🌿 இயற்கை அன்னையின் மனக் குரல்🤱 🔥🌊☀️
மனிதர்களே…
என் மடியில் உங்களை நட்டதும்🌳,
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும்
அன்போடு தழுவியும்
நான் தாயாகத் தாங்கினேன்.
ஆனால் இன்று
உங்களிடமிருந்தே வந்த காயங்களை
தாங்க முடியாமல் துடிக்கிறேன்😔.
நிலத்தைப் பார்த்து,
“ஏன் பசுமை குறைந்தது?” என்று நீங்கள் கேட்கிறீர்…
ஆனால் நச்சுக் கழிவுகளை
என் நெஞ்சில் புதைத்தது யார்?🤔
என் பச்சை மேனியை
கரும்புள்ளிகளாக்கியது யார்?🤔
காற்றை நேசித்தவர்கள்
இன்று அதையே
“சுவாசிக்க முடியவில்லை” என்று குறை கூறுகிறீர்.🤨
ஆனால் தொழிற்சாலைகளின் கரும்புகையை
வானோடு கலப்பித்தது யார்?🤔
வீட்டிலும், வீதியிலும்
புகைநீரை மட்டுமே
பரிசாக விட்டதார்?🤔
என் நீரைக் குடித்ததே
உங்கள் உயிர்.
ஆனால் இன்று
அதே நீரைக் குடிக்க
பயம் அதிகம்.
என் ஆறுகளையும்🏞, ஏரிகளையும்
கழிவாக மாற்றினது
என் பிள்ளைகள்தான்
இந்த வேதனை
என் உள்ளத்தை ஊறடிக்கிறது😔.
இந்த நிலைமையில்
நீங்கள் கேட்கிறீர்:
“இந்த நாடு எப்படி வளம்பெறும்?”
“மக்கள் எப்படி நிம்மதியாக வாழ்வார்கள்?”
“பொருளாதாரம் எப்படி உயர்வடையும்?”🤨
மக்களே…
ஒரு தாயின் உடல்
காயங்களால் நிரம்பியிருக்கும்போது
அவளுடைய பிள்ளைகள்
ஆரோக்கியமாக இருப்பார்களா?🤔
அதேபோல
என்னை அழித்துக் கொண்டு
வளர்ச்சி தேடுவது
மூலமற்ற 🌵மரத்தின் நிழலைத் தேடுவது போல்.
ஒரு நாடு பெருமை பெறுவது
அணைக்கட்டுகள், சாலைகள், கட்டடங்கள்
மட்டுமே அல்ல…
அதற்கு மேல்
சுத்தமான காற்று,
தூய்மையான நீர்,💧
பாசத்துடன் பசுமை தரும் நிலம்.
இவை இல்லையேல்
நாடு எத்தனை கோடி ரூபாய் சம்பாதித்தாலும்
அது செழிப்பு அல்ல சுமையே.
அடுத்த தலைமுறையைப் பார்த்து
உங்கள் அன்பு
நல்ல கல்வி,
நல்ல ஒழுக்கம்,
நல்ல எதிர்காலம்
இவை அனைத்தையும் அவர்கள் பெறட்டும் என்று விரும்புகிறீர்.
ஆனால்
இந்த ஆசியுடன் சேர்த்து
இயற்கையின் பாதுகாப்பையும்
அவர்களுக்கு அளிக்க வேண்டிய கடமை
உங்களுக்கே உரியது.
ஒரு நல்ல பெற்றோர்
செல்வம் சேர்த்துவைத்தது போல
சுத்தமான நிலம், தூய்மையான நீர்,
பருகத்தக்க காற்று
இவற்றையும் சேமித்து வைக்க வேண்டும்.
அல்லையெனில்
நான் அல்ல
நீங்களே பள்ளத்தாக்கில் விழுவீர்.🏟
நான் இயற்கை அன்னை🏞🏝.
உங்கள் தவறுகளைப் பார்த்து
என் உள்ளம் எழும் துன்பம்😔
சொல்ல முடியாதது.
ஆனால்
இன்னும் தாமதமாகவில்லை
ஒவ்வொரு குடிமகனும்
“நான் காப்பேன்” என்ற ஒரே எண்ணம் கொண்டால்
என் காயங்கள் ஆறும்.
உங்கள் எதிர்காலம் வளரும்.
நாடு மறுபடியும் செழிக்கும்.
என்றாலும்
இறுதியில் நான் சொல்லுவது ஒன்றே
என்னைப் (இயற்கை அன்னை) காப்பது
உங்களைப் காப்பதற்கே சமம்.💗💯👍
LUMINOUS 😇