நம்ம பாய் கடை பிரியாணி ..
பதமான பாசுமதியை பக்குவமா அலசிவிட்டு
பதினைந்து நிமிடங்கள் வெறும்நீரில் ஊறவிட்டு
கனமான குக்கரில் 100 மில்லி எண்ணெய் ஊத்தி
கருகாத வண்ணம் கறுவா பட்டை, பிரியாணி இலை தாளித்து
நறுக்கிய வெங்காயமும் தக்காளியும் சேர்த்திட்டு வதக்கிவிட
நான்கரைத்த இஞ்சி பூண்டும் பச்சை வாசனை இன்றி சேர்த்து வதங்க
கல்லுப்பும் தனி மிளகாய்த்தூளும் சுவைக்கேற்ப சேர்த்து விட்டு
கழுவிய இளம் கறியிட்டு கபக்கென்று மூடி வைக்க
விசில் சத்தம் காது பிளக்கும்.. கறி வாசம் ஊர் அழைக்கும் ....
வேகவைத்த கறியினிலே அரிசியினை கலந்து வைக்க..
இருபது நிமிடம் தம் போட்டால் தயாராகும் மட்டன் பிரியாணி ..
தலைவாழை இலை போட்டு நட்புக்கெல்லாம் விருந்து வைப்போம்..
தலை கறியும் சேர்த்து போட்ட கூட 4 வாய் சேர்த்து அடிப்போம்..
ஆசையோடு அள்ளி வச்சா சுவையரும்பும் நடனமிடும்..
அள்ளி வச்சா கையில ரா தாண்டியும் வாசம் வீசும்..
சாதி மத பேதமின்றி சனத்துக்கெல்லாம் அபிமானி..
காலம் பல கடந்தாலும் மார்க்கெட் இறங்காத ஒரே விஷயம் நம்ம பிரியாணி ...😍😍
Dedicated to Biriyaani lovers