FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Gotham on September 22, 2012, 11:17:16 PM

Title: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 22, 2012, 11:17:16 PM

பாகம் 1
--------------------------------------------------------------------------------------------------------
பரபரப்பாக கணினி முன் வந்தமர்ந்தான் அவன். கணினியில் சாட் விண்டோ ஒளிர்ந்தது. 'வந்துவிட்டாள் என்னவள்'. மனம் பரபரத்தது. இரண்டு மாதமாக இப்படித் தான். அவளுடன் சாட் செய்வதே அவன் பொழுதுபோக்கு. வேலை நேரத்திலும் சரி, வீட்டுக்கு வந்தாலும் சரி. எந்நேரமும் அவளுடன் சாட்டிங் தான்.

இரண்டு மாதத்திற்கு முன் ஒரு நாள் அவனுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. 'எங்கே இருக்கிறாய்? இன்னும் கோவமா?'. ஒரு பெண்ணின் பெயர். யாரென்று தெரியவில்லை. ஆவல் உந்த பதிலனுப்பினான். 'நீங்க யார்?". நிமிஷத்தில் பதில் வந்தது. 'மன்னிக்கவும் எழுத்துப்பிழை. என் தோழிக்கு அனுப்புவதற்கு பதிலாக உங்களுக்கு வந்துவிட்டது'. பரவாயில்லை என்று விட்டுவிட்டான். இரண்டு நாள் கழித்து நேரம் ஒழியா ஒரு வேளையில் மடலனுப்பினான்.

'தோழியின் கோவம் தீர்ந்ததா?'.

இரண்டு மணிநேரத்தில் பதில் வந்தது. 'ஓ. தீர்ந்தது. எங்களுக்குள் சின்ன பிரச்சனை. இப்போது சரியாகிவிட்டது'. அத்துடன் சிரிக்கும் ஒரு ஸ்மைலியும் அனுப்பினாள். உள்ளுக்குள்குள் ஆவல்.

'யாராயிருக்கும் அவள்'. மெயிலுடன் இணைந்த சாட்டில் தேடினான். செய்தியும் அனுப்பினான். பதில் வந்தது. அன்று முதல் ஆரம்பித்தது அவளுடன் இந்த நட்பு. இணைய நட்பு.

ஆரம்பம் முதலே சின்ன சந்தேகம் இருந்தது. இது பெண் தானா? அவள் வார்த்தைகள் பெண் பேசுவதைப்போலவே இருந்தது. ஆயினும் நம்பமுடியவில்லை. புகைப்படத்தை அனுப்ப சொன்னான். அவள் மறுத்துவிட்டாள்.

'தெரியாதவரிடம் புகைப்படம் தரவியலாதென்றாள்'.

நாளாக நாளாக நட்பு இறுகியது. அன்றாடம் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள தொடங்கினான். அவளும் அதே போல். கல்லூரியில் படித்தது, ஆசிரியர்களுடன் பேசியது, சினிமாவிற்கு சென்றது என. அவளின் சொந்த விவரங்களைத் தவிர அனைத்தையும் பகிர்ந்துகொண்டாள். சிறிது நாள் கழித்து கேட்டான்.

'உன்னுடன் வாய்ஸ் சாட்டிங்காவது செய்யலாமா?' மறுப்பேதும் இல்லை. அன்று இரவு பேச முடிவுசெய்தனர். குரல் கம்மிவிடக்கூடாது என்று பனங்கல்கண்டு பாலெல்லாம் குடித்தான். இரவுவேளையும் வந்தது. வாய்ஸ் சாட்டுக்கு முன் மைக் சரியாக வேலை செய்கிறதா என்று சோதனை செய்தான். படபடக்கும் இதயத்துடன் புது நபரின் குரலைக்கேட்கப்போகும் ஆவல். நடுங்கும் விரலுடன் மைக்கை ஆன் செய்தான். மறுமுனையில் சிறிதே பதட்டமான ஒரு இனிய பெண்குரல்.

"ஹலோ.."

வெண்ணெய் போல வழுக்கிச் சென்ற குரலில் இவனும் விழுந்தான். ஆயிரம் முறை பயிற்சி செய்திருந்த வார்த்தைகள் வரவில்லை.

"ஹலோ". குரல் நடுக்கம் நன்றாக உணர முடிந்தது. சிறிது சிறிதாக படபடப்பு குறைந்து பேச ஆரம்பித்தான். அன்றிரவே அந்த குரல் மீது காதல் கொண்டான்.

காதல் வந்தாலே காகம் கூட குயில் போல பாட முயலும் போது இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?

அதனால் அந்த விபரீதமும் வந்தது...
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: ஸ்ருதி on September 23, 2012, 10:24:12 AM
சட் பற்றிய கதையோ

பல விபரீதங்களை எதிர் பார்கிறேன்...

நன்றிகள்... :D
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 23, 2012, 10:32:43 AM
Ethirpaakura maathiri ethuvum nadakaathu. hehe
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Global Angel on September 23, 2012, 12:59:55 PM
Quote
'வந்துவிட்டாள் என்னவள்'



ஹஹா கோதம் எனக்கு ஒரு டவுட் .. அந்த ஆண் அழகனுக்கு  எதாவது போரும் மாட்டி இருக்கணுமே ... அங்க போய் இப்டி எல்லாம் கவிதை எழுதி இருக்கணுமே ...

என்னவளின் குரல்
அது ஸ்வீட்டில் செய்த மஹால்
பட்டில் செய்த குரல்
பகடில் நெய்த குரல்
அவள் குரலே அமுதம் என்றால்
என் அவளின் அழகு மேனி
காண ஆவல் ...

அன்பே நீ அழகு
நீ நடந்தால் நடை அழகி
நெருங்கி வந்தால் இடை அழகி
நீ பேசும் தமிழ் அழகி
நீ ஒருத்தி தான் அழகி
நெற்றியிலே சுருண்டு விழும் கற்றை கூந்தல் அழகி
அந்த முடி தனை கோத நான் அவள் கொள்வேன் அழகி
                                 ( பாட்சா பட பாடல் நீ நடந்தால் நடை அழகு பாடல் ரிதத்தில் படிக்கவும் )
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Anu on September 24, 2012, 06:19:34 AM
சட் பற்றிய கதையோ

பல விபரீதங்களை எதிர் பார்கிறேன்...

நன்றிகள்... :D

sariya soninga cuty :)
gotham adhu eppadi ungalaala matum ippadi
story ezhuda mudiyudhu. konjam interesting ah kondu ponga :)
appuram unga twist vaiyunga :)
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 24, 2012, 06:57:33 AM
Quote
'வந்துவிட்டாள் என்னவள்'

ஹஹா கோதம் எனக்கு ஒரு டவுட் .. அந்த ஆண் அழகனுக்கு  எதாவது போரும் மாட்டி இருக்கணுமே ... அங்க போய் இப்டி எல்லாம் கவிதை எழுதி இருக்கணுமே ...


ஹாஹா. உங்க கற்பனையே..கற்பனை.
அடுத்தடுத்த பாகங்கள படிங்க.
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 24, 2012, 06:58:42 AM
சட் பற்றிய கதையோ

பல விபரீதங்களை எதிர் பார்கிறேன்...

நன்றிகள்... :D

sariya soninga cuty :)
gotham adhu eppadi ungalaala matum ippadi
story ezhuda mudiyudhu. konjam interesting ah kondu ponga :)
appuram unga twist vaiyunga :)
இதுல இன்ட்ரஸ்டிங்கா அவ்வளவா இருக்காதுனு நினைக்கிறேன். : )

தொடர்ந்து படிங்க.
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 24, 2012, 07:11:58 AM
பாகம் 2:

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவர்கள் சாட்டிங் தொடர்ந்தது. அவளுக்கும் தன் மீது விருப்பு இருப்பதை அறிந்து கொண்டான். தன் காதலை என்றேனும் வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கினான். அவனுக்கேற்றார் போல் விதியும் தன் இஷ்டம் போல் சதி செய்தது. நாள் முழுக்க அந்த குரல் நினைவிலேயே காலம் தள்ளலானான்.

