தனித்திருந்தும் கூட துணிச்சலாய்
முன்னேறிய காலம் அன்று....
தனிமையே தன் மனதில் ரணமாய்
வாட்டி வதைக்கும் காலம் இன்று....
தனிமையிலே இனிமை கண்டு
தன்னலம் காப்போர் மத்தியில்
துவண்டு தான் போகிறேன்
தனிமையின் துணையில் நான்...
என்றும் எதையுமே வெறுத்ததில்லை
தனிமையை தவிர இவ்வுலகில்...
தனிமையை வெறுத்த இம்மனதிற்கு
தனிமையே துணையாய் ஆனதிங்கு.....