Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 472019 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தலைப்புகள் காணமல்
ஒரு தடுமாற்றம்
எல்லா இடத்திலும்
எல்லாவற்றிலும் ஒரு தேடல்
இங்கோ தலைப்பை தேடலாய்
போனதோ...
இல்லாத தலைப்புக்கு
கவிதை படைப்பதும்
ஒரு திறமைதான்...


திறமை




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
திறமை என்றெல்லாம் எதுவும் இல்லை 

அப்படியே இருந்தாலும் ,அதில் என் தனித்திறமை எதுவவும் இல்லை.

உன்(உங்கள்)  வரிகளின்,வாழ்த்துக்களின் வனப்பும்
வசீகரமும்,வசீகரிக்கும்  குரலும், வெறுமை  அடைந்தால்,
ஏன் ,ஒரு துளி வறுமை  அடைந்தாலும் கூட 
பெருமையாய்  பாராட்டப்படும்,சீராட்டப்படும்

 என் வரிகள் ஏது ??

அடுத்த தலைப்பு - வசீகரம்
« Last Edit: April 05, 2012, 10:15:05 AM by aasaiajiith »

Offline supernatural

வேஷம் கலந்த உலகில் ...
விசேஷமாய் அன்பை தந்தவன் நீ...
நேசம் மறந்த உலகில்...
அன்பால்... நேசத்தால் ....
தெய்வீக காதாலால்...
என் மனதை ...
வசீகரித்து...
ஆட்கொண்டவன் நீ ....
என்னவன்..என் உயிரானவன்...
என் உயிர் காதலன் நீ...!!!!!

வேஷம்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Global Angel

தினம் நான் சந்திபதிபவர்கள்
என் மீது அன்பு பாசம் நேசம்
இவை எல்லாம் கொண்டவர்கள்
என்றுதான் எண்ணினேன்
இன்றுதான் கண்டேன்
இவை அனைத்தும் வேஷம் என்று...  :) 


கண்டேன்
                    

Offline Jawa

உன் சிரிப்பில் முத்துக்கள்
சிதற கண்டேன்!
அதில்...
என் இதய
துடிப்பை கண்டேன்!


இதயம்

Offline Global Angel

இதயம் என்று ஒன்று
இல்லாது இருந்திருக்கலாம்
கண்ணீராவது மிச்சமாகி இருக்கும்



மிச்சமாகி
                    

Offline Jawa

பெண்ணே நம் காதலில்
எனக்கு மிச்சமாகி போனது
உன் நினைவுகள் மட்டுமே......


நினைவுகள்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நினைவுகள் மட்டும்
இல்லாதிருந்தால்
இன்பத்தை கூட
நினைத்து பார்க்க
இயலாமல் போயிருக்குமோ?
நெஞ்சே நீ நீங்கதே
நினைவே நீ மறையதே...

மறையதே..


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Ilatha thalaipuku
Ingu kavithAi padaithathu thiramai
Endraal thalaipuku kavi padaikka
Evarenum irukamaattargalaa
Ena puthu thalaipitirukum
Sagothariyin yekkam kalaithida
Siriyathai our pathipu
Nee chee po vaa mm ena Or ehuthil
Nenjai vittu neengaatha
Ninaivil irunthu maraiyaatha 
Kavi punaiya unnaal mattumey mudium Penney

Adutha Thalaipu mudium

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/


 
வாழ்த்தை தான் வழங்க வேண்டும் என்றால்
அதை நேராக வழங்கிடலாமே  !

குறிக்கோள் உடன்  பதிப்புக்களை பதிக்கும் புது "கோ" வே  !

உங்கள்  குறிக்கோள்களுடன்  பின்  வரும்  குறி  (நிறுத்தற்குறி,தொடர்குறி,நீட்டர்க்குறி,கேள்விகுறி ) ,களையும்
கருத்தில் கொண்டு தேவையான இடங்களில் பொருத்திக்கொண்டு
பதிப்போ,பதிலோபதித்தல் இன்னும் அழகாக
அர்த்தபூர்வமாக ஆக்கமுடியும் .


