இராவணன் போல நேசிப்பது நல்லது.
இன்னும் எத்தனை
ராமன்கள் இருக்கிறார்கள்
இந்த உலகத்தில்?
அவர்கள் எல்லாம்
தனக்கொரு சீதையைத்
தேடுகிறார்கள்.
ஆனால்…
அவளையே அக்கினியில்
நிறுத்துகிறார்கள்.
அவள்
சிரித்தால் சந்தேகம்,
அவள்
மௌனமெனில் குற்றம்.
அவள்
நிமிர்த்து நடந்தால் திமிரு,
சிறு தடுமாற்றத்திற்கு
கூட பெரிய தண்டனை.
அவள் ஒரு பெண்,
அவளும் ஒரு மனுஷி.
பாசமும் கோபமும்
அவளுக்குள்ளும் இருக்கிறது.
அவள் கண்ணீருக்கு
விலை இல்லை,
அவள் அமைதிக்கு
இடமில்லை.
பாசத்தை ஏன் சோதிக்க வேண்டும்?
"உண்மை என்றால் நெருப்பில்
அவளை எரிக்காதே" என்று
பழமொழி போலப் பேசாமல்
புதிய பாதையைத் தேடுவோம்!
சீதைக்கு நெருப்பு வேண்டாம்
தன்னை ராமன் என்று எண்ணி சிலர்
அக்னிக்குள் தள்ளுகிறார்கள்
சீதை போன்ற பெண்களை
உணர்வின் வழியில்
தீர்வு தேடுவோம்,
ராமனாய் இருப்பதை விட
இராவணன் போல
நேசிப்பது நல்லது.