இந்த வாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் நான் தேர்வு செய்த திரைப்படம் இயக்குனர் அட்லீ இயக்கி , AR ரஹ்மான் அவர்கள் இசையமைப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம்
இந்த திரைப்படத்தில் எல்லா பாடல்களுக்கும் இசைக்கோர்வை மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கும்.
நீதானே நீதானே .....
மாச்சோ என்னாச்சோ ,,,
மெர்சல் அரசன் ....... என தொடங்கும் பாடல்கள் அனைத்தும் கேட்டு ரசிக்கும் படியாக அமைக்கப்பட்டு இருக்கும்..
இருந்தாலும் ஒரு பாடலை கேட்கும் பொழுது ...'தமிழன் என்ற உணர்வை' கர்வத்துடனும் .... மகிழ்ச்சியுடனும் ..உணர முடிகின்றது என்றால் அது 'ஆளப்போறான் தமிழன்' என தொடங்கும் பாடல் என்றால் அது மிகையாகாது..இதன் பாடல் வரிகள் அவ்வளவு உணர்வுபூர்வமான இருக்கும்.
இந்த பாடலை AR ரஹ்மான் அவர்களின் இசையை ரசிக்கும் எல்லாருக்காகவும் விரும்பி கேட்கிறேன்.