கவிதை நன்று ஸ்ரீ
//என் கற்பனை குதிரையை தட்டி விட்டேன்
குதிரையோ குப்புற படுத்து
குறட்டை விடாத குறை தான்
//
யோசித்து யோசித்து சிரித்தேன்
ஒருவிடயம் மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
கற்பனை குதிரை கவிஞன் சவாரி செய்ய வேண்டும் இல்லையா ? அதனை ஓடமட்டும்விட்டால் காடுமேடு என்று ஓடும், சில நேரம் சாஸ்டாங்கமாக படுத்துக் கொள்ளும், செந்த உசுப்பலுக்கும் அசைந்து கொடுக்காது
தமிழ் இறைகையிலேயே கவிதையின் மொழி, ஆதி தமிழர்களிடம் பேசுச்சு மொழி இல்லை, பாட்டு மொழி தான் இருந்தது
எடக்கும் மடக்கும், சம்பளம் கிம்பளம், சண்ட சச்சரவு, குண்டும் குழியும், இது போன்ற இரட்டை வார்த்தை பயன்பாடுகள் தமிழில் அதிகம்
தமிழ் தெய்வீக மொழி என்று ஏன் சொல்கிறார்கள், இலக்கணத்திலேயே ஆன்மீகத்தை போதித்த மொழி தமிழ் மொழி
உயிர் + மெய் = உயிர்மெய்
மெய் என்பது உடலை குறிக்கும் இல்லையா
பிற எந்த மொழியை எடுத்துக் கொள்ளுங்கள், நான் என்பதும் உடல் என்பதும் ஒன்று என்பது போன்றே, வாக்கியங்கள் அமைக்கப்படும்
ஆங்கிலத்தில்
I am not keeping well என்போம்
தமிழில்
மேலுக்கு சரியில்லை, உடம்பு சுகமில்லை, உடம்புக்கு சரியில்லை என்று சொல்வோம் இல்லையா
நான் என்பது உடல் என்பது வேறு என்பதை நாம் இயற்கையிலேயே புரிந்து கொண்டிருந்தோம்
//காற்று
உலகை சுற்றி இருக்கும் காற்று
முழுவதும் அவள் மூச்சாக
மாறி விட துடிப்பதால் தான்
புயல் உருவாகிறது
நிலவு
அனைவரும் அவளை மட்டும் ரசிப்பதால்
கோபம் கொண்ட நிலவு
தூரமாய் சென்று விட்டது
//
இந்த இரு கவிதைகளை மிக ரசித்தேன், கொஞ்சம் தட்டினால் மிக அற்புதமான கவிதையாக வரும்