அவனுக்கு சரியாக தெரியவில்லை. அது சித்ராவின் குரலா, சுசீலாவின் குரலா அல்லது ஜானகியின் குரலா என்று. எல்லாம் கலந்த கலவைப் போன்றிருந்தது அக்குரல். நாளடைவில் குரலுக்காக மனம் ஏங்கியது. முதல் முறை பேசியபின் அவள் பேசவில்லை. மறுபடி வாய்ஸ் சாட்டிங்கு வற்புறுத்தலானான். அவளும் சிறிது சிணுங்கலுக்குப்பின் ஒத்துக் கொண்டாள்.

நேரமும் வந்தது. இம்முறை அவனுக்கு தைரியமும் அதிகமாயிற்று.

"ஹலோ.." வழமையான வெண்ணெய் குரல். தன் நா உலர்ந்து போவதையுணர்ந்தான்.

"ஹலோ.. எப்படி இருக்கீங்க?" மறுமுனையும் சின்னதாய் சிரிப்பு. கேட்கும் போதே அவ்வளவு அழகாய் தோன்றியது. 'நேரில் அவள் சிரிப்பதை பார்க்க வேண்டும். முத்துப்பற்கள் தெரிய சிரிப்பாளா.. இல்லை அவை பொக்கிஷங்களென யாவருக்கும் காணக்கிடைக்காமல் நகைப்பாளா?'. பார்க்க வேண்டும் என்ற ஆவல் இன்னும் உந்தியது.

"ஏன் சிரிக்கறீங்க?"

"ஹலோ சொல்லி பதில் சொல்ல இவ்ளோ நேரமா?". நெருக்கமாய் உணர்ந்தான்.

"அப்படி இல்லே. உங்க குரல கேட்டுக்கிட்டே இருக்கணும் போலிருந்தது அதான்."

"அப்போ என் குரல ரெக்கார்ட் பண்ணி அனுப்பறேன். கேட்டுக்கிட்டே இருங்க." அவள் கேலி புரிந்தது. மனம் கூண்டில் சிக்கிய கிளி போல சின்னாபின்னப்பட்டது. 'பேச்சிலேயே கொல்கிறாளே'

"அது வந்து..."

"ஏங்க. டைப் பண்ணும் போது மட்டும் சகஜமா பேசறீங்க. இப்போ பேசும் போது அநியாயத்துக்கும் கூச்சப்படுறீங்க". தன்னிலை உணர்ந்தான். வியர்த்துக் கொட்டியது.

"அதுவா. நான் பெண்கள்கிட்ட அதிகமா பேசியது கிடையாது. அதுவும் முகம் தெரியாத பொண்ணுக்கிட்ட முதல் தடவையா உங்ககிட்ட தான்."

"ஓ.. நான் யாருன்னே தெரியாமல் நிறைய பேர்கிட்ட பேசிருக்கேன்."

அந்த மற்றவர்கள் மீது அவனுக்கு கொலைவெறி வந்தது. ஆனாலும் என்ன செய்ய.

"அப்படி எத்தன பேர தெரியும்?"

"சும்மா.. ஹாய் பை.. அவ்ளோ தான். அதிகபட்சமா ஒரு தடவை ரெண்டு தடவ பேசிருப்பேன். நல்லா வழிவானுங்க. டாட்டா காமிச்சிடுவேன்"

'அப்போ நான்னு'. கேட்கத் தோன்றியது.

"என்னை பத்தி என்ன நினைக்கறீங்க?"

"நான் சாட் பண்ணினதிலேயே நீங்க ரொம்ப ஸ்வீட். கண்ணியமா பேசறீங்க. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு."

வானத்துல மேல மேல பறந்து போற மாதிரி தோன்றிற்று. முடிவேயில்லா வானவெளியில் பறந்துகொண்டே இருந்தான். ஆகாயபிம்பங்கள் கரைய கரைய முடிவிலியாய் இருக்கும் வானின் முடிவு தேடி பறந்து கொண்டே இருந்தான். அவளின் குரல் மறுபடியும் அவனை நினைவுக்கு கொண்டு வந்தது.

"இருக்கீங்களா..?"

"இருக்கேன்.. இருக்கேன்.."

அப்புறம் தொடர்ந்தது சம்பாஷணை. முடிக்கும் போது அதிகாலை மணி மூன்று. மூன்று மணி நேரமே தூக்கம். ஆயினும் எழுந்த
போது புத்தம் புதிதாய் பூத்த ரோஜா பூவிதழ் மாதிரி மனமும் உடலும் புத்துணர்ச்சியோடிருந்தது. அவளின் மீதான காதல் முன்னிலும் அதிகமானதாய் தோன்றியது. பார்க்கும் எதுவுமே அழகாய் தோன்றுகிறது. காதல் பற்றி கவிஞர்கள் பாடியது உண்மை தான் போலும்.

அன்றைய நாள் முடிவில் முடிவெடுத்திருந்தான். அடுத்த முறை பேசும் போது தன் காதலை தெரிவிப்பதென்று. அதற்கு நாளும் குறித்தான்.

அந்த நாளில்....
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: ஸ்ருதி on September 24, 2012, 07:53:56 AM
அதுக்குள்ள லவ் சொல்ல போறனோ? ??? ??? இந்த பசங்களே இப்படிதான்...  >:(  ;) >:(
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 24, 2012, 09:05:34 AM
haha..


Kathaiya iluka virumbala athaan. vegavegamaa luv panraanga..
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Anu on September 25, 2012, 07:09:39 AM
பாகம் 2:



அவனுக்கு சரியாக தெரியவில்லை. அது சித்ராவின் குரலா, சுசீலாவின் குரலா அல்லது ஜானகியின் குரலா என்று. எல்லாம் கலந்த கலவைப் போன்றிருந்தது அக்குரல்.

romba pidichi irundha kazhudai kural kooda kuyil mathiiri irukumaam.
andha mathiri irukumo ..
"ஓ.. நான் யாருன்னே தெரியாமல் நிறைய பேர்கிட்ட பேசிருக்கேன்."

haha.. wrong no ah solrangalo ivanga..

very nice story.. continue pannunga gotham..
eduku avasarama mudikiringa..





Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 25, 2012, 07:21:33 AM
நன்றி அனு க்கா. இது நான் சாட்-கு வர்ற முன்னாடி எழுதின கதை. : )

கதையே ஏழு பாகம் தான். இரண்டே நாள்ல எழுதினது.
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 25, 2012, 07:24:06 AM
பாகம் 3:

தன்னை நன்றாக தயார்படுத்திக்கொண்டிருந்தான் அவன். கண்ணாடிமுன் பல தடவை நின்று பேசிப்பார்த்தான். தன் குரலை பதிவு செய்து திரும்ப திரும்ப கேட்டுப்பார்த்தான். எந்நெந்த இடத்தில் இன்னும் மென்மை சேர்க்கணுமோ அதையும் சேர்த்தான்.

அன்றிரவு அவள் வந்தாள். வழக்கமான ஹலோக்கள்.

இதயம் படபடக்க காதல் சொல்ல நேரம் பார்த்திருந்தான்.

"ஹே.. இவ்வளவு தூரம் பேசி புரிஞ்சப்பின்னும் இன்னும் முக காட்டவில்லையே?" துணிந்து கேட்டுவிட்டான்.

"என்னை முழுமையா புரிந்தவரா நீங்கள்?" ஒரு எள்ளல் தெரிந்தது அவள் தொனியில். உண்மையில் பெண்மையை முழுவும் அறிந்தவர் யாருலர்.

"அப்படி இல்லே. இவ்ளோ நெருங்கிட்டோம். இன்னும் முகத்த காட்டாமலேயே ஏன்?"

"சில சமயங்கள் முகம்கூட தடையாயிடும் நல்ல் நட்புக்கு"

"அப்படி இல்லே. முகம் ஒரு அடையாளம். குரலுக்கு ஒரு உருவம் பொருத்திப் பார்க்கறது. உன் குரலுக்கு எத்தனையோ ஹீரோயின்களின் முகம் ஒட்டிப்பார்க்கிறேன். எதுவுமே ஒட்டவில்லை."

"அடடே. கவித்துவமால்லாம் பேச ஆரம்பிச்சிட்டீர்."

நேரம் நெருங்கிவிட்டது.

"மனசுக்கு பிடித்தவர்களுடன் பேசினால் அதெல்லாம் தானா வருது. அப்படி தான் நீயும்."

"என்ன பேச்சு மாறுது போல" சந்தேகம் நிறைந்தது அவள் தொனியில். இருந்தாலும் பைத்தியமாய் இருப்பதைக்காட்டிலும் கேட்டுவிடலாம்.

