Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 445970 times)

Offline TiNu

கரை இல்லா நீரின் நிலை...
நீ இல்லா நான்...

நீ இல்லையேல்
நான் அருவம் ஆவேன்..

தலைப்பு: நான்

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1077
  • Total likes: 3624
  • Total likes: 3624
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
வழியில்
தென்படும்
எல்லா பெண்களையும்
பார்த்து கொண்டு
 தானிருகிறேன்
ஏன்
அவர்கள் எல்லாம்
உன்னை போல
அழகில்லை என்று
யோசித்து  கொண்டு
நான் :D:D

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline thamilan

பெண்களை பார்ப்பதில்
தலைப்பை விட்டு செல்ல மறந்து விட்டர்கள்
ஜோக்கர்
தலைப்பை மட்டும் இல்லை
மனதையுமா



 தலைப்பு

Offline JsB


நான் நேசிக்கும் 
அழகிய மலரே...
முட்கள் நிறைந்த
மலரே...
என் கண்கள் ஏனோ
உன்னை மட்டும்
ரசிக்க துடிக்கிறது...
என் கைகள் ஏனோ
உன்னை  மட்டும்
தொட நினைக்கிறது...
என் இதயம் ஏனோ
உன்னை மட்டும்
தினமும்
என் தலையில்
ஏந்திச் செல்ல
ஏங்குகிறது...
எனக்கு பிடித்தமான
என் ஆசை
ரோஜா மலரே...
எனக்காகவே
பூத்துக் குலுங்கும்
சிவப்பு நிற அழகியே...
காதலர் தினம்
வந்தாலே...
எல்லோருக்கும்
கொண்டாட்டமே
உலகமே
உன்னை தேடி
அலைகிறது...
காதலன்
காதலிக்கும்,
காதலி
காதலனுக்கும்,
மாறி...மாறி...
உன்னை பரிமாறி...
கட்டியனைத்துக்
கொள்கிறார்கள்
உன் அழகை...
ஒரு நாளில்
மட்டுமே
ரசித்து...
உன்னை
தூக்கி வீசி
செல்லும் மத்தியில்...
உந்தன் அழகிய
தோற்றத்தை
தொடர்கதையாக...
விடாமல்
தொடர்ந்து ரசிக்கும்
உன்னைக் காதலிக்கிறேன்
எனக்காக...
எப்போதுமே
வாடாமல்
இருப்பாயா...?
என்னைக் காதல் 
செய்ய வைத்த
காதல் ரோஜாவே ...

J❤️S❤️B

Offline JsB

நான்
பார்த்து...பார்த்து...
வடித்தக் கவிதைக்கு
ஏனோ
இன்னும்
தலைப்பு
கொடுக்க
தோனவில்லை
என் எண்ண ஏட்டில்
இன்னும்
சிந்தித்துக்
கொண்டிருக்கிறேன்
உன் பெயரையே
தலைப்பாக
போடலாம் என்று
சம்மதம்
தருவாயா
தமிழனே...


சம்மதம்

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1077
  • Total likes: 3624
  • Total likes: 3624
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
மதம் பார்க்கவில்லை
நிறம் பார்க்கவில்லை
வயதும் பார்க்கவிலை
பெயரும் தெரியவில்லை
இருந்தும் கை  நீட்டி
அழைக்கையில்
ஓடோடி வருகிறது
சிரித்துக்கொண்டே
நான் தூக்க
சம்மதம் தெரிவித்து
[highlight-text]குழந்தை [/highlight-text]
[/size][/color]

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JsB


உன் குழந்தை
குணத்தை
மறைந்து நின்று
ரசிக்க வைத்த
ஜோக்கர் மன்னனுக்கு
ஜே❤️ஸ் ❤️பி ....யின்
தீபாவளி பரிசு
காத்துக் கொண்டிருக்கிறது
பெற்றுக் கொள்ள
வருவாயா?


பரிசு

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
சிரித்துப் பேசிய
நொடிகளும்..
நடந்து களைத்தப்
பாதைகளும்..
உன் சுவாசம் தீண்டிய
பொழுதுகளும்..
இனிய நினைவுகளாக
இருந்தாலும்..
நீ தந்த வலியேனும்
காதல் பரிசு மட்டும்
என் விழி நீருக்கு
முற்றின்றி
தொடர்கதையாகியது..

