Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 352  (Read 2757 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 352

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


[/color][/b]

Offline Mr.BeaN

காலையில் வெயிலடிக்க
கால் ரெண்டும் தான் நடக்க
போகிற வலியினிலே
சோளக்கதிர் கிடக்க
கதிரினை கண்ட ஒரு
காகமும் கரைந்திடையில்
காகத்தின் சொந்தமெல்லம்
கூடியே உண்ணுதைய்யா

அந்த நொடியினிலே
நானும் கண்ட அக்காட்சி
எந்தன் மனதினுள்ளே
ஏக்கத்தை ஊட்டியதே
எத்தனை சொந்தங்கள்
எனக்கும் உண்டெனினும்
எல்லாம் வேறிடத்தில்
எதை தேடி போயினரோ

தீபாவளி பொங்கல்
திருநாள் என்றேதான்
கூடும் அவர்களுமே
கலைந்து செல்கையிலே
ஏனோ எனக்குள்ளும்
இடிகள் இடித்துவிட
கண்கள் ரெண்டுமிங்கே
கனமழை பொழிகிறதே

தேடி கிடைக்காத
இன்பம் தொலைத்து விட்டு
எதையோ தேடி நாம்
ஏன்தான் திரிகின்றோம்
கூடி வாழ்வதிலே
கோடி நன்மைகளை
காண மறந்துவிட்டு
கண்மூடி அலைகின்றோம்

தேனி கண்டே நாம்
தேடல் கொண்டே தான்
தூரம் பல கடந்து
நீங்கி செல்கின்றோம்
இறுதியில் தேனியுமே
கூட்டில் சேர்ந்துவிடும்
என்ற உண்மையினை
நாமும் மறக்கின்றோம்

தீரா தேடல் தான்
கொண்டே வாழும் நாம்
ஆறா கவலைகக்கு
அறுமருந்து இவ்வுலகில்
வேறாய் தாங்குகிற
உறவுகளே என உணர்ந்து
வாழ்வோம் ஒன்றாக
வாழ்வை நன்றாக❤️

« Last Edit: August 26, 2024, 07:19:22 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline KS Saravanan

கூட்டு குடும்பம்..!

வீடு என்னும் கூட்டிலே
பாடி திரியும்
பாச பறவைகள்..!
ஒரே அடுப்பில் சமைத்தாலும்
அன்பு என்றும்
பொங்கலாய் பொங்கிடுமே..!

சின்ன சின்ன குறும்புகள்
அம்மாவை பாடாய் படுத்திடுமே
கண்டிப்பான அப்பாவோ
சாயங்காலம் வந்து திட்டிடுவார்
பாசம் கொண்ட அக்காவோ
பழியை தன மேல் ஏற்றிடுவார்
குட்டி தேவதை தங்கையோ
ஓடி எங்கோ ஒளிந்திடுவார்..!

உரிமை கொண்ட மாமாவோ
மச்சானை அதட்டி பேசிடுவார்..!
எங்கோ இருந்த அத்தையோ
அப்பாவுக்கு சாதகமாக இருந்திடுவார்..!
வேலையில் சேந்த சித்தப்பாவோ
புது பொம்மைகளை வாங்கி தந்திடுவார்..!
ஐஸ் வண்டி வந்தாலே
தாத்தாவிடம் ஓடிருவோம்
காசு வாங்கி தந்துட்டு
ஐஸ் ஆஹ் உருக்கி சாப்பிடுவோம்..!
பஞ்சி மிட்டாய் வாங்கினாலும்
பாசமாய் நாங்க பகிர்ந்திடுவோம்..!

புத்தகம் படிக்கும் பாட்டியோ
குற்றம் குறைகள சொல்லிடுவார்
படிக்கச் சொல்லி எங்களையும்
ஓர கண்ணால் பார்த்திடுவார்..!
Tuition எல்லாம் போகாமலே
சித்தியிடம் என்றும் பயின்றிடுவோம்..!

