Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 355  (Read 4812 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 355

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline VenMaThI



அன்புடன் நான்....
அன்பான உனக்கு....

அழியாத நினைவுகள் பல அள்ளிக்கொடுத்தாய்....
பிரியாத உறவுகளை என்றும் பிணையச்செய்தாய்....
உறக்கமற்ற இரவுகளில் உலகை வலம்வரச்செய்தாய்.....
இறக்கமற்ற இன்னல்களை இலகுவாய் கடக்க வைத்தாய்....


சரியென்றும் தவறென்றும் உணரவைத்தாய்...
 சீரான பாதையில் செல்ல வழிவகுத்தாய்...
பாசாங்கில்லா பாசமதை பொழியவைத்தாய்....
மற்றோரையும் உற்றாராய் நினைக்கவைத்தாய்...

துவண்ட போதெல்லாம் துணையாய் நின்றாய்....
முடியும் என்ற மந்திரமே முதன்மையென உணரவைத்தாய்....
வலிகளை நேசிக்க கற்றுக்கொடுத்தாய்....
நல்ல வழி பிறக்கும் என நம்பவைத்தாய்...

ஏமாற்றத்தையும் ஏணிப்படியென எண்ணவைத்தாய்...
எட்டாக்கனியையும் எட்டிப்பறிக்க பயிற்றுவித்தாய்...
ஏனிந்த வாழ்க்கை என்ற கேள்விதனை -
என் வாழ்க்கை இதுவென்ற பதிலாய் மாற்றினாய்....

உனையன்றி எனக்கு இவ்வுலகில்....
சோர்வில் தேற்றிய உயிரில்லை...
அணைத்த வேறு ஆன்மா இல்லை...
கண்ணீர் துடைத்த கரங்கள் இல்லை...
புரிந்து கொண்ட இதயமும் இல்லை....

என்றுமே
குழந்தை நீ -  குறும்பில்
குமரி நீ  - காதலில்
தாய்  நீ - அன்பில்
தந்தை நீ - அரவணைப்பில்..
அத்துனை உறவும் நீயே இவ்வுலகில்....



இன்று இதுவரை மட்டுமன்றி
என்றுமே என்னை
இளமையாய் வைத்திருக்கும்...
உனக்கே இம்மடல்
அன்பான என் மனமே.... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️


அன்புடன் நான்....
அன்பான உனக்கு...........
« Last Edit: September 16, 2024, 01:59:07 AM by VenMaThI »

Offline Lakshya

அன்புள்ள கண்ணாளனே❤️,

உன்னை கான எண்ணி துடிக்கும் இதயம் எழுதும் கடிதம் இது...

நீயின்றி என் வாழ்க்கை வெறுமையானது என்று உனக்கு தெரியும் தானே? நீ அருகில் இல்லாத போதும், உன் நினைவுகள் என்னோடு பயணிக்கிறது , இக்கடிதத்தில் உன்னோடு பயணித்த நினைவுகளை பகிர்ந்திருக்கிறேன்... கேட்க நீ தயாரா???❤️

நீ என்னுள் நுழைந்த நாளிலிருந்து உன்னை நினைக்காத நொடி ஓன்று இல்லயே!
உன்னை காண காத்திருக்கிறது என் கண்கள்...சீக்கிரம் விரைந்து வா என்னை பார்க்க... சூரியன் உதிபதிலிருந்து நிலா வரும் வரை உன் நினைவுகளில் நான்... ❤️

உன்னோடு பயணித்த நாட்களில் உன்னை ரசித்ததை விட உன் காதலை ரசித்தது தான் அதிகமாக இருக்கும்.. இது உனக்கு தெரியுமா??❤️

கை கோர்த்து நெடுந்தூரம் நடந்துசெல ஆசைப்படுகிறேன் உன்னோடு..கரம் பிடிப்பாய???❤️

வாழ்க்கையில் பல துன்பங்கள் இருந்தாலும் நீ எனக்காக இருக்கிறாய் என்று நினைத்து கடந்துசெல கற்றுகொள்கிறேன்... உனக்காக எழுதும் இக்கடிதம் என் மனதில் இருப்பதை பகிர ஒரு வாய்ப்பாக அமைகிறது...❤️

