“ஓவியம் உயிராகிறது” – வெற்றி பயணம் – 400!
இது பல இதயங்களின் உணர்வுகள் உயிர் பெற்ற பயணம்!
கவிதை என்பது…
மனித உணர்வுகள், அனுபவங்கள், சிந்தனைகள்…
அழகியல் நயத்துடனும், சந்த நயத்துடனும்
செறிந்த சொற்களாய் மலரும் ஒரு கலை!
கவிஞனின் மனதில் பிறக்கும் காட்சி
அனுபவங்களின் நிசப்தம்,
வார்த்தைகள் கோர்த்து,
உணர்ச்சிகள் சேர்த்து,
எழுத்தாய் மலர்ந்து,
இதயத்தில் நிலைக்கும்…
தமிழ் பேசும் கவிதை!
ஆனால் இங்கு…
ஒரு கவிஞன் மட்டும் இல்லை…
ஒரு மனம் மட்டும் இல்லை…
ஒரு ஓவியம்…
அதைப் பார்க்கும் நூறு கண்கள்…
அதில் துடிக்கும் நூறு இதயங்கள்…
அதில் பிறக்கும் நூறு கவிதைகள்!
ஒரே படம்…
ஆனால் ஆயிரம் உணர்வுகள்…
ஒவ்வொருவரின் மனதில்,
ஒவ்வொரு உலகம் உருவாகிறது!
யாரோ அதை காதலாக எழுதுகிறார்!
யாரோ வலியாக உரைக்கிறார்!
யாரோ நினைவுகளை கூறுகிறார்
ஆனால் அனைத்திலும் ஓடும் ஒன்று…
தமிழின் உயிரோசை!
பல இதயங்களின் குரல்கள் சேரும் போது,
அவற்றை ஒரே குரலாய் உயிர்ப்பிக்கும் தொகுப்பாளரின் கலை…
ஒரு இசை! ஒரு சங்கீதம்!!
இதயங்கள் இணையும் ஓர் அழகு தருணம்!
அதை ஒரு குரல் வாசிக்கும் போது…
அது ஒருவரின் குரல் இல்லை!
பல இதயங்களின் துடிப்பு…!
அதை இசை தழுவும் போது…
அது பாடல் அல்ல!
உணர்வுகளுக்கு கிடைத்த இறக்கைகள்…
இப்படி உருவான இந்த பயணம் தான் இன்று
400…!!!
400… ஒரு எண்ணிக்கை அல்ல…!
400 முறை இதயம் துடித்தது!
400 முறை தமிழ் உயிர் பெற்றது!
400 முறை பலரின் உள்ளம்
இந்த அரட்டை அரங்கத்தில் பகிரப்பட்டது!
இந்த சாதனையின் பின்னால்,
தெரியாத உழைப்பின் தடங்கள்!
தூங்காத இரவுகளின் நிழல்கள்!
"இன்னும் அழகாக வேண்டும்" என்ற
அன்பான பிடிவாதங்கள்!
குரல் கொடுக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் உயிரோசை…!
ஒவ்வொரு நொடியையும் செதுக்கும் ஒலி வடிவமைப்பாளர்களின் பொறுமை!
மனதை தொடும் பாடலை தேர்வு செய்யும் திறமையாளர்களின் அந்த நுண்ணுணர்வு…!!
இவை அனைத்தும் சேர்ந்து தான்,
இந்த நிகழ்ச்சியை ஒரு சாதாரண முயற்சியாக இல்லாமல்,
ஒரு ஒரு அருமையான “வெற்றி பயணமாக” மாற்றியிருக்கிறது
இந்த 400…
ஒரு எண்ணிக்கை அல்ல!
ஒரு சாதனை மட்டும் அல்ல!
இது உழைப்பின் உயரம்!
அன்பின் ஆழம்!
தமிழின் பெருமை!
இந்த 400 ஒரு நிறைவு அல்ல…
இன்னும் பல நூறு ஓவியங்கள்!
இன்னும் ஆயிரம் கவிதைகள்!
இன்னும் எண்ணற்ற இதயங்கள்!
இங்கே உயிர் பெற காத்திருக்கின்றன!
இந்த அற்புதமான பயணத்திற்கு பின்னால் நிற்கும்
அனைத்து தொகுப்பாளர்களுக்கும்,
எடிட்டர்களுக்கும்,
இசை தேர்வாளர்களுக்கும்,
எங்கள் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்…!!
இந்த “வெற்றிப் பயணம்” இன்னும் தொடர
எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்… !!