தீபாவளி பொங்கலோ
வீட்டில் இன்னும் சந்தோசமே..!
ஆடி பாடி மகிழ்ந்திடுவோம்
வர்ணஜாலம் பூசிடுவோம்..!
அறுசுவை உணவை செய்திடுவோம்
கடவுளுக்கு நன்றியை சொல்லிடுவோம்..!
சொர்கம் எனும் வீட்டினிலே
சொந்தங்களுடன் இணைந்திருப்போம்..!
ஆடம்பரமே இல்லாம
அன்பாய் எங்கள் வீட்டினிலே
ஆலமரமாய் வாழ்ந்திடுவோம்..!
« Last Edit: August 27, 2024, 02:32:02 PM by KS Saravanan »

Offline Liar

அன்பான வார்த்தைகள்
அறிவுரையின் அச்சய பாத்திரம்
அக்கறையின் பிறப்பிடம்
ஒற்றுமையின் உறைவிடம்
ஒளிவில்லா உயர்வு வரும்...!

கலகலப்புகளும் உண்டு
சலசலப்புகளும் உண்டு
தினம் தினம் சந்தோஷம்
திடீரென வரும் கொண்டாட்டம்
என்றும் விலகாத உறவு...!

லவ் க்கு கூட எதிர்ப்பு இல்லை
லாவகமாய் புரிய வைக்கும்
மனதோடு கனவு உண்டு
மறக்காத காயங்கள் இல்லை
நீயா நானா விவாதம் இல்லை
நினைக்க கூட நேரமில்லை...!

சுகமற்ற நேரம் தாங்கும் கரங்கள் உண்டு
சுமையை தனியே தாங்கும் நிலையும் இல்லை
உரையாடல் உறவாடி கிடக்கும்
உயர்வாய் வாழ உழைப்பும் இருக்கும்
விசேஷமும் விழாவாகும்
விழாவும் வியந்து போகும்...!

வகைவகையாய் உணவுகள் பரிமாற
குறும்பு தானங்கள் நிறைந்திருக்க
உணவும் அதிகமாய் செல்லும்
உடனே பாராட்டும் கிடைக்கும்...!

வாசனை மலர்கள் மலர
அன்பு கரங்கள் தொடுக்க
நீ இரு நான் பார்த்துகிறேன் -என்கிற
வசனம் இல்லம் எங்கும் ஒளித்திடும்...!

துன்பங்கள் தூரத்தில் நிற்க
இன்பங்கள் இணைந்தே இருக்க
யாரையும் மதிக்கும் குணம் இருக்கும்
யாவரும் மதிக்கும் குணமும் இருக்கும்
இத்தனையும் அளித்திடும் சொர்க்கம் – இதை
அறிந்தவர் இணைந்ததே இருப்பர்
அறியாதவர் விலகி இருப்பர்…!

ஆனந்தமாக வாழ்க்கை வாழ
ஆடம்பரம் தேவை இல்லை
அன்பானவர்கள் நம்முடன்
இருந்தாலே போதும்.(FTC nanbargal pol)

LIAR

Offline Kavii

கூட்டுக் குடும்பம் - பாசத்தின் பின்னலாலான கூடு!
குடும்பம் என்னும் கூட்டுக்குள்
பாசம் என்னும் பறவைகள் கீச்சிடும் கூடி வாழும் கூட்டம் அது,

உறவுகள்யின்றி உயிர்கள் இவ்வுலகில் தோன்றாதோ!  ஏனோ
உறவுக்குள் மறைந்துயிருப்பது குடும்பம் தான்னோ!

