Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 424808 times)

Offline pEpSi

அந்த விண்ணில் வரும்
மின்னிலை கண்டு குட
தடுமாறியதில்லை...
இன்று உன் கண்ணில்  வரும்
பார்வை கண்டு பேச தடுமாறுகிறேன்...



மின்னல்
[/color]

Offline Global Angel

மின்னல்  என என் வாழ்வில் வந்தவனே 
என் இதயத்தில் கன்னலை எற்படுத்தியதேன்



கன்னல்

                    

Offline thamilan

உன் இதயம் பூ என‌
நினைத்தேன்
அது இரும்பென தெரிந்த பின்
கன்னல் வைக்காமல்
உள்ளே நுழைவதெப்படி




இரும்பு
« Last Edit: August 11, 2011, 11:59:34 PM by thamilan »

Offline Global Angel

பெண்களின் கண்ணீர் ஆயுதமாம்
ஆண்கள் சொல்லுகின்றார்கள் ..
அழவைக்கும் ஆண்கள் இதயம்
இரும்பா.? இலவம் பஞ்சா ...?


பஞ்சு


                    

Offline thamilan

பஞ்சும் நெருப்பும்
அருகில் இருந்தால்
பற்றிக் கொள்ளூமாம்

ஆண்கள் நெருப்பாம்
பெண்கள் பஞ்சு போல்
மென்மையானவர்களாம்

ஆனால்
பஞ்சின் ஸ்பரிசம் பட்டு
பற்றி எரிவது
நெருப்பல்லவா?



ஸ்பரிசம்

« Last Edit: August 12, 2011, 12:19:05 AM by thamilan »

Offline Global Angel

தீயின் ஸ்பரிசத்தில்
பற்றிக் கொள்ளவது
பஞ்சல்லவா...
இழப்பு பஞ்சுக்குத்தான்
நெருப்புக்கு அல்ல ...


இழப்பு

                    

Offline thamilan

தீ என்பது
தனித்து ஒரு சொல் அல்ல‌
அது ஆகுபெய‌ர்
தீ உண்டாக ஒரு தீக்குச்சி
தேவை அல்லது
ஒரு காகிதம் தேவை
அந்த தீக்குச்சி எரியாமல்
பஞ்சு எப்படி எரியும்
தீக்குச்சிக்கு தானே முத‌லில்
இழ‌ப்பு




ஆகுபெய‌ர்

Offline Global Angel

தீ குச்சியின் இழப்பை
யாரும் பேசுவதில்லை 
பற்றிக் கொள்ளும் பஞ்சினைதான்
ஊர் பேசும்  பேசும் ..
ஊர் இங்கு ஆகு பெயர் ..


ஊர்

                    

Offline thamilan

ஊருக்கு ஊர்
தேசத்துக்கு தேசம்
மதங்களும் மாறலாம்
மனிதர்களும் மாறலாம்
காதல் என்றும் மாறுவதே இல்லை




இல்லை

Offline Global Angel

நீ எது கேட்டாலும் கொடுப்பேன்
இல்லைஎன்றாது ...
உன் நினைவுகளை மட்டும் கேட்டு விடாதே
இல்லை என்றே ஆகிவிடுவேன் ...



நினைவுகள்

                    

Offline thamilan

நான் உணவால்
உயிர் வாழ்வதை விட‌
உன் நினைவாலேயே
உயிர் வாழ்கிறேன்




உணவு

Offline Global Angel

என் கனவுகளுக்கு
உன் நினைவுகளே உணவு
சளைக்காமல் சாமரம் வீசுகின்றதே


சாமரம்

                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மேகத்தை பஞ்சனையாக்கி
சாமரம் வீசி
தாலாட்டு படி
என்  மடியினில் நீ  தூங்கும் தருணத்தில்
நானும் அன்னைதான்
நீ என் பிள்ளையாய் மாறும்பொழுது



அன்னை


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

பத்து திங்கள் சுமந்து
என்னை பெற்று எடுத்த என் அன்னையே
இன்று என் துயரம் நீ தெரிந்திருந்தால்
அன்றே கருவில் கலைதிருப்பாய்
உன் கண்மணியின் கண்ணீர் தாங்காது
..

கருகலைப்பு

                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.




தெரிந்து நீ செய்யாத பிழைக்கு
பிழை அறியாத எனக்கு தண்டனையா???
கருவறை சிறை முடிந்து வர இருந்த என்னை
கல்லறைக்கு அனுப்பிவிட்டாயே
சுகமான பாரம்
இன்று சுமையாய் ஆனேனோ
தண்டித்து விட்டாயே  என்னை


சுமை



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்