Author Topic: இயற்கை மருத்துவம்  (Read 1533 times)

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1272
  • Total likes: 1116
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இயற்கை மருத்துவம்
« Reply #15 on: March 10, 2026, 06:03:22 PM »
*சுண்டைக்காயின்  ஆரோக்கிய பயன்கள்:*

இரத்த சுத்திகரிப்பு: இரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கி, கொழுப்பு படிவதைத் தடுத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

வயிற்றுப் புழுக்கள் நீக்கம்: குடலில் உள்ள புழுக்களை அழித்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி: ஆரஞ்சு பழத்தை விட அதிக வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மூட்டு வலி மற்றும் தசை பலவீனம்: கால் வலி, மூட்டு வலி மற்றும் உடல் பலவீனத்தைப் போக்க உதவுகிறது.

நீரிழிவு மேலாண்மை: இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
வயிற்றுப் புண் (Ulcer): வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது.


Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1272
  • Total likes: 1116
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இயற்கை மருத்துவம்
« Reply #16 on: March 10, 2026, 06:06:37 PM »
♦️🚨 *20 வகையான பாட்டி வைத்தியம்*

♦️ நெஞ்சு சளி
♦️ தலைவலி
♦️ தொண்டை கரகரப்பு
♦️ தொடர் விக்கல்
♦️ வாய் நாற்றம்
♦️ உதட்டு வெடிப்பு
♦️ அஜீரணம்
♦️ குடல்புண்
♦️ வாயு தொல்லை
♦️ வயிற்று வலி
♦️ மலச்சிக்கல்
♦️ சீதபேதி
♦️ பித்த வெடிப்பு
♦️ மூச்சுப்பிடிப்பு
♦️ சரும நோய்
♦️ தேமல்
♦️ மூலம்
♦️ தீப்புண்
♦️ மூக்கடைப்பு
♦️ வரட்டு இருமல்

🚨 *1. நெஞ்சு சளி*

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

🚨 *2. தலைவலி*

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு,
2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

🚨 *3. தொண்டை கரகரப்பு*

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

🚨 *4. தொடர் விக்கல்*

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

🚨 *5. வாய் நாற்றம்*

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

🚨 *6. உதட்டு வெடிப்பு*

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

🚨 *7. அஜீரணம்*

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

🚨 *8. குடல்புண்*

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

🚨 *9. வாயு தொல்லை*

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

🚨 *10. வயிற்று வலி*

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

🚨 *11. மலச்சிக்கல்*

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

🚨 *12. சீதபேதி*

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

🚨 *13. பித்த வெடிப்பு*

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

🚨 *14. மூச்சுப்பிடிப்பு*

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

🚨 *15. சரும நோய்*

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

🚨 *16. தேமல்*

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

🚨 *17. மூலம்*

கரணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

🚨 *18. தீப்புண்*

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

🚨 *19. மூக்கடைப்பு*

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

🚨 *20. வரட்டு இருமல்*

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.


Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1272
  • Total likes: 1116
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இயற்கை மருத்துவம்
« Reply #17 on: March 28, 2026, 02:54:25 PM »
*பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”* என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.


Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1272
  • Total likes: 1116
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இயற்கை மருத்துவம்
« Reply #18 on: March 28, 2026, 03:01:47 PM »
*காலில் நரம்பு சுரண்டல் (Varicose veins / Nerve strain) என்பது இன்று பலருக்கும் வரும் ஒரு பொதுவான பிரச்சனை. குறிப்பாக நீண்ட நேரம் நிற்கும் வேலை செய்தால் இது அதிகமாகும்.*

நீண்ட நேரம் நின்று வேலை செய்வது

ரத்த ஓட்டம் சரியாக இல்லாமை

உடல் எடை அதிகம்

உடற்பயிற்சி இல்லாமை

வயது காரணமாக நரம்பு பலவீனம்

 *அறிகுறிகள்*

காலில் நரம்பு வீக்கம் / புடைசுருள் போல் தெரிதல்

வலி, எரிச்சல்

கனத்த உணர்வு

இரவு நேரத்தில் பிடிப்பு
 *இயற்கை வைத்திய முறைகள்*

 *எள்ளெண்ணெய் + பூண்டு மசாஜ்*

எள்ளெண்ணெய் சூடு செய்து அதில் பூண்டு சேர்த்து கொதிக்கவைத்து

குளிர்ந்ததும் தினமும் காலில் மெதுவாக தடவவும்
*ரத்த ஓட்டம் மேம்படும், வலி குறையும்*
 *வெந்தய நீர்*

இரவு ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஊறவைத்து

காலையில் குடிக்கவும்
 *நரம்பு பலம் அதிகரிக்கும்*
*முருங்கை இலை சாறு*

முருங்கை இலை அரைத்து சாறு எடுத்து குடிக்கலாம்
*ரத்த ஓட்டத்தை சீராக்கும்*
 *சூடு-குளிர் தண்ணீர் முறை*

நிமிடம் சூடான தண்ணீர்
 நிமிடம் குளிர்ந்த தண்ணீர்
மாறி மாறி காலில் ஊற்றவும்
 *நரம்பு சுருக்கம் குறையும்*

*கால்களை உயரத்தில் வைத்தல்*

படுக்கும் போது கால்களை தலையணை வைத்து உயர்த்தி வைக்கவும்
 *ரத்தம் கீழே தேங்காமல் இருக்கும்*

 *சிறிய உடற்பயிற்சி*

தினமும் 15–20 நிமிடம் நடை

கால்களை மேலே கீழே அசைக்கும் exercise
 *நரம்பு தளர்ச்சி குறையும்*

 *உணவில் கவனம்*
 :o
*அதிக உப்பு தவிர்க்கவும்*

பச்சை கீரைகள் (பொன்னாங்கண்ணி, முருங்கை)

வெள்ளைப்பூண்டு, இஞ்சி சேர்த்து சாப்பிடவும்

*கவனிக்க வேண்டியது*

நரம்பு மிக அதிகமாக வீங்கி வலி இருந்தால்

தோல் கருமை / காயம் வந்தால்