Author Topic: கலைஞர் பிறந்தநாள் - ஆக சிறந்த ஜனநாயகவாதி !  (Read 76 times)

Offline சாக்ரடீஸ்




JUNE - 03 - 2025
 

தலைவா ❣️

நீ நின்றபோதும், சக்கர நாற்காலியில் நகர்ந்தபோதும், மெரினாவில் ஓய்வெடுக்கும்போதும், உன் பெயரை உச்சரிக்காமல் இங்கு எவனாலும் அரசியல் செய்ய முடியாது. தமிழினத்தை ஒற்றை மனிதராகக் காத்த கலைஞரின் பிறந்தநாளில், மகிழ்ந்து நினைவு கூர்வோம்.

ஏன் கலைஞருக்கு இத்தனை விமர்சனங்கள், வன்மம், துரோகம்? காரணம், பெரியார் மற்றும் அண்ணாவின் சமூகநீதிக் கொள்கைகளை தமிழ்நாட்டில் ஓரங்கட்ட நினைத்தவர்களின் எண்ணங்களை அடித்து நொறுக்கியவர் கலைஞர். அவர் மறைந்த பின்னும், அவரது எண்ணங்கள் ஒரு சித்தாந்தமாக வாழ்கிறது.

இது அரிது ! பல அரசியல் தலைவர்கள் வரலாற்றில் அடிக்குறிப்புகளாக மட்டுமே இருக்க, கலைஞர் ஒரு கலாச்சார சீர்திருத்தவாதியாக, தமிழினத்தின் அத்தியாயமாக இன்றும் திகழ்கிறார்.

ஓய்வறியா சூரியன்! இனத்தின் மீது தீராக் காதல், மொழியின் மீது அளவற்ற பற்று, தொலைநோக்கு சிந்தனை, கொள்கைகளில் உறுதி, எதற்கும் அஞ்சாத மனம், எதிரிகளை நடுங்க வைக்கும் செயல், "என்னைப்போல் எவனும் இல்லை" எனும் தன்மானம் ! 

நீ வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது எனக்கு பெருமிதம்!

கலைஞர் வாழ்க !