"உண்மை தான். பித்தன் போலாகிறேன் உன்குரலில். ஏனோ தெரியல. நாம பகிர்ந்துக்கிட்ட விஷயங்கள், எல்லாமே எதையோ நோக்கி செலுத்தற மாதிரி இருக்கு. ஒரு வேளை இது காதல் தானானு தெரியல. உனக்கு ஏதாச்சும் இந்த மாதிரி தோணுதா?"

சப்பைக்கட்டுகட்டி காதலை தெரிவித்துவிட்டமாதிரி உணர்ந்தான். தயார் செய்தது என்னவோ நடந்தது என்னவோ.

மறுமுனையில் மவுனம். சற்றுநேரம் கழித்து செருமும் சத்தம்.

"உங்களுக்கு ஏன் இப்படி தோன்றியதுனு தெரியல. ஆனா நான் நீங்க நினைக்கற மாதிரியில்ல"

"வேற எந்த மாதிரி?" கொஞ்சம் கொஞ்சமாய் சுயசிந்தனைகளை இழக்க ஆரம்பித்தான்.

"நான் பேசறது மாதிரி இல்லே. கொஞ்சம் அடாவடி பொண்ணு."

"எங்கேயும் எப்போதும் அஞ்சலி மாதிரியா?"

"இல்லே மை சாஸி கேர்ள் கதாநாயகி மாதிரி. நினைச்சா நினைச்சது கிடைக்கணும். அதுவுமில்லாம எனக்குனு சில கனவுகள் இருக்கு என் காதலைப் பத்தி. அதெல்லாம் பூர்த்தி ஆகுமானு தெரியல"

அவளுக்காக இமயமலை உச்சிக்கு தலைகீழாகவே நடந்து செல்ல தயாராய் இருந்தான். மனசுக்குள் பதட்டம் அதிகமானது. வேறு யாரையும் காதலிக்கிறாளோ.

"எதுவானாலும் பரவாயில்ல. சொல். செய்கிறேன்."

"அதுக்கு முன்னாடி. எனக்கு ஏற்கனவெ இரண்டு காதலர்கள் இருந்தனர். ஆனாலும் அந்த உறவு நீடிக்கல. அவர்களாவே பிரிஞ்சு போயினர். அதான் காதல் என்றாலே வேப்பங்காய் போல இருக்கு."

"கடைசிவரை இப்படியேவா இருக்கப் போகிறாய். எப்படிப்பட்ட காதலன் வேண்டுமென்று எதிர்பார்க்கிறாய். இருக்க முயல்கிறேன்".

அவள் முகம் பார்க்கும் எண்ணம் மீறி தன் காதலை அவள் ஏற்றுக்கொள்ளணும் என்று பைத்தியக்கார எண்ணம் விசுவரூபமெடுத்தது. பெருமூச்சுவிட்டபடி அவள் தொடர்ந்தாள்.

"எனக்கு தமிழ்ன்னா ரொம்ப பிடிக்கும். அதிலும் கவிதைன்னா ரொம்பவே பிடிக்கும். என் காதலர் கவிதை எழுத தெரிந்தவரா இருக்கணும். கவிதை தெரிந்தவர் காதல் தெரிந்தவர்". மனம் திக்கென்றது.

"அப்புறம்.?"

"ரொம்ப பொறுமைசாலியா இருக்கணும். எனக்கு முன்கோபம் அதிகம். அதையெல்லாம் தாங்கும் மனத்திடம் வேண்டும். ஏதாவது சந்தர்ப்பத்தில் என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கணும். உங்களுக்கு பொறுமை அதிகமென்று எனக்குத் தெரியணும்".

ரொம்பவும் குழப்புகிறாளே.

"அதனால நீங்கள் கவிதை எழுதணும். அதுவும் எனக்கான கவிதை ஊர் முழுக்க படிக்கப்படணும். ஏன் உலகம் முழுக்க. இணையத்துல எழுதணும். காதலிக்காக என்னவெல்லாம் செய்கிறாய் பார்னு எல்லோரும் சொல்லணும். இதுக்கு இடையில் என்ன நடந்தாலும் கோபப்படக்கூடாது. எங்கெல்லாம் எழுதறீங்கன்னு சொல்லுங்க அங்கெல்லாம் வந்து படிப்பேன். என் மனதின் அடி ஆழத்தைத் தொடற மாதிரி என்று கவிதை எழுதறீங்களோ, அன்று உங்க காதலை ஏற்கிறேன். புகைப்படம் என்ன நேரிலேயே வருகிறேன்"

மனம் ஆனந்தக்கூத்தாடியது. காதலில் ஜெயிக்கவும் வழி சொல்லிவிட்டாள். ஆனாலும் நெருடல். கவிதை. அது மட்டும் இடித்தது.

தமிழ் படித்துள்ளானன்றி கவிதைகள் பரிட்சயமில்லை. இவளோ நிறைடய படித்திருக்கிறாள் போலும் திருடவும் முடியாது. காதல் அவனை அந்த விபரீத முடிவு எடுக்க வைத்தது. கவிதை எழுத ஆரம்பித்தான்.

விபரீதங்கள் ஆரம்பம்.
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Anu on September 25, 2012, 11:38:28 AM
பாகம் 3:


"எனக்கு தமிழ்ன்னா ரொம்ப பிடிக்கும். அதிலும் கவிதைன்னா ரொம்பவே பிடிக்கும். என் காதலர் கவிதை எழுத தெரிந்தவரா இருக்கணும். கவிதை தெரிந்தவர் காதல் தெரிந்தவர்". மனம் திக்கென்றது.

"அப்புறம்.?"

"ரொம்ப பொறுமைசாலியா இருக்கணும். எனக்கு முன்கோபம் அதிகம். அதையெல்லாம் தாங்கும் மனத்திடம் வேண்டும். ஏதாவது சந்தர்ப்பத்தில் என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கணும். உங்களுக்கு பொறுமை அதிகமென்று எனக்குத் தெரியணும்".

conditions potta love irukuma angha?
idhu edho trading pola iruku :)
love ku edhu boundries :):)

விபரீதங்கள் ஆரம்பம்.
idhu thaan aagum.
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 25, 2012, 11:51:03 AM
Anu ka
Ninga sonna vishayangal unmai than. But love pathina antha definitions ellam cinemaleyum kathaiyileyum thaan paakarom. Real life-la egapatta vibareethangalaa thaan iruku..love-ngara perila.


Athula onnu thaan intha story.. All in the name of LOVE : )


Avanavan condition potu thaan kalyaname pannikaraan. Love panna maataanaa.. :D
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 25, 2012, 01:29:10 PM

பாகம் 4:

அந்த நாள் முதல் காதலியே அவன் கண்முன் தோன்றினாள். பார்க்கும் எதிலும் உருவமில்லா அவள் குரலே உருவமாய் தெரிந்தது. இவளாய் இருப்பாளோ அவளாய் இருப்பாளோ என பார்க்கும் பெண்களிடமெல்லாம் அவளைத் தேடினான். அவள் இயற்பெயர் என்னவாயிருக்கும். வித்யா, சித்ரா.. இல்லை இன்னும் நவநாகரிகமாக சாரா, நோரா இப்படி ஏதாச்சும். வேலையை மறந்தான். தன்னிலை மறந்தான். ஏனைய நண்பர்களை மறந்தான்.

கவிதை எழுதணும். எப்படி தொடங்குவது என தெரியவில்லை. நண்பர்களுடனும் தற்சமயம் தொடர்பில்லை. யாரைக் கேட்பது. மறுபடி இணையத்தை நாடினான். தமிழில் கடினப்பட்டு தான் தேர்வில் தேறியிருந்தான். இருந்தாலும் விடாப்பிடியாக தமிழைக் கற்க ஆர்வம் கொண்டான். கற்கும் ஆர்வமாக இல்லாமல் கவரும் ஆர்வமாக இருந்ததே பிழையாயிற்று. பார்த்திலெல்லாம் நுனிப்புல் மேய்ந்தான். கண்ணதாசன் படிக்கும் போதே வைரமுத்துவிடம் பாய்ந்தான். இடையிடையே திரைப்படப்பாடல்கள் வேறு. கவிதையின் உருவம் இப்படித் தான் இருக்குமென்று அவன் மனதில் ஒரு எண்ணம் ஆழமாய் வேரூன்றியது. வார்த்தை ஜாலங்களும் எண்ணத்தை வண்ணத்தை தெறித்தலுமே கவிதை என கொண்டான். நல் வழிகாட்டி இல்லாதது ஒன்றே குறை. நீட்டியும் முழக்கியும் ஒரே வார்த்தையினை திரும்பத் திரும்ப பயன்படுத்தும் வித்தையே கவிதைமுழக்கம் என தப்பர்த்தம் கொண்டான். இணையத்தில் பரவலாய் விரவிக்கிடக்கும் பக்கங்களும் அவனுக்கு தெம்பூட்டின. எது எழுதினாலும் கவிதை என. ஆரம்பித்தது இனி தமிழுக்கு சோதனை.