அன்பு காட்ட அன்னையும், பாசம் காட்ட அப்பாவும்,
சண்டையிட தங்கையும், விளையாடுவதற்கு தம்பியும்,
பாதுகாக்க அண்ணனும், உதவிக்கு அக்காவும்,
கண்டிப்பதற்கு சித்தப்பாவும். அதட்டுவதற்கு பெரியப்பாவும்,
நிழல் போல இருக்கும் மாமாவும் கண் போல காக்கும் அத்தையும்
தோள் கொடுக்க சின்னம்மாவும், அரவணைக்க அண்ணியும்,
அக்கறை காட்ட பெரியம்மாவும், கதை சொல்ல காத்திருக்கும் பாட்டியும்,
பாசம் காட்ட காத்திருக்கும் தாத்தாவும்
என உறவுகள் கிடைப்பதெல்லாம் ஒரு வரம்,
அப்படிப்பட்ட உறவுகளோடு இணைந்து அன்பால்
பிணைந்து வாழும் கூட்டுக்கூடும்பம் பூமியில் காணும் சொர்க்கம் .

ஆயிரம் கோபங்களும் ஆயிரம் சண்டைகளும் இருந்தாலும்
அடுத்த நொடியே அனுசரணையையும் அன்பையும்
வாரி வழங்கும் அகம்பாவம் இல்லா ஆலமரம் !
அறிவையும் ஆற்றலையும் உறவுகளிடமிருந்து கற்றுக்கொடுக்கும் போதிமரம் !

பல உறவுகளின்  பாசமும், நேசமும் ஒரு குடையினில் வாழும் ஆனந்தம் அது
தனிமை என்ற  எதிரி வெருண்டோடும்  இடம் அது !

செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பாராட்டும் சரி!
அறிவுரைகளும் சரி இரட்டிப்பு, அந்த வகையில் மகிழ்ச்சியும் இரட்டிப்பே!
அனைத்து நற்பண்புகளையும், பன்முக திறமையையும்
அணைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள கிடைத்த பொக்கிஷம் அது!
சிறியவர் பெரியவர் பாகுபாடின்றி அனைவரையும் மதிக்கவும் அவர்களின்
உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் மாண்பாய் அமைந்த மாசறு பாசறை அது !

குடும்ப சுமையை தனித்துச் சுமக்கவிடாமல் அனைத்து உறவுகளும்
விழுதுகளாய் தாங்கி சுமக்கும் வேரூன்றிய ஆலமரம் அது!

கூட்டுக்குடும்பங்கள் இருந்த போது குற்றங்கள் குறைந்திருந்தன!
நற்பண்புகள் நிறைந்திருந்தன!!

இன்று முன்னேற்றம் என்று நாம் தனி கூட்டில் தேடுகின்ற மதிப்பை
எத்தனை விலை கொடுத்தாலும்  பெற முடியாத அழகிய கூட்டு குடும்பம்  அது!

இன்று சுயநலம் என்கிற சூழ்ச்சி வலையால்
மதி கெட்டு பிரிந்து போகுது சில மனங்கள் தனியே!

எத்தனை மனங்கள் ஆறுதல் இன்றி அனாதையாய் அலையும் சோகங்கள்  இங்கே!
கூட்டு குடும்பத்தில் நிழலைத்  தொலைத்து தேடி அலையும் மனங்கள் கோடி!

குடும்பத்துக்காக ஓடுகிறோம் என்ற பெயரில்
குடும்பத்தை விட்டே ஓடிக்கொண்டிருக்கிறோம் !

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை போல 
இன்று வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல்
இணையமே கதி என்று இயந்திரத்தனமாக
இருப்பதைப் பார்க்கும்போது தான் நாம் இழந்தது எவ்வளவு!
எத்தனை பேரின் அரவணைப்பை இழந்துள்ளோம் என்று
எண்ணும் போதுதான் கூட்டு குடும்பத்தின் அருமையாய் உணர முடிகிறது.

கூட்டுக் குடும்பம் அன்று நிஜத்தில் !
இன்று வாட்ஸ் ஆப் குரூப் களில் மட்டுமே !

சுதந்திரம் என்கிற போர்வையை சுமந்து
நிம்மதியைத் தொலைத்து அலையும் மனங்களே !
விட்டுக்கொடுத்து கொடுத்து தான் சென்றால் என்ன !
நாம் யாரிடம் தோற்கிறோம் நாம் உறவுகளிடம் தானே !

