Author Topic: RICE (பல வகை சாதம்)  (Read 21563 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #30 on: July 16, 2011, 01:57:54 AM »
                                         ப்ரவுன்ரைஸ் பிசிபேளாபாத்

துவரம் பருப்பு - அரை கப்
ப்ரவுன் ரைஸ் - ஒரு கப்
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 2
பரங்கிக்காய் - ஒரு துண்டு
கத்திரிக்காய் - 4
பட்டாணி - ஒரு கப்
உருளை - ஒன்று
ஜுசினி - 2
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
புளி - சிறிதளவு
கடுக, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம், முந்திரி, வெண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏற்ப
சாம்பார்பொடி - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
 


காய்கறிகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் பருப்பு, பூண்டு,மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளாவும்.

அதே குக்கரில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

காய்கள் நன்கு வெந்ததும் ப்ரவுன் ரைஸ், பருப்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

அதன் பின்னர் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.

வாணலியில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பில்லை, முந்திரி சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றை சாதத்துடன் சேர்த்து கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.

மேலே கொத்தமல்லி தூவவும். சுவையான ப்ரவுன் ரைஸ் பிளிபேளாபாத் ரெடி.
 

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #31 on: July 17, 2011, 08:32:46 PM »
                                புளியோதரை (இஸ்லாமிய முறை

புழுங்கல் அரிசி - 400 கிராம்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 100- 150 மில்லி
மிளகாய் வற்றல் - 4
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
எள் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - 4 இணுக்கு
பெருங்காயம் - சிறிய துண்டு
தக்காளி - ஒன்று சிறியது
உப்பு - தேவைக்கு


சாதம் உதிரியாக வடித்து ஆற வைக்கவும். புளியை சிறிது உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
3 மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, எள், கறிவேப்பிலை, பெருங்காயம் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும்.
வறுத்தவற்றுடன், தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து தூள் செய்யவும். அதனுடன் ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்து அரைத்து எடுக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலை விடவும். நன்கு கொதி வந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.
எண்ணெய் தெளியவும் சாதம் போட்டு கிளறி ஆற வைக்கவும். உதிரியாக இல்லாமல் சாதம் சேர்ந்தாற்போல் இருக்கும். ஆற வைத்து சாதம் கட்டிக்கொடுக்கவும்.சுவையான புளியோதரை ரெடி. இதற்கு சுருட்டு கறி பொருத்தமான காம்பினேஷன்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #32 on: July 17, 2011, 08:34:04 PM »
                                   குஸ்கா

பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
வெங்காயம் - ஒரு கைப்பிடி
பூண்டு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 அல்லது 3 காரத்திற்கேற்ப
புதினா - 10 இலைகள் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
தக்காளி - ஒரு சின்ன பழம்
கெட்டியான தயிர் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை - அரை பழம் (சிறியது)
நெய் - ஒரு பெரிய ஸ்பூன் அளவு
எண்ணெய் - ஒரு பெரிய ஸ்பூன் அளவு
உப்பு - தேவையான அளவு
பாசுமதி அரிசி - அரை கிலோ அல்லது 2 கப்
தண்ணீர் - ஒரு கப் அரிசிக்கு 1 3 /4 கப் தண்ணீர் (இங்கே கொடுத்துள்ள அளவுக்கு 3 1 /2 கப் தண்ணீர் சேர்க்கவும்)
 

வெங்காயத்தை மெல்லியதாக நீளமாக நறுக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அரிசியை தண்ணீரில் களைந்து ஊற வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு சூடேறியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து லேசான பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும். பிறகு பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஒரு முறை வதக்கிய பின் நறுக்கின தக்காளி மற்றும் தயிர் சேர்த்து கிளறவும். தக்காளியை மசிய வதக்கக் கூடாது.

வதக்கிய பொருட்களிலிருந்து எண்ணெய் பிரிய தொடங்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு எலுமிச்சைச்சாறு, உப்பு மற்றும் ஊற வைத்த அரிசியை சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது மூடி வைத்தால் சீக்கிரம் தண்ணீர் வற்றி விடும்.