இணையத்தின் பல தளங்களுக்கும் சென்றான். தன் பெயரை பதிந்தான். அவளிடமும் சொன்னான். அவளை நினைத்து என்னெல்லாம் தோன்றிற்றோ அதெல்லாம் எழுத ஆரம்பித்தான். முதலில் அவன் வார்த்தைகளை மடக்கி எழுத பார்த்தான். சொற்றொடரை வெட்டி வெட்டி எழுதினான். பல இடங்களிலும் படித்த கவிதைகளின் சாயல் இருப்பதாய் தோன்றியது. மனதில் மகிழ்ச்சி வெள்ளம்.

'சரஸ்வதி என்னுள் வந்துவிட்டாள். கவிதை உலகம் இனி என் படைப்புகளுக்கு கெஞ்சும்.'

மனத்தினில் ஏனோ இறுமாப்பு தோன்றியது. அவளால் தான் இத்தனையும் தன்னால் சாதிக்க முடிந்தது என தோன்றியது. எழுத எழுத தன்னை மிஞ்ச யாருமிலர் என்றே நம்ப ஆரம்பித்தான். ஓவ்வொரு முறை அவளைப்பற்றிய கவிதை பதிக்கும் போதும் அவளிடம் சொல்வான். அவள்
அங்கே வந்து படிப்பாள். 'என்ன பெயரில் வருவாள் என்பது அவனுக்கு புரியாத புதிராய் இருந்தது. இணையத்தில் பல தளங்களிலும் அவள் இருக்கிறாள்.'

ஒருமுறை சாட்டிங்கில் கேட்டே விட்டான்.

"நான் எழுதும் கவிதைகளை படிக்கிறாயா?"

"ஓ. படிக்கிறேனே. உன் ஓவ்வொரு கவிதையையும்."

"என்ன பெயரில் வருகிறாய்?"

"அது மட்டும் சொல்ல முடியாது. ஒன்று மட்டும் சொல்வேன். பெண் பெயரில் தான் வருவேன். கவலை வேண்டா".

"இத்தனை கவிதைகளிலும் ஒன்று கூட உன்னை பாதிக்கவில்லையா? எப்போது உன் திருமுகம் காட்டுவாய்?"

கலகலவென நகைத்தாள்.

"இன்னும் காலம் ஆகவில்லை. சற்றே பொறு. உன் கவிதைகள் நல்லா இருக்கிறது. ஆனால் உருக்குவதாய் இல்லை. நீ உருகி அது என்னையும் உருக்குவதாய் இருக்க வேண்டும்."

புரிந்தும் புரியாதது போல் இருந்தது. இரண்டு விஷயங்கள் புரிந்தது. பெண் பெயரில் வருகிறாள். உருவதாய் கவிதை எழுத வேண்டும். எழுதுகிறேன் காதலியே. உன்னையும் உருக்குவேன். அன்றுமுதல் யாரெல்லா பெண் பெயரில் வருகிறார்களோ அவரெல்லாம் அவளாய் இருப்பார்களோ என சந்தேகம் கொண்டான். கருத்திட்டுவிட்டால் அவளே தான் என நம்ப ஆரம்பித்தான். ஒன்றில்லாமல் பல பெண்பெயர்கள் வந்ததால் அதிகமாய் குழம்பினான். குழப்பத்திற்கே பெருங்குழப்பம் வந்தால் என்னாகுமோ அந்நிலையில் அவன்.

'அவளுக்கு பிடித்த மாதிரி கவிதை எழுதணும். அவளைப்பார்க்கணும். அவ்வளவு தான்.' உருகி உருகி எழுத ஆரம்பித்ததன் விளைவு தமிழ் அவனிடம் உருக ஆரம்பித்தது. எதுகைகளும் மோனைகளும் என கட்டவிழ்த்துவிட்டான் தன் வார்த்தைகளை. கண்டு கேட்டு உண்டுயர்த்த
அனைத்து சொற்களும் தமிழென நம்பி பதிவிட்டான். ஐயகோ அதனால் வந்ததே வினை.

அவள் அவனிடம் எதிர்பார்த்த படி பொறுமைசாலியாக இருக்கும் நிலைக்கு தள்ளப்படும் படி அந்த செயல் நிகழ்ந்தது.

அது...
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Global Angel on September 25, 2012, 02:51:35 PM
ஆமா அவனுக்கு  மட்டுமா விபரீதம் ஆரம்பம் ...  அவன் கவிதையை படிச்சு தொலைக்கக் போற எல்லருகும்ல ஆரம்பம் ... சும்மா இருக்குறவன சுரண்டி மத்தவங்கள ரணகளமாக்க வைகுறதே இந்த பொண்ணுகளுக்கு பொழப்ப போச்சு ... அவ சுரண்டினதால அவசத அவளுக்க .. லூசு பொண்ணு .. கவிங்கனை காதலிக்கணும்னா .. வாலி பிரீயாதன் இருபாரு .. வைர முத்துவும் ஆகிட்டு இருகாரு அவங்கள காதலிச்சு தொலைகுரத விட்டு ... சும்மா இருந்தவன சொரண்டி இருக்குறவங்கள சவடிக்க வச்சுட்டாளே படு பாவி .. >:( ;D
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 25, 2012, 03:53:38 PM

பாகம் 5:

தனக்குத் தெரிந்த தமிழில் அர்த்தங்களும் அனர்த்தங்களும் நிறைந்த கவிதைக்கிறுக்கல்களைப் பதிக்கையிலே யார் கண் பட்டதோ தெரியவில்லை. விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. எப்போதும் அவனுக்கு அதிககோபம் வராது. ஆயினும் காதலின் பிடியில் சிக்கியவனுக்கு மனமும் அறிவும் மரத்தது போலிருந்தது. அவளின் நினைவாக எழுதும் கவிதைகள் கண்டவர் கண்பட்டு சின்னாபின்னாமாவதை அவன் விரும்பவில்லை.

இப்படி தான் ஒரு நாள் அவளை நினைத்து மனம் உருகி எழுதினான்.


"மணியே
தனியே
இனியே வா
என் கனியே

முன்பனியே
உன்
விரல்நுனியே
என்னை
விட்டுவிட்டான்
சனியே"

தான் எழுதியதிலேயே ஆகச்சிறந்த கவிதையென இதைக் கொண்டான். எப்படியும் அவள் வருவாள் இதை படிப்பாள் இன்முகம் காட்டுவாளென எதிர்பார்த்து ஏங்கி நின்றான்.

அப்போது தானா அவன் வரவேண்டும். எல்லாம் தெரிந்த கவிஞன் போலும். என்னைவிடவா?! வரிக்கு வரி அர்த்தம் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான். நான் எழுதிய கவிதை புரியவில்லையாம். இவர்களெல்லாம் கவிஞர்கள் என்று ஏன் வெளியே சொல்லிக் கொண்டு திரிகிறார்களோ? இத்தனை எளிதான கவிதையே புரியவில்லை. பின் சங்க இலக்கியம் எங்கே புரிய போகின்றது. பதில் எழுதினான். '

'காதலியே கண்ணின் மணி போன்றவளே, கனி போல இனிமையானவளே, உன் சுற்றத்தாரை விட்டு என்னுடன் பேச தனியே வா. முன்பனிக்காலை பொழுதில் என்னருகில் நீ இருக்கையில் உன் விரல்நுனியில் ஸ்பரிசம் படும் போது என்னை இதுவரை ஆட்கொண்டிருந்த ஏழரைநாட்டு சனியும் விட்டுவிட்டான். இனி எனக்கு நல்ல காலம் தான். நீ என்னருகில் இருக்கும்வரையில்'

புரியாத மனிதர்கள். எதற்கு புரியவைக்க வேண்டும்? அவளுக்கு மட்டும் புரிந்தால் போதும். இவர்களைப் பற்றி எனக்கென்ன கவலை. ஆனால் ஏனோ தெரியவில்லை. அவர்கள் மறுபடியும் விமர்சனம் செய்தனர்.

