Author Topic: ❤️❤️ நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ❤️❤️  (Read 1606 times)

Offline VenMaThI



மெய் என்று நினைத்தேன் உன்னை
மெழுகாக்கி சென்றாய் என்னை
உருகி உருகி பேசியதை நம்பி
உருகித்தான் போனேன் நான்

என்னை எரிக்கும் தீக்குச்சியாய் நீ
ஒளிதரும் மெழுகாய் நான் ...
மெழுகாய் இருப்பதும் சுகமே
உருகினாலும் ஒளி தருமல்லவா ...

விட்டு சென்ற உன்னை விட்டு
வலி தாங்க முடியாமல்
விலக மறுத்த இதயமது - இன்று
மறந்தும் உன்னை நினைப்பதில்லை

பட்டும் திருந்தவில்லயே என்று
பக்குவமாய் எடுத்துரைத்தேன் ...
பாவி மனமது புரிந்து கொண்டது
மரணித்தாலும் வருந்தேன் உனக்காய் என்றது ...

இரக்கமில்லா உன் துரோகமதை
என் வாழ்வின் இழப்பாக எண்ணவில்லை
உறக்கமற்ற நாட்களுடன் இன்றும்
உயர பறக்கிறேன் என் உலகமதில் ...

காதலில் தான் தோற்றுவிட்டேன் ஆனால்
என் வாழ்வின் சிகரமதை தொட்டுவிட்டேன்
என் மன வலிமையை எனக்கு உணர்த்திய
உன் நல்ல உள்ளத்திற்கு என்றும் என் நன்றி ....

« Last Edit: November 19, 2024, 06:36:55 AM by VenMaThI »

Offline Ishaa

Behind every strong woman is a story that gave her no other choice!

என் வாழ்வின் சிகரமதை தொட்டுவிட்டேன்

Venmathi sis ❤️
You are one of the strongest women I met in my life. ❤️
Neenga kadanthu vantha kastam ellam
ennale kadanthu irukka mudiyuma theriyala.
I always look up to u. ❤️
Evalo kastam vanthalum ellam kadanthu
pogalam enru enakku unara vechathu neenga❤️
Ella kastangalum unga balama akuneenga. ❤️
Be Proud of urself!!!!
U are a rolemodel for
many woman out there sis!!!

 
I am grateful I met u. ❤️
Inthe virtual world la enakku
nijama kidaicha oru pokkisham❤️❤️
I never want to loose U sis. ❤️

U know it already.
I always love u MORE ❤️

Namma gif :D


« Last Edit: November 19, 2024, 01:42:45 AM by Ishaa »

Offline Vethanisha

விட்டு சென்றவர்கள் தரும் பாடம்
வாழ்வுதனில் உயரவே கண்மணியே
 

நிமிர்ந்த உன் தலை இனி என்றும் இறைவன் அன்றி
வேறெவர்க்கும் அடிபணியாது கண்மணியே

தைரியமும் வீரியமும் கொண்ட பெண் முன்
இமயமும் சிறு புள்ளிதான் கண்மணியே

Keep achieving  paapu ♥️


Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 228
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
உறவே  !   பிரிவு என்ற ஒன்று இல்லை என்றால். நினைவின் மொழியும், பிரிவின் வலியும் இல்லாமலே போய்விடும்.

சில உறவுகள் நம்மை புண்படுத்தும்,
சில உறவுகள் நம்மை பண்படுத்தும்.

துரோகம்! இது மானுட சமூகத்தின் சாப கேடு.

எம்மை துன்பற செய்தோரையும், தூய மனதோடு மன்னிப்போம். 

படைப்பினம் நம்மை கைவிட்ட பொழுதிலும்,
படைத்தவன் ஒரு பொழுதும் நம்மை கைவிட போவதில்லை 🌹🌹🌹🌹.

உறவே! சிலர் சரிக்க நினைத்தாலும், சாதித்து காட்டுவது நம் மீதான நிர்பந்திக்கப்பட்ட கடமை 🌹🌹🌹.