கரண்டியால் கிளறும் போது தண்ணீர் அதிகம் இல்லாமல் குறைவாக இருந்தால் அடுப்பை சிம்மில் வைக்கவும்.

பிறகு அந்த பாத்திரத்தின் மேல் அலுமினியம் பாயில் அல்லது நியூஸ் பேப்பரை வைத்து மேலே பாத்திரத்துக்கு தகுந்தாற்போல் தட்டு வைக்கவும். அதன் மேல் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கவும்

5 நிமிடம் கழித்து கவனமாக அலுமினியம் பாயிலை எடுத்து சாதத்தை அடியிலிருந்து கிளறாமல் மேலாக கிளறி, முன்பு மூடி வைத்தது போல் வைத்து 5 நிமிடம் தம்மில் விடவும். பிறகு மீண்டும் கவனமாக அலுமினியம் பாயிலை எடுத்து சாதத்தை அடியிலிருந்து கிளறாமல் மேலாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

சுவையான குஸ்கா ரெடி. குஸ்கா கொஞ்சம் மைல்டாக இருப்பதால் தாளிச்சா, ஏதாவது ஒரு கிரேவி அல்லது மட்டன் அல்லது சிக்கன் குருமாவுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும். வேண்டுமானால் முந்திரியை நெய்யில் வறுத்து இறுதியில் சேர்க்கலாம். நெய் இன்னும் அதிகமாக விரும்புவோர் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். அறுசுவை நேயர்களுக்காக திருமதி. ரிஸ்வானா ஷானுகான் அவர்கள் இந்த குறிப்பினை வழங்கியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளவும்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #33 on: July 17, 2011, 08:36:04 PM »
                               டோஃபு புலாவ்


டோஃபு (சோயா பனீர்) - 250 கிராம்
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா
பட்டை
லவங்கம் - 5
ஏலக்காய் - 5
பச்சை பட்டாணி - 100 கிராம்
கேரட், பீன்ஸ் - 100 கிராம்
நெய் + எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
தேங்காய் பால் - 2 கப் (விரும்பினால்)
 


அரிசி கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய் நசுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பீன்ஸ், கேரட்டை நறுக்கவும்.
டோஃபு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் + நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் புதினா, கொத்தமல்லி, காய்கறிகள், பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கடைசியாக பனீர், ஊற வைத்த அரிசி சேர்த்து வதக்கவும்.
தேங்காய் பாலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து அரிசியில் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவும். (தேங்காய் பால் சேர்க்காதவர்கள் 4 கப் தண்ணீர் ஊற்றவும்)

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #34 on: July 17, 2011, 08:37:19 PM »
                               மலேசியன் ப்ரைட் ரைஸ்

பாசுமதி அரிசி - ஒரு கப்
துருவிய காரட் - கால் கப்
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
வெள்ளரிக்காய் - கால் கப்
மாங்காய் - கால் கப்
அன்னாசிப்பழம் - கால் கப்
தேங்காய் பால் - 2 கப்
சிகப்பு மிளகாய் - 4
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 10
நெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
 


வெங்காயம் மற்றும் சிகப்பு மிளகாய் இரண்டையும் கொரகொரப்பாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். நெய் சூடானதும் முந்திரி, சீரகம், ஏலக்காய், கிராம்பு வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
அதே நெய்யில் பாசுமதி அரிசியை வறுத்து தேங்காய் பால் சேர்த்து அரைத்த விழுதையும் மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும்.
பிறகு நறுக்கிய காய்கறிகளை சேர்த்து ஒரு ஸ்டீம் வேக விடவும்.
தாளித்தவைகளை கொட்டி கிளறி இறக்கினால் சுவையான மலேசியன் ப்ரைட் ரைஸ் ரெடி.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #35 on: July 17, 2011, 08:39:07 PM »
                            முட்டை புலாவ்


முட்டை - ஒன்று
சாதம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
உப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நெய் - அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
 

சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.

அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டி விடவும்.

அதனுடன் வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

சாதத்துடன் முட்டை சேர்ந்து பொலபொலவென்று வந்ததும் மேலே நெய் ஊற்றி கிளறி இறக்கி விடவும். சுவையான முட்டை புலாவ் ரெடி

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #36 on: July 17, 2011, 08:40:48 PM »
                                    பீட்ரூட் பிரியாணி


சுத்தம் செய்த பீட்ரூட் - 200 கிராம்
பாசுமதி அரிசி - 200 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி, புதினா இலைகள் - ஒரு கைப்பிடி(ஒவ்வொன்றிலும் 15 இலைகள்)
பட்டை - 2 துண்டுகள்
கிராம்பு, ஏலக்காய் - தலா 4
 

அரிசியை தண்ணீரில் போட்டு 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். வெங்காத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பீட்ரூட்டை துருவலாக துருவிக் கொள்ளவும், அல்லது மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நாண்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் துருவிய பீட்ரூட்டை சேர்த்து வதக்கவும்.

பின்னர் கொத்தமல்லி, புதினா இலைகளை போட்டு வதக்கி விடவும்.

அதில் ஊற்றிய அரிசி, உப்பு, 450 மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு மிதமான தீயில் வைத்து மூடி வேக விடவும்.

இடையிடையே மூடியை திறந்து கிளறி விடவும். பிரியாணிப் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #37 on: July 17, 2011, 08:41:58 PM »
                                     கேரட் சாதம்

வடித்த சாதம் - இருவருக்கான அளவு
பெரிய கேரட் - 3
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 3/4 கப்
பச்சைமிளகாய் - 2 அல்லது 3
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
 


கேரட்டை துருவிக் கொள்ளவும். தேங்காயையும், பச்சை மிளகாயையும் தண்ணீரில்லாமல் அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கேரட்டை கொட்டி உப்பு அரை ஸ்பூன் சேர்த்து கிளறி 3 நிமிடம் குறைந்த தீயில் இடையில் ஒரு முறை கிளறி விட எளிதில் வெந்து விடும்.
பின் அரைத்த தேங்காயை கேரட்டுடன் கொட்டி ஒரு கிளறு கிளறி இறக்கவும். அதனுடன் சாதத்தை கலந்து பரிமாறவும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #38 on: July 17, 2011, 08:43:31 PM »
                                   வல்லாரை கீரை சாதம்

1) ஆய்ந்த வல்லாரை கீரை - 1 கப்
2) உதிரியாக வடித்த சாதம் - 3 கப் அளவு
3) பெரிய வெங்காயம் - 1
4) பச்சை மிளகாய் - 3
5) இஞ்சி - ஒரு சிறிய துண்டு
6) மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்
7) உப்பு - தேவைக்கேற்ப
8) எண்ணெய் - தேவைக்கேற்ப
9) கடுகு - 1/2 டீஸ்பூன்
 

கீரை, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
வெங்காயத்தைப் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
மேலும் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த விழுதையும் சேர்த்து கிளறவும்.
பின் உப்பு, மசாலாத்தூள், வதக்கிய வெங்காயத்தைப் போட்டுக் கிளறவும்.
இதனுடன் சாதத்தையும் சேர்த்து கலக்கவும்.
சுவையான சத்தான வல்லாரை கீரை சாதம் ரெடி.