'காதலியை சனியுடன் ஒப்பிட்ட மாதிரி அல்லவா இருக்கிறது'

அதீத கோபம் வந்தது. தன் கவிதைகளை விமர்சித்ததாலா இல்லை காதலி அந்த விமர்சனங்களையெல்லாம் படித்துவிட்டு தன் கவிதை பிடிக்கவில்லை என சொல்லிவிடுவாளா?.கோபம் இருமடங்காகியது. வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாய் யார் இவர்கள். காதலைப்பற்றி என்ன தெரியும்? இல்லை காதலியைப் பற்றி என்ன தெரியும்? முகம் காணாமல் காத்திருப்பதன் வலி புரியுமா? மனதில் இதுவரை கேட்ட கெட்ட வார்த்தையெல்லாம் உதித்தது. நாகரிகம் கருதி தவிர்த்தான்.

சும்மாவா சொன்னார்கள் விதி வலியது. அவள் அவன் கவிதைகளை படித்தாள். அதிலும் அதற்கு வந்த விமர்சனங்களை இன்னும் படித்தாள். அவனுடன் பேசுகையில்

"உன் கவிதையைப் படித்தேன். ஆனாலும் தெரியவில்லை. ஏனோ ஈர்க்கவில்லை"

நொறுங்கிப் போனான். ரொம்பவே கஷ்டப்பட்டு எழுதியிருந்தான் அந்த கவிதையை. இதுவும் பிடிக்கவில்லை என்கிறாளே. அவர்கள் மேல் கோபம் கோபமாக வந்தது.

"ஏன் பிடிக்கலை?"

"அங்கே எழுதியிருந்தார்களே படிக்கவில்லை. சில இடங்கள் இடறுதென்று. என்று உன் கவிதையை படிக்கும் ஒருவர் விடாமல் பாராட்டி அதிசயிக்கிறார்களோ, என்று எனக்குள்றுன் கவிதை மூலம் பூகம்பத்தை ஏற்படுத்துகிறாயோ அன்று உனைக்காண வருகிறேன்"

முடிந்தது. இனி எத்தனை கவிதை எழுத. அதிலும் அவர்கள் விமர்சனம் என்னும் பேரில் என் கவிதையை சின்னாபின்னமாக்கி வருகிறார்கள். அவர்களை விடக்கூடாது. மனத்தில் ஆத்திரத்தின் அரங்கேற்றம். காதல் போதையின் தள்ளாட்டம். மனதில் தோன்றியதையெல்லாம் கவிதையாய் கிறுக்க ஆரம்பித்தான். அவர்களுடனான போராட்டம் தொடர்ந்தது. தன் கவிதையில் பிழை என்பதை ஒப்ப மனமில்லை. அதிலும் அவர்கள் வாயை எங்கனம் மூடுவது. அதற்கு அவர்கள் வெளியேறினால் தான் உண்டு. சூசகமாக தாக்கி எழுத ஆரம்பித்தான்.

படித்த அவளுக்கு எதுவும் பிடிக்கவில்லை. அடுத்த முறை அழைக்கையில் சொன்னாள்.

"நீ என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்?"

"உனக்கான கவிதைகள். ஏன்?"

"நீ எனக்காக எழுதுவதைக்காட்டிலும் அவர்களுக்காக எழுதுவது போலுள்ளது. என்மீது இன்னும் காதல் உண்டா?"

"சந்தேகமென்ன? உயிர்பிரிந்தாலும் என்காதல் இருக்கும்"

"அப்போ அவர்களே ஒத்துக்கொள்ளும் படி கவிதை எழுத ஏன் தாமதம்? இதில் நம் காதலும் நானும் சிக்கித் தவிப்பது உனக்கு தெரியவில்லையா என்ன?"

மனம் பொறிந்தது. அவர்களால் தான்.

"அது சரி, அவர்களை தாக்கி வேறு எழுதுகிறாய். உன் பொறுமை அவ்வளவு தானா?"

பொறிக்குள் சிக்கிய எலியாய் உணர்ந்தான். இப்போது என்ன தான் செய்வது? இதற்கு முடிவு தான் என்ன? பொறுமை காக்க வேண்டுமானால் அவர்களை எப்படி சமாளிப்பது?


யோசித்து யோசித்து தலைவலித்தது. முகம் தெரியா காதலியும் அவர்களும் அவனை சித்ரவதை செய்தனர். கண் இருண்டது. தலைசுற்றியது. தலையைப்பிடித்து அலறினான். கண்திறந்து பார்த்தாலும் இருட்டாய் இருந்தது. அவன் எதுவுமே புரியாத தெரியாத ஒரு வெளியில் அவன் தூக்கியெறியப்பட்டான்.
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 25, 2012, 03:58:04 PM
ஆமா அவனுக்கு  மட்டுமா விபரீதம் ஆரம்பம் ...  அவன் கவிதையை படிச்சு தொலைக்கக் போற எல்லருகும்ல ஆரம்பம் ... சும்மா இருக்குறவன சுரண்டி மத்தவங்கள ரணகளமாக்க வைகுறதே இந்த பொண்ணுகளுக்கு பொழப்ப போச்சு ... அவ சுரண்டினதால அவசத அவளுக்க .. லூசு பொண்ணு .. கவிங்கனை காதலிக்கணும்னா .. வாலி பிரீயாதன் இருபாரு .. வைர முத்துவும் ஆகிட்டு இருகாரு அவங்கள காதலிச்சு தொலைகுரத விட்டு ... சும்மா இருந்தவன சொரண்டி இருக்குறவங்கள சவடிக்க வச்சுட்டாளே படு பாவி .. >:( ;D
நீங்களே பொண்ணுங்கள தப்பா சொல்றீங்களே..!  :-\
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Global Angel on September 25, 2012, 06:25:55 PM
ஏங்க பெண் என்னும் பேரில் இருக்கும் எல்லோரும் பெண்களா ... பெண்மை கொண்டவர்கள்தான் பெண்கள் .. காதலுக்கு கண்டிசன் .. அதிலும் ஏற்கனவே ௨ காதல் அம்போ ... அப்புறம் என்ன .. ஹிஹ
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 25, 2012, 06:33:27 PM
இது வரை கத நல்லாலியா என்ன?  :)
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Global Angel on September 25, 2012, 07:00:46 PM
 கத சூப்பர் ... அடுத்த கட்டத்துக்கு நான் காத்திருக்கேன் .. நான் நினைகின்ற போல கதை போகுதான்னு பாகோதுகு சீக்ரம் போடுங்க 
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 25, 2012, 07:09:30 PM
நீங்க நினைக்கிற மாதிரி கதை கண்டிப்பா போகாது. அதுக்கு நான் கியாரண்டி.. :)


வேணும்னா ஆதிகிட்ட கேளுங்க.. :D
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Anu on September 27, 2012, 07:37:33 AM
oru love panna ithana kastama .
paavam avanuku love poyi tension thaan minji irukum..
ippa thaan puriyudhu love pandravanga ellam eppadi ivlo azhaga kavithai ezhudaranga endru.
kannai virtu sitthiram vaangum kathai iruku..
enaku oru doubt, nalla kavithai ezhudanumnu yosichi yosichi love panna ponna marandhu poyi kavithai ezhuditu irundha ponnu poida mataangala?
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 27, 2012, 07:47:32 AM
 லவ் பத்தி எனக்கு தெரியாது. ஆனா இவன் அப்படி மாட்டிக்கிட்டான். பாவம். என்ன செய்ய?
 அப்புறம் அக்கா கதயில வர்றது கவிதையே இல்லே.. :-[ . ஆனா இதை யோசிச்சு யோசிச்சு தான் 'அவன்' டென்சனாயிருக்கான்.
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Anu on September 27, 2012, 07:51:05 AM
லவ் பத்தி எனக்கு தெரியாது. ஆனா இவன் அப்படி மாட்டிக்கிட்டான். பாவம். என்ன செய்ய?
 அப்புறம் அக்கா கதயில வர்றது கவிதையே இல்லே.. :-[ . ஆனா இதை யோசிச்சு யோசிச்சு தான் 'அவன்' டென்சனாயிருக்கான்.
"மணியே
தனியே
இனியே வா
என் கனியே

முன்பனியே
உன்
விரல்நுனியே
என்னை
விட்டுவிட்டான்
சனியே"

 :o idhu kavithai illaiya..
naan kathaikum unmai kaathalukum oppittu sonen gotham.
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 27, 2012, 10:10:23 AM
Itha kavithainu ninga nenachaa kavithai.. :)


Aana ithu verum vaarththai korvaiye thavira.. kavithainu sollikara thaguthi antha vaarthaigalukku ille.!
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 27, 2012, 10:26:43 AM

பாகம் 6:

படித்து முடித்ததும் அந்த கோப்பை மூடினார் அவர். பெரிய வார இதழ் ஆசிரியர்.

