உன்னை பற்றியே ஓராயிரம் விடயங்கள்
உணர்வுகளாய் உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்க
என் உணர்வாய் இருந்துவிட உடன்பாடில்லை
இருந்தும் உணர்வை உணர்ந்துவிட முடியுமல்லவா ??
என்னை பற்றி ஏனடி இப்படி ஒரு குற்றப்பதிவு???
இதுவரை நான் பதித்த கவிதைகள் அனைத்திலும்
மிகமிஞ்சிய எழில் நிறைந்த 10 கவிதைகளை
நீ சொல்லும் நடுவர்களை கொண்டே பட்டியலிட்டால்
முதல் 3 இடத்தை பிடிக்கும் சுந்தர கவிதையாய்
உன்னை பற்றி நான் எழுதிய கவிதைகளாய் தான்
இருக்கும் நிச்சயமாய் !
அடுத்த தலைப்பு
சுந்தர கவிதை