[highlight-text]நீர்[/highlight-text]
[/color][/i]

Offline thamilan

நீரின்றி அமையாது உலகு
நீர்-இன்றி அமையாது
கவிதை அழகு
வண்ணமயமாக உந்தன் கவிதை
உந்தன் கவிதைக்கு நானும் ஒரு அடிமை
வில்லேந்தும் விழிகளால்
வாலிபர்களுடன் விற்போர் தொடுப்பவளே
வா நாம் இங்கே
செற்ப்போர் தொடுக்கலாம்



வண்ணமயம்

Offline JsB

வர்ணங்களை
கொண்ட
வண்ணத்துப் பூச்சியின் 
வண்ணங்களை
போல...
நம் வாழ்க்கையும்
வண்ணமயமாகட்டும்
அழகுக்கு அழகூட்டிச்
செல்லும்
அழகிய  இயற்கையே...
காலமெல்லாம்
உன் அழகை ரசிப்பதே
என் பொழுது போக்காக
மாறிவிட்டது



காலமெல்லாம்

Offline PowerStaR

காலமெல்லாம்
என்னுடன் அதிகம் பேசிய
நாட்களை விட
பேசாமல் போன நிமிஷம்
என்னை  அணு அணுவாக
சித்திரைவாதை செய்கிறது
புழுவாய் துடி துடித்து
போறேன்
இதயத்தின் வலியை
மறைத்து
என் இதயத்திற்கு
உன்னிடம்
பொய்யாய் பேசி
நடிக்க தெரியவில்லை
வலி கொடுக்க நினைக்கிறாயோ
நான் போகும் வழி
எது கூட தெரியாமல் போகிறேன்
கண்களில் கண்ணீர்
நிரம்பி வழிகிறது
அதை நீ பருகி பார்
உன் தாகத்தை கூட
போக்கி  புத்துணர்ச்சியை
கொடுக்கும்
அதன் ருசியை
சுவைத்துப் பார்
மாராவின் தண்ணீரைப் போல்
மதுரமாய் இருக்கும்
உன் மீது வைத்த
அளவில்லா  அன்பை 
அலட்சிய படுத்தியது ஏனோ
உன்னுடைய சின்ன மாறுதல்
கூட எனக்கு வலியை  கூடிக்
கொடுக்கிறது
நான் விடும் முச்சிக் காற்றை
கேட்ட கூட அது உன்னுடைய
பெயரை சொல்லும்

இப்படிக்கு ,
உன் நினைவில்
வாடி தவிக்கும் நான்


தவிக்கும்

Offline JsB

என்னுயிர்க் காதலனே...
உன்னிடம் பேசாமல்
இருப்பதால்...
உன்னை மறந்து
விட்டேன் என்று
மட்டும் நினைத்து
விடாதே...
உன்னிடம் பேசாமல்
தவிக்கும்
ஒவ்வொருநொடியும்...
உன்னை  நினைத்து
கவிதையாய்...
செதுக்குகிறேன்
என் இதயத்தில்
உள்ளதை
புரிந்துக் கொள்வாய்யென... 


கவிதையாய்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
கவிதையாய்
வார்த்தைகளைக்
கோர்க்கிறேன்..
உன் அன்பில்
வார்த்தைகள்
திணற
தோற்க்கிறேன்..
நீ விழி இமைக்கும்
நொடியில் என்
உலகம்
மறக்கிறேன்..
உன் சுவாசம்
எனை தீண்ட
ஆகாயத்தில்
பறக்கிறேன்...
உன் காதலில்
நான் முழ்க
காண்கிறேன்..
முழ்கிடும் முன்னே
கட்டி அணைத்திட
வருவாயா...

தலைப்பு :  உலகம்

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1077
  • Total likes: 3624
  • Total likes: 3624
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
இல்லாத காதலியை
நினைத்து உருகி உருகி
கவிதை எழுதும்
கவி போல

உழுது
பயிரிட்டு
பொய்த்துப்போன
மழையை
எதிர்பார்த்து
காத்திருக்கும்
விவசாயியை
கொண்ட
விசித்திரமான
உலகம்

[highlight-text]#விவசாயி [/highlight-text]


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
கைப்பிடி சோற்றை
அள்ளி என்
வயிற்றை
நிரப்புகையில்
சிந்திக்கிறேன்..
விதை
விதைத்தவர்
சேற்றில் கால்
புதைத்து நிற்கிறார்..
வேர்வை சிந்தி
களைக்கிறார்..
அன்னமின்றி
உழைக்கிறார்..
தகுந்த ஊதியமின்றி
தவிக்கிறார்...
விவசாயம்
காக்கும்
விவசாயி அவர்..
பசியில் வாடி
நம் பசியைப்
போக்கும்
அன்னபூரணி அவர்..
ஒரு கணம்
என் பசியைப்
பொறுத்துக் கேட்கத்
துடிக்கிறது நா..
உணவு உண்டிறா
உழவரே!!?

தலைப்பு : பசி