நீ என்றும் இவ்வுலகில் எனக்காக இருப்பாய் என்று காத்துகொண்டிருக்கும் உன் கண்மணி நான் என்று நீ அறிவாய் தானே??? உன் கடிதம் வரும் வரை காத்திருப்பது என் எண்ணம் அல்ல... அதுவே என் போதையாக மாறிவிட்டது❤️

பார்க்கமுடியாத தூரத்தில் நீ இருந்தாலும் காணும் இடமெல்லாம் உன் முகமே தெரிகிறதே... இது தான் காதலோ??? நீ பேசும்பொழுது உன்னை ரசித்ததை விட நான் ரசித்தது உன் கண்களை மட்டுமே!!❤️

கூடவே இருப்பதை விட தொலைவில் இருந்து உன்னை காதலிப்பதை சுகமாக உணருகிறேன்...காலமெல்லாம் உன் மடியில் வாழ ஆசைப்படுகிறேன்.. அனுமதி கிடைக்குமா???❤️

காலம் பல கடந்தாலும் உன் மீதான காதல் குறையாது என் காதலனே❤️

என்றென்றும் உன் காதலி,
லக்க்ஷயா❤️



« Last Edit: September 16, 2024, 02:50:09 PM by Lakshya »

Offline TiNu




அன்பான கனிவான ஏகாந்த கடவுளுக்கு..
பக்தியுடன் பணிவாக.. வரையும் ஒரு மடல்..

உன் பூ முகத்தை.. என் விழிகள் கண்டதில்லை..
உன் குரலோசை... என் செவி கேட்டதில்லை..
இருந்தும்..  உன்னிடம் நான் வேண்டுவது ஏனோ...
குற்றம் பாராத சுற்றம்.. எனக்கு தருவாயா?...

உன் தளிர் விரல்களை.. பிடித்து நடந்ததில்லை..
கருனைநிறை  உன் விழிகளை.. பார்த்ததில்லை.
இருந்தும்..  உன்னிடம் நான் வேண்டுவது ஏனோ...
பிறர் தயவின்றி வாழ.. எனக்கு அருள்வாயா?

உன் பூச்செறியும் சடைமுடியை ரசித்ததில்லை...
உன் தாமரைபூ பாதங்களை தொட்டதில்லை..
இருந்தும்..  உன்னிடம் நான் வேண்டுவது ஏனோ...
விலையில்லா விவேக கல்வி.. எனக்கு அளிப்பாயா?

உன் தோள்களில் தவழும் மலர்மாலை பார்த்ததில்லை..
உன் இடையில் ஆடிய மேகலை கண்டதில்லை..
இருந்தும்..  உன்னிடம் நான் வேண்டுவது ஏனோ...
பிறன்கேடு எண்ணாத நற்குணம்.. எனக்கு கொடுப்பாயா?

உன் தெய்வீக நடன தாண்டவத்தை தரிசிக்கவில்லை..
உன் விரல் மீட்டும் இன்னிசை ஒலியை உணர்ந்ததில்லை...
இருந்தும்..  உன்னிடம் நான் வேண்டுவது  ஏனோ...
உனை என்றும் நானுணரும் வல்லமை.. எனக்கு தருவாயா?

உன் நளினம் கொஞ்சும் நடையழகை நோக்கியதில்லை..
உன் குருதி கொப்பளிக்கும் அசுரவதத்தை கண்டதில்லை..
இருந்தும்..  உன்னிடம் நான் வேண்டுவது  ஏனோ...
என்னுள் உறங்கும் நம்பிக்கையே நீயென.. எனக்கு உணர்த்துவாயா?

உன்னுள் அடங்கிய நானும் ... என்னுள் அடங்கிய நீயும்...
ஒன்றே என உணர.. உன் பெயரில், நான் எழுதும் மடல்...



