Author Topic: காலம் எழுதிய‌ கவிதைகள்  (Read 780 times)

Offline தமிழன்

காலம் எழுதிய‌ கவிதைகள்
« on: November 23, 2012, 09:12:38 AM »
காற்றுக்காக ஜன்னல் திறந்து
உட்காரும்போது
தாழ்வாரத்து விட்டத்து கூண்டில்
தொங்கி விளையாடும்
ஊடல் குருவிகள்......

தென்றலின் பாடலுக்கு
தப்பாமல் தலையாட்டும்
பூந்தொட்டி மலர்கள்....

வாசல்வரை வந்து
வாலாட்டி வழியனுப்பும்
எதிர் வீட்டு நாய்க்குட்டி...........

கட்டுமான இறுக்கங்களை பிளந்து
வேர்விட்டு முளைத்திருக்கும்
அரசமரக் கன்று...........

தட்டில் விழுந்த ஒற்றை நாணயத்தை
திரும்பத் திரும்ப‌
தடவிப் பார்க்கும்
கண்ணற்ற பிச்சைக்காரன்.....

எல்லாப் பரப்பிலும்
சிதறிக் கிடக்கின்றன‌
காலம் ஏற்கெனவே எழுதிய‌
கவிதைகள்....

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: காலம் எழுதிய‌ கவிதைகள்
« Reply #1 on: December 02, 2012, 02:59:03 AM »
ungala matum paarkama ungal kavithaiyil ellaraiyum paarkarenga nalla iruku pulavare
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: காலம் எழுதிய‌ கவிதைகள்
« Reply #2 on: December 03, 2012, 01:58:36 AM »
தட்டில் விழுந்த ஒற்றை நாணயத்தை
திரும்பத் திரும்ப‌
தடவிப் பார்க்கும்
கண்ணற்ற பிச்சைக்காரன்.....

 nice line thamilan machi keep write more  :D
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Global Angel

Re: காலம் எழுதிய‌ கவிதைகள்
« Reply #3 on: December 04, 2012, 12:29:32 AM »
உண்மைதான் கற்பனை கண் கொண்டு பார்த்தால் எல்லாமே கவிதைதான் ... கவிதை நன்று தமிழன்