பூமிக்கு வரும்போது நாம் எதையும் கொண்டு வருவதும் இல்லை !
கொண்டு போவதும் இல்லை! இருப்பது சில காலமே  ஒற்றுமையாய் வாழ்வோம் ! !

அன்பால் இணைந்து அன்பால் பிணைந்து
அன்போடு வளர்ந்து அன்பை எல்லாருக்கும் கொடுக்கும்
கூட்டுக்கூடும்பத்தின் அருமையை 
இனியாவது புரிந்து கூட்டுக்கூடும்பத்தில் இணைவோம்,
நமது விரிந்த குடும்பத்தின் பாரம்பரியத்தை பேணிகாப்போம்!

« Last Edit: August 29, 2024, 05:57:32 AM by Kavii »

Offline SweeTie

இம்மை மறுமை  இரண்டும் இணைந்தது
நன்மையையும்  தீமையும் ஒன்றாய்  நிறைந்தது
இன்பமும் துன்பமும்  இரண்டறக்  கலந்தது 
கோபமும் தாபமும்    சேர்ந்தது  இவ்வாழ்க்கை

கற்றுக்கொடுக்க  அப்பன் எனும்  ஆசான்
அன்புக்கு  இலக்கணம்   அம்மை   அவள்
உறவு சொல்லி  வளர்த்துடுவார் தாத்தா
உரிமையோடு அணைத்திடுவாள்    பாட்டி

சச்சரவுக்கும்  அங்கு குறைச்சல் இல்லை
சமரசத்துக்கும்  குறைவே  இல்லை 
பாசத்துக்கும்   நேசத்துக்கும்   பஞ்சமில்லை
வேஷங்கள்  போடுவாரும்  அங்கு  இல்லை

அன்போடு  சமைத்திடுவாள்    சிற்றன்னை
அதை  பரிவோடு பரிமாறும்  பெரியன்னை
பட்டாசு  போல் வெடிக்கும்   மாமா 
பழசெல்லாம் பேசி  போர் அடிப்பார்   அத்தை

சீமைக்கு போனாலும் கிடைக்காது
பணம்  மட்டும்  வாழ்க்கை ஆகாது
சொந்தங்கள் சூழ வாழ்கின்ற  வாழ்க்கை
சொர்க்கத்தை விடவும்  மேலாகும். 

விழுதுகள்  தாங்கி  நிற்கும் 
வியப்பூட்டும் ஆலமரம் 
ஒரு கூட்டு  பறவைகளை
ஒன்றிணைக்கும்  ஆலமரம்


 

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 224
  • Total likes: 546
  • Total likes: 546
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
ஆனந்தத்தின் காடு, அது! அன்று நாங்கள் குடி இருந்த வீடு.

குஞ்சுகள் இல்லாத குருவியின் கூடும், இளம் பிஞ்சுகள் இல்லாமல் வாழ்ந்துந்திடும் வீடும் ஏக்கத்தின் இருப்பிடமே.

வாழக்கை வாழ்வது ஒரு முறைதான் என்பினும், அதை வாழும் வழியில் உள்ளது வண்ணமயம்.

உணர்வாயோ உறவே! 

தட்டி கொடுக்க தாத்தணும், தவறை திருத்த பாட்டியும் இருப்பின், வாழ்கையில் இல்லை தவறுகளும், தடுமாற்றங்களும்.

உலகில் வாழும் அணைத்து ஜீவராசிங்களும், தன் இனத்துடன் இனைந்து வாழவே முற்படுகிறது, மனிதனை தவிர.

ஏன் இந்த நிலை?

மக்கள் மனம் மாறியதா? இல்லை மனிதாபிமானம் மாண்டதா?

கட்டு காட்டாய் பணக்குவியல் இருப்பினும், கட்டி தழுவ உறவுகள் இல்லையேல்!
வாழும் வாழ்க்கை சாபமே.

உன் உட்ல நலக்குறைவில் ஆயிரம் பேர் உடன் இருப்பினும், உள்ளம் உடன் பிறன்தாரையும், உறவுகளையுமே தேடும்.