Offline Mr.BeaN

மண்ணிலே பதியம் வச்ச
ரோசாசெடி பூத்து
என் மனதிலே பதியம் வச்ச
உன்னோடு சேர
எண்ணிடும் வேளையிலே
எங்கோ நீ இருக்க
விண்ணையே காகிதமாய்
விரித்து  நான் எழுதுகிறேன்

என்னையே எழுதுகோள்
என நானும் மாற்றி
எந்தன் ஆசைகளை
மையென தான் ஊற்றி
உன்மேல் நான் கொண்ட
காதலையே போற்றி
எழுதும் மடல் வருமே
என் காதல் பறைசாற்றி

கண்ணிலே தோன்றிய நீ
கனவெனவே கலைந்துவிட
என்னிலே உன் நினைவோ
வடுவெனவே நிலைத்திருக்க
இணையில்லா என்னவளே
துணையெனவே உனை வேண்டி
எழுதிடும் இக்கடிதம்
படித்துவிட்டு வருவாயோ






intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline சாக்ரடீஸ்

Amma paste ayayoooo postttttttt

சண்டைக்காரிக்கு ஒரு போஸ்ட்

சில எண்ணங்களை
நினைப்பதை விட
எழுதி பார்க்கையில்
அழகாக தெரிகிறது

எதற்கெல்லாம் சண்டை போட்டோம்
என வரிசைப்படுத்தி எழுத தொடங்கினேன் 
என் இதழ் ஓரத்தில் சிறு புன்னகை

கல்நெஞ்சகாரி
குட் மார்னிங் அனுப்பும் போது
Heart சேர்க்காததற்கு சண்டை
Instaவில் நீ அனுப்பும் reelsக்கு
நான் react செய்யாமல் இருந்தால் அதற்கும் சண்டை
காரணம் எதுவும் கிடைக்காமல் இருந்தால்
நீ முன்ன மாதிரி இல்லை
என்ற காரணத்தை உருவாக்கி
அதற்கும் சண்டை போடுவாய்

சரி சமாதானப்படுத்தலாம் என்று வந்தால்
முட்ட கண்களை வைத்து உருட்டி உருட்டி மிரட்டுவாய்
சரி அமைதியாக பேசாமல் இருந்தால்
ஏன் வந்து பேச மாட்டியா? என்று
அதற்கும் சண்டை போடுவாய்

சரி sorry நான் தான் தப்பு பண்ணிட்டேன் என்று
மன்னிப்பு கேட்க வந்தால்
முகத்தை திருப்பிக் கொள்வாய்
சரி போ என்று மன்னிப்பு கேட்காமல் இருந்தால்
ஓ அவ்ளோ ஆயிடுச்சா? என்று
அதற்கும் சண்டை போடுவாய்

சரி செய்யும் முயற்சியின் போது
புது புது சண்டைகள் பிறக்கிறது
பழைய சண்டைகள் மறைகிறது
இனி நமக்குள் சண்டையே வராது
என முடிவு எடுத்து
உடனே இன்னொரு சண்டையிட்டு
சமாதானமாவதில் தான்
காதலின் அழகியல் புதைந்திருக்கிறது

இது எல்லாம் நேரில் சொல்லாமல்
ஐயா Letterல தான் சொல்லுவீங்களோ?  என்று 
இதற்கும் சண்டை தான் போடுவாய் என்னிடம்
Achachooooo சண்டையிட்டு பல நாளாகுதே
அட வாடி சண்டை போடுவோம் என் கிறுக்கி ! 
                                                                                - கிறுக்கன்
« Last Edit: September 17, 2024, 01:25:21 PM by சாக்ரடீஸ் »

Offline Liar

என்னை பிரிந்த காதலிக்கு எழுத்தும் கடிதம்

ஏதோ ஒரு ஊரில் பிறந்தோம்..
நன்பர்கள் கூட விளையாடி மகிழ்ந்தேன்
 நீ என் வாழ்வில் வருமுன் ...
அது வரை நான் ஒரு சின்னப் பையன் தான்.

சிறுபையனாக இருந் என்னை
புது மனிதனாகியவள் நீ,   அது
எனக்கு ஒரு உத்வேகம் கொடுத்தது
உன்   அரவணைப்பு எனது பலமானது...

