கூட்டு குடும்பம் ஒரு கோவில்!!!
கூடு --- சேறு என்ற பொருள் தரும்...❤
குடு --- தா என்ற பொருள் தரும்... ❤
கதம்பம் --- இன்பம் கலந்த கலவை... வாசனை மிகு வஸ்துக்கள் சேர்த்த கலவையே... ❤
ஆக, கூடு... குடு... கதம்பம்... இவை யாவும் சேர்ந்தால் தான் "கூட்டு குடும்பம்" எனும் பேரின்பம் பெற்றுத்தரும் பொருள் கிடைக்கும்....❤ நம்மில், உள்ள அன்பை கூட்டிக்கொண்டே இருக்கவே நாம் கூட்டுக்குடும்பமாக இருக்க விரும்புகின்றோம்... ❤
அது என்ன அன்பை கூட்டுகிறதா...?? 🤔🤔🤔 கூட்டு அன்பை --->> சிட்டுக்குருவி, ஒன்று தன் கூட்டில் இருக்கும் குஞ்சுகளுக்கு தான் சுமந்து வந்த உணவுகளோடு இன்பமாக பகிர்ந்து அன்பாக பரிமாறி பாசத்தையும் நேசத்தையும் நிறைந்த பற்றுடன் அரவணைப்பையும் கலந்து அன்பை ஊட்டி வளர்க்கிறது... ❤
அச்சிட்டுக்குருவி, போலவே நாமும் நம் வாழ்வில் கூடி வாழ்ந்து தன்னலமில்லா அன்பை பகிரவே நாட வேண்டும் கூட்டின் குடும்பத்தை....! ❤😍
எத்தனையோ, சண்டைகள், மன கசப்புகள், பொறாமைகள், ஏற்றத்தாழ்வுகள், அதிகாரங்கள், அவ சொற்கள், அவமானங்கள் வந்தாலும் அவை எதையும் பொருட்படுத்தாமல் [color=green]கூடி வாழ்வதே கோடி நன்மையை நல்கிடும்...!! ❤😍[/color]
அகநானூறு, புறநானூறு, தொல்காப்பிய காலங்களில் துவங்கி இன்று வரை பயணிக்கும் ஓரபற்பல உறவுகளின் கூட்டமைபே... கூட்டு குடும்பம்...! ❤
கூடு ---- நீ நீண்ட காலங்களா நீயாய் மட்டுமில்லாமல் சேயாய் மாற நாடு கூட்டு அன்பை கொடுக்கும் குடும்பத்தை....!❤😍
கூடு ---- நீ நீண்ட காலங்களா தாயாய் மட்டுமில்லாமல் ஓர் குடும்பத்தின் ஆணி வேறாக மாற நாடு கூட்டு அன்பை கொடுக்கும் குடும்பத்தை...!❤😍
கூடு ---- நீ நீண்ட காலங்களா தந்தையாய் மட்டும் அல்லாமல் ஓர் குடும்பத்தின் சர்வமுமாய் மாற நாடு கூட்டு அன்பை கொடுக்கும் குடும்பத்தை...!❤😍
ஊர் கூடி தேரை இழுக்க வேண்டும் என்பர் பழமொழியில் --- ஊர் என்பது அக்காலங்களில், கூட்டு குடும்பமாக கோடி கணக்கில் என்றும் பிரியாமல் ஒற்றுமையாக இருக்கும் உறவுகளே...!
ஆனால், இன்றோ கூட்டம் மட்டுமே இருக்கின்றது.... கூடுமில்லை... யாரும் கூடவுமில்லை... கூட்டு குடும்பமுமில்லை...!!! ❤ அந்தோ, பரிதாபம்... 😒❤
தனி மரம் தோப்பாக மாறாது என்பதற்கு மிகவும் சால சிறந்த எடுத்துக்காட்டு இந்த சம்பவம்...! ❤😍 என்னதான், தென்னைமரம் தனக்குள்ளே என்னற்ற பலன்களை கொண்டிருந்தாலும் தனியாகவே தான் வளர்கிறது, தனியாகவே தான் மடிகிறது...
ஆனால், வாழை மரமோ... கூடியே வளர்கிறது... தான் மடிந்தாலும் தனக்கு கீழே ஓர் கன்றான சந்திதியை உருவாக்கி செல்கிறது....!❤😍
இதிலிருந்து, என்ன பொருள் நாம் தென்னையை போல் தனித்து அல்லாமல் வாழையை போல் வாழ்வாங்கு வாழ கூட்டிட்டு குடும்பமாக வாழ வேண்டும் நம் அளவில்லா அன்பை நம் உறவுகளோடு பகிர வேண்டும்...! ❤😊
குடும்பம் என்பது ஒரு பேரின்பம் தரும் பொக்கிஷம்...
கூட்டு குடும்பம் என்பது ஒரு கோவில்...
அங்கே, மூலவராக குடும்ப தலைவரோ, தலைவியோ பொறுப்பை எடுத்து கொள்கின்றனர்...
உற்சவர்களாக, பேரன்கள் , பேத்திகள் யாவரும் உள்ளனர்...
பரிவராங்காளாக ---> மகன்கள், மகள்கள், அவரது உறவுகள் என்று யாவரும் உள்ளனர்...
திசை தெய்வங்களாக --> பெரியப்பா, சித்தப்பா, மாமா, மாப்பிள்ளை, மைத்துனர் என்கிற உறவுகள் அமைகின்றனர்...
காவல் தெய்வங்களாக ---> நம் முன்னோர்கள் திகழ்கிறார்கள்...
துவார பாலாகர்களாக ---> அன்பும், அளவில்லா மகிழ்ச்சியும், குடும்பத்தின் ஒற்றுமையும், பொறுமையுடன் கூடிய நிதானமும் அக்கூட்டு குடும்பத்தை காத்து ரக்ஷிக்கிறது...! ❤😍
ஆக, ஒற்றுமையின் பிம்பமாக விளங்கும் கூட்டு குடும்பத்தை நாடுவோம்... ஒரு கூட்டு கிளியாக ஒரு கூட்டு குயிலாக நாமும் கூட்டில் கூட்டிட்டு இன்பம் என்னும் அமுதை கூட்டி கொண்டே கூடாய் வாழ்வோம் வாருங்கள்...!!🙏❤