது திமிர் இல்ல...
இனி யாரோட அனுமதியும் கேட்டு அவ வாழனும்னு அவசியமும் இல்ல...
இது அவளோட தன்னம்பிக்கை.. அவளோட வாழ்க்கை...

பல தடங்கல்களை தாண்டி தனுக்கு தானே மகுடம் சூடிக்கொள்ளும் ஒவ்வொரு பெண்களுக்குமே இந்த பதிவு சமர்ப்பணம்..
Pages: [1] 2 3 ... 10