Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
வாழைத்தண்டு...
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: வாழைத்தண்டு... (Read 18 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
வாழைத்தண்டு...
«
on:
July 19, 2025, 08:30:36 AM »
வாழையின் பூ, தண்டு, காய், பழம், இலை என அனைத்தும் மருந்தாகி பயன்தருகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட வாழையின் மகத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். வாழை பூவை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் வாழைப்பூ, மோர். வாழைப்பூவின் மேலிருக்கும் தோல் பகுதியை நீக்கி பூக்களை எடுக்கவும். பூக்களின் தடிமனான தண்டு பகுதி, தோல் பகுதியை நீக்கவும். இதழ்களை பசையாக அரைக்கவும். இதிலிருந்து பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து, அரை டம்ளர் மோருடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகளவு ரத்தப்போக்கு பிரச்னை சரியாகும். ரத்த மூலம், சீத கழிச்சல் குணமாகும்.
ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை வாழைப்பூவுக்கு உண்டு. ரத்தசோகை வராமல் தடுக்கும் மருந்தாக விளங்குகிறது. வாழைப்பூவில் வைட்டமின் ஏ, சி, இ, பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்துக்கள் உள்ளன. இது, உடல் தேற்றியாக விளங்குகிறது. வாழை பிஞ்சுவை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். வாழை பிஞ்சுவை துண்டுகளாக்கி உப்பு, நீர் சேர்த்து வேக வைக்கவும். பின்னர், இந்த துண்டுகளுடன் அதிகம் புளிப்பில்லாத கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிட்டுவர வயிற்று புண், வாய்ப்புண் சரியாகும். உணவுக் குழாயில் புண் இருந்தால் ஆறும்.
வாழையின் அனைத்து பகுதிகளும் துவர்ப்பு சுவையை அடிப்படையாக கொண்டது. அதிக ரத்தப்போக்கு பிரச்னைக்கு துவர்ப்பு சுவை உடைய உணவுகள் மருந்தாக விளங்குகிறது. வாழை பிஞ்சுவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் புண்கள் விரைவில் ஆறும். வாழை தண்டுவை பயன்படுத்தி சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு, உப்பு, பூண்டு, மிளகு. வாழைத்தண்டுவை சிறு துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் பூண்டு தட்டிப்போடவும். உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்த்து சாப்பிடும்போது சிறுநீரக கற்கள் கரையும்.
வாழைத்தண்டு சிறுநீரக கற்களை உடைக்கும் தன்மை கொண்டது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், புண்களை சரிசெய்யும். தேவையில்லாத கொழுப்பு சத்தை குறைக்க கூடியது. உடலுக்கு நல்ல ஆரோக்கியம், ஊட்டத்தை தருகிறது. வாய்ப்புண்ணுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். வயிறு புண்ணாக இருந்தால்தான் வாய்ப்புண் வருகிறது. ரோஜா இதழ்களை அரைபிடி எடுத்து நீரில் இட்டு காய்ச்சி இனிப்பு சேர்த்து குடித்துவர வாய்ப்புண், வயிற்றுபுண் குணமாகும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
வாழைத்தண்டு...