மனிதன் நினைக்கின்றான் உறவுகளும், உணர்வுகளும் பாரம் என்று.

உணர்வாயோ மனிதா!  உன் உள்ளத்தின் ஆயுளும், ஆறுதலும் உறவுகள் மட்டுமே.

படைத்தவன்! படைப்பினத்தை தனித்து விட வில்லை அவர்தன் தலைமுறைகலோடே தஞ்சம் அடைய செய்தான்..

ஆடம்பரம் என்றென்றென்னி அறிவில்லாமல் அன்னை, தந்தயை தனித்து விட்டவன், நிச்சயம் இம்மையிலும், மறுமையிலும் தனித்து விடவே படுவான்.

உறவுகளே! உள்ளத்தின் ஆயுளும், படைத்த இறைவனின் பாச குவியலும்,
உறவை பேணுவதில் மட்டுமே.

தனித்து விடப்பட்ட உயிர்க்குக்கு தான் தெரியும், தனிமையின் வலியும், கூட்டு குடும்பத்தின் நல்வாழ்வு நிலையும்.

குடும்பம் என்பதன் பொருளே கூட்டமைப்பு தான்.

கூடி வாழ்வோம், குடும்பமாய் வாழ்வோம்.

வாழ்க்கை வாழத்தான்!, அதன் ஆனந்தம் கூடி வாழும் கூட்டில் தான்!!.

இப்படிக்கு

தனித்து விடப்பட்ட  தவிக்கும் பறவையாய்
MN-AHAMED AARON.....



Offline BlueSea

கூட்டு குடும்பம் ஒரு கோவில்!!!

கூடு --- சேறு என்ற பொருள் தரும்...❤
குடு  --- தா என்ற பொருள் தரும்... ❤
கதம்பம் --- இன்பம் கலந்த கலவை... வாசனை மிகு வஸ்துக்கள் சேர்த்த கலவையே... ❤

ஆக, கூடு... குடு... கதம்பம்... இவை யாவும் சேர்ந்தால் தான் "கூட்டு குடும்பம்"  எனும் பேரின்பம் பெற்றுத்தரும் பொருள் கிடைக்கும்....❤ நம்மில், உள்ள அன்பை கூட்டிக்கொண்டே இருக்கவே நாம் கூட்டுக்குடும்பமாக இருக்க விரும்புகின்றோம்... ❤

அது என்ன அன்பை கூட்டுகிறதா...?? 🤔🤔🤔 கூட்டு அன்பை --->> சிட்டுக்குருவி, ஒன்று தன் கூட்டில் இருக்கும் குஞ்சுகளுக்கு தான் சுமந்து வந்த உணவுகளோடு இன்பமாக பகிர்ந்து அன்பாக பரிமாறி பாசத்தையும் நேசத்தையும் நிறைந்த பற்றுடன் அரவணைப்பையும் கலந்து அன்பை ஊட்டி வளர்க்கிறது... ❤

அச்சிட்டுக்குருவி, போலவே நாமும் நம் வாழ்வில் கூடி வாழ்ந்து தன்னலமில்லா அன்பை பகிரவே நாட வேண்டும் கூட்டின் குடும்பத்தை....! ❤😍

எத்தனையோ, சண்டைகள், மன கசப்புகள், பொறாமைகள், ஏற்றத்தாழ்வுகள், அதிகாரங்கள், அவ சொற்கள், அவமானங்கள் வந்தாலும் அவை எதையும் பொருட்படுத்தாமல் [color=green]கூடி வாழ்வதே கோடி நன்மையை நல்கிடும்...!! ❤😍[/color]

அகநானூறு, புறநானூறு, தொல்காப்பிய காலங்களில் துவங்கி இன்று வரை பயணிக்கும் ஓரபற்பல உறவுகளின் கூட்டமைபே... கூட்டு குடும்பம்...!