"ம்ம். சொல்லுங்க மதி. என்ன பண்றீங்க?"

எதிரில் பவ்யமாய் நான். என்னருகில் அவரின் நெருங்கிய நண்பர். இவரின் மூலமாக தான் ஆசிரியரை சந்திக்க முடிந்தது. நாங்கள் இருந்தது வேளச்சேரி பைபாஸ் ரோட்டில் இருந்த காஃபி டேயில். அந்த வெயிலில் குளிரூட்டப்பட்ட அறை இதமாய் இருந்தது. ஆனாலும் எனக்கு வியர்த்தது.

'கடவுளே நல்லபடியாக முடியவேண்டுமே'

"நான் ஒரு எம்.என்.சில வேலை பாக்குறேன். இந்த கத..." இழுத்தேன்.

"நல்ல வேலை தானே பாக்குறீங்க." சிரித்தார். இவர் கேட்ட கேள்விக்கே பதில் சொல்ல மாட்டேங்கறாரே?

"ஆமா சார். நல்ல வேலை தான். இத பத்தி என்ன சார் நெனக்கிறீங்க?" எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் அமைதியாக உட்கார்ந்திருந்தார். காஃபி லத்தே சூடே இல்லாமல் இருந்தது.

"உங்களுக்கு கத எழுத வருது. ஆனாலும் நிறைய புரியல. இவன் எதுக்கு அவள பாக்கணும்னு துடிக்கிறான். அவ சொன்னத அப்படியே கேக்குறான்."

"காதல் சார். அது தான் அவன அப்படி பாடாபடுத்துது. ஏன் அது புரியற மாதிரி இல்லியா?"

"ம்ஹூம். அவ்ளோ இம்ரஸிவா இல்லே." மனம் உதற ஆரம்பித்தது.

"மிஸ்டர். மதி ஃப்ராங்க்கா சொல்லணும்னா என் நண்பர் வற்புறுத்தி தான் இங்கேயே வந்தேன். எனக்கு க்ளோஸ் ப்ரண்ட். ஆனாலும் என் பிசினஸில் தலையிட மாட்டார். பட் எனக்கு உங்க கதை அவ்வளவா புடிபடல். இத எப்படி எங்க மேகஜின்ல பப்ளிஷ் பண்றது. இத டச்சப் பண்ணனும்னா நானே ஒரு கதை எழுதணும்." அழுத்தம் திருத்தமாக சொன்னார் அவர். எனக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. என்னை கூட்டி வந்தவரை பார்த்தேன். பரிதாபமாக என்னை பார்த்தார்.

"எந்த இடத்துல பிரச்சனைன்னு சொன்னீங்கன்னா சரி பண்ணிடறேன் சார்"

அவர் முகம் மாற ஆரம்பித்தது. "தன்மையா சொன்னா புரிஞ்சிக்க மாட்டீங்களா. நீங்க வெறுமனே அவன் அவள்னு எழுதறீங்க. படிக்கற ஆடியன்ஸுக்கு பேர் இருந்தா தான் அதுக்கு ஒரு முகம் வச்சு பாப்பாங்க. அதுவுமில்லாம பழைய படம் மாதிரி பாக்காமலேயே காதல் வேற. எப்பவோ காதல் கோட்டை எடுத்துட்டான். நடுவுல அவ கவித பிடிக்கும்னாளாம். இவன் தமிழ் படிச்சனாம்.

இப்பல்லாம் யார் தமிழ் படிக்கறா. எல்லாரும் கான்வென்ட்ல படிக்கறாங்க. அதுவுமில்லாம இதுல ஜனரஞ்சகமா வார்த்தைகளே கம்மியா இருக்கு. மாத்த ஆரம்பிச்சா உயிர் போயிடும். கவிதை..ல்லாம் ஒரு கம்மியான செக்ட் மக்கள் மட்டும் தான் படிக்கறாங்க. இந்த மாதிரி கரு அவங்களுக்கு வேணா புடிக்கலாம். இது கோடிக்கணக்கான காப்பி விக்கற மேகஜின். உங்க கதையால எங்களுக்கு ஆட்ஸ் வரணும்ல"

வியாபாரம் பேச ஆரம்பித்துவிட்டார் அவர். மனம் சுக்குநூறாய் உடைய ஆரம்பித்திருந்தது.

"சரி.. தெரியாம தான் கேக்கறேன். எதுக்கு நீங்கள் கேட்டவைன்னு பேர் வச்சீங்க?"

"அது வந்து.. மக்களை ஈர்க்கற தலைப்புன்னு"

"சுத்த தமிழ்ல இருந்தா எவன் சார் படிப்பான்? காஃபிடே கப்பில்ஸ், டெல்லியில் பேஷன்ஷோ.. இப்படி இருந்தா தலைப்ப பாக்கறவன் உள்ள வந்து படிப்பான். தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமேயில்லை. அதுவுமில்லாம கடைசியில என்ன எழவு முடிவுன்னே தெரியல. அவன் ஏதோ வெளியில் போறான். அது இதுனு இருக்கு. காதல் கதையில ஒன்னு அவங்க சேரணும். இல்லே பிரியணும். இது என்ன ரெண்டுங்கெட்டானா நிக்குது. அவனுக்கு உண்மையிலேயே பைத்தியம் புடிச்சிடுச்சா என்ன?"

"இல்லே சார். அது அவன் தலை வெடிக்கற மாதிரி இருக்கு. அப்புறம் தெளிஞ்சு நல்ல கவித எழுதி அவள பாக்கறானா இல்லே காதல்ல தோக்கறானான்னு படிக்கறவங்க விருப்பத்திற்கே விட்டுவிட்டேன்."

"புல்ஷிட்.." என் கதைக்கான மொத்தவிமர்சனமும் அந்த ஒத்த வார்த்தையில் அடங்கியிருந்தது. என்னை கூட்டி வந்தவரை பார்த்தேன். அடிபட்ட தெருநாயை பார்ப்பது போலிருந்தது பரிதாபமாக இருந்தது அவர் பார்வை. ஏதும் செய்ய வழியின்றி இருந்தார். ஆசிரியர் அவரிடம் திரும்பி,

"நீங்க கூப்பிட்டீங்கன்னு தான் வந்தேன். சாரி. ப்ரண்ட்ஷிப் வேற தொழில் வேற. இனிமே இந்த மாதிரி விஷயங்கள என்கரேஜ் பண்ணாதீங்க."

பின் என்னிடம் திரும்பி,
"மதி. கதை எழுத முயற்சி பண்றீங்க. ஆனா இன்னும் முயற்சி வேணும். ஹார்ஷா பேசறேனு தப்பா நெனக்காதீங்க. ஆஃப்டரால் இது பிஸினஸ். அடுத்து ஏதாச்சும் எழுதனீங்கன்னா சுருக்கம் மட்டும் என் மெயில் ஐடிக்கு அனுப்புங்க. நல்லா இருந்தா கூப்பிட்டு அனுப்பறேன்."

பிஸினஸ்கார்டை கொடுத்தார். 'இது எனக்காக அல்ல. அவர் நண்பருக்காக என நல்லாவே புரிந்தது.' தலையாட்டிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு திரும்பினேன். மனம் முழுக்க விரவிக் கிடந்த சோர்வு. அவள் சொன்னது இன்னமும் காதில் கேட்டுக் கொண்டிருந்தது.

