கன்னத்தில் நான் இட்ட முதல் முத்தம் என்               அன்னைக்கே!
நான் கண்ட முதல் தெய்வம் நீ அம்மா!
நான் தந்த முதல் முத்தம் நீ அம்மா!
நான் உணர்ந்த முதல் அன்பு நீ அம்மா!
நான் பெற்ற முதல் அரவணைப்பு நீ அம்மா!
நான் பார்த்து இரசித்த முதல் உறவு நீ அம்மா!
நான் பேசிய முதல் வார்த்தை நீ அம்மா!
நான் யாரென்று தெரியாமல் கருவில்   என்னை சுமந்தவள் நீ அம்மா!
நான் எழுதும் மூன்றெழுத்து கவிதை நீ அம்மா!
நான் பார்த்த சுயநலம் இல்லாத உறவு நீ அம்மா!
பத்து திங்கள் கருவறையில்  என்னை  சுமந்தாய்!
பகல்,இரவு பாராமல் உன் உதிரத்தை பாலாக்கி என் பசி போக்க ஊட்டினாய்!
பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து என்னை தூங்க வைக்க தாலாட்டு பாடினாய் !
பக்குவமாய் நோய் ,நொடி என்னை அண்ட விடாமல் பாதுகாத்தாய் !
என் இன்பம் ,துன்பம்,வெற்றி, தோல்வி அனைத்திலும் நீ இருப்பாய் அம்மா!
எனக்கு முதல் அஞ்ஞான இருளை நீக்கி மெஞ்ஞான ஒளி ஊட்டிய ஆசான் நீ தான் அம்மா!
என் ஆசைகளை நான் சொல்லாமலே நீயாக அறிந்து நிறைவேற்றும் தெய்வம் நீ அம்மா!
நான் எவ்வளவு குறும்பு பண்ணாலும் வெறுக்காத உறவு நீ அம்மா!
நான் உணர்ந்த பாதுகாப்பான இடம் உந்தன் கரங்களில் இருந்த தருணம் தான் அம்மா!
நான் உணர்ந்த உலகில் பெரிய சக்தி நீ தான் அம்மா!
உன் அன்புக்கு நிகர் வேறுயாரும் இல்லை இவ்வுலகில்!
உன் அறுசுவை உணவுக்கு யாரும் ஈடு இணை இல்லை இவ்வுலகில்!
உன் பொன் மடி போதும் எனக்கு ஆயுள் முழுதும்!
உன்னை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை என்னால்!
அம்மா அன்பின் வடிவம்! 
அம்மா ஆசை இளவரசி!
அம்மா சுயநலம் அற்றவள்!
அம்மா வெறுப்பை காட்டாத உறவு!
அம்மா மறக்க முடியாத நினைவு!
அம்மா இழக்க கூடாத உறவு!
அம்மா என் முதல் நடிகை!
அம்மா என்  முதல் இரசிகை!
அம்மா என் வழிகாட்டி!
 உன் கன்னத்தில் முதல் இட்ட முத்தம் மறக்க முடியவில்லையே!
உன் காதோரம் உன் நீண்ட கூந்தல் கதை பேசியது!
உன் நுதலில் இரு புருவங்களிடையே அழகிய பொட்டு முழுமதியாய்!
உன் ஆர கழுத்தினை என் பிஞ்சுக்கரங்களால் கட்டி அணைத்தேன்!
உன் கன்னத்தில் என்  இதழ்கள் பதித்து ஆசை முத்தமிட்டேன்!
உன் முகத்தில் புன்னகை பூத்து, உன் இதழ்கள் விரிந்து உன் கன்னத்தில் விழுந்த குழியின் அழகு சொல்லில் அடங்காது!
உனக்கு அளித்த அந்த முதல் முத்தம் என்னால் மறக்க முடியவில்லை இன்னும்!
உன்னைப் போல என்னையும் அலங்கரித்து ரசித்தாய் அந்த தருணம்!
உன்னை நான் உயிருள்ள வரை மறவேன் அம்மா!
உன் மகளாக அடுத்த ஜென்மதிலும் பிறக்கும் வரம் வேண்டும் எனக்கு!
உன் மகளாய் பிறந்த அதிக்ஷ்டசாலி தேன்மொழி!