பொறுமையாக இருப்பது , எப்படி!
காதலை வெளிப்படுத்தவது எப்படி!
எப்படி பாட வேண்டும்!
எப்படி கவிதை எழுத வேண்டும்!
என்று கற்றுக் கொடுத்தவழும் நீ ..
எனக்குள் என்னென்ன திறமைகள் இருக்கின்றன
என்பதை நீ எனக்குக் காட்டினாய்....

இத்தனை  செய்த நீ இப்போது என்னுடன் இல்லை,
அது என் முழு வாழ்க்கையையும் காயப்படுத்துகிறது.
காரணமே இல்லாம ஏன் என்னை விட்டுட்டு போனாயோ
இன்றுவரை விளக்கமில்லா கேள்வி எனக்குள் ..

உன் நினைவோடு  கவிதைகள் எழுதுகிறேன்
 எல்லா பாடல்களையும் கேட்கவும் தவறவில்லை
ஆனால்  நீ இல்லாமல் நான் நானாக இல்லை
என் உயிர்  இருக்கும்வரை   உன் நினைவுகள் வாழும் .

நான் தினமும்  உனக்கெழுதும்  மின்னஞ்சல் கடிதங்கள்
எங்குதான்  செல்கின்றனவோ தெரியவில்லை 
உன்னிடமிருந்து  இதுவரை பதில் காணாமல்
சிலவேளைகளில்  நான் துடித்துப்போகிறேன் 

அன்பு  ஒரு மனிதனை  அடிமையாக்கும் 
முடியாதவற்றைக்கூட   நிறைவேற்றச்செய்யும் 
என்னை  புது மனிதனாகிய  என் தேவதையே 
இந்த கடிதத்திற்கு  பதில் எழுத்துவாயா

Offline SweeTie

  நெடுநாளாய்  என் மனதில் ஓர் ஆசை
உனக்கு ஒரு   காதல் மடல் வரையவேண்டுமென
என் உள்ளத்தில் இருப்பதை  உன்னிடம் 
ஒன்றுவிடாமல் கொட்டிவிடவேண்டுமென   

குறும்செய்தி  அனுப்பும் காலம்தான்  இது
ஆனாலும்  காதலை மடலில்  கவிதைவரிகளில்
தேன் சிந்தும்  மதுரத் தமிழில்  சொல்வதில்
எத்தனை மகிழ்ச்சி 

காதலில்  பேச வார்த்தைகள்   இல்லை  அல்லவா?
கண்கள் மட்டுமே  பேசும்  இதயங்கள் இடம் மாறும்
கனவுகளில்  கைகோர்த்து   உலாவரும் நீயும் நானும்
அதிகம் பேசிக்கொள்வதே  இல்லை , பேசினால்
நமக்குள்   சண்டை  வாரும்  என்பதால்

ரோஜா மலர்களை   பார்க்கையில்   
என் நினைவுகள்  சிறகடித்து பறக்கிறதே
அன்று நீ கொடுத்த ரோஜாக்கள்   இன்னும் 
இதழ்கள் உதிர்ந்து  என் புத்தகங்களிடையே
நம் காதலின் வாசனையை  உணரவைக்கும்

காதலை கவிதையில்  சொல்ல  களவாடவேண்டும் 
கவிஞனின்  அகராதியில் சில வரிகள் 
அன்பே  என்றாலும்  அழகனே என்றாலும்  போதாது
கள்வனே  என்பதற்கு  ஈடாக  ஏதுமில்லை 
என் இதயத்தை  திருடியவன்  அல்லவா நீ ?

லைலா மஜ்னு  போல்  காவிய காதல் இல்லைதான்
காலத்தால்    கதைப்பேச  நம் காதல் 
2கே  கிட்ஸ்  போல்  அடிக்கடி  பிரேக் அப்  கூட
சொல்லாத  காதல் நம் காதல் 
இதயங்கள் மட்டுமே  இடம்மாறி
நம்மை நாமே  புரிந்த காதல்  இது.

அக்கரையில்  நீ இருந்தும்
இக்கரையில் நானிலருந்தும்
எக்கரையும்  இல்லாமல்  இனிதுவக்கும்
என்றென்றும்   உயிர் வாழும்  நம் காதல்
இனியவளாய்  என்றும் உன்னுடன் 


 

Offline Thooriga

என்னை கொள்ளை கொண்ட என்னவனுக்கு எழுதும் கடிதம்..


அதிகம் பேசவில்லை , அதிகம் உன்னுடன் இருந்ததும் இல்லை ,
இருந்தும் உன்னை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறது என் மனம்

நீ வந்த அந்த நிமிடம் , என்னுள் தோன்றிய மாற்றங்களுக்கு வார்த்தைகள் இல்லை
உன்னை விட்டு விலக மனமின்றி உன்னை மட்டுமே சூழ்ந்துந்துகொண்டது
 உன் மீதான என் நினைவுகள்

யாரிடம் கேட்பேன் உன்னைப்பற்றி கேட்கத்தான் முடியுமா
காத்திருந்தேன் உன் வருகைக்காக உன் நினைவுகளை சுமந்து கொண்டு


ஏனோ என்னை ஏமாற்ற உனக்கு தோன்றவில்லை
பாலைவனத்து சாரல் மழையென வந்தாயடா என்னைத்தேடி

உன்னுடன் பேச வேண்டும் என்ற ஆவலை என்னவென்று சொல்ல
ஒரு நொடி தாமதிக்கவில்லை
ஓடி வந்தேன் உன்னிடம்

ஏனோ எனக்குள் இருந்த அந்தத்தவிப்பை அறிந்தவனாய்
சிறிதும் யோசிக்காமல் என்னை அரவணைத்த உன் அன்பை
அந்த அழகிய தருணத்தை என்னவென்று சொல்வேன்
இருந்தும் போதவில்லை என்னுடன் நீ இருந்த அந்த நிமிடங்கள்
எங்கே மீண்டும் உன்னை தொலைத்துவிடுவேனோ என்று
ஏக்கம் என்னை கொன்றுகொண்டே இருந்தது

எப்படி சொல்வேன்
உன்னை என்னிடம் முழுவதுமாய் தொலைத்து விட்டேன் என்று
எப்படி சொல்வேன்
என்னை ஒரு நொடி கூட விலகிச்செல்லாதே என்று

நாட்கள் செல்லச்செல்ல உன் மேலான ஆவல் கூடியதே தவிர குறையவே இல்லை
என்னுள் தோன்றிய உணர்வு உன்னிடமும் தோன்றியதோ என்னவோ
என்னை ரசிக்கத்தொடங்கிய ரசிகனாய்
என்னை திருடிய என்னவனாய் மாறிப்போனாய்

என் வளையோசயும் கொலுசொலியும் காத்துக்கொண்டு இருக்கின்றன
என்னைப்போலவே என்னவனின் வருகைக்காக
உன் மேல் கொண்ட என் ஆவல்
தவிப்பாக மாறுவதற்குள் வந்து விடு என்னிடம்..

என்றும் உன் நினைவுகளோடு
நான்


« Last Edit: September 19, 2024, 03:05:57 PM by Thooriga »

Offline Vethanisha


இனிய நண்பா❤️

உனக்கான கடிதம்
இதில்
எனக்கான சத்தியம்

நலம் விசாரிக்க அருகில் நீ
 இல்லை என்னுடன்
அந்த இறைவனும் கொண்டான்
 அதீத பாசம் உன்னுடன்
அவனருகில் நீ அமர்ந்தாய் அன்புடன்
என்று வந்து தீர்ப்போம் நீ தந்த அன்பு கடன்

இன்றும் சந்தித்தோம் 
நண்பர்கள் நாங்கள்
அன்று ஐவராய்
இன்று நால்வராய்
உன் இருக்கை மட்டும்
அருகில் வெறுமையாய் 😌

நம் ஐவரில் அதிக
படித்தவனும் நீதான்
அழகனும் நீதான்
அன்பாளனும் நீதான்
பண்பாளனும் நீதான்
இப்பொழுது
அதிக
அவசரக்காரனும் நீதான்

அன்பு நண்பா ❤️

பிரிவொன்றும் புதிதல்ல எனக்கு
இருந்தும் உன் மறைவு இன்றும்
விளங்க வில்லை எனக்கு
அன்று போலி கோபத்தில்
அதுவே உன் இறுதி அழைப்பு
என்று அறியாத மக்கு

இறுதியாய்  'பேச மாட்டாயா'
என  நீ அனுப்பிய குரல் பதிவு
இன்றும் கேட்கும் போது
 சுக்குநூறாய் உடையது மனசு
புறக்கணித்தற்கு கேட்கிறேன்
மீண்டும் மீண்டும்  மன்னிப்பு 
(மன்னிப்பாயா நண்பனே)

என்னவென்று எழுத நண்பா
பதினைந்து வருட கால நட்பு
இன்ப துன்பம் கண்டோம் நாம் ஒன்றாய்
இக்கடிதம் எழுதும் நேரம்
விழியோரம் வழியும் கண்ணீரை
 துடைத்து கொண்டேன் பாரமாய்
நான் வாழும் காலம்  வரை
நம் நட்பு என்றும் பொக்கிஷமாய் 
நம் இனிய நினைவுகளை அசை போட்டு
 சிரிக்க முயல்கிறேன் நிதானமாய்

அமைதிகொள் அங்கு
இனி என்றும்  உன்(நம்) குடும்பமும்
எங்கள் உறவாய்  சத்தியமாய்


என்றும் உன் நினைவோடு
அன்பு தோழி ❤️


வேதனிஷா .MB 😇





Offline RajKumar

என் எண்ணங்களை எழுத நினைக்கிறேன் மடலாக
உன் மதிமுகத்தினை நினைவுக்கொள்ள
 பால் போல நிறம் கொண்ட வெண் உள்ளம் அறிய வரைக்கிறேன் மடலாக
ரோஜா மலர் போல உள்ள உன் மென் உள்ளத்தை என் வழி வசப்படுத்த
என் கையால் உன் அன்பை அறிய எழுதுகிறேன் மாடலாக
உன் அன்பை பெற பல வழிகள் இருந்தாலும் அதை அனைத்தயும் புறக்கணித்து மடல் வழி நாம் அன்பை பாறிமாற
உன் இதயத்தில் என் நினைவுகளை எழுதுக்கிறேன் மாடலாக
பகல் இரவு பாராமல் பேசிய நாம் பாசப்  பேச்சினை
இக் கரையில் இருந்து வரைக்கிறேன் மாடலாக
நான் அங்கே நீ இங்கே என் கவலையில் உலவ   அக்கரையில் உன் உள்ள அலைக்களை இக்கரையில் நான் அறிய ஆவலாய்
உன் வரவை எதிர்பார்த்து காத்து வரைக்கிறேன் மாடல் வழி
என்னை நீண்ட நாள் தூரத்திய காந்த கண் அழகியே உன் நினைவுயை சுமக்கிறேன் சுகமாக நீ அருகில் இல்லாத இத்தருணத்தை எண்ணி
தனிமையில் தவிக்கிறேன்
அருகில் இருந்தால் அணைத்து மகிழ்ந்து இருப்பேன் தொலைவில் இருப்பதால் நினைத்து மகிழ்கிறேன்
இம்மாடல் கண்டவுடன் நீ வந்ததை அறியாமல்  உன்னை காண காத்திருக்கிறேன் வா அன்பு பால் நிலவே நிலவே

Offline Ishaa

என் அன்புள்ள வருங்கால ஊட்டுக்காரரே 🥰

எங்க இருக்கீங்க? 🧐

எப்படி இருக்கீங்க?

என்னை இன்னும் கண்டு பிடிக்காம சந்தோஷமா இருப்பிங்க என்று நினைக்குறேன்.

உங்கள நான் தேடி தேடி ஓடா தேஞ்சு போயிட்டேன்.🤕

உண்மை காதல் என்று நினைச்சு ஏமாந்தும் போயிருக்கேன். 💔

ஆக இனிமேல் உங்கள தேட போறது இல்லை 
என்று முடிவு எடுத்து இருக்கேன்.
நீங்க தான் என்னைய தேடி கண்டு பிடிக்கணும்!