"கண்டிப்பா நீங்க பெரிய ஆளா வருவீங்க. வரணும். ஒரு நல்ல கதாசிரியரா ஏதாச்சும் புத்தகத்துல உங்க கதையெல்லாம் பிரசுரமாகணும். என்னிக்கு பிரசுரமாகுதோ அன்னிக்கு நான் உங்களை பாக்க நேரிலே வருவேன். அதுவரை இப்படி தான் நம் பேச்செல்லாம்". தெளிவாய் சொல்லிவிட்டாள். மாட்டிக்கொண்டது நான் தான். நன்றாக கதை எழுதத் தெரியுமென்று வீண்ஜம்பத்தால் வந்த வினை. அவளுக்காக தான் கதையின் தலைப்பையும் 'நீ கேட்டது' என பொருள்படும்படி "நீங்கள் கேட்டவை"னு வைத்திருந்தேன்.

'இனி எப்போது பிரசுரமாகி எப்போது பார்ப்பது. அவள் உண்மையான பேர் கூட தெரியாதே.'

வீட்டிற்குள் நுழைந்ததும் பரபரப்பாக கணினி முன் வந்தமர்ந்தேன் நான். மதி. கணினியில் சாட் விண்டோ ஒளிர்ந்தது.

-சுபம்-
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: ஸ்ருதி on September 27, 2012, 07:19:03 PM
"மணியே
தனியே
இனியே வா
என் கனியே

முன்பனியே
உன்
விரல்நுனியே
என்னை
விட்டுவிட்டான்
சனியே"


இது நல்லா இருக்கே :த

கதை முடிவு சூப்பர் :D ... நான் இன்னும் கொஞ்சம் போகும் என்று நினைத்தேன்...


"கண்டிப்பா நீங்க பெரிய ஆளா வருவீங்க. வரணும். ஒரு நல்ல கதாசிரியரா ஏதாச்சும் புத்தகத்துல உங்க கதையெல்லாம் பிரசுரமாகணும். என்னிக்கு பிரசுரமாகுதோ அன்னிக்கு நான் உங்களை பாக்க நேரிலே வருவேன். அதுவரை இப்படி தான் நம் பேச்செல்லாம்". தெளிவாய் சொல்லிவிட்டாள். மாட்டிக்கொண்டது நான் தான். நன்றாக கதை எழுதத் தெரியுமென்று வீண்ஜம்பத்தால் வந்த வினை. அவளுக்காக தான் கதையின் தலைப்பையும் 'நீ கேட்டது' என பொருள்படும்படி "நீங்கள் கேட்டவை"னு வைத்திருந்தேன்.


இது நிசமா இல்லை கற்பனையா?? ??? ???

நன்றிகள்




Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 27, 2012, 07:30:07 PM
ஹாஹா நிஜம்ங்கற அளவுக்கு என் கதை இருக்கா???

ஒருவேளை இடப்பெயர் பாத்து முடிவுக்கு வந்துட்டீங்களோ?

இன்னும் ஒரு மேட்டர்.. கதை இன்னும் ம்முடியல.. :D
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: ஸ்ருதி on September 27, 2012, 07:47:49 PM
-சுபம்-

 
இது?
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 27, 2012, 09:18:24 PM
 ;D ;D ;D ;D
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 28, 2012, 05:13:37 PM

பாகம் 7 : முடிவுக்கு பின்

"A short film by Rajesh" வெள்ளை எழுத்துக்கள் திரையில் மங்கலாய் மறைய அந்த அரங்கம் வண்ணவண்ண விளக்குகளால் உயிர்பெற்றது. மேடையில் நின்றிருந்த எனக்கு சற்றே கண்கள் கூசியது. இக்குறும்படத்தின் இயக்குநர். அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கத்தில் கைதட்டல்கள். பிரபல தொலைக்காட்சியின் குறும்பட இயக்குநருக்கான போட்டி அது. நேரடி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. உலகமே இதை பார்த்துக்கொண்டிக்கும்.

"சொல்லுங்க ராஜேஷ். உங்க படத்துக்கு நீங்கள் கேட்டவைனு பேர் வச்சிருக்கீங்க. உங்கள நாங்க கேட்டமா?" என் நிலைமை புரியாமல் அந்த பெண் தொகுப்பாளர் மொக்கை போட்டுக்கொண்டிருந்தார். சிரித்து வைத்தேன். அவர் கேள்விக்கு பதிலளிப்பது தற்சமயம் முக்கியமில்லை.

"ஓக்கே. கூச்சப்படுறீங்க. நம்ம ஜட்ஜஸ்கிட்ட கேப்போம். உங்க படத்த பத்தி. அதுக்கு முன்னாடி நீங்க எவ்ளோ நம்பிக்கையா இருக்கீங்க?"

"நம்பிக்கை இருக்கு." சொல்லி வைத்தேன்.

"சரி. நாம இப்போ இயக்குநர் திலகத்திடம் கேட்போம். சொல்லுங்க சார்"

திரையுலகின் முன்னணி இயக்குநர் பேச ஆரம்பித்தார்.

"ராஜேஷ். எனக்கு ஒரு சந்தேகம். இது என்ன ஜானர்?"

"லவ் பேஸ்டு டிராமா"

"லவ்னு சொல்றீங்க. ஆனா கடைசி வரைக்கும் எந்த பொண்ணையுமே காட்டல. படத்துல முக்கால்வாசி நேரம் ஹீரோ சாட் பண்றதுலேயே போகுது. படத்துல எனக்கு புடிச்ச சில பாஸிட்டிவ் பாயிண்ட்ஸ்.

ரொம்ப கம்மியான ஆட்கள். இன்டெர்நெட்டில் எப்படியெல்லாம் சிக்கி இருக்காங்கனு சொல்ற மாதிரி. அப்புறம் லைட்டிங். லொகேஷன்னு பாத்தீங்கன்னா ஒரு ரூம், அப்புறம் அந்த காஃபி ஷாப். குறிப்பா சொல்லணும்னா அந்த ஹீரோ காரெக்டர் முகபாவத்துலேயே காதல் வருதுன்னு காட்டியிருக்கீங்க. ஒரே மாதிரி ஷாட்ஸ்லேயே அந்த எஸ்பிரஷன் சேஞ்ச் நல்லா இருந்துச்சு. அதுக்கு தகுந்த மாதிரி பேக்ரவுண்ட் ம்யூசிக். ஆனாலும் பாத்தீங்கன்னா கதை அந்த அளவுக்கு கனமா இல்லே. இன்டெர்நெட் காதல்ங்கறது கொஞ்சம் பழைய கான்செப்ட். அதுல சில யுத்திகள புகுத்தியிருக்கீங்க. ஒரு சஜஷன். கதையை திரைக்கதையா மாத்தும் போது கொஞ்சம் கவனம் எடுத்து பண்ணனும். அவன் நெனைக்கிறது எல்லாம் பேக்ரவுண்ட் வாய்ஸாவே வருது. வேற மாதிரி காமிச்சிருக்கலாம். ஏற்கனவே அத யூஸ் பண்ணி அலுத்தாச்சு.

ஒரு இடம் நல்லா இருந்தது என்னன்னா. அது கதைன்னும் அத நீங்க அந்த எடிட்டர்கிட்ட காமிக்கறீங்கனு இருக்கற சீன். இல்லாட்டி போரா இருக்கற படமாயிருக்கும். எப்படா முடியும்னு நெனைக்கும் போது அந்த ட்விஸ்ட் நல்லா இருந்துச்சு. ஆரம்பிச்ச இடமே முடியற மாதிரி. அதிலேயும் உங்க காதல் ஜெயிச்சுதானு சொல்லல. என்னை பொறுத்த வரை படம் ஓக்கே. ஆனா இன்னும் பெட்டரா பண்ணலாம்."

பாராட்டினாரா திட்டினாரா. பதட்டத்தில் சுத்தமாய் புரியவில்லை. தலையாட்டி மட்டும் வைத்தேன்.

அடுத்து அமர்ந்திருந்த இன்னொரு பிரபல இயக்குநர் பேச ஆரம்பித்தார்.

"சார் சொன்ன பாயிண்ட்ஸ் தான். இன்னும் என்னன்னா ஏதோ சீரியஸா போயிட்டு இருக்கற கதையில காமெடிய சொருகின மாதிரி அந்த கவிதை. யாரு எழுதினா?"

