Author Topic: தாய்மை  (Read 596 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1074
  • Total likes: 3613
  • Total likes: 3613
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
தாய்மை
« on: July 15, 2024, 06:56:11 PM »
தாய்மை
உன்னை போல் பட்டாம்பூச்சியாய்
பறந்தவள் தான் நானும்

கல்லூரி முடிந்ததும் கல்யாணம்,
பறந்தவள்  சிறை பிடிக்க பட்டேன்

கல்யாணம் முடிந்து ஓரிரு ஆண்டுகள்
கடந்தும் வயிற்றில் நீ வராததால்

வந்தவர்கள் வாயில் நான் அவல்
ஆனேன் ...

எத்தனை பேச்சுகள் அவதூறுகள்
நான் அறியா வார்த்தைகள்
அறிந்து கொண்டேன் அருவருப்பு கொண்டேன்

யார் குற்றம் ? அறியவில்லை எனில்
அது பெண் குற்றம் என கொள்ளும் இச்சமூகம்

மருத்துவ வளரச்சியில் என்
வயிற்றில் நீ வளர்ந்தாய்

கடவுள் வரமென ஊர் சொல்லியது
கடவுளே வரமாக வந்ததாக நான் எண்ணினேன்

நீ பிறக்கும் முன் கருவில் நீ இருக்க
உறக்கம் தொலைத்தேன்

பெண்ணாக நீ பிறந்ததால் உறவை
தொலைத்தேன்

கள்ளிபாலா இல்லை தாய்பாலா என
உறவு கேட்டது ..

கடவுளை இழக்க மனமில்லை
உறவை இழக்க துணிந்தேன்

உன்னை வளர்த்த இந்த இருபது
வருடம் தூக்கம் பல தொலைத்தேன்
ஆனாலும் அவையாவும் ரசித்தேன்
சகித்தேன்

இன்று இருபது நொடியில் பூத்த
காதலுக்காக  என்னை மறக்க
நீ துணிந்தாய்

யார் குற்றம் இது ? இன்றும் தெரியவில்லை
உன்னை எதிர்க்க திராணியில்லை
கள்ளிப்பால் குடிக்க துணிந்தேன்

இன்றும்
கடவுளை இழக்க மனமில்லை
உயிரை  இழக்க துணிந்தேன்


அடுத்த பிறவியிலும் பெண்ணாகவே
பிறப்பேன் உன்னை சுமந்த சுகம்
மீண்டும் பெற ...



****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "