கண் இமை திறக்கும் முன்பும், என் கண்கள் மூடிய பின்பும் என் உற்ற நண்பன் நீ
என்னை சுற்றி உள்ளவர்களின் உண்மை முகம் காட்டியவன் நீ
ஆசையில் அலைந்தோடும் மனதுக்கு இளைப்பாற இடமளித்தவன் நீ
ஆண் எனும் கர்வம் உடைத்து என் கண்ணீர் வலி அறிய வைத்தவன் நீ
அனைத்தும் கடந்து போகும் என் தனிமயே நீ மட்டும் என்றும் நிலையானவன்,
நீ இல்லா மனிதன் இல்லை நீ இல்லை என்றால் அவன் மனிதனே இல்லை