Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 358  (Read 553 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 358

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline PreaM

வலியோடு விழி வைத்து
வழி மேலே எதிர்பார்த்து
எண்ணம் பலவண்ணம்
ஏக்கங்கள் தினம் கொல்லும்

வருவாயோ மாட்டாயோ
மனசுக்குள் படபடக்க
மற்றவர்கள் எனை கடக்க
குழப்பங்கள் தினறடிக்க

பூங்கொத்தோ சிரிக்கின்றது
புலம்புவதை ரசிக்கின்றது
நான் வாடுவதை கண்டு
தான் வாடுவதை மறக்கின்றது

உறுதி கொண்ட நெஞ்சம்
உனக்காக உருகுதடி பெண்ணே
கண்கள் இரண்டும் கலங்குது
கால்கள் இரண்டும் நோகுது

கண்ணீரில் நனைகின்ற பூக்களெல்லாம்
என் மேல் காதல் கொள்ள
நான் காதலிக்கும் பெண்ணே
உனக்கேன் இன்னும் தயக்கம்

காத்திருப்பேன் உனக்காக
நான் சாகும் வரை அல்ல
பூங்கொத்து வாடும் வரை
காதலோடு காத்திருப்பேன் காதலியே ...

காதலோடு வாழனுமே தவிர
காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை
பொலப்பையும் பாக்கனும்
போய் பொலைக்கிற வழிய பாப்போம்...


Offline Kavii

கனவாய் போன காதல் !

கையில் மலர்ச்செண்டு, மனதில்  பூந்தோட்டமாய் அவள் மீதான காதல்!
அவளுக்காக காத்திருந்தேன், நெஞ்சம் கனவுகளால் நிறைந்திருந்தது!
அவள் வந்து என்னை எட்டிப் பார்க்க, என் மனம் பரவசமாயிற்று,!
ஆனால் அது நொடியில் நொறுங்கி, சோகத்தின் ஆழத்தில் விழுந்தது!

அவளின் பார்வை என் இதயத்தைத் தேடுமென நம்பினேன்!
ஆனால் அவளோ வேறு ஒருவனின் கையை பிடித்து நடந்து சென்றாள்!
என் கண்களிலிலிருந்து கண்ணீர் மலர்கள் போலச் சிதற,
என் காதல் கனவுகள் பொய்யானது, என் இதயமும்
சில்லு சில்லாய் நொறுங்கி போனது !

அவள் சிரித்து கொண்டே என்னை கடந்து அவனுடன் சென்றாள் !
காற்று கூட எனக்கு ஆறுதல் சொல்லாமல் அவள் பின்னால் சென்றது!
பூத்திருந்த பூக்கள் என் கையில் வாடியதைப்போல
அவளுக்காக காத்திருந்த என் நெஞ்சும் வாடியது!

நினைவுகள் கண்ணீரில் ததும்ப, வார்த்தைகள் மௌனமாய் உறைந்தன,
என் இதயம் நிகழ்ந்ததை ஜீரணிக்க முடியாமல் வெதும்பியது . 
அவள் ஒருவனின் பக்கம் மகிழ்வோடு நடந்தாள்,
நான் இங்கு இருளில் மூழ்கி, என் வாழ்வே ஒளியிழந்தது !
அவளின் நினைவுகள் மட்டும் என் மனதை பிழிந்தது!
அவள் மீதான என்ன காதலும் என்னைப் போலவே மெல்ல அழிந்தது!

கனவுகள் கரைந்து விட்டன, அவள் முகம் நிழலாய் மாற,
அவள் சிரிப்பு எனக்குள் சோகத்தை விதைத்தது,!
இங்கே நான் மட்டும் காலத்தின் வெற்றிடத்தில் நின்றேன்,
மலர்ச்செண்டு கையில் இருந்தது, ஆனால் அதில் வாசமும் இல்லை என்னில் சுவாசமும் இல்லை.

இரவில் சிதைந்த நிழல்கள் போல்,
இன்றும் என் நெஞ்சில் காயமாய் அவள் நினைவுகள் !
அவள் பாதம் பதிந்த இடத்தில்!
தொலைந்து போனது என் காதல் கனவுகள் !

காத்திருந்த காதல் கனவாய் போனது!
« Last Edit: October 17, 2024, 02:01:18 PM by Kavii »

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 209
  • Total likes: 483
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
கண்ட நொடி முதலே காதல் கொண்டேன் என்றாய்,
கதைக்க துவங்கும் முன்பே உன் காதலையும் சொன்னாய் .

என்னோடு கலந்த உன் நினைவுகள் அனைத்தும் நெஞ்சம் நிறைய நிலைபெற்றுருக்க.

கடந்த கணங்கள் எல்லாம் காதல் கனக்க செய்தாய்..

பின்பு

துவங்கியது இடைவேளை 😂

என்னை நினைக்க மறந்தாய், உண்மையை உன் குடும்பத்தாரிடம் உரைக்க மறுத்தாய்.

என் நேசத்தின் ஆழமும் உனக்கு புரியவில்லை, உள்ளத்தின் அழுக்குறளும் உனக்கு கேட்கவில்லை.

உனக்கு கேட்டதெல்லாம் உன் தாய், தந்தையரின் குரல் மட்டுமே. 

அது தவறில்லை.  காதல் கொண்ட தருணம் உன் பெற்றோர்களை மறந்து,  என்னுள் புகுந்து, என் உள்ளம் களைந்து,

உயிரோடு உள்ளம் உறவாட, நேசத்தின் நிழல் அது நெடு மரமாய் தழைதோங்கிய பின்பு.

