யாரும் பறித்து கொள்ளமுடியாத பொக்கிஷம் கல்வி... அத்தகைய வரத்தை கொடுத்த எமது பள்ளிக்கு மிக்க நன்றி...
பள்ளி நாட்களில் பல நினைவுகள்,
கண்களில் பல கனவுகள்
புத்தகம் சுமக்க கஷ்டப்படும் நமக்கு அப்பொழுது தெரிவதில்லை, இக்கல்வியே நம்மை வாழ்கை முழுதும் சுமந்து செல்லும் என்று....
கடைசி இருக்கைகள் கிடைப்பதே வரம்...அதில் அமர்ந்து நண்பர்களுடன் சிரித்து, விளையாடிய நாட்களை மறக்கமுடியுமா???
அழகான சிரிப்பு கலந்த கதைகள் பாடத்தின் போது... ஆசிரியர் கோவமடைய,சின்ன சின்ன தண்டனைகளும் சுவாரசியம் தானே?
குற்றம் இல்லாத குறும்புகள்,கற்றதை விட வாழ்க்கைக்கான பாடங்கள்,வகுப்பறையில் தூக்கம்,கிழிந்த புத்தகங்கள், இருக்கையில் கிறுக்கல்கள்,, என்று பல பக்கங்களை கொண்ட புத்தகமே பள்ளி நாட்கள்....
நண்பர்களோடு கை பிடித்து கதை பேசி பள்ளி சென்ற நாட்களை எண்ணி மனம் ஏங்குகிறது...
கல்லூரி சென்ற பின்னும்..காற்றில் இசைக்கும் சிரிப்பு சத்தம்...பிடிக்காத கணக்கு பாடம், எண்ணற்ற வீட்டுப்பாடம் இதையெல்லாம் எழுதி தருவதற்கு ஒரு அறிவாளி வகுப்புத் தோழி...மழை நாட்களில் கண்ணாடி ஜன்னல் அருகே அமர்ந்து , மழை துளிகளுடன், ஆசிரியர் கூறும் கதைகள்...நாம் படிப்பதை விட, பரிட்சைக்கு முன் - நண்பன் ஐந்து நிமிடங்களில் சொல்லி தரும் பாடமே நம்மளை பாஸ் ஆக்கி விடும்...
பள்ளி நாட்கள், விலை குடுத்தாலும் அதற்கு ஈடு இணையற்ற பொருள் ஒன்றும் இல்லை...
❤️வேலைக்கு சென்றாலும் நினைவுகளில் என்றும் நிறைந்திருக்கும் பள்ளி நாட்கள்❤️