❤️ நீ என் அருகில் இருக்கும்போது, நேரம் வேகமாக நகர்கிறது...கடிகாரம் நின்று, நேரம் நகராமல் இருக்க வேண்டும் என்று நினைத்த மனதிற்கு தெரியவில்லை, கடைசியில் காயபடப்போவது நீ தான் என்று...
உன் கண்கள், இதழ்கள், குரல் அனைத்தும் எனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறது இதயம்....
ஆசை எண்ணும் வலைக்குள் சிக்கி கொண்டேன் நான்...உன் கரங்கள் என்னை பிடித்தவாறு இருக்க ஆசை, உன் மார்பில் சாய்ந்து இதய துடிப்பை கேட்க ஆசை , காலம் முழுவதும் உன்னை பார்த்து கொண்டே இருக்க ஆசை...
உன் கண்கள் வேறொருவரை பார்ப்பதை என்னால் சகித்து கொள்ள முடியவில்லையே!!! நான் உன்னை எல்லை இல்லாமல் விரும்பியது உண்மை...
ஆனால் நீயோ என்னை விட்டு விலக நினைத்ததை மறந்து விடுமா நெஞ்சம்??? உன்னிடம் எனக்கு இருக்கும் உரிமையை உலகிற்கே தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்த எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே...
காதல் என்ற பெயரில் வந்தாய் காலம் முழுவதும் காயம் கொடுத்து சென்றாய்...கண்களில் நீர் இதயத்தில் வலி என்ற பரிசை குடுத்தமைக்கு நன்றி...
மனதில் கனவு கோட்டைகளை கட்டினேன் , கடவுள் முடிவு செய்தது இது இல்லை என்று தெரிவதற்கு முன்னாள்....
நீ எனக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாட வேண்டிய நான், எங்கு இருந்தாலும் வாழ்க என்று வாழ்த்த வைத்தது இயற்கை....ஆசை பேராசையாக மாறியபோது , அவன் அவளை வெறுக்க தொடங்கினான்...
உன் நினைவுகள் என் மனதில் என்றும் நிறைந்திருக்கும்❤️