Author Topic: ஆந்திரா நண்டு மசாலா  (Read 943 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
ஆந்திரா நண்டு மசாலா
« on: April 16, 2012, 10:53:37 PM »
பெரிய நண்டு - அரை கிலோ
தக்காளி - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - ஒரு மூடி
கசகசா - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 2
ஏலக்காய் - 4
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
முட்டை - 2
கிராம்பு - 4
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
பட்டை - 2
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
 

முதலில் நண்டின் ஓட்டை நீக்கி விட்டு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
இரண்டு தக்காளியை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு நண்டில் அரைத்த தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து பிசறி ஊறவிடவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அடித்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி மிக்ஸியில் இட்டு கசகசாவை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து அதில் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து இலேசாக வதக்கி அரைத்த தேங்காயைச் சேர்க்கவும்.
நன்றாக வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
பிறகு நண்டைச் சேர்த்து மூடி போட்டு சிவக்க வேக விடவும். சிவந்து வந்ததும் அடித்த முட்டையை வடிகட்டி மூலம் மெதுவாக நண்டில் வடிகட்டவும்.
முட்டை, நண்டு இரண்டும் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்