உன்னை நீ நம்பு !
நீ பள்ளியில் வெகுளித்தனமாக விளையாடிக் கொண்டிருந்தபோது...
உங்களுக்குத் தெரியாத வயதில் உங்கள் குடும்பத்தால் அதை வாங்க முடியாது என்று குத்தி காட்டுவார்கள்,
அந்த நேரத்தில் உன்னை நீ நம்பு !
நீ ஒரு பெண் என்பதால் சமூகம் உன் படிப்பு தீர்வுகளை சந்தேகிக்க வைக்கும்,
அந்த நேரத்தில் உன்னை நீ நம்பு !
வீட்டிலும் சில சமயங்களில் பாதுகாப்பு என்ற போர்வையில் உன்னை தடுத்து நிறுத்துவார்கள்
அந்த நேரத்திலும் உன்னை நீ நம்பு !
இப்படி செய்தால் பயமாக இருக்கும்,..
அப்படி செய்தாள் கடினமாக இருக்கும்,..
இது ஒரு தவறான தீர்வு,..
வேற ஏதாவது முயற்சி செய்,..
இதைப்போல் யாரு என்ன சொன்னாலும்,
அந்த நேரத்தில் நீ உன்னை மட்டுமே நம்பு !
அந்த கூண்டு தெரியுதா ?
எவ்வளவு பிரகாசமா இருக்கிறது ?
ஆனால் அது ரொம்ப சிறியது...
பார்க்க தான் பல பலனு இருக்கும் !
சிறகுகள் எதற்கு ? பறக்கு தானே ?
அந்த கூண்டு இருக்கே ...
அது உன் மனதில் மட்டும் தான் இருக்கு,
அது ஒரு கற்பனை,
இந்த சமுதாயம், சொந்தங்கள், தெரியாதவங்க, தெரிஞ்சவங்க..
எல்லாரும் உருவாக்கின ஒரு கூண்டு !
அதில் நீ இருக்கணும் என்று அவசியம் இல்லை,
சங்கிலியை உடைச்சிடு !
பறந்து போ !
சிறகை விரிந்து போ !
உன்னை நீ நம்பு !