எங்கேயோ பிறந்து வாழறீங்க
ஆனா
கடவுள் தான் உங்கள இன்னும் என் கண்ணுல காமிக்கல.

என் காதலை இனிமேல் உங்களுக்காக சேமிச்சு வெச்சு இருக்கப்போறேன். ❤️

என் ஆசைகளை எல்லாம் உங்க கூட நிறைவேர்த்த காத்திருக்குறேன். ❤️

உங்கள் கைகளால் என் நெற்றியில் குங்குமம் சூட காத்திருக்குறேன். ❤️

நீங்கள் கட்டும் தாலியை என் வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சோடு தாங்கிக்கொள்வேன். 🥰❤️

நீங்க கண்டு பிடிக்கும் வரைக்கும்
சில நாட்கள் வேகமாகவும்.
சில நாட்கள் மெதுவாகவும்.
சில நாட்கள் சந்தோசமாகவும்.
சில நாட்கள் சோகமாகவும்.

வாழ்ந்து வருகிறேன்.

எனவே நேரம் தாழ்த்தாமல் சீக்கிரமா என் வாழ்க்கையில entry குடுங்க.
I am waiting! 😇

உங்களை காணும் வரை நாட்களை எண்ணிக்கொண்டே வாழும்

உங்க வருங்கால மனைவி ❤️

« Last Edit: September 17, 2024, 01:31:51 AM by Ishaa »

Offline Vallavan

Ennavale en manam unaku puriya villaya ilai purindhum puriyathu pol nadikiraya ne en mandhirikul azhamai irangi vittai unai endrum kappen ennavale ne epothu ennidam solvai nam kadhalai endru thavikirathu thinamnum en idhayakuttil irukkum ilavarasiye nam kadhal indha ulagathil innoru adhisayamai irukka vendum yarum pathiratha yarum kettirutha kadhalai nam kadhal irukka vendum en anbe ennavale neyum nanum oru nal oru iravu amathiyai irukkum vithiyil naam kai korthu ne en thol meethu sayndhu sellum bothu UN asaikalai ennidam solla athai nan ketka un asaigal ovondrai niraiventruvenadii en kanmaniyeee ne ennul vazha nan unnul vazha nam kadhal indha ulagathil uyir vazhume en idhayaraniyeee ❤️❤️❤️

Offline Kavii

என் அன்புள்ள அம்மாவுக்கு! உன் அன்பு மகள் கவியின் காணிக்கை மடல் !

அன்பின் வடிவே, தாயே, உன்னைப் போல வாழ என்னால் முடியாது,
ஆனால் உன்னுடைய தியாகத்தை நான் என்றும் மறவமாட்டேன்.
இந்த கவிதை உனக்கானது – உன் அன்பின் நினைவாக, உன் அருமையின் அடையாளமாக.!

அம்மா ! இன்றும் நான் உனக்கு குழந்தைதான்! என்
கைகளைப் பற்றி  நடக்கக் கற்றுக்கொடுத்த என் அன்பு தாயே !
உன்னிடம் நான் நிம்மதியாய் இருக்கிறேன்!
உன் கரங்களில் மழலையாய் சிரிக்கிறேன்!
உன் இதயத்தில் எப்போதும் எனக்கே முதல் இடம்,
உன் வாழ்வில் நான் தான் முதன்மை! எனக்கே முதல் உரிமை !

என் தவறுகளை மறந்து மன்னிக்கும் முதல் ஆன்மா நீயே !
உனக்கு  மூன்று குழந்தைகள் என்றாலும்,
உன் விழிகளின் கவனம் என்மேல் சற்று அதிகமே !
நான் சோர்ந்த போதெல்லாம் உன் கரம் மட்டுமே என்னை காத்தது.
உன் இதயம் என்னை தழுவியதுமே, எந்த பிரிவும் எந்த துயரும்
என்னை சோர்ந்து போக செய்யவில்லை !