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #39 on: July 17, 2011, 08:44:53 PM »
                                           மீல்மேக்கர் பிரியாணி

மீல்மேக்கர் - ஒரு கப்
அரிசி - 250 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
காரட் - ஒன்று
பீன்ஸ் - 25 கிராம்
பச்சை பட்டாணி - 25 கிராம்
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
லவங்கம் - 4
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய்/வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
 


மீல்மேக்கருடன் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்க வேண்டும்.
எண்ணெய் சூடானதும் பட்டை, லவங்கம் போட்டு தாளிக்க வேண்டும். பின்பு பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்.
பின்பு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி அரிசியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அதனுடன் 4 கப் தண்ணீர் மற்றும் நெய்/வெண்ணெய் சேர்த்து 15 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
பின்பு மூடியை திறந்து வேகவைத்த மீல்மேக்கர், நறுக்கிய காரட், பீன்ஸ், பட்டாணி அனைத்து பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு மீண்டும் வேக வைக்க வேண்டும். வெந்ததும் ரைத்தாவுடன் பரிமாறவும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #40 on: July 17, 2011, 08:46:24 PM »
                                       சோயா புலவு

சோயா உருண்டைகள்- 1 கப்
பிரியாணி அரிசி- 2 1/2 கப்
பெரிய வெங்காயம்-3
கீறிய பச்சை மிலகாய்-4
மிளகாய்த்தூள்-அரை ஸ்பூன்
இஞ்சி விழுது- 1 ஸ்பூன்
சிறிய பூண்டு பற்கள்-15
தேவையான உப்பு
எண்ணெய்-2 மேசைக்கரண்டி
நெய்- 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லி-அரை கப்
புதினா இலைகள்- அரை கப்
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
தேங்காய்த்துருவல்- அரை கப்
முந்திரிப்பருப்பு-8
சோம்பு- 1 ஸ்பூன்
கிராம்பு-1
ஏலம்-1
பட்டை- 1 துண்டு
 


அரிசியைக் கழுவி போதுமான நீரில் ஊறவைக்கவும்.
சோயா உருண்டைகளை 4 கப் வென்னீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு தண்ணீரை வடித்து குளிர்ந்த நீரிலும் 10 நிமிடங்கள் போட்டு வைத்து, சோயா உருண்டைகளிலுள்ள தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும்.
தேங்காயை முந்திரிப்பருப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.
கிராம்பு, ஏலம், பட்டை, சோம்பைப் பொடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணையையும் நெய்யையும் ஊற்றி சூடாக்கவும்.
வெங்காயைத்தை மெல்லியதாக அரிந்து சேர்த்து வதக்கவும்.
கீறிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
புதினா இலைகள்,பொடித்த மசாலா, மிளகாய்த்தூள், கொத்தமல்லி சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.
அரைத்த தேங்காய்க்கலவையைச் சேர்த்து, சோயா உருண்டைகள், உப்பு சேர்த்து மெல்லிய தீயில் வதக்கவும். வெந்ததும் அதைத் தனியே எடுத்து வைக்கவும்..
அதே பாத்திரத்தில் 7 கப் நீரை ஊற்றி கொதி வந்ததும் அரிசியைப் போட்டு மிதமான தீயில் சமைக்கவும்.
அரிசி முக்கால் பதம் வெந்ததும் உப்பைச் சேர்க்கவும்.
தண்ணிர் முழுவதுமாகச் சுண்டியதும் சோயா மசாலாவை மேலே பரப்பி சாதத்தை ‘தம்’மில் வைக்கவும்.
சுவையான சோயா பிரியாணி தயார்!!!

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #41 on: July 17, 2011, 08:47:51 PM »
                                      பீர்க்கங்காய் ரைஸ்

உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
பீர்க்கங்காய்(கசப்பில்லாதது) - 1
தக்காளி - 1
வெங்காயம் - 1
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த பட்டாணி - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 


பீர்க்கங்காயை கழுவி, தோல் நீக்கி பின் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின் எண்ணெயில் முதலில் பீர்க்கங்காய் துண்டுகளை நன்கு பொன்னிறமாக வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
பின் அதே எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு போட்டு வறுத்து பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் தக்காளி விழுது, வதக்கிய பீர்க்கங்காய் துண்டுகள் போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதை வடித்த சாதத்தில் கொட்டி கலக்கவும். கடைசியாக வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்கு கலக்கவும்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #42 on: July 17, 2011, 08:49:11 PM »
                                                   சிம்பிள் ப்ரைட் ரைஸ்(உணவகங்களில் செய்யும் முறை)


