
ஏதில்லை.... இத்திருநாட்டில், ஏன் கை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.... என்று நம் பாரதி கூறியதோ உன்னையல்லவோ.... என் தாய் தமிழை பறைச்சாற்றி எங்களுக்கும் ஏனைய வெளி நாட்டவர்களுக்கும் ஓர் தாயாய் பாலூட்டி சீராட்டி எங்களையும் எங்கள் சுற்றதாரும் பயன் பெற உன் வளங்களோடு வளர்க்கும் என் அன்பு தாயே தமிழ் திருநாடே...! ❤❤❤
மூவேந்தர்ரும், தலை சிறந்த புலவர்களும், ஞானிகளும், ரிஷிகளும், யோகிகளும், சித்தர்களும் படைத்த பண்டைய கால இதிகாசாங்களும், புராணங்களும், மருத்துவ குறிப்புகளும் அமைய கருவூலமாய் அமைந்துள்ள என் அன்பு கலந்த தாயே தமிழ் திருநாடே...!
ஒரு தாயாகபட்டவள் தன் குழந்தைகள் தனக்கு எவ்வளவு இம்சை கொடுத்தாலும் அதெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அன்பு எனும் அமுதத்தை பொழிகின்ற தாயே தமிழ் திருநாடே...!
உந்தன் புகழ் தனை பாட இவ்வொரு ஜென்மம் போதுமா.... ❤😍 ஆதலால், உனக்கு ஓர் நவரத்தின
பாமாலை இயற்ற உள்ளேன்...! ❤😍
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மண்னே நின் பதம் பணிந்து என் சிரம் தாழ்த்தி இப்பாமலையை உமக்கு சூட்டுகிறேன்...!
நம் பாரத தேசத்தில்,
சனாதன தர்மத்தை இவ்வுலகிற்கே பறைசாற்றிய நாடே....
வைரம் போல் மின்னும் முத்து முத்தான கவிகளையும் கவிஞர்களையும், புலவர்களையும் ஏட்டு சுவடியில் மூலமாய், கல்வெட்டுகள் மூலமாய் உலகெங்கும் வியாப்பித்து இருக்கின்ற தெந்தமிழ் நாடே... ❤❤❤
உலகளில், எங்கு யாருக்கு எந்த ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் முதன் முதலில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்ற பைந்தமிழ்
வைடூரியமே...! ❤❤❤
ஆதி மொழியாம் தமிழை பண்டைய கற்காலங்களில் கூட கிரந்தம் எனும் மொழியிலே வளர்த்தி உலகலாவிய மொழிகளிலே தமிழ் மொழியை எல்லா மொழிகளுக்கும் தாயாய் உருவமைத்துக்கொடுத்த செந்தமிழ்
முத்தே ❤❤❤
காதல் எனும் உன்னத உறவை மையமாய் வைத்து இயற்றிய பொக்கிஷ இதிகாசாங்கள் பலவும் கற்பனைக்கு அப்பாற்பட்டு யுக யுகங்களாய் அன்பெனும் சுவடுகளை தாங்கி கொண்டிருக்கும்
மரகதமே... ❤❤❤
சுமுதாயம், கட்டிடக்கலை, விவசாயம், நீர்நிலை தேக்கங்கள், அணைகள் யாவும் அமையவும், நம் தாய் தமிழ் மண்ணின் அரவணைப்பு உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட வித்தாக விளங்கிய மஹா சாம்ராஜ்ஜியங்கள் அமைத்து கொடுத்த
மாணிக்கமே.... ❤❤❤
மலைகள், காடுகள், இயற்கை எழில் சூழ் நிலையில் மக்கட் பெருஞ்செல்வத்தை வாழ வைத்து கேட்பவை யாவும் கேட்ட மாத்திரத்தில் தந்திட தனக்குள்ளே ஓர் அற்புத சக்தியை அமைத்து கொண்டிருக்கும்
பவளமே.... ❤❤❤
உன் பிள்ளைகள் நாங்கள் உனது மார்பில் எட்டி உதைத்தாலும் உம்மை உதாசீனம் செய்து எள்ளி நகைத்தாலும் பாராட்டிக்கொள்ளா அன்பு மனம் கொண்ட
புட்பராகமே.... ❤❤❤
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே என்று கூறிய மகாகவி பாரதியை தன்னுள்ளே படைத்திட்ட
கோமேதகமே.... ❤❤❤
ஆம்ராவதி, காவேரி, சிறுவாணி, பொய்கையாறு, தாமிரபரணி என்று கூறிக்கொண்டே போகும் அளவிற்கு
நீல திருமேனியால் வளர்ந்து வங்கால விரிகுடா, இந்திய பெறுங்கடல்களால் ரக்ஷா பந்தனம் செய்து நம் பாரத்தை ஓர் வேலி போல் அமைந்து காத்துக்கொண்டிருக்கும் சீர்மிகு நாடே என் தாய் தமிழ் திருநாடே....!!!❤❤❤
செந்தமிழ் நாடு இது....!!! ❤❤❤ எங்கள், செந்தமிழ் நாடிது.... ❤❤❤ செந்தமிழ் நாடிது....!!! ❤❤❤😍
https://youtu.be/4VwoRbnojsY?si=B4CVesDpoAO6gGhW