"நான் தான் சார்."

"கவிதைனும் சொல்ல முடியாது. ஆனா அந்த எடத்துக்கு பொருத்தமா இருந்தது. அதிலேயும் அதுக்கு நீங்க கொடுத்த விளக்கம். லாஜிக்கா நிறைய விஷயங்க இருக்கு. போகப்போக கத்துக்குவீங்க. சிறப்பா இருந்துச்சுன்னும் சொல்ல முடியாது. ஆனா அவ்வளவு மோசமுமில்ல. பாக்கலாம் கடைசியில"

தொகுப்பாளினி பேச ஆரம்பித்தாள்.

"ஓக்கே ராஜேஷ். உங்க படத்த பத்தி ஜட்ஜஸ் மிக்ஸட் கமெண்ட்ஸ் குடுத்திருக்காங்க. மத்த படங்களையும் பாத்துட்டு ரிசல்ட் சொல்லுவாங்க. நீங்க உங்க இடத்துல உட்காருங்க".

மௌனமாய் தலையாட்டிவிட்டு இருக்கைக்கு வந்தேன். வட்டமான ஒளி என்னை பின்தொடர்ந்தது. சந்தோஷமா பரிதவிப்பா என்னதென்று தெரியவில்லை. முடிவுக்காக இறுதிவரை காத்திருக்க வேண்டும். எப்படியும் அடுத்த கட்டத்துக்கு போகலாமென்ற நம்பிக்கை இருக்கிறது. சிந்தனைகள் பலப்பட முன்னாடி இருந்த மேடையிலிருந்த தொகுப்பாளினி பேச ஆரம்பித்திருந்தாள்.

"வாங்க. சுரேஷ்.. நீங்க என்ன ஜானர்ல படம் எடுத்திருக்கீங்க.."

கேட்டுக்கொண்டே மொபைலை ஆன் செய்தேன். உயிர்பெற்றதும் அந்த ஆண்ட்ராய்ட் போனிலிருந்த வாட்ஸாப் அப்ளிகேஷன் ஒளிர்ந்தது.

"எனக்கு நல்லாவே கேட்டது. எப்போ மீட் பண்ணலாம்?"

"இந்த படம் லவ் ஜானர்.. படத்துல....." மேடையில் சுரேஷ் பேசிக்கொண்டிருந்தது எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து பேசுவது போலிருந்தது.....

(தயவு செஞ்சு அடிக்க ஆள கூட்டிட்டு வந்துடாதீங்க. சத்தியமா இதுக்கப்புறம் இனி இக்கதை தொடராது )
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: ஸ்ருதி on September 28, 2012, 06:30:08 PM
hahaha:D
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on September 29, 2012, 12:56:03 AM
ஒரு வேளை கதை புரிஞ்சுடுச்சோ?  ::)
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Global Angel on October 15, 2012, 03:03:45 AM
தெரியம்தான்  கேட்குறேன்  காதல் நிலைமை  இப்டியகிடிச்சா  ... இது பணிந்தான் காதல் வரும் அது பணிநாதன் காதல் வரும்னா ...நாளைக்கே ஒருதனவிட இநோருதன் அத விட அதிகமா பநிட காதல் மாறிடுமே .... இதுக்கு காதலிகமலே இருந்திடலாமே ..

ஆமா மதி ... உங்களுக்கு போன் பில் உங்க ப்வருமானதவிட அதிகமாக போரதுமட்டும் உறுதி ... மடபடி ஒன்னும் விளங்கும்னு தோணலை ...


கதை அருமை :D சிரிச்சுட்டேன் ...
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on October 15, 2012, 09:38:38 AM
ஹாஹா.. கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் புரிஞ்சிடுச்சு..


இத நான் காதல்ன்னே சொல்லலியே. நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டீங்க? :)


அப்புறம் என் வருமானத்தை விட என் போன் பில் கம்மி தான். அதுவும் ஆபிஸே கட்டிடறாங்களே..  8)
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Global Angel on October 15, 2012, 08:17:32 PM
:D appo enna karumamya itehllam
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on October 15, 2012, 08:22:31 PM
haha
unggal karpanaike.!  8)
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Thavi on December 03, 2012, 02:30:10 AM
gotham kathai viru viruppa poguthu supera eluthuringa machi thodaradum, padika aavala ullen
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: User on February 28, 2013, 07:03:48 PM
கோதம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதைப்படி  'அவங்க கேட்ட ' அதுனால மாறிய ' நீங்கள் கேட்டவை '  கதையைப் படித்தேன்..விமர்சனங்கள் எழுத விரும்பவில்லை..(கதையிலே ஒரு காபி டே மற்றும் டிவி நிகழ்ச்சிலே சொல்லுற போல அதுலே மாறுபட்ட விமர்சனங்களை வச்சுடீங்க)வாசகனா எனக்கு தோணுனத சொல்லிட்டு ஓடிறேன்..வரிகள் விடாம வாசிக்க வைக்கிற  வார்த்தை கோர்வைகள்..எதிர்பாராத திருப்பங்கள் வைக்கணும் அப்டின்னு நினைக்காம என்ன சொல்லணுமோ அது மட்டும் இயன்ற அளவு நேர்த்தியா சொல்லிருக்கீங்க ..புதுமையை புகுத்துறேன் பேர்வழின்னு  மொக்கை போடாம, உள்ளது உள்ளபடின்னு கீறல் இல்லாம உயிரோட்டத்தோட சொல்லிருக்கீங்க ..கதை கேட்ட,படித்த,தெரிந்த விசயமா தான் இருக்கும் எவ்ளோ யோசிச்சு சொன்னாலும்..சொல்லுகிற விதம் ,சொற்களின் இதம் இரண்டும் படிக்கும் போது அலுப்பு தெரியாம பயணிக்க வைக்கணும்..அந்த வகைல உங்க நடை ,கதைக்கரு சிதைக்காத உரையாடல்கள் பலம்...

        நெருடலா அல்லது கேக்கணும் தோணுன விஷயம் கதையின் இறுதிகட்டம்ல (பாகம் 6 ,7) கதையை மதியே சொல்லுவது போல வச்சுருக்கீங்க...purpose ஆ  வச்சதா?? இல்லை கதையின் முடிவுல கதாபாத்திரமே சொல்லணும் பண்ணீங்களா? எனக்கு என்ன ஆரம்பத்துல தோணுச்சுனா மதி சொல்வது போலவே கொண்டு போகலாமே அப்டின்னு..அப்பறம் கதை ஆசிரியர் திறமைக்கு களம் வேணும்னு இப்டி கொண்டுபோறீங்க நினைச்சேன் ..இறுதில மாத்திடீங்க ?? அப்ப படிச்சு முடிக்கும் தருவாயில் இவரு இதுக்கு ஆரம்பத்துல இருந்தே மதி சொல்வது போல சொல்லிருந்தா இன்னும் ஊன்றி ஒன்றி இருக்கலாமே நான் அப்டின்னு தோணுச்சு ...?

               மத்தபடி நிதானமான நடையின் போக்கு காரணமாக களைப்பில்லாத நதியின் பயண அனுபவம் கிடைச்சது..வாழ்த்துக்கள்...எதிர்வரும் உங்கள் கதைகளுக்கு காத்திருக்கும் நபர்கள் வரிசையில் நானும்...
Title: Re: நீங்கள் கேட்டவை
Post by: Gotham on February 28, 2013, 07:41:09 PM
பின்னூட்டத்திற்கு நன்றி பயனரே...

சில சம்பவங்களின் பாதிப்பு தான் கதைக்கு காரணி. மற்றபடி இணையக்காதலால் இணைந்தனரா இல்லையா என்பது அவரவர் விருப்பத்திற்கே விட்டுவிடலாம் என ஐந்தாம் பகுதி எழுதும் போது தான் தோன்றியது. அதனால் ஆறாம் பாகத்தை மதி சொல்லும் மாதிரி முடித்தேன். சுபம் போட்டதற்கு பின் தோன்றியது தான் ஏழாம் பாகம். இன்ஸெப்ஷன் மாதிரி கதைக்குள் கதையாக ஆக்கிப்பார்த்தலென்ன என்று. எல்லாமே பரிட்சார்த்தம் என்று இறுதியாய் எழுதினேன். :)