கூடு ---- நீ நீண்ட காலங்களா நீயாய் மட்டுமில்லாமல் சேயாய் மாற நாடு கூட்டு அன்பை கொடுக்கும் குடும்பத்தை....!❤😍
கூடு ---- நீ நீண்ட காலங்களா தாயாய் மட்டுமில்லாமல் ஓர் குடும்பத்தின் ஆணி வேறாக மாற நாடு கூட்டு அன்பை கொடுக்கும் குடும்பத்தை...!❤😍
கூடு ---- நீ நீண்ட காலங்களா தந்தையாய் மட்டும் அல்லாமல் ஓர் குடும்பத்தின் சர்வமுமாய் மாற நாடு கூட்டு அன்பை கொடுக்கும் குடும்பத்தை...!❤😍

ஊர் கூடி தேரை இழுக்க வேண்டும் என்பர் பழமொழியில் --- ஊர் என்பது அக்காலங்களில், கூட்டு குடும்பமாக கோடி கணக்கில் என்றும் பிரியாமல் ஒற்றுமையாக இருக்கும் உறவுகளே...!
ஆனால், இன்றோ கூட்டம் மட்டுமே இருக்கின்றது.... கூடுமில்லை... யாரும் கூடவுமில்லை... கூட்டு குடும்பமுமில்லை...!!! ❤ அந்தோ, பரிதாபம்... 😒❤

தனி மரம் தோப்பாக மாறாது என்பதற்கு மிகவும் சால சிறந்த எடுத்துக்காட்டு இந்த சம்பவம்...! ❤😍 என்னதான், தென்னைமரம் தனக்குள்ளே என்னற்ற பலன்களை கொண்டிருந்தாலும் தனியாகவே தான் வளர்கிறது, தனியாகவே தான் மடிகிறது...
ஆனால், வாழை மரமோ... கூடியே வளர்கிறது... தான் மடிந்தாலும் தனக்கு கீழே ஓர் கன்றான சந்திதியை உருவாக்கி செல்கிறது....!❤😍

இதிலிருந்து, என்ன பொருள் நாம் தென்னையை போல் தனித்து அல்லாமல் வாழையை போல் வாழ்வாங்கு வாழ கூட்டிட்டு குடும்பமாக வாழ வேண்டும் நம் அளவில்லா அன்பை நம் உறவுகளோடு பகிர வேண்டும்...! ❤😊

குடும்பம் என்பது ஒரு பேரின்பம் தரும் பொக்கிஷம்...
கூட்டு குடும்பம் என்பது ஒரு கோவில்...
அங்கே, மூலவராக குடும்ப தலைவரோ, தலைவியோ பொறுப்பை எடுத்து கொள்கின்றனர்...
உற்சவர்களாக, பேரன்கள் , பேத்திகள்  யாவரும் உள்ளனர்...
பரிவராங்காளாக ---> மகன்கள், மகள்கள், அவரது உறவுகள் என்று யாவரும் உள்ளனர்...
திசை தெய்வங்களாக --> பெரியப்பா, சித்தப்பா, மாமா, மாப்பிள்ளை, மைத்துனர் என்கிற உறவுகள் அமைகின்றனர்...
காவல் தெய்வங்களாக ---> நம் முன்னோர்கள் திகழ்கிறார்கள்...
துவார பாலாகர்களாக ---> அன்பும், அளவில்லா மகிழ்ச்சியும், குடும்பத்தின் ஒற்றுமையும், பொறுமையுடன் கூடிய நிதானமும் அக்கூட்டு குடும்பத்தை காத்து ரக்ஷிக்கிறது...! ❤😍

ஆக, ஒற்றுமையின் பிம்பமாக விளங்கும் கூட்டு குடும்பத்தை நாடுவோம்... ஒரு கூட்டு கிளியாக ஒரு கூட்டு குயிலாக நாமும் கூட்டில்
கூட்டிட்டு இன்பம் என்னும் அமுதை கூட்டி கொண்டே கூடாய் வாழ்வோம் வாருங்கள்...!!🙏❤

« Last Edit: August 30, 2024, 06:43:18 PM by BlueSea »