Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 464069 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வாழ்க்கை என்கிறாய் லட்சிய வாழ்க்கை என்கிறாய்
 இந்த ஆசை குருடனின் ஆசையை தான் மறந்துவிட்டாய் ,மறைந்துவிட்டாய்  என்று நினைத்தேன்  ,நீயோ குருடனையே மறந்துவிட்டாய் , மறந்துவிட்டாயா? மறுத்து விட்டாயா?

      அடுத்த தலைப்பு -   குருடன்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உனதருகே ஒளி இருக்க
கண்ணை மூடி இருட்டுக்குள்
பயணித்து
குருடன் என சொல்வது முறையோ
கண் திருந்து பார்
உனக்கான வெளிச்சம்
உன் முன்னே



உனதருகே

 


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

ஒவொரு கணமும்
நெஞ்சம் ஏங்குது.
உனதருகே வாழந்து மடிய ..


வாழ்ந்து மடிய
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

வாழ்வதை பற்றி நான் வாழும் வரை பேசு ,
ஆசை தீர ஆசையோடு கேட்கின்றேன்
மடிவதைபற்றி முடிந்தவரை என் கதை முடிந்த பிறகு
 நான் மடிந்த பிறகு பேசு
எனதருகில் நீயா? பஞ்சு மெத்தைக்கு பக்கத்தில் தீயா?
அப்படி ஒரு நிகழ்வு நொடி பொழுதேனும் நிகழ்ந்தால்
மறு கணமே மரணத்தை மண்டிபோட்டு ஏற்றுகொள்வேன்
எமனை வண்டி கட்டி வர சொல்வேன்
உன்னோடு வாழ்ந்துமடிந்த நொடி கணம் ஜென்ம சாபல்யம் என்றே !

அடுத்த தலைப்பு -  ஜென்ம சாபல்யம்

Offline Global Angel

ஒரு முறையாவது
உன் வாயால்
என்னை விரும்புவதாய் சொல்லிவிடு
அந்த கணமே என் ஜென்ம சாபல்யம்



ஒரு முறை
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
சொல்லவா ஒரு முறை
சொன்னால் போதுமா?
சொல்லில் அடங்கா
சொல்லை
சொல்ல நீ  வினவ
சொல்லுக்குள் சொல் வைத்து
சொல்லாமல் மறைத்து
சொல்வது எல்லாம்
சொல்லாக மட்டுமே மாற
சொல்லவந்ததை
சொல்லாமல் செல்கிறேன்  :D  ;)  :P  ;)  :P  :D


சொல்லாமல்
« Last Edit: November 23, 2011, 08:55:11 PM by ShRuThi »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

உன்மேல் கொண்ட கோபமும்
உன்மேல் கொண்ட காதல் போல்
சொல்லாமல் கொள்ளாமல்
மௌனமாய் இருந்துவிடுகின்றது


கோபம்
                    

Offline RemO

சின்ன சின்ன
சில்மிஷங்கள்
செய்ய வரும்போது
செல்ல கோபம்
காட்ட வேண்டுமா
கனவில் கூட

அடுத்த தலைப்பு:


சில்மிஷம்



Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
சில்மிஷம்  ,கல்மிஷம் செய்ய சிறிதளவும் எண்ணம் இல்லை
சிந்தனை சிறையில்   சிறைபிடித்து - என்னை
 நிந்தனை செய்யும் என்ன்னம் கொண்டு
 கல்விஷம்  நிறைத்து கிண்ணத்தில் கொடுத்தாலும்
மறுநிமிஷமே பருகிடுவேன் என் கன்னத்தில் காதல் சின்னத்தை பதிப்பாயானால் ...

அடுத்த தலைப்பு - கன்னம்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பஞ்சு மெத்தையாய்
மழலையின்  கன்னமிருக்க
கொஞ்ச மறந்து
கிள்ளிவிட
சிவந்த ரோஜா மலராய்
சிவக்க
அழுகை கூட அழகு தான்
மீண்டும் மழலை வரம் கேட்கும்
மனது

அடுத்த தலைப்பு

மீண்டும்






உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline spince

என் காதலை போன்று
நறுமணம் வீசி
படர்ந்து வளர்ந்து கொண்டு இருந்தது
என் வீட்டு மல்லிகை கோடி..

இன்று நீ தொட்டு பரிக்காததல்
வாடித்தான் போஹின்றது
என் இதயத்தை போன்று!!

எத்தனை குடம் தண்ணீர் ஊற்றி என்ன செய்ய…
நீ வந்து காதல் ஊற்றினால் மட்டுமே மீண்டும் மலரும்.!!

மலரும்


Offline Global Angel

ஒவொரு தடவையும்
மலரும் என்று எதிர் பார்கின்றேன் ..
மொட்டகவே கருகிவுடுகிறது ...
என் காதலை போலவே ....


கருகிவிடுகின்றது
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உருகி உருகி  வரி  சமைத்து ,
பெருகி வரும் கவி ரசிகர்கள் ருசிக்கவேண்டி
ஆசையாய், சற்றே பேராசையாய் சில வரி வரைந்ததாலோ
 மனம் இறுகி,சில  வரிகளில்  என் மனம்  திருகி ,வலி பெருகி
வலி அதிகமான இடத்திலே மீண்டும் " கிறுக்கல்கள் '  என் குத்தீட்டி சொருகி
லேசாய் கலங்கியும் இருக்கும் அருவியே ! தமிழ் குருவியே !
வருந்தாதே தனியாய் கருகும் உன் காதலை
தனியாய் விடாமல் துணை ஆக என் மனதும் கருகிவிடுகின்றது..

அடுத்த தலைப்பு - குருவியே

Offline Global Angel

மனம் எனும் கூண்டில்
அடைபட்ட குருவியே ..
இன்னும் எத்தனை நாள்
உனக்கு சிறைவாசம்  வாசம் ...
சுதந்திர காற்றை சுவாசிக்க ஆசையில்லையா
இல்லை மடிந்தாலும்
அவன் மனம் நாடி தேடி
மடிவேன் என்ற பிடிவாதமா ...
எதுவாய் இருந்தாலும்
இழப்பு உனக்கு மட்டும் தான் ...


இழப்பு
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
என் சிறைவாசம் அமைந்திருக்கும் சிறைகூடு
 சுவாசிக்கும் சுவாசகூடல்லவா
சுதந்திரம் என்பது மனதை சார்ந்தது
 மனதில் சுதந்திரம் நிறைந்திருக்கும்போது
தனியே சுதந்திரம் வெளியே தேடுவதில் உடன்பாடில்லை ,
ஆசை இல்லையா? ஆசைக்கே ஆசை இல்லையா ?
யார் சொன்னது  ? ஆசையின் ஆசையை  பட்டியல் இட்டால்
பல விடியல் கழிந்துவிடும் பட்டியல் படித்தும் முடியாமலே ..
அழைப்பு இல்லாதது பற்றி அலுத்துகொண்டிருக்கின்றேன்
இழப்பு அதைவிட வேறென்ன  இருக்கபோகிறது ?

அடுத்த தலைப்பு  - ஆசை