வடித்த சாதம் - ஒரு கப்
காரட், பீன்ஸ் - ஒரு கப்
குடை மிளகாய் - கால் கப்
கோஸ் - கால் கப்
சைனீஸ் சால்ட் - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்)
பச்சை மிளகாய் - ஏழு நம்பர்
வெள்ளை மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
 


காரட் மற்றும் பீன்ஸை நீளமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை லேசாக இடித்துக் கொள்ளவும்.
மிளகை ஒன்றும் பாதியுமாக பொடி செய்து கொள்ளவும்.
கோஸை மிக மெலிதாக நீளமாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை காய வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்பு இடித்த பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் சிறு தீயில் வதக்கவும்.
மிளகுத் தூள் மற்றும் சைனீஸ் சால்ட் சேர்த்து ஒரு தரம் பிரட்டி சாதத்தில் கொட்டி கிளறவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நறுக்கிய கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
ப்ரைட் ரைஸ் தயார்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #43 on: July 17, 2011, 08:50:51 PM »
                                 கிட்ஸ் கேரட் புலாவ்


பாஸ்மதி அரிசி - 2 கப்
காரட் துருவல் – 4 கப்
தேங்காய்பால் – 2 கப்
வெங்காயம் - 2
புதினா இலைகள் - 10
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
தயிர் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
பூண்டுப்பல் - 4
பச்சைமிளகாய் - 4 கீறியது (குழந்தையின் காரத்திற்கேற்ப)
பட்டை - 2
இலவங்கம் - 2
ஏலக்காய் - 2
பிரியாணிஇலை - 1
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10
நெய் அல்லது எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
 

பாசுமதி அரிசியை 2 கப் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி சீரகம், பட்டை, இலவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.

அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் புதினா இலைகள் மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி விடவும்.

வதங்கியதும் பாசுமதி அரிசியை ஊற வைத்திருந்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் அதில் அர்சியை சேர்த்து கிளறி விடவும்.

பிறகு 2 கப் தேங்காய்பாலை ஊற்றி கிளறவும். மேற்கூறியவற்றை மிதமானத் தீயிலேயே செய்யவும்.

அரிசி பாதியளவு வெந்ததும் அதில் எலுமிச்சை சாறை ஊற்றி கொத்தமல்லித் தழை போட்டு, நன்றாக கிளறி தீயை குறைத்து அதை ஒரு குக்கரில் கொட்டி மூடி விசில் போடவும்.

10 நிமிடங்கள் சிறுதீயிலேயே வேக விடவும். வெந்ததும் திறந்து சிறிது நேரம் சூடு ஆறவிடவும்.

ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் நெய்யில் வறுத்த முந்திரி பருப்புகளைப் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #44 on: July 17, 2011, 08:52:10 PM »
                                       பகாளா பாத்

பச்சரிசி - 1 கப்
பால் - 4 கப்
உப்பு - சுவைக்கு
தயிர் - 1டீஸ்பூன்
கேரட் - 1
மல்லி இலை - சிறிது
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
மோர்மிளகாய்
பச்சைமிளகாய்
இஞ்சி
கறிவேப்பிலை
 

சாதத்தை உப்பு சேர்த்து குழைவாக வேக வைத்து குழிக்கரண்டியால் மசிக்கவும்.
காய்ச்சிய பால், தயிர் சேர்க்கவும்.
கலந்த சூடான சாதத்தை கரண்டியால் எடுத்து ஊற்றினால் தோசை மாவு பதத்திற்கு இருந்தால்தான் ஆறியதும் சரியான பதத்திற்கு வரும்.
கேரட்டை துருவி சாதத்தில் சேர்க்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை தாளிதம் செய்து சாதத்தில் கலந்து பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி 1- 2மணி நேரம் சென்று சாப்பிடவும்.


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்