என் அன்பு தாயே ! நீ எனக்கு மட்டும் தாயல்ல
நான் பெற்ற பிள்ளைகளுக்கும் நீ தான் தாயாக இருக்கிறாய் !
பெற்ற என்னை விட உன்னையே தேடுகின்ற அளவிற்கு
உனது அன்பை கொடுக்கிறாய் ! உன் வெள்ளை மனம்,
என் எல்லா கவலைகளையும் மறக்க செய்யும் !
உன்னைப்போல் இல்லை யாரும் இவ்வுலகில்!
உன்னைத் தவிர யாரும் என்னை புரிந்தவரும் இல்லை !

என் வாழ்வு கசந்தாலும், உன் அன்பு இனிப்பாய் இருந்தது,
என் வாழ்வின் சிறந்த பரிசு, உன்னைப்போல் மகாதேவியை நான் தாயாக  பெற்றதுதான்! உன் தாய்மையின் வெளிச்சத்தில்
நான்,என்றும் இளமையாகவே இருப்பேன்,
உன் மூச்சில் நான் உயிர் வாழ்ந்தாலும்,
உன் கரம் என்னை நிம்மதியாய் நடத்தும்!
எனக்காக துணை நிற்கிறாய்! எனக்காக எல்லோரிடமும் பரிந்து பேசுகிறாய் ! என் சந்தோஷமே உனது சந்தோஷமாய் எண்ணுகிறாய் ! உனக்காக நீ எதுவும் கேட்டதில்லை கடவுளிடம் !
எனக்காக மட்டுமே வேண்டுகிறாய்!
உனக்காக எதுவும் ஆசைபட்டதில்லை இதுவரை !
என் ஆசையை நிறைவேற்ற போராடுகிறாய் !

அம்மா! அன்பின் திரு உருவம் நீ ! எத்துணை கவலைகள் இருந்தாலும் உன் மடியில் தலை சாய்க்கும்போது எல்லாம் பறந்து போகும் !
வருடும் உன் கரங்கள் எனது தன்னம்பிக்கையின் ஆயுதம்!
நீ இல்லை என்றால் நான் வெற்று காகிதம் !
உன் சுவாசம் எனது சுவாசம், உன் புன்னகை எனது சிரிப்பு,
உன் கரம் எனது காப்பு! உன் இதயம் எனது வீடு!

தாயே, உன்னைவிட பெரிய வரம் இல்லை! எனக்கு தேவையும் இல்லை !
உன்னைப்போல் வேறு  ஒரு தெய்வமும் இங்கு இல்லை!
நீயே எனது உயிர்! நீயே எனது வெளிச்சம் !
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்
நான் உன்னை எனது மகளாக சுமக்க வேண்டும் !
இந்த ஜென்மத்தில் நான் பட்ட கடன் தீர்க்க வேண்டும் என் அன்பு தாயே!



Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 224
  • Total likes: 546
  • Total likes: 546
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
❤️எழுத்தாளன் ❤️

கனவுகளின் பிறப்பிடம் எதுவோ! எழுத்தாளனின் இருப்பிடம் அதுவே!!

பார்வைக்கு சரியாக தெரிந்த சில, சிந்தைக்கு தவறாக சென்றடைய வாய்ப்புகள் உண்டு.

அதனால் தான் ஏனோ, எழுத்தாளன் தன் கற்பனைகளையே அதிகம் கவிப்பாட விரும்புகிறான்.

எழுத்தாளனின் எண்ணங்களில் இருப்பது ஏராளம்,  அவை அனைத்தும் எழுத்துக்களில் வெளிப்படுவதில்லை.

மாறாக  அவன் எண்ணங்களில் இருக்கும் சிறு நினைவுகள் மட்டுமே எழுத்துக்களில் உருவகப்படுகிறது.

அணைத்து மக்களின் உள்ளங்களையும் உணர்ந்து உணர்வுகளை உருவகப்படுத்தும் அவனால்,   

ஏனோ  அவனின் உள்ளத்தை  அவனால் முழுமையாக உணரவோ, உருவகப்படுத்தவோ முடிவதில்லை. 

கனவுகளை சுமந்த இதயத்துடன், கவலையுடன் கூடிய கானல் நீரான பயணத்தில் இவன்..

எதுவான போதிலும், எழுத்தாளன் சுயசிந்தனையாளனே.....
MN-AHAMED AARON........