கொஞ்சமும் சிந்திக்காது சிதைத்து, எந்தன் செங்குறுதி கண்ணீர் வலியே வழிந்தோட.   

நீ இல்லையேல் நான் இல்லை என்ற நிலையில் அதை உரைதாயே அது தான் துரோகம் 🤨.

நீயாய் வந்தாய் நீயாகவே சென்றாய், ஆனால் வலி மட்டும் எனக்கா?

உடைந்த போதிலும் சிதையாது நிற்கும் சிங்கத்தின் குணம் கொண்டவன் நான் 🤨
 வருடங்கள் பல ஆயிற்று

"மன்னித்தேன்", மனதை தொட்டமையால், ஆனால் "மறவேன்" என் மனதை கொன்றமையால்.

காதல் என்ற பெயரில் கற்று கொடுத்த பாடத்திற்கு நன்றி 🌹🌹🌹

என்னை மறக்க நினைத்த எவரையும், நான் நினைக்க மறுக்கிறேன் 🤨

அன்றும், என்றும் என் காட்டுக்கு நான் தான் " ராஜா"🤨 

வாழும் காலம் முழுவதும் சிங்கமாகவே கர்ஜித்து சாவேன்.   

காதல் என்ற பெயரில் கற்று கொடுத்த பாடத்திற்கு நன்றி 🌹🌹🌹
MN-AHAMED AARON
« Last Edit: October 21, 2024, 01:44:54 AM by Unique Heart »

Offline SweeTie

நான் மலரோடு சென்றேன்
என் மகாராணிக்காக
வந்ததும்  வந்தாள்
துணையோடு  வந்தாள்
இதய மற்ற  காதலை
வேடிக்கை பார்த்து சிரித்தன
என் கையிலிருந்த  ரோஜாக்க


ரோஜாக்கள்   கள்ளிப்பூக்களாக
கண்ணெதிரே  காட்சியளித்தன
கோபுரத்தில்  இருந்த  என் காதல்
கசங்கிய  கடதாசியாய் 
என் காலடியில்  கண்டேன் 

உணர்ச்சிகளின் களியாட்டம்
உண்மைக்காதல்,  என்பதை புரியாதவளா ?
உறங்கி கிடந்த என்  உணர்வுகளுக்கு 
உயிரோட்டம்  கொடுத்தவிட்டு  என்னை
உயிரோடு  புதைத்து விட்டாளே 

பேரிழப்பு  என்பதா?  பேதைமை என்பதா ?
ஆழம் தெரியாமல்   காலை விட்டு
சகதியில்  புரளாமல் விட்டேன் என
மனதை   திடப்படுத்திக்கொள்வதா ?
என் பிஞ்சு மனசு  அலை பாய்ந்தது

காதலுக்கு கண் இல்லை  என்பர்
இன்று கண்டேன்  இதயமும் இல்லை என
கைமாறுவதற்கு  காதல் கடை சரக்கா ?
கண்ணாடி குவளையில் குடிக்கும் மதுவா ?
புரியாத  நாடகத்தில் நடிகனானேன்  நான்

காலத்தின் மாற்றத்தில்  காதலும் மாறியதா ?
முகம் தெரியாத மனிதர்கள்,  திரை மறைவில்
ஆடும்  ஆட்டம்  காதலாகுமா ?
இதயங்கள் மட்டுமே பேசும்  என்றால் 
இதயம் இல்லா மனிதர்கள் எப்படி பேசுவார் ?

ரோபோக்கள்  காதல் செய்யும் காலமிது
இரக்கம்  இல்லா இதயங்கள்தான் அங்கு
சொன்னதை  செய்யும் இயந்திரங்கள்
உணர்ச்சிகளை  புரியாத ஜடங்கள்
அவளும்  ஒரு ரோபோ ஆகிவிட்டாளா?



 
« Last Edit: October 20, 2024, 06:57:00 PM by SweeTie »

Offline RajKumar

  • Newbie
  • *
  • Posts: 13
  • Total likes: 70
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
வரமாய் என் வாழ்க்கையில் வந்தாய் நினைத்தேன் ஆனால் வருத்தம் தந்து சென்றாய்

தென்றலாய் என் நினைவில் நிலைப்பாய் எண்ணிய எனக்கு புயலாய் மாறி சென்றாய்

அலையாய் அன்பு தருவாய் தவித்தேன் ஆழிஅலையாய் அடித்து சென்றாய்

உன்னுடன் பழகிய காலம்  வசந்த காலமாக இருக்கும் என நினைத்த போது இலையுதிர் காலமாக என்னை உதிர்த்து சென்றாய்

பல எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன் உன் அன்புக்கு நீ தந்து சென்றதோ ஏமாற்றம் ஓன்றயே

வாழ்க்கை என்னும் பாரமபத விளையாட்டில் என் வாழ்க்கைக்கு ஏணியாய்  ஏற்றம் தருவாய் நினைத்தேன் பாம்பு ஆக இறக்கி விட்டு சென்றாய்

பகலாய் வெளிச்சம் தருவாய் எண்ணிய எனக்கு இரவு போல் இருளை அளித்து சென்றாய்

என் உண்மையான அன்புயை அறிந்தும் அறியாதது போல உன்னையே ஏமாற்றி சென்றாய்

உன் நலம் மட்டும் பார்த்து நான் செய்த காதலுக்கு உன் தேவை முடிந்தவுடன் என் காதலையும் தேவையற்ற பொருளாய் தூக்கி எறிந்து சென்றாய்

பேச மறுக்கும் உன் இதயத்திற்கு பேச துடிக்கும் இதயம் சொல்வது என்னைவிட பேரன்பு தரும் இதயம் கிடைத்தால் சந்தோஷமாக இரு