Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 464194 times)

Offline RemO

காமம் கலவா காதல்
கிடைக்கும் முதுமையும்
வரம் தான்.

அடுத்த தலைப்பு: காமம் 

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ஓசையில்லா இசை
ஆசையில்லா மனம்
குளிரில்லா நிலவு
நிலவில்லா வானம்
அலையில்லா கடல்
அசைவில்லா  ஆடல்
சுரமில்லா பாடல்
வரம்பில்லா ஊடல்
காதலில்லா கூடல்
காமம் இல்லா காதல்
அனைத்துமே குறைபாடு நிறைந்த  முரண்பாடுகள் !

அடுத்த தலைப்பு - முரண்பாடு

Offline Global Angel

உன்னை நான் புரிதலில் இல்லாதது
என்னை நீ புரிதலில் தெரிகிறது
முரண்பாடு ....


புரிதல்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
புரிதலில் புரியா முரண்பாடு
தெரிவதாய் கூறும் குயில்பேடு
புரிவதாய் கூறிய முரண்பாடு
சிறியதா பெரியதா பதில் போடு
மனிதனே முரண்பாட்டின் மூட்டைதான் ,
உன் கூற்றில் உண்மை உண்டானால்
கவனிக்க நான் விட்ட கோட்டைதான் .

அடுத்த தலைப்பு - கவனம்

Offline Global Angel

என் கவனம் எல்லாம்
என் காதலில்
அதனால்தான் உன்னை
நான் கோட்டை  விட்டுவிட்டேன் ...
இன்று நீ இன்னொருத்தியின்
இதய ராஜன் ...


கோட்டை
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
அடகடவுளே !
வழக்கமாய் திரைப்பாடலை வரிமாற்றம் புரிந்து
பதிவேற்றம் புரியும் நான்
இன்று ஒருநாள் முதன்முறையாய்
ஒரு திரைப்பாடலை  அப்படியே அடிகோடிடுகிறேன்   

" ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ " 

ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை   
அந்தரத்தில்  ஊஞ்சல்  ஆடுகிறேன்  நாளும் 

கல்லுக்குள்  ஈரமில்லை  நெஞ்சுக்குள்  இரக்கமில்லை   
ஆசைக்கு  வெட்கமில்லை  அனுபவிக்க  யோகமில்லை 
பைத்தியம்  தீர  வைத்தியம்  இல்லை 
மனதில்  எனக்கு  நிம்மதி  இல்லை "
ஒட்டடை கூட அடிக்கத  ஓட்டை ஓட்டு வீட்டில்
இருக்கின்றேன் காதல் கோட்டை க்கு  ராசா  என்கிறாயே ரோசா "

அடுத்த தலைப்பு - மீண்டும் முரண்பாடு

Offline Global Angel

என்னை நேசிக்கின்றாயா..
ஆம் ....
காதலை சொல்
சொல்கின்றேன் இன்றல்ல
மீண்டும் முரண்பாடு
முழுதாய் என்னை ஊமையாக்குகின்றது


ஊமை
                    

Offline RemO

ஓய்வில்லாமல் உழைக்கும்
என் நா கூட
உன்னை பார்த்ததும்
ஓய்வெடுத்து ஊமையாவதேன் ??

அடுத்த தலைப்பு : ஓய்வு

Offline Global Angel

என் இதயம்
ஓய்வு பெற துடிக்குது
நீ இல்லாத பொழுதுகளில்


துடிக்குது
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
" கவிதை மழை பொழிகிறது
ஒவ்வொரு வரியிலும் உன் எழில் மிளிர்கிறது

கவிதை மழை பொழிகிறது
ஒவ்வொரு வரியிலும் உன் எழில் மிளிர்கிறது

மிட்டாய் நாட்டினது சுந்தரியே
FTC சாட்டுக்கு (முதல்) மந்திரியே

"ராஜ பார்வை "திரைபடத்தின் அந்தி மழை பொழிகிறது
திரைபாடலின் வரிமாற்றமே  இந்த பதிவேற்றம்

இந்த பாடல்  ஒரு தனிப்பட்ட நபரை கருத்தில் நிறுத்தி
திட்டமிட்டு தெரிவிக்கும் வரிகளே என்பதை
திட்டவட்டாமாய் தெரிவிக்கின்றேன்

அடிப்படையில் முழுதாய் வரிமாற்றம் புரியத்தான்
விரும்பினேன் , விரும்புகிறேன் ,மனமும் துடிக்குது - இருந்தும்
வெட்டி வழக்கறிஞர் பலர் வழக்குதொடுத்து
வழ வழவென  கொழ கொழ வென வழக்காட வருவாறேவென
வரையறை இட்டுக்கொள் என எதுவோ  தடுக்குது .

அடுத்த தலைப்பு - தடுக்குது
« Last Edit: December 23, 2011, 06:14:14 AM by aasaiajiith »

Offline Global Angel

என்ன தடுகிறது   
உனக்கு என் மேலான
அன்பினை சொல்ல
பெண் மனம் மட்டுமல்ல
நான் கண்ட உன் மனமும்
ஆழம் தான் ...


ஆழம் 
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
என் மனம் ஆழமா ?
என் மனதை நீ கண்டாயா?
கண்டிருக்கமாட்டாய் , கண்டிருந்தால்
ஆழம் என்று சொல்லிருக்கமாடாய்
ஆழம் அளந்த தாழம்பூவே !
நீ  கண்ட ஆழத்தின் அளவென்ன
 கூறமுடியுமா?
ஐந்து அகவை குழந்தை கூட
அழகாய் தடம் பதித்து , இடம் பிடித்து
இடம் பிடித்துக்கொள்ள பிரியப்படும்
 அத்தகும், அகல்விளக்கின் ஆழம் கூட
இல்லாத என் மனதை ஆழம்
என கூறும் ஆழ்மனதின் ஆளுமையே !

அடுத்த தலைப்பு - ஆளுமையே

Offline Global Angel

நான் வினா தொடுத்தது
என் மனம் கவர் நாயகனிடமே அன்றி
தங்கள் மனதினை அறியவல்ல ....!!
என் மொத்த ஆளுமையின்
முடி சூடா மன்னவன் அவன்
அவன் ஆளுமை
சொல்லவே வார்த்தையில்லை ..


முடிசூடா
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
முடிசூடா  மன்னவன் உன்னவன்
என்று , கன்னமும், வண்ணமும் இன்னமும்   
சிவந்திருக்க சொல்லும் தேன் கிண்ணமே !
முன்னமே சொல்லிருக்கேன் ,
என் வரிகளை வெறும்
வரிகளாய் பார் என அன்னமே !
நான் அறிவேன்
நீ கடல் கடந்து மின்னும்  காவிய சின்னமே !
முடவன் நான் , வீணாக
கொம்புதேனுக்கு ஆசைபடமாட்டேன்
வருத்தமில்லை , திருத்திகொள் உன் எண்ணமே !

அடுத்த தலைப்பு - முடவன்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
முடவனின் காதல்
முற்றுப் பெறா
முழுமை அடையா
முதிர்ச்சி அடையா
காதலோ...

காதல் மலர் தொடுத்து
கைகளில் ஏந்தி
கன்னி அவள் காத்திருப்பதை
அறிந்தும் அறியாத மூடனோ..

பிழை செய்த காதல்
பிழைக்காமல் போக
பிழைதிருத்தம் கொள்ள
காதல் பாடம்
கைகூடவில்லையோ...


கைகூடவில்லை ;) ;) ;) ;)







உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்