அர்த்தபூர்வம்
« Last Edit: April 06, 2012, 11:19:07 AM by aasaiajiith »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
குறையாய் பதிப்பவனே "கோ" எனில்.....
குறைகளை சுட்டும் "கோ"வின் "கோ"வே
குறிகளின்றி
குறையுள்ள கவி பதிப்பது
குறிக்கோள் இல்லை
எக்குறியை எங்கு பயன்படுத்துவதென ?
அறியாததால் வந்த குறைகள்....
எக்குறியை
எங்கிடுவதென
குறிப்பிட்டு
கூறினால்
அர்த்தமுள்ள வார்த்தை கொன்டு இலக்கண நடையோடு
அர்த்தபூர்வமான இலக்கியம் படைத்திடவே
ஆசை..... "ஆசை" முன்.

அடுத்த தலைப்பு  அறியாமை
« Last Edit: April 06, 2012, 01:08:38 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Bommi

அழ வேண்டும் போல் ஆத்திரம் துடிக்கிறது
அழும் போது மனக்குமுறல் ஆற்றாமல் வெடிக்கிறது
ஏன் என்றால் நான் அறியாமை செய்த தவறினால்
என் மனம்  படும் வேதனை யார் அறிவரோ !!!


அடுத்த தலைப்பு:ஆத்திரம்



by sana

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ஆத்திரம் அடைந்து அனாவசிய  வேலைகள்  புரிந்து 
அவஸ்த்தைகளுக்கு உள்ளாவது , உள்ளாக்குவதை  விட
அழ வேண்டும் போல்  ஆத்திரம்  துடிப்பது  ஒன்றும்
அவ்வளவாய் பெரிய அனாவசிய வேலை இல்லை  !
அப்படியே  ஆத்திரம்  கொள்வதை  ,
அனைத்து  சாஸ்திரங்களும்  சாடி  வந்தாலும்
அன்னமே ! உன்  ஆத்திரம் குறித்த  குறிப்பதனை
அழகு  சூத்திரமாய்  ஏற்று  கொள்ள  ஏற்புடையதே  !

சூத்திரம்
« Last Edit: April 07, 2012, 11:03:41 AM by aasaiajiith »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
பாத்திரங்கள் ஒவ்வொன்றும் வெற்றியின்
 சூத்திரம் பெற
ஆத்திரமின்றி ஒவ்வொரு
மாத்திரமும் சிந்தனையில் மூழ்கி தன்
கைத்திறம் கொன்டு உழைப்பார்களெனில்
வெற்றி நிச்சயம்.!!

அடுத்த தலைப்பு மாத்திரம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
என் பதிப்பை பார்த்த மாத்திரம் - பதில்
பதிப்பை பதிக்கும் மதிப்பானவரே

உன் பதிப்பில் ,என் பதிப்பின் சாயல்
லேசாய் இருப்பதை, அறிவாயோ?
அறியவில்லையோ ?  தெரியவில்லை .

இருந்தும் உன் பதிப்பின் மதிப்போ ,
இல்லை அப்பதிப்பால் உன் மதிப்போ
நேரடியாய், மறைமுகமாய் பாதிக்குமோ
என்ற அச்சம்  எள்ளளவும் இல்லாமல்
பதிப்பை பதிக்கும்
உன் மதிப்பான பதிப்புக்கு -
என் முதல் மதிப்பெண் .

நல் எண்ணத்தில்,
சொன்னாலே கேட்காத
சில தாழ்வுமனபானமையின்
தவ புதல்வர்களுக்கு மத்தியில்.
சொல்லாமலே புகழ் ப(பா )டும்
உன் பதிப்புக்கும்
பதிப்பிடும் பதிப்பாளருக்கும்
என் நன் மதிப்பு !

மதிப்பு