தோழி Luminous
கவிதை மேடயில் கவிதை ஒலிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் அது தகுதி இல்லாததால் இல்லை, அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஒரு நியாயமான விதியால் மட்டும் தான்.
அந்த விதி உங்கள் எழுத்தின் ஒளியை குறைக்கவே இல்லை 🌟 குறைக்கவும் முடியாது.
பண்பலை நிகழ்ச்சி ஒரு *ஒரு மணி நேர நிகழ்வு*, ஆனால் இங்கே பொதுமன்றத்தில் எழுதும் கவிதைகள், ஒவ்வொரு வார்த்தைகளுமே கூட
நேரத்தைத் தாண்டி வாழும்.
இன்று படிக்காதவரும் நாளை படிப்பார்,
இன்னும் பல நாள்களுக்கு பிறகும்
யாரோ ஒருவரின் மனதை அது தொட்டு கொண்டே இருக்கும்.
நீங்கள் எழுதியது கேட்கப்படவில்லை என்று நினைக்க வேண்டாம். உங்கள் கவிதை எப்பொழுதும் படிக்கப்படுறது, உணரப்படுகிறது, மனதில் சேமிக்கப்படுகிறது. அது உங்களின் உண்மையான வெற்றி 🤍
தொடர்ந்து எழுதுங்கள். எழுத்துக்கு ஓய்வு கிடையாது. 💫